பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
ஒருநல் சுற்றம்* எனக்குஉயிர் ஒண்பொருள்*
வரும்நல் தொல்கதி* ஆகிய மைந்தனை*
நெருநல் கண்டது* நீர்மலை இன்றுபோய்*
கருநெல் சூழ்* கண்ண மங்கையுள் காண்டுமே (2)
பொன்னை மாமணியை* அணி ஆர்ந்ததுஓர்-
மின்னை* வேங்கடத்து உச்சியில் கண்டுபோய்*
என்னை ஆளுடை ஈசனை* எம்பிரான்-
தன்னை* யாம் சென்று காண்டும்* தண்காவிலே. (2)
வேலை ஆல்இலைப்* பள்ளி விரும்பிய*
பாலை ஆர்அமுதத்தினை* பைந்துழாய்*
மாலை ஆலியில்* கண்டு மகிழ்ந்து போய்*
ஞாலம் உன்னியைக் காண்டும்* நாங்கூரிலே
துளக்கம்இல் சுடரை* அவுணன்உடல்-
பிளக்கும் மைந்தனைப்* பேரில் வணங்கிப்போய்*
அளப்புஇல் ஆர்அமுதை* அமரர்க்கு அருள்-
விளக்கினைச்* சென்று வெள்ளறைக் காண்டுமே.
சுடலையில்* சுடு நீறன் அமர்ந்தது ஓர்*
நடலை தீர்த்தவனை* நறையூர்க் கண்டு,* என்-
உடலையுள் புகுந்து* உள்ளம் உருக்கிஉண்*
விடலையைச் சென்று காண்டும்* மெய்யத்துள்ளே.
வானை ஆர்அமுதம்* தந்த வள்ளலை*
தேனை நீள்வயல்* சேறையில் கண்டுபோய்*
ஆனை வாட்டி அருளும்* அமரர்தம்-
கோனை,* யாம் குடந்தைச்சென்று காண்டுமே.
கூந்தலார் மகிழ்* கோவலன்ஆய்* வெண்ணெய்-
மாந்துஅழுந்தையில்* கண்டு மகிழ்ந்துபோய்*
பாந்தள் பாழியில்* பள்ளி விரும்பிய*
வேந்தனைச் சென்று காண்டும்* வெஃகாவுளே
பத்தர் ஆவியை* பால்மதியை,* அணித்-
தொத்தை* மாலிருஞ் சோலைத் தொழுதுபோய்*
முத்தினை மணியை* மணி மாணிக்க-
வித்தினைச்,* சென்று விண்ணகர்க் காண்டுமே
கம்ப மாகளிறு* அஞ்சிக் கலங்க,* ஓர்-
கொம்பு கொண்ட* குரைகழல் கூத்தனை*
கொம்புஉலாம் பொழில்* கோட்டியூர்க் கண்டுபோய்*
நம்பனைச் சென்று காண்டும்* நாவாயுளே.
பெற்றமாளிகைப்* பேரில் மணாளனை*
கற்ற நூல்* கலிகன்றி உரைசெய்த*
சொல்திறம்இவை* சொல்லிய தொண்டர்கட்கு*
அற்றம் இல்லை* அண்டம் அவர்க்கு ஆட்சியே (2)
தாள தாமரைத்* தடம்அணி வயல் திருமோகூர்*
நாளும் மேவி நன்குஅமர்ந்து நின்று* அசுரரைத் தகர்க்கும்*
தோளும் நான்குஉடைச்* சுரிகுழல் கமலக்கண் கனிவாய்க்*
காள மேகத்தை அன்றி* மற்றொன்றுஇலம் கதியே. (2)
இலங்கதி மற்றொன்று எம்மைக்கும்* ஈன்தண் துழாயின்*
அலங்கலங்கண்ணி* ஆயிரம் பேர்உடை அம்மான்*
நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ்* திருமோகூர்*
நலங்கழல் அவன் அடிநிழல்* தடமன்றி யாமே.
அன்றியாம் ஒரு புகலிடம்* இலம் என்றுஎன்று அலற்றி*
நின்று நான்முகன் அரனொடு* தேவர்கள் நாட*
வென்று இம்மூவுலகுஅளித்து உழல்வான்* திருமோகூர்*
நன்று நாம் இனி நணுகுதும்* நமதுஇடர் கெடவே.
இடர்கெட எம்மைப் போந்துஅளியாய்* என்றுஎன்று ஏத்தி*
சுடர்கொள் சோதியைத்* தேவரும் முனிவரும் தொடர*
படர்கொள் பாம்பணைப்* பள்ளிகொள்வான் திருமோகூர்*
இடர் கெடவடி பரவுதும்* தொண்டீர்! வம்மினே.
தொண்டீர்! வம்மின்* நம்சுடர்ஒளி ஒருதனி முதல்வன்*
அண்டம் மூவுலகு அளந்தவன்* அணி திருமோகூர்*
எண் திசையும் ஈன்கரும்பொடு* பெரும்செந்நெல் விளையக்*
கொண்ட கோயிலை வலஞ்செய்து* இங்கு ஆடுதும் கூத்தே.
கூத்தன் கோவலன்* குதற்று வல்லசுரர்கள் கூற்றம்*
ஏத்தும் நங்கட்கும்* அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்*
வாய்த்த தண்பணை வளவயல்சூழ்* திருமோகூர்-
ஆத்தன்* தாமரை அடிஅன்றி* மற்றுஇலம் அரணே.
மற்றிலம் அரண்* வான்பெரும் பாழ்தனி முதலாச்*
சுற்றும் நீர்படைத்து* அதன்வழித் தொல்முனி முதலா*
முற்றும் தேவரோடு* உலகுசெய்வான் திருமோகூர்*
சுற்றிநாம் வலஞ்செய்ய* நம் துயர்கெடும் கடிதே.
துயர்கெடும் கடிதுஅடைந்து வந்து* அடியவர் தொழுமின்*
உயர்கொள் சோலை* ஒண்தடம் மணிஒளி திருமோகூர்*
பெயர்கள் ஆயிரம்உடைய* வல்லரக்கர் புக்குஅழுந்த*
தயரதன் பெற்ற* மரகத மணித் தடத்தினையே.
மணித் தடத்தடி மலர்க்கண்கள்* பவளச் செவ்வாய்*
அணிக்கொள் நால்தடம்தோள்* தெய்வம் அசுரரை என்றும்*
துணிக்கும் வல்அரட்டன்* உறைபொழில் திருமோகூர்*
நணித்து நம்முடை நல்லரண்* நாம் அடைந்தனமே.
நாம்அடைந்த நல்அரண்* நமக்குஎன்று நல்அமரர்*
தீமை செய்யும் வல்அசுரரை* அஞ்சிச் சென்றுஅடைந்தால்*
காமரூபம் கொண்டு* எழுந்துஅளிப்பான் திருமோகூர்*
நாமமே நவின்று எண்ணுமின்* ஏத்துமின் நமர்காள்!
ஏத்துமின் நமர்காள்* என்றுதான் குடம்ஆடு-
கூத்தனைக்* குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்*
வாய்த்த ஆயிரத்துள் இவை* வண் திருமோகூர்க்கு*
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு* இடர் கெடுமே. (2)