பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
இரக்கம்இன்றி எம்கோன் செய்த தீமை* இம்மையே எமக்கு எய்திற்றுக் காணீர்*
பரக்கயாம் இன்று உரைத்துஎன் இராவணன் பட்டனன்* இனி யாவர்க்கு உரைக்கோம்*
குரக்கு நாயகர்காள்! இளங்கோவே* கோல வல்வில் இராம பிரானே*
அரக்கர் ஆடுஅழைப்பார் இல்லை* நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ. (2)
பத்து நீள்முடியும் அவற்றுஇரட்டிப்* பாழித் தோளும் படைத்தவன் செல்வம்,*
சித்தம் மங்கையர் பால்வைத்துக் கெட்டான்* செய்வது ஒன்றுஅறியா அடியோங்கள்*
ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும்* ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம்*
அத்த! எம் பெருமான்! எம்மைக் கொல்லேல்* அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
தண்ட காரணியம் புகுந்து* அன்று தையலை தகவிலி எம்கோமான்*
கொண்டு போந்து கெட்டான்* எமக்கு இங்குஓர் குற்றம்இல்லை கொல்லேல் குலவேந்தே*
பெண்டிரால் கெடும் இக்குடி தன்னைப்* பேசுகின்றதுஎன்? தாசரதீ,* உன்-
அண்ட வாணர் உகப்பதே செய்தாய்* அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
எஞ்சல்இல் இலங்கைக்குஇறை* எம்கோன்தன்னை முன்பணிந்து எங்கள்கண் முகப்பே*
நஞ்சுதான் அரக்கர் குடிக்குஎன்று* நங்கையை அவன் தம்பியே சொன்னான்*
விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம்* வேரிவார் பொழில் மாமயில்அன்ன*
அஞ்சுஅல்ஓதியைக் கொண்டு நடமின்* அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
செம்பொன் நீள்முடி எங்கள் இராவணன்* சீதை என்பதுஓர் தெய்வம் கொணர்ந்து*
வம்புஉலாம் கடி காவில் சிறையா வைத்ததே* குற்றம் ஆயிற்றுக் காணீர்*
கும்பனோடு நிகும்பனும் பட்டான்* கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி*
அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது* அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ.
ஓத மாகடலைக் கடந்துஏறி* உயர்கொள் மாக்கடிகாவை இறுத்து*
காதல் மக்களும் சுற்றமும் கொன்று* கடி இலங்கை மலங்க எரித்து*
தூது வந்த குரங்குக்கே* உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே*
ஆதர் நின்று படுகின்றது அந்தோ!* அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
தாழம்இன்றி முந்நீரை அஞ்ஞான்று* தகைந்ததே கண்டு வஞ்சிநுண் மருங்குல்*
மாழை மான்மட நோக்கியை விட்டு* வாழகில்லா மதிஇல் மனத்தானை*
ஏழையை இலங்கைக்கு இறை தன்னை* எங்களை ஒழியக் கொலை அவனை*
சூழு மாநினை மாமணி வண்ணா!* சொல்லினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
மனம்கொண்டுஏறும் மண்டோதரி முதலா* அம்கயல் கண்ணினார்கள் இருப்ப*
தனம்கொள் மென்முலை நோக்கம் ஒழிந்து* தஞ்சமே சில தாபதர்என்று*
புனம்கொள் மென்மயிலைச் சிறை வைத்த* புன்மையாளன் நெஞ்சில் புக எய்த*
அனங்கன் அன்னதிண்தோள் எம்இராமற்கு* அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
புரங்கள் மூன்றும்ஓர் மாத்திரைப் போதில்* பொங்குஎரிக்கு இரை கண்டவன் அம்பின்*
சரங்களே கொடிதுஆய் அடுகின்ற* சாம்பவான் உடன் நிறகத் தொழுதோம்*
இரங்கு நீ எமக்குஎந்தை பிரானே!* இலங்கு வெம்கதிரோன்தன் சிறுவா*
குரங்குகட்குஅரசே! எம்மைக் கொல்லேல்!* கூறினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
அங்கு அவ்வானவர்க்கு ஆகுலம் தீர* அணி இலங்கை அழித்தவன் தன்னை*
பொங்கு மாவலவன் கலி கன்றி* புகன்ற பொங்கத்தம் கொண்டு,* இவ்உலகினில்-
எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர்!* இம்மையே இடர் இல்லை,* இறந்தால்-
தங்கும்ஊர் அண்டமே கண்டு கொள்மின்* சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ! (2)
கெடும் இடர்ஆயஎல்லாம்* கேசவா என்ன* நாளும்
கொடுவினை செய்யும்* கூற்றின் தமர்களும் குறுககில்லார்*
விடம்உடை அரவில்பள்ளி* விரும்பினான் சுரும்பலற்றும்*
தடம்உடை வயல்* அனந்தபுரநகர் புகுதும்இன்றே (2)
இன்றுபோய்ப் புகுதிராகில்* எழுமையும் ஏதம்சாரா*
குன்றுநேர் மாடம்மாடே* குருந்துசேர் செருந்திபுன்னை*
மன்றலர் பொழில்* அனந்தபுரநகர் மாயன்நாமம்*
ஒன்றும்ஓர் ஆயிரமாம்* உள்ளுவார்க்கு உம்பர்ஊரே
ஊரும்புள் கொடியும் அஃதே* உலகுஎல்லாம் உண்டுஉமிழ்ந்தான்*
சேரும் தண்அனந்தபுரம்* சிக்கெனப் புகுதிராகில்*
தீரும்நோய் வினைகள்எல்லாம்* திண்ணம்நாம் அறியச்சொன்னோம்*
பேரும் ஓர்ஆயிரத்துள்* ஒன்றுநீர் பேசுமினே
பேசுமின் கூசம்இன்றி* பெரியநீர் வேலைசூழ்ந்து*
வாசமே கமழும் சோலை* வயலணிஅனந்தபுரம்*
நேசம்செய்து உறைகின்றானை* நெறிமையால் மலர்கள்தூவி*
பூசனை செய்கின்றார்கள்* புண்ணியம் செய்தவாறே.
புண்ணியம் செய்து* நல்ல புனலொடு மலர்கள்தூவி*
எண்ணுமின் எந்தைநாமம்* இப்பிறப்புஅறுக்கும் அப்பால்*
திண்ணம்நாம் அறியச்சொன்னோம்* செறிபொழில் அனந்தபுரத்து*
அண்ணலார் கமலபாதம்* அணுகுவார் அமரர்ஆவார்
அமரராய்த் திரிகின்றார்கட்கு* ஆதிசேர் அனந்தபுரத்து*
அமரர்கோன் அர்ச்சிக்கின்று* அங்குஅகப்பணி செய்வர் விண்ணோர்*
நமர்களோ! சொல்லக்கேள்மின்* நாமும்போய் நணுகவேண்டும்*
குமரனார் தாதை* துன்பம் துடைத்த கோவிந்தனாரே
துடைத்த கோவிந்தனாரே* உலகுஉயிர் தேவும்மற்றும்*
படைத்த எம்பரமமூர்த்தி* பாம்பணைப் பள்ளிகொண்டான்*
மடைத்தலை வாளைபாயும்* வயல்அணிஅனந்தபுரம்*
கடைத்தலை சீய்க்கப்பெற்றால்* கடுவினை களையலாமே
கடுவினை களையலாகும்* காமனைப் பயந்தகாளை*
இடவகை கொண்டதுஎன்பர்* எழில்அணிஅனந்தபுரம்*
படம்உடைஅரவில் பள்ளி* பயின்றவன் பாதம்காண*
நடமினோ நமர்கள்உள்ளீர்!* நாம் உமக்குஅறியச் சொன்னோம்.
நாம் உமக்கு அறியச்சொன்ன* நாள்களும் நணியஆன*
சேமம் நன்குஉடைத்துக்கண்டீர்* செறிபொழில்அனந்தபுரம்*
தூமநல் விரைமலர்கள்* துவள்அற ஆய்ந்துகொண்டு*
வாமனன் அடிக்குஎன்று ஏத்த* மாய்ந்துஅறும் வினைகள்தாமே.
மாய்ந்துஅறும் வினைகள்தாமே* மாதவா என்ன நாளும்-
ஏய்ந்தபொன் மதிள்* அனந்தபுர நகர்எந்தைக்குஎன்று*
சாந்தொடு விளக்கம்தூபம்* தாமரை மலர்கள்நல்ல*
ஆய்ந்துகொண்டு ஏத்தவல்லார்* அந்தம்இல் புகழினாரே.
அந்தம்இல் புகழ்* அனந்தபுர நகர் ஆதிதன்னைக்*
கொந்துஅலர் பொழில்* குருகூர் மாறன் சொல்ஆயிரத்துள்*
ஐந்தினோடு ஐந்தும்வல்லார்* அணைவர்போய் அமர்உலகில்*
பைந்தொடி மடந்தையர்தம்* வேய்மரு தோள்இணையே. (2)