திருத்வாரகை

தலபுராணம்: தற்போதுள்ள ஆலயம் 1500 ஆண்டுகட்குமுன் கட்டப்பட்டதாகும். உண்மையான துவாரகை கடலுள் மூழ்கிவிட்டது. கிருஷ்ணனின் பேரனான வஜ்ரநாபி என்பவனால் கி. மு 400 இல் கட்டப்பட்டதாகக் கூறும் இந்தக்கோவிலை இங்குள்ள மக்கள் துவாரகா நாத்ஜி ஆலயம் என்றே அழைக்கிறார்கள். இப்போதுள்ள கோவிலும் நான்காவது முறையாக 16 ஆம் நூற்றாண்டில் மேலைச் சாளுக்கிய பாணியில் கட்டப்பட்டதாகும். கடந்த 5000 ஆண்டுகளாக அவ்வப்போது ஏற்பட்ட கடல் கோளாலும் பிற இன்னல்களாலும் இத்தலம் பாதிக்கப்பட்ட போதெல்லாம் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள அமைப்பு சுமார் 1500 ஆண்டுகட்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட அமைப்பாகும்.இந்துத் தொன்மங்களின்படி கண்ணனின் வரலாற்றோடு தொடர்புடைய இந்நகரம் கண்னனால் நிர்மாணிக்கப்பட்டு இருந்து இறுதி வரை அரசாண்ட இடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைவிடம்

நாடு: இந்தியா மாநிலம்: குசராத்து அமைவு: துவாரகை,

தாயார் : ஸ்ரீ கல்யாண நாச்சியார்
மூலவர் : கல்யாண நாராயணன்
உட்சவர்: --
மண்டலம் : வட நாடு
இடம் : குஜராத்
கடவுளர்கள்: கல்யாண நாராயணன் ,ஸ்ரீ கல்யாண நாச்சியார்


திவ்யதேச பாசுரங்கள்

    333.   
    பொல்லாவடிவுடைப் பேய்ச்சிதுஞ்சப்*  புணர்முலைவாய்மடுக்க- 
    வல்லானை*  மாமணிவண்ணனை*  மருவும்இடம்நாடுதிரேல்
    பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு*  பௌவம்எறிதுவரை* 
    எல்லாரும் சூழச்சிங்காசனத்தே*  இருந்தானைக்கண்டாருளர்.  

        விளக்கம்  


    • முதலடியிற் குறித்த வரலாறு கீழ்ப்பலவிடங்களிற் கூறப்படுள்ளது. புணர்முலை- விஷத்தோடு புணர்ந்த முலை என்றுமாம்; கண்ணபிரானை வஞ்சனையாற் கொல்ல நினைத்த கம்ஸனால் ஏவப்பட்டு முலையில் விஷத்தைத் தடவிக்கொண்டு தாயுருவமெடுத்து முலைகொடுக்க வந்தவளாம் இவள். வல்லனை, வண்ணனை என்ற இரண்டிடத்தும், ஐ- அசை. (பல்லாயிர மித்யாதி) கண்ணபிரான் நகராஸுர வதஞ்செய்து, அவனாற் கொண்டுபோகப்பட்ட மந்தரகிரியினுடைய சிகரமான ரத்தகிரியிற் பல திசைகளிலிருந்தும் கொணர்ந்து சிறை வைக்கப்பட்டிருந்த தேவஸித்த கந்தர்வாதி கன்னிகைகள் பதினாறாயிரம் பேரையும் தான் மணந்துகொண்டு, அவர்களுந்தானுமாக ஒரு ஸிமஹாஸநத்தி வீற்றிருக்கும்போது ஸ்ரீத்வாரகையிற் கண்டாருண்டு. பதினாறாயிரத்தொரு நூற்றுவார் என்று ஸ்ரீவிஷ்ணுபுராணத்திற் காணப்படுகின்றன. பௌவம்- கடல். துவரை- ... ...... என்ற வடசொற்சிதைவு எல்லாமும்- மற்றுமுள்ள பரிஜாதமெல்லாம் என்றுமாம். சிங்காசனம்- வடசொல்திரிபு.


    398.   
    திரை பொருகடல் சூழ் திண்மதிள் துவரைவேந்து*  தன்மைத்துனன் மார்க்காய்* 
    அரசினையவிய அரசினையருளும்*  அரிபுருடோத்தமன் அமர்வு*
    நிரைநிரையாக நெடியனயூபம்*  நிரந்தரம் ஒழுக்குவிட்டு*  இரண்டு- 
    கரைபுரை வேள்விப்புகை கமழ்கங்கை*  கண்டமென்னும் கடிநகரே.

        விளக்கம்  


    • முன்னடிகளிற் குறித்த வரலாற கீழ் “மெச்சூது சங்கமிடத்தான்” என்ற பாட்டின் உரையிற் காணத்தக்கது. அரி -ஹரி. கங்கையிற் பற்பல யூபஸ்தம்பங்கள் இடைவிடாது நெடுக அடித்துக்கொண்டு ஓடுமென்பது மூன்றாமடி. பூபம் – யாகப்பசுவைக் கட்டுந்தறி; வடசொல். நிரந்தரம்- வடசொல், இரண்டு கரைபொரு - இரண்டு கரைகளும் ஒருபடிப்பட; இரண்டு கரைகளிலும் என்றாவது.


    507.   
    சுவரில் புராண! நின் பேர் எழுதிச்*  சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்* 
    கவரிப் பிணாக்களும் கருப்பு வில்லும்*  காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா* 
    அவரைப் பிராயம் தொடங்கி*  என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள்* 
    துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்*  தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே.   

        விளக்கம்  


    • சுவரில் கண்ணன் பெயரெழுதி மீன் கொடிகளும் குதிரைகளும் கவரி கொண்டு செய்த சாமரம் வீசும் பெண்களும்கரும்பு வில்லும்எல்லாம் உனக்கே வரைந்தேன் பார் காமதேவாஅவரைச் சிறு வயது முதலிருந்தே என்றைக்கும் விரும்பி என்  பெரிய முலைகள் துவாரகை மன்னனாகிய கண்ணனுக்கே உரியது என்று வேண்டி வைத்தேன் இதை விரைவாகச் செய்து என்னை அவருக்கே ஆட்படச் செய்வாயாக !


    541.   
    ஆவல் அன்பு உடையார்*  தம் மனத்து அன்றி- 
    மேவலன் விரை சூழ்*  துவராபதிக்- 
    காவலன்,கன்று மேய்த்து விளையாடும்* 
    கோவலன்வரில்*  கூடிடு கூடலே!*

     


        விளக்கம்  


    • உரை:1

      ஆவல் அன்புடையயார் தம் ஸ்ரீ ஆவல் என்றாலும் அன்பு என்றாலும் பொதுப்படையாக ப்ரேமத்தைச் சொல்லுமாகிலும், கோபம் ரோஷம் இத்தியாதிபதங்களின் அர்த்தத்திலே நுட்பமான பேசும் இருக்கிறாப்போலே இங்கும் சிறிது பேதம் உண்டு’ ‘எம்பெருமானே உபாயோபேயங்கள்’ என்கிற ‘அத்யவஸாயம் கிடக்கச்செய்தேயும் நோன்பு நோற்பது, காமன் காலிலே விழுவது, சிற்றிவிழைப்பது பனிநீராடுவது, கூடலிழைப்பது இவைபோல்வன அதிப்ரவருத்திகளில் துணிவைப் பிறப்பிக்கும் ப்ரேமம் ஆவலெனப்படும். “மல்லாண்டதிண்டோள் மணிவண்ணா!” என்று எம்பெருமானுடைய மிடுக்கின் மிகுதியை அறிந்திருக்கச் செய்தேயும் அவனை ரக்ஷ்யனாகவும் தன்னை ரக்ஷகனாகவும் நினைத்துப் பல்லாண்டு பாடுகையிலே ஒருப்படுத்தும் ப்ரேமம் அன்பு எனப்படும் என்று கொள்க. ஆவல்- ஆண்டாளுடையபடி; அன்பு-இவளுடைய திருத்தகப்பனாரான பெரியாழ்வாருடையபடி, ஆக இவ்விரண்டையும் சொன்னவித்தால் தங்கள் குடியிலுள்ளார் மனத்தோடல்லது வேறொருவர்மனத்தோடு பொருந்தமாட்டான் எம்பெருமான் என்றாளாய்த்து. மேவலன்ஸ்ரீவிரும்பாதவன் என்றபடி “நம்பும் மேவும் நசையாகுமே.” என்பது தொல்காப்பியம்.

      உரை:2

      பக்தியுடையவர் தம் மனத்தன்றி வேறு ஒருவர் மனத்திலும் நில்லாதவன், நறுமணம் சூழ்ந்த துவாரகைப்பதியின் காவலன், கன்றுகள் மேய்த்து விளையாடும் கோபாலன் வருவானெனில் நீ கூடிடு கூடலே.


    625.   
    கூட்டில் இருந்து கிளி எப்போதும்*  கோவிந்தா! கோவிந்தா! என்று அழைக்கும்* 
    ஊட்டக் கொடாது செறுப்பனாகில்*  உலகுஅளந்தான்! என்று உயரக் கூவும்* 
    நாட்டில் தலைப்பழி எய்தி*  உங்கள் நன்மை இழந்து தலையிடாதே* 
    சூட்டு உயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்*  துவராபதிக்கு என்னை உய்த்திடுமின்*.    

        விளக்கம்  


    • இவள் விரஹத்தாலே நோவுபட்டிருக்கிற இச்சமயத்தில் இவன் வளர்க்குங் கிளிப்பிள்ளையொன்று இவள் முன்பு கற்பித்துவைத்த திருநாமத்தைச் சொல்லிகொண்டு இங்குமங்கும் திரியத்தொடங்கிற்று, ‘இதை நாம்யதேச்சமாய்த் திரியும்படியாக விடவேயன்றோ இது கண்ணன் நாம்மேகுழறிக் கொல்லுகின்றது, இதைப்பிடித்து அடைத்திடுவோம்‘ என்று பார்த்துக்கூட்டிலே யடைத்தாள், அது அங்கேயிருந்து “கோவிந்தா! கோவிந்தா!“ என்று கூவத்தொடங்கிற்று, அதைக்கேட்ட ஆண்டாள் ‘இது சோற்றுச்செருக்காலேயன்றோ இப்படி சொல்லுகிறது, சோற்றைக் குறைத்தோமாகில் தன்னடையே தவிருகிறது‘ என்று நினைத்துப் பட்டினியாகவிட்டுவைத்தாள், ‘ஊணடங்க வீணடங்கும்‘ என்று இவளுடைய நினைவுபோலும். ஆனால் அந்தப்பட்டினியானது. இவளுக்கு விபரீதபலப்ரதமாயிற்று, அரையர்கள் மிடற்றுக்கு எண்ணெயிட்டுப் பட்டினி கிடந்து மிடற்றில் கனத்தை ஆற்றிப்பாடுவதுபோல இக்கிளியும் பட்டினிவிட்டதே காரணமாக உயரப்பாடத்தொடங்கிற்று, உலகளந்தான்!“ என்று அதுகூவும் போதை த்வநியைக்கேட்டால் அவன் அன்றிவ்வுலகமளக்கத் திருவடிகளைப் பரப்பினவிடமெங்கும் இதுவும் தன்மிடேற்றோசையைப் பரவவிடா நின்றதுபோலும், அந்தக்கூவுதலைக் கேட்டவாறே நாமே பதறிஓடியாகிலும் அவனைச்சென்று கிட்டுவோமென்கிறகாதல் கிளர்கின்றது. அப்படி நான் பதறி ஓடுவது நமது குடிக்குப் பெருத்தபழியாய் முடியும், தடிதடியாகத் தாய்மார்களிருந்தும் ஒரு பெண்பிள்ளைக்கு நன்மைசெய்யாமல் தெருவிலேபுறப்படப் பார்த்திருந்தார்களே!‘ என்று நாளைக்கே நாடெங்கும் பழிபரவும், அப்போது நீங்கள் தலைகவிழ்ந்து தலையைக்கீறி நிற்கத்தான் நேரிடும், அப்படிப்பட்ட பரிபவத்துக்கு நீங்கள் ஆளாகாமல் இப்போதே என்னைநீங்களாகவே த்வாரகையிலே கொண்டுசேர்த்து விடுங்களென்கிறாள்.


    1504.   
    முலைத் தடத்த நஞ்சு உண்டு துஞ்சப் பேய்ச்சி*  முது துவரைக் குலபதி ஆய் காலிப்பின்னே* 
    இலைத் தடத்த குழல் ஊதி ஆயர் மாதர்*  இன வளை கொண்டான் அடிக்கீழ் எய்தகிற்பீர்*
    மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய*  வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னிநாடன்* 
    சிலைத் தடக் கைக் குலச் சோழன் சேர்ந்த கோயில்*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

        விளக்கம்  


    • மலைத்ததாழிவரைகளில் உண்டான ரத்னங்களைக்கொண்டு வந்து பூமியிலுள்ளாரெல்லாரும் உபஜீவிக்குமாறு ஆங்காங்குக் கொழிக்கின்ற காவிரியாறு பெருக்ப்பெற்ற நாட்டுக்குத் தலைவனாய்ப் பெரிய ஆண்பிள்ளையான சோழராஜன் பணிவிடை செய்யப்பெற்ற கோயிலேன்க.


    1521.   
    ஓடா அரி ஆய்*  இரணியனை ஊன் இடந்த* 
    சேடு ஆர் பொழில் சூழ்*  திருநீர்மலையானை
    வாடா மலர்த் துழாய்*  மாலை முடியானை* 
    நாள்தோறும் நாடி*  நறையூரில் கண்டேனே.   

        விளக்கம்  


    • ஓடா அரி போரில் பின்வாங்காத ஸிம்ஹம் என்றும், நாட்டில் நடையாடாதே அபூர்வமாகத் தோன்றின ஸிம்ஹம் என்று முரைப்ப.


    2452.   
    சேயன் அணியன்*  சிறியன் மிகப்பெரியன்* 
    ஆயன் துவரைக்கோனாய்*  நின்ற மாயன்*  அன்று
    ஓதிய*  வாக்குஅதனைக் கல்லார்*  உலகத்தில் 
    ஏதிலர்ஆம்*  மெய்ஞ்ஞானம் இல்.  

        விளக்கம்  


    • கண்ணபிரான் அர்ஜுநனை வியாஜமாகக்கொண்டு அருளிச்செய்த பகவத்கீதையில் ஸாரமான சரமச்லோகம் இங்கு ‘துவரைக்கோனாய் நின்றமாயன் அன்றோதிய வாக்கு‘ என்பதனால் குறிக்கப்படுகிறது. அதன் பொருளை யறியப்பெறாதவர்கள் தத்துவஞானம் பெறார்கள், தத்துவஞானம் பெற்றவர்களே எம்பெருமானுக்குப் பகைவராவர் என்கிறது. பாரதயுத்தத்து முதனாட்போரில் “உற்றாரையெல்லாம்“ என்றெண்ணி, ஸவதர்மத்தில் அதர்மபுத்தியால் போர்புரியேனென்று காண்டீவம் கைநெகிழத் தேர்த்தட்டின் மீதேதிகைத்து நின்ற அர்ஜுநனுக்கு ஸ்ரீகிருஷ்ணன் தத்வோபதேசஞ் செய்து அவனது கலக்கத்தைப்போக்க உபதேசித்ததாதலால் கீதை சிறந்தது. அதில் முதலிலே அர்ஜுநனுக்கு சேஹாத்மவிவேகத்தைப் போதித்து அதன் மூலமாக கர்மயோகம் புருஷோத்தமவித்யை அவதார ரஹஸ்ய்ஜ்ஞானம் முதலியவற்றை உபதேசிக்க, அர்ஜுநன் அந்த எம்பெருமான் உபதேசித்த உபாய விசேஷங்களைக்கட்டு அவை செயற்கரியனவென்றும் ஸ்வரூப விரோதிகளென்றும் வுயாயாங்களீலும் மேபட்ட பிரபத்தியுபாயத்தை யுபதேசிப்பத்து (நீ என்னையே சரணமாகப் பற்றினால் நான் உன்னை எல்லாப் பாபங்களினின்றும் விடுவிப்பேன், கலங்கவேண்டா) என்று அவனது கலக்கத்தைப் போக்கினது சரமச்லோகத்தினாலென்க. 1. “அறிவினாற் குறைவில்லா அகல்ஞாலத்தவரறிய, நெறியெல்லா மெடுத்துரைத்த நிறைஞானத் தொருமூர்த்தி என்கிறபடியே ஸர்வேஜனான ஸர்வேச்வரன் தனது திருவாக்கினின்று உலகத்தார் நற்கதிபெறவேணுமென்ற கருத்தோடு உபநிஷத்துக்களின் ஸாரமாக வெளியிட்டதாதலின் தாத்துவ ஞானத்திற்கு இதுவே சிறந்த ஸாதனமாக. இதனை சிறந்த ஸாதனமாகும். இதனையறியாதவர்கள் ‘மெய்ஞ்ஞானமில் எதிரலாம்‘ என்ன தட்டில்லை. இப்பாட்டில் சேயன் என்பது மிகப்பெரியன் என்பதோடு அந்வயிக்கும், அணியன் பத்து சிறியன் என்பதோடு அந்வயிக்கும், அணியன் என்பது சிரியன் என்பதோடு அந்வயிக்கும். எம்பெருமான் எளியனாயு மிருப்பன் அரியனாயு மிருப்பன் என்றவாறு. ‘ஏதலர்‘ என்றாலும் ‘ஏதிலர்‘ என்றாலும் பகைவர், ஏது இலர் – யாதொரு ஸம்பந்தமுமில்லாதவர் என்கை. ஆகவே பகைவரைக் குறிக்கும். பகவத்கீதையில் என்ற ச்லோகத்தில் ‘த்விஷத‘ என்று அப்பெருமான்றனே சொன்னதைத் திருவுள்ளம்பற்றி இங்கு ‘எதிலராம்‘ என்றனரென்னலாம்.


    3260.   
    அன்னை என் செய்யில் என்?*  ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்* 
    என்னை இனி உமக்கு ஆசை இல்லை*  அகப்பட்டேன்*
    முன்னை அமரர் முதல்வன்*  வண் துவராபதி- 
    மன்னன்*  மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே*.   

        விளக்கம்  


    • (அன்னை யென்செய்யிலேன்?) நீ இங்ஙனே துணிவு கொண்டால் தாயார் ஜீவிக்கமாட்டாள்; அத்தாலே ஊராருடைய பழிப்பும் மிகும் என்று தோழி சொல்ல, கண்ணபிரானுடைய குணசேஷ்டிதங்களில் நான் அகப்பட்டேன். இனி யார் என் செய்தாலென்ன என்கிறாள். அன்னை என்செய்யில் ஏன்? = “தாயார் பொருள், தாயார் பொறாள்’ என்று தோழி அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தாள்; தலைவி அவளை நோக்கி ‘தாயார் பொறாமல் என்ன செய்துவிடுவள்’ என்று கேட்டாள்; ‘உயிர் மாய்ந்து போவள்’ என்று தோழி விடை கூறினாள். அதற்குத் தலைவி சொல்லும் விடை இது, ‘தாயார் ஜீவித்தாலென்ன? முடிந்தாலென்ன?’ என்றவாறு. ‘தாயார் முடிவதையும் கணிசியாமல் இவள் நாயகனுடைய வடிவழகிலேயீடுபட்டாள்’ என்று ஊரார் பழி சொல்லுவர்களே! என்ன; ஊரென் சொல்லேன்? என்கிறாள். இப்படி உதறிச் சொல்லுகைக்குக் காரணம் என்ன? என்றுகேட்க; முள்ளையமார் முதல்வன் வண்துவராபதி மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுள் அகப்பட்டேன், (ஆகையாலே) என்னை (ப் பற்றி) இனி உமக்கு ஆசையில்லையென்கிறாள்.