தள அறிமுகம்

ஒரு மா நொடியும் பிரியா என் ஊழி முதல்வன் - திருமாலிருஞ்சோலை அழகர் - திருவடி போற்றி
          உய்ய ஒரே வழியான உடையவர்  திருவடி போற்றி!
இணய தள நோக்கம்
           1. இராமானுஜரின் 1000 ஆவது பிறந்த ஆண்டில் அவரின் கட்டளைகளில் ஒன்றான நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை ஆசையுள்ளோர் அனைவருக்கும் எளிதில் கிடைக்கச்செய்தல்
                2. "ஆழ்வார்களின் அருளிச்செயல் அமுதம்"  "(திராவிட ) தமிழ் வேதம்"  என்று போற்றப்படுகின்ற - நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களையும் அவற்றின் உரைகளையும் - தொடர்புடைய அறிய தகவல்களையும் - பகுத்து - தொகுத்து - இலகுவான வழியில் அடியவர்கள் அனுபவிக்க உதவுதல்
              3.  நாலாயிர திவ்ய பிரபந்தம் தொடர்பான பல்வேறு தகவல்களையும் - பதிவுகளையும் தொகுத்து  ஒரு களஞ்சியம் உருவாக்கி, பாதுகாத்து அடியவர் இன்புறவும்  - மேல் ஆய்வுகளுக்கும் உதவுதல்
             4.  தமிழ் மொழியின் பெருமையை காப்பதில் வைணவ சமய தமிழ் இலக்கியங்களும் - வைணவ வழிபாட்டு முறைகளும் ஆற்றும் பங்கினை - அராவமுதினை - போற்றி பறை சாற்றுதல்

 
பயன்பாடு & காப்புரிமை
                  தமிழுக்கு வைணவ சமயத்தின் கொடையான நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் அனைவரும் எளிதில் கிடைக்கப்பெற்று - படித்து - புரிந்து - அனுபவிக்க உதவும் நோக்கத்தில் ஆழ்வார்களின் பாசுரங்களோடு பல்வேறு அன்பர்களின் பதிவுகளும் படைப்புகளும் படங்களும் இங்கு வியாபார நோக்கமின்றி - சமய - தமிழ் இலக்கிய நல்லெண்ண சேவைக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் .. மூல உரிமையாளர்கள் அனைவருக்கும் "தமிழ் வேதம்" தன் நன்றியை  தெரிவித்துக்கொள்கிறது - எவருக்கேனும் ஆட்சேபம் இருந்து தெரிவித்தால் அவர்களின் படைப்புகளை உடனடியாக நீக்க தயாராக உள்ளோம்.

  நன்றி தோழி டாக்டர். விசாலாட்சி விஜயராகவன் - 2004ல் வேலுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் நிகழ்ச்சிக்கு அழைத்துச்சென்று அவரின் ஆராவமுத தமில் சொற்பொழிவுகளை  அறிமுகப்படுத்தியதற்கு,
   நன்றி வேதிக் சொசைட்டிக்கு - என் வழிகாட்டிகள்  - ரவிகணேஷ் & கௌரி ரவிகணேஷ் -
    நன்றி வாரந்தோறும் பாசுரப்பந்தியிட்ட வேதிக் சொசைட்டி ஆசான்கள் - பத்மநாபன், கஸ்தூரி ரெங்கன் & மோகன் சாரி ,
        நன்றி தீதிலா நல்லோர் திரளான - வேதிக் சொசைட்டி உறுப்பினர்கள் அனைவருக்கும்,
   நன்றிஅடியவனின் பாசுர - வைணவ மோகத்தின் கிரியா ஊக்கிகள் : ராஜா கோபாலாச்சாரி & சித்ரா ராஜா கோபாலாச்சாரி,
    நன்றி  கற்கும் முயற்சியில் என்  பகிர்வுகளை ஊக்குவித்த "தமிழ்வேதம் - whatsup குழு" வினர் அனைவருக்கும்,
   நன்றி அருளிச்செயல்களில் ஆழ்ந்து அனுபவிக்க அறிமுகமும் அனுமதியும் அவகாசமும்  ஆதரவும் அளித்ததற்கு என் குடும்பத்தினருக்கு,
     நன்றி  அகிலா கௌரி மற்றும் அவரின் SobinfoTech நிரலாக்க குழுவினர் அனைவருக்கும்.

 
- புகழொன்றில்லா அடியேன்  - சிவகுமார் குருசாமி