பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    நிதியினை பவளத் தூணை*  நெறிமையால் நினைய வல்லார்,* 
    கதியினை கஞ்சன் மாளக்*  கண்டுமுன் அண்டம்ஆளும்,*

    மதியினை மாலை வாழ்த்தி*  வணங்கிஎன் மனத்து வந்த,* 
    விதியினைக் கண்டு கொண்ட*  தொண்டனேன் விடுகிலேனே (2)


    காற்றினை புனலை தீயைக்*  கடிமதிள் இலங்கை செற்ற- 
    ஏற்றினை,*  இமயம் ஏய*  எழில்மணித் திரளை,*  இன்ப-

    ஆற்றினை அமுதம்-தன்னை*  அவுணன் ஆர்உயிரை உண்ட- 
    கூற்றினை,*  குணங்கொண்டு உள்ளம்*  கூறுநீ  கூறுமாறே   


    பாயிரும் பரவை தன்னுள்*  பருவரை திரித்து,*  வானோர்க்கு- 
    ஆயிருந்து அமுதங் கொண்ட*  அப்பனை எம்பிரானை,*

    வேயிருஞ்சோலை சூழ்ந்து*  விரிகதிர் இரிய நின்ற,* 
    மாயிருஞ்சோலை மேய*  மைந்தனை வணங்கி னேனே.  


    கேட்கயான் உற்றதுஉண்டு*  கேழல்ஆய் உலகம்கொண்ட,* 
    பூக்கெழு வண்ணனாரைப்*  போதரக் கனவில் கண்டு,*

    வாக்கினால் கருமம் தன்னால்*  மனத்தினால் சிரத்தை தன்னால்,* 
    வேட்கை மீதூர வாங்கி*  விழுங்கினேற்கு இனியவாறே.  


    இரும்புஅனன்றுஉண்ட நீர்போல்*  எம்பெருமானுக்கு*  என்தன்- 
    அரும்பெறல் அன்புபுக்கிட்டு*  அடிமை பூண்டு உய்ந்து போனேன்,*

    வரும்புயல் வண்ணனாரை*  மருவிஎன் மனத்து வைத்து,* 
    கரும்பின்இன் சாறு போலப்*  பருகினேற்கு இனியவாறே.


    மூவரில் முதல்வன்ஆய*  ஒருவனை உலகம் கொண்ட,* 
    கோவினை குடந்தை மேய*  குருமணித் திரளை,*  இன்பப்-

    பாவினை பச்சைத் தேனை*  பைம்பொன்னை அமரர் சென்னிப்- 
    பூவினைப்,*  புகழும் தொண்டர்*  என்சொல்லிப் புகழ்வர் தாமே?  


    இம்மையை மறுமை-தன்னை*  எமக்கு வீடுஆகி நின்ற,* 
    மெய்ம்மையை விரிந்த சோலை*  வியன் திருஅரங்கம் மேய,*

    செம்மையை கருமை தன்னை*  திருமலை ஒருமையானை,* 
    தன்மையை நினைவார் என்தன்*  தலைமிசை மன்னுவாரே    


    வானிடைப் புயலை மாலை*  வரையிடைப் பிரசம் ஈன்ற,* 
    தேனிடைக் கரும்பின் சாற்றை*  திருவினை மருவி வாழார்,*

    மானிடப் பிறவி அந்தோ!*  மதிக்கிலர் கொள்க,*  தம்தம்- 
    ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு*  உறுதியே வேண்டினாரே. 


    உள்ளமோ ஒன்றில்நில்லாது*  ஓசையில் எரிநின்றுஉண்ணும்* 
    கொள்ளிமேல் எறும்பு போலக்*  குழையுமால் என்தன் உள்ளம்,*

    தெள்ளியீர்! தேவர்க்கு எல்லாம்*  தேவராய் உலகம் கொண்ட- 
    ஒள்ளியீர்,*  உம்மை அல்லால்*  எழுமையும் துணை இலோமே. 


    சித்தமும் செவ்வை நில்லாது*  என்செய்கேன் தீவினையேன்? 
    பத்திமைக்கு அன்புஉடையேன்*  ஆவதே பணியாய் எந்தாய்,*

    முத்துஒளி மரகதமே!*  முழங்குஒளி முகில்வண்ணா,*  என்- 
    அத்த! நின் அடிமை அல்லால்*  யாதும்ஒன்று அறிகிலேனே.  


    தொண்டுஎல்லாம் பரவி நின்னைத்*  தொழுதுஅடி பணியுமாறு- 
    கண்டு,*  தான் கவலை தீர்ப்பான்*  ஆவதே பணியாய் எந்தாய்,*

    அண்டம்ஆய் எண்திசைக்கும்*  ஆதிஆய் நீதிஆன,* 
    பண்டம்ஆம் பரம சோதி*  நின்னையே பரவு வேனே. 


    ஆவியை அரங்க மாலை*  அழுக்குஉடம்பு எச்சில் வாயால் 
    தூய்மைஇல் தொண்டனேன் நான்*  சொல்லினேன் தொல்லை நாமம்

    பாவியேன் பிழைத்தவாறுஎன்று*  அஞ்சினேற்கு அஞ்சல்என்று 
    காவிபோல் வண்ணர் வந்து*  என் கண்ணுளே தோன்றினாரே. 


    இரும்புஅனன்றுஉண்ட நீரும்*  போதரும் கொள்க,*  என்தன்- 
    அரும்பிணி பாவம் எல்லாம்*  அகன்றன என்னை விட்டு,*

    சுரும்புஅமர் சோலை சூழ்ந்த*  அரங்கமா கோயில் கொண்ட,* 
    கரும்பினைக் கண்டு கொண்டு* என்  கண்இணை களிக்குமாறே.   


    காவியை வென்ற கண்ணார்*  கலவியே கருதி,*  நாளும்- 
    பாவியேன்ஆக எண்ணி*  அதனுள்ளே பழுத்து ஒழிந்தேன்,*

    தூவிசேர் அன்னம் மன்னும்*  சூழ்புனல் குடந்தையானைப்,* 
    பாவியேன் பாவியாது*  பாவியேன் ஆயினேனே!


    முன்பொலா இராவணன்தன்*  முதுமதிள் இலங்கை வேவித்து,* 
    அன்பினால் அனுமன் வந்து*  ஆங்குஅடிஇணை பணிய நின்றார்க்கு,*

    என்புஎலாம் உருகிஉக்கிட்டு*  என்னுடை நெஞ்சம் என்னும்,* 
    அன்பினால் ஞான நீர்கொண்டு*  ஆட்டுவன் அடியனேனே. 


    மாயமான் மாயச் செற்று*  மருதுஇற நடந்து,*  வையம்- 
    தாய்அமா பரவை பொங்கத்*  தடவரை திரித்து*  வானோர்க்கு-

    ஈயும்மால் எம்பிரானார்க்கு*  என்னுடைச் சொற்கள் என்னும்,* 
    தூய மாமாலை கொண்டு*  சூட்டுவன் தொண்டனேனே.   


    பேசினார் பிறவி நீத்தார்*  பேர்உளான் பெருமை பேசி,* 
    ஏசினார் உய்ந்து போனார்*  என்பது இவ்உலகின் வண்ணம்,*

    பேசினேன் ஏச மாட்டேன்*  பேதையேன் பிறவி நீத்தற்கு,* 
    ஆசையோ பெரிது கொள்க*  அலைகடல் வண்ணர் பாலே. 


    இளைப்பினை இயக்கம் நீக்கி*  இருந்துமுன் இமையைக் கூட்டி,* 
    அளப்பில் ஐம்புலன்அடக்கி*  அன்புஅவர் கண்ணே வைத்து,*

    துளக்கம்இல் சிந்தை செய்து  தோன்றலும் சுடர்விட்டு,*  ஆங்கே- 
    விளக்கினை விதியின் காண்பார்*   மெய்ம்மையைக் காண்கிற் பாரே    


    பிண்டியார் மண்டை ஏந்தி*  பிறர்மனை திரிதந்துஉண்ணும்- 
    உண்டியான்*  சாபம் தீர்த்த  ஒருவன்ஊர்,*  உலகம் ஏத்தும்-

    கண்டியூர் அரங்கம் மெய்யம்*  கச்சிபேர் மல்லை என்று- 
    மண்டினார்,*  உய்யல் அல்லால்*  மற்றையார்க்கு உய்யல்ஆமே? (2)      


    வானவர் தங்கள் கோனும்*  மலர்மிசை அயனும்,*  நாளும்- 
    தேமலர் தூவி ஏத்துவடிம்*  சேச் செங்கண் மாலை,* 

    மானவேல் கலியன் சொன்ன*  வண்தமிழ் மாலை நாலைந்து,* 
    ஊனம்அதுஇன்றி வல்லார்*  ஒளிவிசும்பு ஆள்வர் தாமே (2)