திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்

தல புராணம்: இது நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த தலமாக கருதப்படுகிறது. இங்கு பிரகலாதனுக்கு காட்சி கொடுத்ததால் மூலவர் பிரகலாத வரதன் எனப்படுகிறார். மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட "உக்கிர ஸ்தம்பம்' (தூண்) உள்ளது. திருமாலின் நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்புவதாக கருடன் கேட்க, பகவான் அகோபிலத்தில் ஒன்பது நரசிம்ம வடிவங்களில் கருடனுக்குக் காட்சி கொடுத்தார். கருட பகவான் அந்த நரசிம்ம மூர்த்தங்களைப் பூஜித்து வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது. அகோபில மடம்: இங்குள்ள அகோபில மடம் ஆதிவண் சடகோப மகாதேசிகரால் நிறுவப்பட்டது. இதுவே தென்னிந்தியாவின் மிகப்பெரிய வைணவ மடமாகும். இந்த மடத்தின் முதல் ஜீயரான இவருக்கு ‘அழகிய சிங்கர்’ என்ற பட்டம் உண்டு.

அமைவிடம்

ஊர் : அகோபிலம் மாவட்டம்: கர்னூல் மாநிலம் : ஆந்திர பிரதேசம் நாடு : இந்தியா,

தாயார் : ஸ்ரீ செஞ்சு லக்ஷ்மி
மூலவர் : ப்ரஹலாதவரதன்
உட்சவர்: --
மண்டலம் : வட நாடு
இடம் : ஆந்திரம்
கடவுளர்கள்: ப்ரஹலாதவரதன் ,ஸ்ரீ செஞ்சு லக்ஷ்மி


திவ்யதேச பாசுரங்கள்

    1008.   
    அம் கண் ஞாலம் அஞ்ச*  அங்கு ஓர் ஆள் அரி ஆய்*
    அவுணன் பொங்க ஆகம் வள் உகிரால்*  போழ்ந்த புனிதன் இடம்*
    பைங் கண் ஆனைக் கொம்பு கொண்டு*  பத்திமையால்*  
    அடிக்கீழ் செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும்*  சிங்கவேழ்குன்றமே. (2)

        விளக்கம்  



    1009.   
    அலைத்த பேழ் வாய்*  வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
    அவுணன் கொலைக் கையாளன் நெஞ்சு இடந்த*  கூர் உகிராளன் இடம்*
    மலைத்த செல் சாத்து எறிந்த பூசல்*  வன் துடி வாய் கடுப்ப* 
    சிலைக் கை வேடர் தெழிப்பு அறாத*  சிங்கவேழ்குன்றமே.   

        விளக்கம்  



    1010.   
    ஏய்ந்த பேழ் வாய்*  வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
    அவுணன் வாய்ந்த ஆகம் வள் உகிரால்*  வகிர்ந்த அம்மானது இடம்* 
    ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும்*  அன்றியும் நின்று அழலால்* 
    தேய்ந்த வேயும் அல்லது இல்லாச்*  சிங்கவேழ்குன்றமே.

        விளக்கம்  



    1011.   
    எவ்வம் வெவ் வேல் பொன்பெயரோன்*  ஏதலன் இன் உயிரை வவ்வி* 
    ஆகம் வள் உகிரால்*  வகிர்ந்த அம்மானது இடம்*
    கவ்வும் நாயும் கழுகும்*  உச்சிப்போதொடு கால் சுழன்று* 
    தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச்*  சிங்கவேழ்குன்றமே.  

        விளக்கம்  



    1012.   
    மென்ற பேழ்வாய்*  வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
    அவுணன் பொன்ற ஆகம் வள் உகிரால்*  போழ்ந்த புனிதன் இடம்*
    நின்ற செந்தீ மொண்டு சூறை*  நீள் விசும்பூடு இரிய* 
    சென்று காண்டற்கு அரிய கோயில்*  சிங்கவேழ்குன்றமே.

        விளக்கம்  



    1013.   
    எரிந்த பைங் கண் இலங்கு பேழ் வாய்*  எயிற்றொடு இது எவ் உரு என்று* 
    இரிந்து வானோர் கலங்கி ஓட*  இருந்த அம்மானது இடம்* 
    நெரிந்த வேயின் முழையுள் நின்று*  நீள் நெறிவாய் உழுழை* 
    திரிந்த ஆனைச் சுவடு பார்க்கும்*  சிங்கவேழ்குன்றமே.

        விளக்கம்  



    1014.   
    முனைத்த சீற்றம் விண் சுடப் போய்*  மூவுலகும் பிறவும்* 
    அனைத்தும் அஞ்ச ஆள் அரி ஆய்*  இருந்த அம்மானது இடம்* 
    கனைத்த தீயும் கல்லும் அல்லா*  வில் உடை வேடரும் ஆய்* 
    தினைத்தனையும் செல்ல ஒண்ணாச்*  சிங்கவேழ்குன்றமே.        

        விளக்கம்  



    1015.   
    நாத் தழும்ப நாஅன்முகனும்*  ஈசனும் ஆய் முறையால் ஏத்த*
    அங்கு ஓர் ஆள் அரி ஆய்*  இருந்த அம்மானது இடம்*
    காய்த்த வாகை நெற்று ஒலிப்ப*  கல் அதர் வேய்ங்கழை போய்த்* 
    தேய்த்த தீயால் விண் சிவக்கும்* சிங்கவேழ்குன்றமே*.   

        விளக்கம்  



    1016.   
    நல்லை நெஞ்சே! நாம் தொழுதும்*  நம்முடை நம் பெருமான்* 
    அல்லிமாதர் புல்க நின்ற*  ஆயிரந் தோளன் இடம்,
    நெல்லி மல்கி கல் உடைப்ப*  புல் இலை ஆர்த்து*
    அதர்வாய் சில்லி சில் என்று ஒல் அறாத*  சிங்கவேழ்குன்றமே.  

        விளக்கம்  



    1017.   
    செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும்*  சிஙக்வேழ்குன்று உடைய* 
    எங்கள் ஈசன் எம் பிரானை*  இருந் தமிழ் நூல்புலவன்* 
    மங்கை ஆளன் மன்னு தொல் சீர்*  வண்டு அரை தார்க் கலியன்* 
    செங்கையாளன் செஞ்சொல் மாலை*  வல்லவர் தீது இலரே. (2) 

        விளக்கம்