பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
பூங்கோதை ஆய்ச்சி* கடைவெண்ணெய் புக்குஉண்ண,*
ஆங்குஅவள் ஆர்த்துப்* புடைக்க புடையுண்டு*
ஏங்கி இருந்து* சிணுங்கி விளையாடும்*
ஓங்குஓத வண்ணனே! சப்பாணி*ஒளிமணி வண்ணனே! சப்பாணி (2)
தாயர் மனங்கள் தடிப்ப* தயிர்நெய்உண்டு
ஏய்எம்பிராக்கள்* இருநிலத்து எங்கள்தம்*
ஆயர் அழக* அடிகள்* அரவிந்த-
வாயவனே கொட்டாய் சப்பாணி!* மால்வண்ணனே! கொட்டாய் சப்பாணி
தாம்மோர் உருட்டி* தயிர்நெய் விழுங்கிட்டு*
தாமோ தவழ்வர்என்று* ஆய்ச்சியர் தாம்பினால்*
தாம்மோதரக்கையால்* ஆர்க்க தழும்புஇருந்த*
தாமோதரா! கொட்டாய் சப்பாணி!* தாமரைக் கண்ணனே! சப்பாணி
பெற்றார் தளைகழலப்* பேர்ந்துஅங்கு அயல்இடத்து*
உற்றார் ஒருவரும் இன்றி* உலகினில்,*
மற்றாரும் அஞ்சப்போய்* வஞ்சப்பெண் நஞ்சுஉண்ட*
கற்றாயனே! கொட்டாய் சப்பாணி!* கார்வண்ணனே! கொட்டாய் சப்பாணி
சோத்து என நின்னைத்* தொழுவன் வரம் தர,*
பேய்ச்சி முலைஉண்ட பிள்ளாய்,* பெரியன-
ஆய்ச்சியர்* அப்பம் தருவர்* அவர்க்காகச்-
சாற்றிஓர் ஆயிரம் சப்பாணி!* தடங்கைகளால் கொட்டாய் சப்பாணி
கேவலம் அன்று* உன்வயிறு வயிற்றுக்கு*
நான் அவல் அப்பம் தருவன்* கருவிளைப்-
பூஅலர் நீள்முடி* நந்தன்தன் போர்ஏறே,*
கோவலனே! கொட்டாய் சப்பாணி!* குடம்ஆடீ! கொட்டாய் சப்பாணி.
புள்ளினை வாய்பிளந்து* பூங்குருந்தம் சாய்த்து,*
துள்ளி விளையாடி* தூங்குஉறி வெண்ணெயை,*
அள்ளிய கையால்* அடியேன் முலைநெருடும்*
பிள்ளைப்பிரான்! கொட்டாய் சப்பாணி!* பேய்முலை உண்டானே! சப்பாணி
யாயும் பிறரும்* அறியாத யாமத்து,*
மாய வலவைப்* பெண் வந்து முலைதர,*
பேய்என்று அவளைப்* பிடித்து உயிர் உண்ட,*
வாயவனே! கொட்டாய் சப்பாணி மால்வண்ணனே! கொட்டாய் சப்பாணி.
கள்ளக் குழவிஆய்* காலால் சகடத்தைத்*
தள்ளி உதைத்திட்டு* தாய்ஆய் வருவாளை,*
மெள்ளத் தொடர்ந்து* பிடித்து ஆர்உயிர்உண்ட,*
வள்ளலே! கொட்டாய் சப்பாணி!* மால்வண்ணனே! கொட்டாய் சப்பாணி
கார்ஆர் புயல்கைக்* கலிகன்றி மங்கையர்கோன்,*
பேராளன் நெஞ்சில்* பிரியாது இடம்கொண்ட*
சீராளா செந்தாமரைக் கண்ணா!* தண்துழாய்த்*
தார்ஆளா, கொட்டாய் சப்பாணி!* தடமார்வா கொட்டாய் சப்பாணி. (2)
கண்ணன் கழல்இணை* நண்ணும் மனம்உடையீர்*
எண்ணும் திருநாமம்* திண்ணம் நாரணமே. (2)
நாரணன் எம்மான்* பாரணங்காளன்*
வாரணம் தொலைத்த* காரணன் தானே.
தானே உலகுஎல்லாம்* தானே படைத்துஇடந்து*
தானே உண்டுஉமிழ்ந்து* தானே ஆள்வானே.
ஆள்வான் ஆழிநீர்க்* கோள்வாய் அரவுஅணையான்*
தாள்வாய் மலர்இட்டு* நாள்வாய் நாடீரே.
நாடீர் நாள்தோறும்* வாடா மலர்கொண்டு*
பாடீர் அவன்நாமம்* வீடே பெறலாமே.
மேயான் வேங்கடம்* காயாமலர் வண்ணன்*
பேயார் முலைஉண்ட* வாயான் மாதவனே. (2)
மாதவன் என்றுஎன்று* ஓத வல்லீரேல்*
தீதுஒன்றும் அடையா* ஏதம் சாராவே.
சாரா ஏதங்கள்* நீரார் முகில்வண்ணன்*
பேர் ஆர் ஓதுவார்* ஆரார் அமரரே.
அமரர்க்கு அரியானை* தமர்கட்கு எளியானை*
அமரத் தொழுவார்கட்கு* அமரா வினைகளே.
வினைவல் இருள்என்னும்* முனைகள் வெருவிப்போம்*
சுனை நல் மலர்இட்டு* நினைமின் நெடியானே.
நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்துஇப்பத்து அடியார்க்கு அருள்பேறே (2)