தமிழில் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமம்


அயர்வறும் அமரர்கள் அதிபதி போற்றி;
உயர்வற உயர்நலம் உடையவ போற்றி;

மயர்வள மதிநலம் அருளினாய் போற்றி;
பயிலும் சுடரொளி மூர்த்தி போற்றி:

பூமகள் நாயக போற்றி; ஓசை
மாமத யானை உதைத்தவ போற்றி;

அண்டக் குலத்துக் கதிபதி போற்றி;
பிண்டமாய் நின்ற பிரானே போற்றி;

அத்தா போற்றி; அரியே போற்றி;
பத்துடை யடியவர்க் கெளியாய் போற்றி;

அகவுயிர்க் கமுதே போற்றி; மாயச்
சகடம் உதைத்தாய் போற்றி; ஞானச்
சுடரே போற்றி; சொல்லுளாய் போற்றி;
உடையாய் போற்றி; உத்தமா போற்றி;

அதிர்குரல் சங்கத் தழகா போற்றி;
கதியே போற்றி; கரியாய் போற்றி;

குறளாய் போற்றி; குருமணி போற்றி;
மறையாய் போற்றி; மாதவா போற்றி;

அந்தணர் வணங்கும் தன்மைய போற்றி;
சிந்தனைக் கினியாய் போற்றி; சிற்றாயர்
சிங்கமே போற்றி; சேயோய் போற்றி;
அங்கதிர் அடியாய் போற்றி; அசுரர்கள்
நஞ்சே போற்றி; நாதா போற்றி;
பஞ்சவர் தூதா போற்றி; பாரிடம்
கீண்டாய் போற்றி; கேசவா போற்றி;
நீண்டாய் போற்றி; நிமலா போற்றி;

முதல்வா போற்றி; முத்தா போற்றி;
அழகா போற்றி ; அமுதே போற்றி;

கஞ்சனைக் காய்ந்த காளாய் போற்றி;
அஞ்சனக் குன்றே போற்றி; அஞ்சன
வண்ணா போற்றி; வள்ளலே போற்றி;
அண்ணா போற்றி; அண்ணலே போற்றி;

அச்சுதா போற்றி; அச்சனே போற்றி;
அச்சுவைக் கட்டியே போற்றி; அந்தணர்
சிந்தையாய் போற்றி; சீதரா போற்றி;
அந்த முதல்வா போற்றி; அந்தரம்
ஆனாய் போற்றி; அருவா போற்றி;
வானே தருவாய் போற்றி; வேதப்
பிரானே போற்றி; பிறப்பிலி போற்றி;
இராமா போற்றி; இறைவா போற்றி;
வக்கரன் வாய்முன் கீண்டவ போற்றி;
அக்கா ரக்கனி போற்றி; அங்கண்
நாயக போற்றி; நம்பீ போற்றி;
காய்சின வேந்தே போற்றி; அங்கை
ஆழிகொண் டவனே போற்றி; அந்தமில்
ஊழியாய் போற்றி; உலப்பிலாய் போற்றி;
காரணா போற்றி; கள்வா போற்றி;
சீரணா போற்றி; கேசவா போற்றி;
உரையார் தொல்புகழ் உத்தம போற்றி;
அரையா போற்றி; அண்டா போற்றி;
அந்தமில் ஆதியம் பகவனே போற்றி;
அந்தணர் அமுதே போற்றி; ஆநிரை
காத்தாய் போற்றி; கருமணி போற்றி;
கூத்தா போற்றி; குறும்பா போற்றி;
ஆவலன் புடையார் மனத்தாய் போற்றி;
மூவர்கா ரியமும் திருத்துவாய் போற்றி;
மூதறி வாளனே போற்றி; முதுவேத
கீதனே போற்றி; கேடிலி போற்றி;
அடர்பொன் முடியாய் போற்றி; மென்தளிர்
அடியாய் போற்றி; அமலா போற்றி;
அடிமூன் றிரந்தவன் கொண்டாய் போற்றி;
கடவுளே போற்றி; கண்ணாவாய் போற்றி;
அரவப் பகையூர் பவனே போற்றி;
குரவை கோத்த கு.கா போற்றி;
அலரே போற்றி; அரும்பே போற்றி;
நலங்கொள் நாத போற்றி; நான்மறை
தேடி ஓடும் செல்வா போற்றி;
ஆடா வமளியில் துயில்வோய் போற்றி;
மூன்றெழுத் தாய முதல்வா போற்றி;
தோன்றாய் போற்றி; துப்பனே போற்றி;
அலமும் ஆழியும் உடையாய் போற்றி;
கலந்தவர்க் கருளும் கருத்தாய் போற்றி;
அணிவரை மார்ப போற்றி; அரிகுலம்
பணிகொண்டலைகடல் அடைத்தாய் போற்றி;
அரிமுக போற்றி; அந்தணா போற்றி;
உரகமெல் லணையாய் போற்றி; உலகம்
தாயவ போற்றி; தக்காய் போற்றி;
ஆயர்தம் கொழுந்தே போற்றி; யார்க்கும்
அரிநவ போற்றி; அப்பனே போற்றி;
கரநான் குடையாய் போற்றி; கற்பகக்
காவன நற்பல தோளாய் போற்றி;
ஆவினை மேய்க்கும்வல் லாயா போற்றி;
ஆலநீள் கரும்பே போற்றி; அலையார்
வேலை வேவவில் வளைத்தாய் போற்றி;
அப்பிலா ரழலாய் நின்றாய் போற்றி;
செப்பம துடையாய் போற்றி; சேர்ந்தார்
தீவினை கட்கரு தஞ்சே போற்றி;
காவல போற்றி; கற்கீ போற்றி;
குன்றால் மாரி தடுத்தவ போற்றி;
நன்றெழில் நாரண போற்றி; நந்தா
விளக்கே போற்றி; வேதியா போற்றி;
அளப்பரு வேலையை அடைத்தாய் போற்றி;
சீலா போற்றி; செல்வா போற்றி;
பாலா லிலையில் துயின்றாய் போற்றி;
மிக்காய் போற்றி; ஒண்சுடர் போற்றி;
சக்கரச் செல்வா போற்றி; நலனுடை
ஒருவா போற்றி; ஒண்சுடர் போற்றி;
அருமறை தந்தாய் போற்றி; ஆணிச்
செம்பொன் மேனி எந்தாய் போற்றி;
எம்பிரான் போற்றி; எங்கோன் போற்றி;
உறவு சுற்றம் ஒன்றிலாய் போற்றி;
பிறர்களுக் கரிய வித்தகா போற்றி;
பரமா போற்றி; பதியே போற்றி;
மரகத வண்ணா போற்றி; மறைவார்
விரித்த விளக்கே போற்றி; மன்றில்
குரவை பிணைந்த மாலே போற்றி;
போதலர் நெடுமுடிப் புண்ணிய போற்றி;
மாதுகந்த மாரபா போற்றி; முனிவரர்
விழுங்கும் கோதிலன் கனியே போற்றி;
அழக்கொடி யட்டாய் போற்றி; அறுவகைச்
சமயமும் அறிவரு நிலையினாய் போற்றி;
அமரர்க் கமுதம் ஈந்தோய் போற்றி; ஆதி
பூதனே போற்றி; புராண போற்றி;
புனிதா போற்றி; புலவா போற்றி;
தனியா போற்றி; தத்துவா போற்றி;
நச்சுவா ருச்சிமேல் நிற்பாய் போற்றி;
நிச்சம் நினைவார்க் கருள்வாய் போற்றி;
ஆளரி போற்றி; ஆண்டாய் போற்றி;
வாளரக்க ருக்கு நஞ்சே போற்றி;
விகிர்தா போற்றி; வித்தகா போற்றி;
உகங்கள் தொறுமுயிர் காப்பாய் போற்றி;
மல்லா போற்றி; மணாளா போற்றி;
எல்லாப் போருளும் விரித்தாய் போற்றி;
வையந் தொழுமுனி போற்றி; சக்கரக்
கையனே போற்றி; கண்ணா போற்றி;
குணப்பரா போற்றி; கோளரி போற்றி;
அணைப்பவர் கருத்தாய் போற்றி; அந்தணர்
கற்பே போற்றி; கற்பகம் போற்றி;
அற்புதா போற்றி; அற்றவர் கட்கரு
மருந்தே போற்றி; மருத்துவ போற்றி;
இருங்கை மதகளி றீர்த்தாய் போற்றி;
உள்ளுவார் உள்ளத் துறைவாய் போற்றி;
தெள்ளியார் கைதொழும் தேவனே போற்றி;
வாமா போற்றி; வாமனா போற்றி;
ஆமா றறியும் பிரானே போற்றி;
ஓரெழுத் தோருரு வானவ போற்றி;
ஆரெழில் வண்ண போற்றி; ஆரா
அமுதே போற்றி; ஆதிநீ போற்றி;
கமலத் தடம்பெருங் கண்ணா போற்றி;
நண்ண லரிய பிரானே போற்றி;
கண்ணுதல் கூடிய அருத்தா போற்றி;
தொல்லையஞ் சோதி போற்றி; ஞானம்
எல்லையி லாதாய் போற்றி; கவிக்கு
நிறை பொருள் போற்றி; நீதியே போற்றி;
அறந்தா னாகித் திரிவாய் போற்றி; 200.

புறந்தொழு வார்க்குப் பொய்யன் வாழ்க;
மறைம லர்ச்சுடர் வாழ்க; மறையோர்
கண்ணான் வாழ்க; கவியளான் வாழ்க;
பண்ணுளான் வாழ்க; பண்பன் வாழ்க;
மண்மகள் கேள்வன் வாழ்க; மாக
விண்முதல் நாயகன் வாழ்க; வித்தகப்
பிள்ளை வாழ்க; பித்தன் வாழ்க;
ஒள்ளியான் வாழ்க; உயர்ந்தான் வாழ்க;
மண்பகர் கொண்டான் வாழ்க; நறுவிய
தண்துழாய் வேதியன் வாழ்க; மண்புரை
வையம் இடத்த வராகன் வாழ்க;
அய்யன் வாழ்க; ஆத்தன் வாழ்க;
பரிவாய் மீண்ட சீரான் வாழ்க;
கரிய முகில்புரை மேனியன் வாழ்க;
கலையார் சௌற்பொருள் வாழ்க; தெய்வத்
தலைவன் வாழ்க; தஞ்சன் வாழ்க;
பண்புடை வேதம் பயந்தான் வாழ்க;
வெண்புரி நாலுடை மார்பன் வாழ்க;
தனிமாத் தெய்வம் வாழ்க; அமரர்
முனிவர் விழுங்குங்கன் னற்கனி வாழ்க;
ஏலு மறைப் பொருள் வாழ்க; இறப்பெதிர்
காலக் கழிவும் ஆனவன் வாழ்க;
இன்பன் வாழ்க; ஈசன் வாழ்க;
அன்பன் வாழ்க; அறவன் வாழ்க;
அறமுய லாழிப் படையவன் வாழ்க;
உறியார் வெண்ணெயுண் டுகந்தான் வாழ்க;
செந்தமிழ் பாடுவார் தேவன் வாழ்க;
சுந்தரன் வாழ்க; சூழ்ச்சி ஞானச்
சுடரொளி வாழ்க; சோதீ வாழ்க;
உடன்மிசை உயிரெனக் கரந்தோன் வாழ்க;
ஆடற் பறவையன் வாழ்க; எடுப்பும்
ஈடுமில் ஈசன் வாழ்க; உட்குடை
அசுரர் உயிரெலா முண்டவன் வாழ்க;
பசுநிரை தொலைவு தவிர்த்தான் வாழ்க;
எண்ணம் புகுந்து திதிப்போன் வாழ்க;
எண்ணன் வாழ்க; எண்ணுவா ரிடரைக்
களைவான் வாழ்க; கற் றாயன் வாழ்க;
கிளரொளி மாயன் வாழ்க; காள
மேகம் வாழ்க; மெய்ம்மை வாழ்க;
நாக நடுக்கம் தீர்த்தான் வாழ்க;
வேதன் வாழ்க; வீடுடையான் வாழ்க;
போதகம் வீழப் பொருதான் வாழ்க;
வைய முதல்வன் வாழ்க; ஆண் டளக்கும்
ஐயன் வாழ்க; அரங்கன் வாழ்க;
ஆற்ற நல்வகை காட்டுவோன் வாழ்க;
ஊற்றம் உடையான் வாழ்க; செங்கட்
கருமுகில் வாழ்க; காரணம் கிரிசை
கரும முதல்வன் வாழ்க; கன்னலின்
கட்டியே வாழ்க; கரிய குழலுடைக்
குட்டன் வாழ்க; கூற்றம் வாழ்க;
கருவினை வண்ணன் வாழ்க; கருமமும்
கரும பலனும் ஆவோன் வாழ்க;
தேவர் விருத்தன் வாழ்க; தேவர்க்கும்
தேவன் வாழ்க; தெய்வம் மூவரில்
முதல்வன் வாழ்க; முகுந்தன் வாழ்க;
சதிரன் வாழ்க; சந்தோகன் வாழ்க;
சுடர்கொள் சோதீ வாழ்க; கடலுள்
கிடந்தவன் வாழ்க; கேழல் வாழ்க;
பவித்திரன் வாழ்க; பரபரன் வாழ்க;
திவத்தை யருள்பவன் வாழ்க; கணக்கறு
தலத்தனன் வாழ்க; நம்பன் வாழ்க;
நிலத்திடைக் கீண்ட அம்மான் வாழ்க;
பீதக ஆடையன் வாழ்க; வேள்வியும்
வேதமு மானான் வாழ்க; வேண்டிற்று
எல்லாம் தருபவன் வாழ்க; யார்க்கும்
நல்லான் வாழ்க; நம்பிரான் வாழ்க;
கூடாரை வெலுஞ்சீர்க் கோவிந்தன் வாழ்க;
ஓடாப் படையான் வாழ்க; மண்ணிக்
குறுங்கயிற் றாற்கட் டுண்டவன் வாழ்க;
நிறங்கிளர் சோதி நெடுந்தசை வாழ்க;
பிறப்பொடு மூப்பொன் றில்லவன் வாழ்க;
மறைப்பொருள் வாழ்க; மாயன் வாழ்க;
மன்ற மரக்கூத் தாடினான் வாழ்க;
என்றும் அரியான் வாழ்க; ஆழியால்
அன்றங் காழியை மறைத்தான் வாழ்க;
வென்றிநீர் மழுவன் வாழ்க; வினைதீர்
மருந்தே வாழ்க; மணியே வாழ்க;
அருந்தேவன் வாழ்க; அழகன் வாழ்க;
அன்னமாய் அருமறை பயந்தான் வாழ்க;
தன்னடி யார்மனத் தென்றும்தேன் வாழ்க;
மனத்துக் கினியான் வாழ்க; மாசற்றார்
மனத்துளான் வாழ்க; மணிக்குன்று வாழ்க;
மதிகோள் விடுத்த தேவன் வாழ்க;
மதியில் நீசர்சென் றடையான் வாழ்க;
முடிகளா யிரத்தான் வாழ்க; அவனி
அடிமூன் றிரந்து கொண்டவன் வாழ்க;
அமுதங் கொண்டான் வாழ்க; அமரர்தம்
அமுதே வாழ்க; அறிவன் வாழ்க;
ஆயிரம் பேருடை யம்மான் வாழ்க;
ஆயன் வாழ்க; ஆதியான் வாழ்க;
பணிலம்வாய் வைத்தான் வாழ்க; கன்று
குணிலா எறிந்தான் வாழ்க; கொள்ளக்
குறைவிலன் வாழ்க; கோவலன் வாழ்க;
மறுகலி லீசன் வாழ்க; மறைநான்கும்
ஓதினான் வாழ்க; ஊழி வாழ்க;
ஆதியம் புருடன் வாழ்க; ஆயர்க்கு
அதிபதி வாழ்க; ஆளன் வாழ்க;
நிதியன் வாழ்க; நெடுமால் வாழ்க;
படிவான மிறந்த பரமன் வாழ்க;
தடவரைத் தோளன் வாழ்க; தூய
பெருநீர் யமுனைத் முறைவன் வாழ்க;
எரிநீர் வளிவான் மண்ணான் வாழ்க;
கல்விநாதன் வாழ்க; பயில்நூல்
நல்யாழ் நரம்பின் முதிர்சுவை வாழ்க;
பூவணை வாழ்க; பூவனை மேவிய
தேவி மணாளன் வாழ்க; மைதோய்
சோதி வாழ்க; தூயான் வாழ்க;
ஆதி வராகமும் ஆனான் வாழ்க;
ஆழியங் கையில் கொண்டான் வாழ்க;
வேழப் போதகம் வாழ்க; அசுரரைத்
துணிப்பான் வாழ்க; துயக்கன் வாழ்க;
கணக்கில் கீர்த்தியான் வாழ்க; அடியார்க்கு
அருள்பவன் வாழ்க; அண்டமூ டுருவப்
பெருந்திசை நிமிர்ந்தான் வாழ்க; அஞ்சன
மேனியன் வாழ்க; வெள்ளை மூர்த்தி
ஆனவன் வாழ்க; அருங்கல வுருவின்
ஆயர் பெருமகன் வாழ்க; தலைகண்
ஆயிரமுடையான் வாழ்க; அடியார்க்கு
மெய்யன் வாழ்க; மின்னும் ஆழியங்
கையன் வாழ்க; காலிகள் மேய்க்க
வல்லவன் வாழ்க; வல்லான் வாழ்க;
அல்லிக் கமலக் கண்ணன் வாழ்க;
எய்ப்பினில் வைப்பே வாழ்க; அண்டத்
தப்புறத் துய்த்திடும் ஐயன் வாழ்க;
அணிகொள் மரகதம் வாழ்க; தாள் அடைந்தார்க்கு
அணியன் வாழ்க; அனந்தன் வாழ்க;
அமுதினு மாற்ற இனியான் வாழ்க;
தமர்கட் கெளியான் வாழ்க; தேவகி
சிறுவன் வாழ்க; சிட்டன் வாழ்க;
அறிவுப்பயன் வாழ்க; ஆவி வாழ்க;
வானோர் நாயன் வாழ்க; தனக்குத்
தானே உவமன் வாழ்க; தேடற்கு
அறியவன் வாழ்க; ஆட்கொள்ள வல்ல
பெருமாள் வாழ்க; பெருந்தகை வாழ்க;
பேதியா இன்ப வெள்ளம் வாழ்க;
வேதநல் விளக்கே வாழ்க; வேதப்
புனிதன் வாழ்க; புணைவன் வாழ்க;
கனிவார் வீட்டு இன்பம் வாழ்க;
கங்கை போதரக் கால் நிமிர்ந்தான் வாழ்க;
நங்கள் வைப்பும் வாழ்வும் வாழ்க;
யாதவன் வாழ்க; யாழிசை வாழ்க;
ஆதியம் பெருமான் வாழ்க; வேதம்
கண்டான் வாழ்க; கைம்மா துன்பம்
விண்டான் வாழ்க; விண்ணாளி வாழ்க;
வில்லான் வாழ்க; விபீட ணற்கு
நல்லான் வாழ்க; நரநா ரணனாய்
அறநூல் விரித்தான் வாழ்க; வேள்வியில்
குறளாய் நிமிர்ந்த வஞ்சன் வாழ்க;
அஞ்சிறைப் புள்ளின் பாகன் வாழ்க;
கஞ்சனை வஞ்சனை செய்தான் வாழ்க;
அமரர் கோமான் வாழ்க; என்றும்
இமையவர்க் கரியான் வாழ்க; இமையவர்
குலமுதல் வாழ்க; குலக்குமரன் வாழ்க;
அலைகடல் வண்ணன் வாழ்க; அலைகடற்
பள்ளியான் வாழ்க; பரமேட்டி வாழ்க;
வெள்ளத் தரவில் துயின்றான் வாழ்க;
குன்றா ரும்திறல் தோளன் வாழ்க;
கன்றால் விளவெறிந்த காளை வாழ்க; 400
“வெல்க “\
மதகளி றன்னான் வெல்க; மதுரைப்
பதியினன் வெல்க; பத்தராவி வெல்க;
அசுரர் கூற்றம் வெல்க; மணித்தேர்
விசயற் கூர்ந்தான் வெல்க; யசோதைதன்
சிங்கம் வெல்க; சிலையாளன் வெல்க;
செங்கதிர் முடியான் வெல்க; அடலாழிப்
பிரானவன் வெல்க; பீடுடையான் வெல்க; 410.
இராவ ணாந்தகன் வெல்க;அந்தமில்
புகழான் வெல்க;புதுனலுருவன் வெல்க;
திகழும் பவளத் தொளியான் வெல்க;
அந்தமிழ் இன்பப் பாவினன் வெல்க;
இந்திரன் சிறுவன்தேர் முன்னின்றான் வெல்க;
ஆநிரை மேய்த்தான் வெல்க;வைத்த
மாநிதி வெல்க;மண் ணிரந்தான் வெல்க;
மத்த மாமலை தாங்கீ வெல்க; 420
சித்திரத் தேர்வலான் வெல்க;சீற்றம்
இல்லவன் வெல்க;இழுதுண்டான் வெல்க;
மல்லரை யட்டான் வெல்க;மாசறு
சோதீ வெல்க;சுடர்விடு கமலப்
பாதன் வெல்க;பகலாளன் வெல்க;
படிக்கே ழில்லாப் பெருமான் வெல்க;
இடிக்குர லினவிடை யடர்த்தான் வெல்க; 431
அரட்டன் வெல்க;அரியுருவன் வெல்க;
இரட்டை மருதம் இறுத்தான் வெல்க;
வாணன் தடந்தோள் துணித்தான் வெல்க;
ஓணத்தான் வெல்க;உந்தியில் அயனைப்
படைத்தான் வெல்க; பருவரையாற் கடலை
அடைத்தான் வெல்க; ஆழிசங்கு வாழ்வில்
தண்டா திப்பல் படையான் வெல்க;
அண்டமோ டகலிடம் அளந்தான் வெல்க;
அரியுரு வாகி யந்தியம் போதில்
அரியை யழித்தவன் வெல்க; அமரர்
பிதற்றும் குணங்கெழு கொள்கையன் வெல்க; 440
மதியுடை அரற்கும் மலர்மகள் தனக்கும்
கூறு கொடுத்தருள் உடம்பன் வெல்க;
ஏறும் இருஞ்சிறைப்புட் கொடியான் வெல்க;
ஒத்தார் மிக்கார் இல்லவன் வெல்க;
பத்திரா காரன் வெல்க;பழமறை
தேடியுங் காணாச் செல்வன் வெல்க;
ஆடும் கருளக் கொடியான் வெல்க;
அடைந்தார்க் கணியன் வெல்க;கடலைக்
கடைந்தான் வெல்க;கட்கினியான் வெல்க;
காண்டற் கரியவன் வெல்க;புள்வாய் 450
கீண்டான் வெல்க;கேடிலான் வெல்க;
கையில் நீளுகிர்ப் படையான் வெல்க;
வையம் அளந்தான் வெல்க;யாவையும்
ஆனான் வெல்க;அமுதுண்டான் வெல்க;
ஊனா ராழிசங் குத்தமன் வெல்க;
அவலம் களைவான் வெல்க; என்றானும்
அவுணர்க் கிரக்கம் இலாதான் வெல்க;
அறவ னாயகன் வெல்க;மனத்து 460
அறமுடை யோர்கதி வெல்க;அறுசுவை
அடிசில் வெல்க;ஆதிப்பிரான் வெல்க;
வடிசங்கு கொண்டான் வெல்க;வண்புகழ்
நாரணன் வெல்க;நாயகன் வெல்க;
ஆர மார்பன் வெல்க;அண்டர்
தங்கோன் வெல்க;தம்பிரான் வெல்க;
சங்கமிடந்தான் வெல்க;சனகன் 470
மருமகன் வெல்க;மதுசூதன் வெல்க;
உருவு க்கரிய ஒளிவணன் வெல்க;
எங்கும் பரந்த தனிமுகில் வெல்க;
நங்கள் நாதன் வெல்க;நல்வினைக்கு
இன்னமுது வெல்க;ஏழிசை வெல்க;
பிள்ளை மணாளன் வெல்க;வலத்துப்
பிறைச்சடை யானை வைத்தவன் வெல்க;
நிறைஞா னத்தொரு மூர்த்தி வெல்க; 480
அலைகடற் கரைவீற் றிருந்தான் வெல்க;
சிலையால் மராமரம் சிதைத்தான் வெல்க;
அனந்த சயனன் வெல்க;இலங்கையைச்
சினந்தனால் செற்ற கோமகன் வெல்க;
ஆய்ப்பாடி நம்பி வெல்க;நஞ்சுகால்
பாப்பணைப் பள்ளி மேவினான் வெல்க;
உலகளிப் பானடி நிமிர்த்தான் வெல்க;
உலகமூன் றுடையான் வெல்க;உறங்குவான்
போல யோகுசெய் பெருமான் வெல்க;
காலசக் கரத்தான் வெல்க;காலநேமி 490
காலன் வெல்க; காமரூபி வெல்க;
பால்மதிக் கிடர் தீர்த்தவன் வெல்க;
பிறப்ப றுக்கும் பிரானவன் வெல்க;
மறைப்பெ ரும்பொருள் வெல்க; மனனுணர்
அளவிலன் வெல்க;அண்டவாணன் வெல்க;
வளரொளி யீசன் வெல்க;வருநல்
தொல்கதி வெல்க;தூமொழியான் வெல்க; 500
செல்வமல்கு சீரான் வெல்க;செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலன் வெல்க;
வைப்பே வெல்க;மருந்தே வெல்க;
வியலிட முண்டான் வெல்க;நமன் தமர்க்கு
அயர வாங்கரு நஞ்சன் வெல்க;
ஆய்மகள் அன்பன் வெல்க;வஞ்சப்
பேய்மகள் துஞ்சநஞ் சுண்டான் வெல்க;
அழகியான் வெல்க;அலங்காரன் வெல்க; 510
தழலைந் தோம்பி வெல்க; தக்கணைக்கு
மிக்கான் வெல்க;விண்ணவர் கோன் வெல்க;
திக்குநிறை புகழான் வெல்க;திருவாழ்
மார்பன் வெல்க;மதுரவாறு வெல்க;
கார்மலி வண்ணன் வெல்க;குவலயத்
தோர்தொழு தேத்தும் ஆதி வெல்க;
செங்கமல நாபன் வெல்க;நரங்கலந்த 520
சிங்கம் வெல்க;சிந்தை தன்னுள்
நீங்காதிருந்த திருவே வெல்க;
தேங்கோதநீர் உருவன் வெல்க;
பிள்ளையரசு வெல்க;பிள்ளைப்பிரான் வெல்க;
வெள்ளியான் வெல்க;வேதமயன் வெல்க;
வேல்வேந் தர்பகை கடிந்தோன் வெல்க;
ஆல்மேல் வளர்ந்தான் வெல்க;ஆழி
வலவன் வெல்க;வாயழகன் வெல்க; 531
நிலமுன மிடந்தான் வெல்க;நீலச்
சுடர்விடி மேனி யம்மான் வெல்க;
அடியார்க் கென்னை ஆட் படுத்தோன் வெல்க;
பாரதம் பொருதோன் வெல்க;பாரளந்த
பேரரசு வெல்க;பெற்றமாளி வெல்க;
காளை யாய்க் கன்று மேய்த்தான் வெல்க;
கேளிணை ஒன்றும் இலாதான் வெல்க;
வேதத்து அமுதமும் பயனும் வெல்க; 540
வேத முதல்வன் வெல்க;வேதத்தின்
சுவைப் பயன் வெல்க;சுடரான் வெல்க;
நவின்றேத்த வல்லார் நாதன் வெல்க;
ஆதி மூர்த்தீ வெல்க;அந்தியம்
போதில் அவுணனுடல் பிளந்தான் வெல்க;
ஆமையும் ஆனவன் வெல்க; துளவுசேர்
தாமநீண் முடியன் வெல்க;தனிப்பெரு
மூர்த்தி வெல்க; முண்டியான் சாபம்
தீர்த்தான் வெல்க;தெய்வம் வெல்க;
வளைவணற் கிளையவன் வெல்க;தயிரொடு 551
அளைவெணெய் உண்டான் வெல்க;மெய்ந்நலம்
தருவான் வெல்க;சாமமா மேனி
உருவான் வெல்க;உய்யவுலகு படைத்து
உண்டமணி வயிறன் வெல்க; அண்டமாய்
எண்டிசைக் குமாதி வெல்க;அண்டமாண்
டிருப்பான் வெல்க;இருங்கைம் மாவின்
மருப்பொசித் திட்டான் வெல்க;மரமெய்த
திறலான் வெல்க;தீமனத் தரக்கர் 560
திறலை யழித்தான் வெல்க;திருவின்
மணாளன் வெல்க;மண்ணுயிர்க் கெல்லாம்
கணாளன் வெல்க;மண்ணழகன் வெல்க;
கையெடு கால்செய்ய பிரான் வெல்க;
வைகுந்த நாதன் வெல்க; வைகுந்தச்
செல்வன் வெல்க;செங்கணான் வெல்க;
தொல்வினைத் துயரைத் துடைப்பான் வெல்க;
கூரா ராழிப் படையவன் வெல்க; 570
காரேழ் கடலேழ் மலையே ழுலகும்
உண்டும்ஆ ராத வயிற்றன் வெல்க;
தொண்டர் நெஞ்சில் உறைவான் வெல்க;
கொடைபுகழ் எல்லை யிலாதான் வெல்க;
குடமாடு கூத்தன் வெல்க;குவளை
மலர்வணன் வெல்க;மண்கொண்டான் வெல்க;
புலம்புசீர்ப் பூமி யளந்தவன் வெல்க;
உலகுண்ட வாயன் வெல்க;ஊழியேழ்
உலகுண் டுமிழ்ந்த ஒருவன் வெல்க;
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே வெல்க; 580
கடல்படா அமுதே வெல்க;அம்பொனின்
சுடரே வெல்க;நற் சோதீ வெல்க;
அமரர் முழுமுதல் வெல்க;அமரர்க்கு
அமுதம் ஊட்டிய அப்பன் வெல்க;
அமரர்க் கரியான் வெல்க;பொதிசுவை
அமுதம் வெல்க;அறமுதல்வன் வெல்க;
அயனை யீன்றவன் வெல்க;ஆலினிலைத்
துயின் றவன் வெல்க;துவரைக்கோன் வெல்க; 591
அரக்க னூர்க்கழல் இட்டவன் வெல்க;
இருக்கினில் இன்னிசை யானான் வெல்க;
விழுக்கையாளன் வெல்க;துளவம்
தழைக்கும் மார்பன் வெல்க;அளத்தற்கு
அரியவன் வெல்க;அயோத்தி யுளார்க்கு
உரியவன் வெல்க;உயிரளிப்பான் வெல்க;
ஏழுல குக்குயிர் வெல்க;ஆற்றல்
ஆழியங் கையமர் பெருமான் வெல்க; 600.
4.

திருமக ளார்தனிக் கேள்வன் அருள்க;
பெருநிலம் விழுங்கிய வாயன் அருள்க;
ஆலி னிலைப்பெரு மானே அருள்க;
மால்விடை ஏழ்செற் றவனே அருள்க;
தெள்ளிய சிங்கம் அருள்க; கொள்ளை
கொள்ளிக் குறும்பன்அருள்க; யார்க்கும்
அறிவரு மாயன்அருள்க; ஏழேழ்
பிறவி யறுப்பான் அருள்க; இமையவர்
தந்தைதாய் அருள்க; தவமுனி அருள்க; 610
எந்தையே அருள்க; ஏற்பரன் அருள்க;
ஒடியா இன்பப் பெருமையன் அருள்க;
படுகடல் அமுதே அருள்க; பத்தர்கள்
நுகர்கனி அருள்க; நூல்மார்ப அருள்க;
பகல்க ரந்தச்சுடர் ஆழியான் அருள்க;
ஆயர் பாடிவிளக்கே அருள்க;
வாய்முதல் அப்பன் அருள்க; வானவர்
புகலிடம் அருள்க; புள்வலான் அருள்க; 621.
வகையால் அவனி இரந்தான் அருள்க;
எங்கள்செல் சார்வே அருள்க; வடிவார்
சங்கம் கொண்டான் அருள்க; உலகுய்ய
நின்றான் அருள்க; நெடியோன் அருள்க;
குன்றே குடையா எடுத்தான் அருள்க;
மழுவியல் படையான் அருள்க; வேதாந்த
விழுமிய பொருளான் அருள்க; வேத
முதற்பொருள் அருள்க; முனைவன் அருள்க; 631.
மதனன் தன்னுயிர்த் தாதை அருள்க;
வானவர் கொழுந்தே அருள்க; மூவா
வானவன் அருள்க; வாசுதேவன் அருள்க;
வண்ணம் அழகிய நம்பி அருள்க;
எண்ணில் மூர்த்தி அருள்க; என்னுயிர்க்
காவலன் அருள்க; காகுத்தன் அருள்க;
கோவிந்தன் அருள்க; கோவர்த்தன் அருள்க; 641.
சாமவேதியன் அருள்க; செய்ய
தாமரைக் கண்ணன் அருள்க; தாமரைத்
தாளான் அருள்க; தாசரதி அருள்க;
தோளா மாமணி அருள்க; தொண்டர்க்கு
இனியான் அருள்க; இருடிகேசன் அருள்க;
பனிமல ராள்வலம் கொண்டான் அருள்க;
கோல வராகன் அருள்க; கருமுகில் 650
போலும் உருவன் அருள்க; தொழுவார்
சிந்தை பிரியான் அருள்க; சேது
பந்தம் திருத்தினான் அருள்க; பத்தர்க்கு
அமுதே அருள்க; அளப்பில்ஆ ரமுதை
அமரர்க் கருளும் விளக்கே அருள்க;
நரனே அருள்க; நந்தகோ பன்இள
வரசே அருள்க; ஜம்பால் ஓதியை
ஆகத்து இருத்தினான் அருள்க; கடலுள்
நாக மேந்தித் துயின்றான் அருள்க; 660
நாந்தக மேந்திய நம்பி அருள்க;
கூந்த லார்மகிழ் கோவலன் அருள்க;
குறியமா ணெம்மான் அருள்க; கூந்தல்வாய்
நெறியக் கீண்டான் அருள்க; நெறிமையால்
நினையவல் லார்கதி அருள்க; தன் அடியார்க்கு
இனியான் அருள்க; எனக்கரசு அருள்க;
துத்திசேர் நாகத்து அணையான் அருள்க;
அத்தம் அடுத்த பத்தாம் நாளில்
தோன்றினான் அருள்க; மூன்றினில் தோன்றி
மூன்றினில் மூன்றுரு வானான் அருள்க;
பாற்கடல் வண்ணன் அருள்க; சங் கோதப் 670
பாற்கடல் சேர்ப்பன் அருள்க; சார்ங்கவில்
கையன் அருள்க; கன்னல் அருள்க;
வெய்யவாள் தண்டு சங்கு சக்கரம்
வில்லும் ஏந்துவோன் அருள்க; வீயா
மல்லலஞ் செல்வக் கண்ணன் அருள்க;
ஞானப் பிராஅன் அருள்க; பரி முகமாய்
ஞானக் கலைப்பொருள் அருளினான் அருள்க;
வெற்றிக் கருடக் கொடியோன் அருள்க;
கற்றைக் குழலான் அருள்க; விடமுடைப்
பாம்பின் மேல்நடம் பயின்றான் அருள்க; 680
ஆமகிழ்ந் துகந்தவை மேய்ப்பான் அருள்க;
மும்மை மூர்த்தி அருள்க; இவ்வுலகில்
எம்மாண்பு மானான் அருள்க; என்னுடை
நாயகன் அருள்க; நான்மூர்த்தி அருள்க;
வேய்ங்குழ லூதும் வித்தகன் அருள்க;
ஆழியொன் றேந்தியே கூற்றே அருள்க;
ஊழி பெயர்த்தான் அருள்க; ஒருநல்
சுற்றம் அருள்க; சுற்றுநின் றகலா
உற்றார் இலாத மாயவன் அருள்க; 690
உணவுப் புள்ளேறி ஊர்வான் அருள்க;
அவுணன் உடலைப் பிளந்தவன் அருள்க;
அறிவினுக் கரிய பிரானவன் அருள்க;
குறிய மாணுருக் கூத்தன் அருள்க;
ஆதியும் அந்தமும் இல்லவன் அருள்க;
ஒதம் போல்கிளர் வேதநீரன் அருள்க;
ஆவிக் கொருகொள் கொம்பே அருள்க;
கோவி நாயகன் அருள்க;கூரார்
ஆழிபணி கொண்டவன் அருள்க;பிறவிகள்
ஏழும் அறுக்கும் சொல்லான் அருள்க; 700
தோற்றக் கேடவை இல்லவன் அருள்க;
ஆற்றல் மிகுந்த ஆற்றலான் அருள்க;
இம்மைக் கும்மினி ஏழேழ் பிறவி
அம்மைக் குங்கதி யாவான் அருள்க;
இமையோர்க் கரிய அப்பன் அருள்க;
இமையோர் நாயகன் அருள்க; இமையோர்
பெருமான் அருள்க;பெரியான் அருள்க;
அருமா மறைப்பண் ணகத்தான் அருள்க;
இலங்கு சோதியன் அருள்க; மதிள்நீர்
இலங்கை மானகர் பொடித்தான் அருள்க; 710
இருளன்ன மேனியான் அருள்க; சகடம்
உருள உதைத்தான் அருள்க; இன்னமுத
வெள்ளம் அருள்க; விமலன் அருள்க;
பள்ளிமா மாயன் அருள்க; பற்றிலார்
பற்றநின்றவன் அருள்க; மூவுலகும்
முற்ற விரிசுடர் முடியன் அருள்க;
இன்னப்பா அருள்க; இன்பவாறு அருள்க;
பொன்பெயரோன் நெஞ்சம் கீண்டான் அருள்க;
ஈட்டிய வெண்ணெய் உண்டவன் அருள்க; 721
தேட்ட ருந்திறல் தேனே அருள்க;
உணர்வினிக் கரியான் அருள்க; இருப்பிணி
அணிநெடுந் தோள்புணர்ந் தவனே அருள்க;
உலகு செய்பவன் அருள்க; ஏழுசேர்
உலகம் ஆண்டவன் அருள்க; உலகேழும்
புகக்க ரந்ததிரு வயிற்றான் அருள்க;
மகர நெடுங்குழைக் காதன் அருள்க;
எண்ணற் கரியான் அருள்க; கருமுகில்
வண்ணன் அருள்க; வரம்புக் கடங்காக் 730
கீர்த்தியான் அருள்க; கேடிலா உணர்வின்
மூர்த்தியான் அருள்க; முற்ற மண்ணிடம்
தாவிவிண் ணுறநீண் டளந்தான் அருள்க;
ஓவரி வெஞ்சிலை வலவன் அருள்க;
உயர்வினை யேதரும் ஒண்சுடர் அருள்க;
உயர நின்றதோர் சோதீ அருள்க;
எளிவரும் இயல்வினன் அருள்க; ஞாலம்
அளந்திடந் துண்ட அண்ணல் அருள்க;
ஞாலம் தத்தும் பாதன் அருள்க;
ஞாலமுண் டுமிழ்ந்த மாஅல் அருள்க; 740
உம்பர் கோமான் அருள்க; துழாய்முடி
நம்பெரு மானே அருள்க; இலனது
உடையன் இதுவென நினைவரியான் அருள்க;
விடையேழ் வீயப் பொருதான் அருள்க;
மாகத் திளமதி சேர்சடை யானைப்
பாகத்து வைத்தான் அருள்க; ஞானத்தால்
ஆகத்து அனைப்பார்க்கு அருள்வான் அருள்க;
நாகத் தணையான் அருள்க; நற்பல
தாமரை நாண்மலர்க் கையவன் அருள்க;
தாமரை மின்னிடை நாகன் அருள்க;
என்றும் இனியான் அருள்க; பலவென 750
ஒன்றென அறிவரும் வடிவினன் அருள்க;
என்னுடைச் சுற்றம் அருள்க; தொண்டர்க்
கின்னருள் புரிவோன் அருள்க; எந்நின்ற
யோனியு மாகிப் பிறந்தவன் அருள்க;
ஞானத் தின்னொளி உருவன் அருள்க;
ஏறு சேவகன் அருள்க; அன்றிலங்கை
நீறு செய்த வீரன் அருள்க;
எல்லாப் பொருட்கும் சேயான் அருள்க;
நல்லன நமக்கே தருவான் அருள்க;
எண்ணில் தொல்புக ழீசன் அருள்க; 760
நண்ணுவார் சிந்தை பிரியான் அருள்க;
குரங்கையா ளுகந்த கோமான் அருள்க;
விரிந்த புகழான் அருள்க; கைகழால
நேமியான் அருள்க;நேசன் அருள்க;
மாமணி வண்ணன் அருள்க; சோத்தம்
பிரானவன் அருள்க; பெம்மான் அருள்க;
சராச ரத்தைவீ டேற்றினான் அருள்க;
எழிலேறு அருள்க; ஏகமூர்த்தி அருள்க; 771
தொழுவார் வினைகளைத் துடைப்பான் அருள்க;
முனிவர்க் கருள்தரும் தவமே அருள்க;
தனியேன் வாழ்முதல் அருள்க; வானுளார்
அறிய லாகா வானவன் அருள்க;
நிறைமூ வுலகுக்கும் நாயகன் அருள்க;
எள்க லிராக மிலாதான் அருள்க;
உள்கலந் தார்க்கோர் அமுதே அருள்க;
கொள்கை கொளாமை யிலாதான் அருள்க;
அளிநன் குடையான் அருள்க; எண்மீ 780
தியன்ற புறவண் டத்தான் அருள்க;
மயங்கச் சங்கம்வாய் வைத்தான் அருள்க;
என்குல தெய்வம் அருள்க; அசுரர்
வன்குலம் வேர்மருங் கருத்தான் அருள்க;
கூனேறு சங்கம் இடத்தான் அருள்க;
கூனே சிதையவில் தெறித்தான் அருள்க;
கோமளப் பிள்ளை அருள்க; அந்தணர்
ஓமம் ஆனான் அருள்க; ஓமத்து
உச்சியான் அருள்க; உயிராளன் அருள்க; 790
பச்சைமா மலைபோல் மேனியன் அருள்க;
அனைத்துல கும்விளக்கும் சோதீ அருள்க;
புனத்துழாய் மாலையான் அருள்க; பொறியுணர்
வகையிலான் அருள்க; ஐவர் தூதனாய்ச்
சவையில் சென்ற மாயனே அருள்க;
துற்றி யேழுல குண்டவன் அருள்க;
கொற்றவன் அருள்க; குழலழகன் அருள்க;
கொடிமன்னு புள்ளுடை அண்ணல் அருள்க;
படியிது வெனலாம் படியலான் அருள்க; 800.

.5.
வீவில் சீராய் செய செய; மன்னரை
மூவெழு கால் கொன்ற தேவே செய செய;
மன்னு பெரும்புகழ் மாதவ செயசெய;
என்னமர் பெருமா செயசெய; என்றும்
தேனும் பாலும் அமுதுமா வாய் செய;
வானவர் சென்னி மணிச்சுட ரேசெய;
எல்லா உயிர்க்கும் தாயோய் செயசெய;
நல்லோர் பிரானே செயசெய; நரக
நாசனே செயசெய; நரபதி செயசெய; 810
தேசமுன் னளந்தவ செய;தெள்ளி யாய் செய;
எழில்கொள் சோதீ செயசெய;ஏறேழ்
தழுவிய எந்தாய் செயசெய; தந்தை
கால்விலங் கறவந்து தோன்றினாய் செயசெய;
நால்வே தக்கடல் அமுதே செயசெய;
ஏழுல குடையாய் செயசெய;எழில்பெறத்
தாழும் மகர குண்டலத் தாய்செய;
ஒண்சங் கதைவாள் ஆழியாய் செயசெய;
கண்டு கோடற்கரியாய் செயசெய; 820
ஒருவா செயசெய; ஒலிநீர் உலகம்
தருவாய் செயசெய; தன்னுள் அனைத்தும்
தானவற் றுள்ளும் நிற்போய் செயசெய;
வானவர் தெய்வம் செயசெய; வாலியின்
மாவலம் அழித்தவில் லாளா செயசெய;
தேவர்கள் நாயக செய;கார் மேகம்
கலந்த தோருருவக் கண்ணா செயசெய;
நலந்திகழ் நாரண செயசெய;நனவில்
சென்றார்க்கும் நண்ணற் கரியவ செயசெய;
நின்றோங்கு முடியாய் செயசெய;நித்திலத் 830
தொத்தே செயசெய;கோகன கத்தவன்
கேள்வ செயசெய;கிளர்மூ வுலகும்
வேள்வியில் அளந்த அந்தண செயசெய;
ஏழுல குக்கும்ஆதீ செயசெய;
பாழியந் தோள்நான் குடையாய் செயசெய;
ஞாலம் ஏழையும் உண்டு பண்டோர்
பாலன் ஆகிய பண்பா செயசெய;
வனமாலை மார்ப செயசெய;அமரர்
தனிமுதல் வித்தே செயசெய;தாயின்
குடலை விளக்கிய கோனே செயசெய; 840
படவர வின்னணைப் பரஞ்சுட ரேசெய;
கோதில் செங்கோல் குடைமன் னரிடை
தூது நடந்தாய் செயசெய; சுடரொளி
ஒருதனி முதல்வா செயசெய;உலகுணும்
பெருவயிற் றானே செயசெய; பேய்மகள்
துஞ்ச நஞ்சு சுவைத் துண்டாய் செயசெய;
அஞ்சிறைப் புட்கொடி யுடையாய் செயசெய;
கோசலை தன்குல மதலாய் செயசெய;
தேசுடைத் தேவா செயசெய;தெய்வச்’
சிலையா செயசெய;தேவா செயசெய; 850
அலைகடல் அரவம் அளாவியோர் குன்றை
வைத்தவ செயசெய;வானவ செயசெய;
பைத்தேய் சுடர்ப்பாம் பணையாய் செயசெய;
தேவா சுரம்செற் றாய்செய செய; தனி
மூவா முதலாய் செயசெய;முத்தீ
மறையாய் செயசெய; வடமா மதுரைப்
பிறந்தாய் செயசெய; பிறவாய் செயசெய;
பெருந்தாளுடைய பிரானே செயசெய;
பெருந்தோள் நெடுமால் செயசெய;போத்தொரு
தாயில் வளர்ந்த நம்பீ செயசெய; 860
ஆயிரம் தோளாய் செயசெய;அசுரர்
குலமுதல் அரிந்த படையாய் செயசெய;
நிலமன்ன னாயுல காண்டவ செயசெய;
பணமா டாவணைப் பள்ளிகொண் டருளும்
மணவாள செயசெய; மல்லொடு கஞ்சனும்
துஞ்ச வென்றமணி வண்ணா செயசெய;
தஞ்சினம் தவிர்த்தார் தவநெறி செயசெய;
தனிநின்ற சார்விலா மூர்த்தி செயசெய;
பனிமதி கோள்விடுத் துகந்தாய் செயசெய;
பாரிட மாவாய் செயசெய;பாரதப் 870
போரிடைக் கலந்த மாயா செயசெய;
பீடுடை நான்முகற் படைத்தாய் செயசெய;
நாடுடை மன்னர்க்குத் தூதா செயசெய;
ஞானச் சுடரொளி மூர்த்தி செயசெய;
ஏனத் துருவாய் செய;எம்மான் செய;
விண்ணோர் தம்மற வாளா செயசெய;
விண்ணோர் முடிதோய் பாதா செயசெய;
மாபா வம்விட அரற்குப் பிச்சைபெய்
கோபால கோளரி செயசெய; குதிகொண்டு
அரவில் நடித்தாய் செயசெய; கருமுகில் 880
திருநிறத் தவனே செயசெய; குழல்வாய்
வைத்த மாயனே செயசெய;மணித்தோர்
மைத்துனற் குய்த்த ஆயனே செயசெய;
மாற்றாரை மாற்றழிக்க வல்லவா செயசெய;
நாற்றச் சுவையூ றொலியாய் செயசெய;
சூருரு வின்பேய் அளவுகண் டாய்செய;
காரணி மேகம் நின்றதொப் பாய்செய;
தடவரை யகலம துடையவ செயசெய;
சுடரொளி யேசெய;தூமறை யாய்செய; 890
அரன் அயன் எனவுல கழித்தமைத் தாய்செய;
பொருள் என் றிவ்வுலகம் படைத்தவ செயசெய;
வலத்தனன் திரிபுரம் எரித்தவன் செயசெய;
கலைப்பல் ஞானத்துக் கண்ணனே செயசெய;
வானிலும் பெரிய மாயைவல் லாய்செய;
ஞானநல் லாவி யாவாய் செயசெய;
நடுவே வந்துய்யக் கொள்வாய் செயசெய;
குடைந்து வண்டுணுந் துழாய்முடி யாய்செய;
ஞாலமுன் னீசெய;ஞாலமுண் டுமிழ்ந்த
மாலே செயசெய;மாகட லாயசெய; 900
வீடில் சீர்ப்புகழ் ஆதிப் பிரான்செய;
ஈடும் வலியும் உடையநம் பீசெய;
கற்கொண்டு கடலைத் தூர்த்தாய் செயசெய;
மற்பொரு தோளுடை யாய்செய; ஆலில்
நீளிலை மீதுசேர் குழவியே செயசெய;
வாள்வரி வில்லும் வளையாழி சங்கமும்
கதையும் அங்கையில் உடையாய் செயசெய;
அதிர்கடல் வண்ணா செயசெய; ஐவாய்
அரவணை மேலுறை யமலா செயசெய;
கரைசெய் மாக்கடல் கிடந்தவ செயசெய; 910
நக்க பிரானொடு அயனும் இந்திரனும்’
ஒக்கவும் தோற்றிய ஒருவா செயசெய;
காயமும் சீவனும் ஆவாய் செயசெய;
பேயைப் பிணம்படப் பாலுண்பி ரான்செய;
சிந்தைக்கும் கோசரம் அல்லாய் செயசெய;
செந்தண் கமலக்கண் கைகா லாய்செய;
பனைத்தாள் மதகளி றட்டவ செயசெய;
வினைசெய் வோய்செய;வினை தீர்ப் போய்செய;
மணிமின்னு மேனிநம் மாயவ செயசெய;
அணிமா னத்தட வரைத்தோ ளாய்செய; 920
பாலனாய் ஏழுல குண்டவ செயசெய;
ஆலிலை யன்ன வசம்செய் வாய்செய;
ஞாலத் தூடே நடந்தும் நின்றும்
சாலப் பலநாள் கிடப்பாய் செயசெய;
பகையும் நட்பும் ஆவாய் செயசெய;
பகலும் இரவுமாய் தின்றாய் செயசெய;
உவகையும் முனிவுமாய் உள்ளாய் செயசெய;
மகனொரு வர்க்கு மல்லாய் செயசெய;
ஞாலம்செய் தாய்செய; நம்பர மன்செய;
கோலங் கொண்முகில் வண்ணா செயசெய; 930
அளந்து காண்டற் கரியவ செயசெய;
இளமையும் முதுமையு மாவாய் செயசெய;
கல்வியா வாய்செய;கல்விசெய் வாய்செய;
செல்வநல் குரவும் செய்வாய் செயசெய;
நரகமும் சுவர்க்கமும் ஆவாய் செயசெய;
பெருமையும் சிறுமையும் உடையாய் செயசெய;
ஞானமும் மூடமும் ஆவாய் செயசெய;
தானும் பிரமனும் சிவனுமா வாய்செயசெய;
பிரிவும் புணர்ச்சியு மாவாய் செயசெய; 940
கரியும் கழுதும் கழுதையும் மல்லரும்
மருதும் விடையும் மடித்தாய் செயசெய;
இருளொடு சுடருமாய் இருந்தாய் செயசெய;
உறியார் நறுவெணெய் தானுகந் துண்ட
சிறியாய் செயசெய; சேடா செயசெய;
தண்மையும் தண்டமும் ஆவாய் செயசெய;
உண்மையோ டின்மையாய் வருவாய் செயசெய;
விடமும் அமுதமும் விரவுவாய் செயசெய;
அடலே றேசெய;ஐம்படை யாய்செய;
தேற்றமும் கலக்கமும் ஆவாய் செயசெய; 950
ஏற்றரும் வைகுந்தம் அருள்வாய் செயசெய;
வெந்திறல் வீரரொப் பாய்செய;
சிந்தை தன்னில் முந்திநிற் பாய்செய;
இன்பமும் துன்பமும் தருவாய் செயசெய;
தன்முடி வொன்றிலாத தண்துழா யாய்செய;
தழலானாய் செய;நிழலா னாய்செய;
பழியா னாய்செய;பகழா னாய்செய;
புண்ணியம் பாவம் ஆவாய் செயசெய;
எண்ணமும் மறப்புமாய் இருப்பாய் செயசெய; 960
புதுமை யாவாய்செய;பழமை யாவாய்செய;
முதுது வரைக்குலப் பதியாய்செயசெய;
சந்தமா னாய்செய;சமயமா னாய்செய;
அந்தணன் பிள்ளையை அருளினாய் செயசெய;
எவ்வ நோய்களைத் தீர்ப்பாய் செயசெய;
பவ்வ நீருடை யாடையாய் செயசெய;
பாரக லம்திரு வடியாய் செயசெய;
நீரழல் வானொடு நிலங்கா லாய்செய; 970
மாதிரம் எட்டும் தோளாய் செயசெய;
தீதில் நன்னெறி காட்டுவாய் செயசெய;
மின்னுரு வாய்செய;விளக்கொளி யாய்செய;
பொன்னுரு வாய்செய;மணியுரு வாய்செய;
தமிழாய் செயசெய;வடசொல் லாய்செயசெய;
சமயங் கண்டவை காப்பாய் செயசெய;
நால்வகை வருணமும் ஆனாய் செயசெய; 980
மேலைவா னவரும் அறியாய் செயசெய;
அறமுதல் நான்கவை அருள்வாய் செயசெய;
நெறியெலா முரைத்த மூர்த்தி செயசெய;
அறுசுவைப் பயனும் ஆனாய் செயசெய;
நெறிவாசல் தானேயாய் நின்றாய் செயசெய;
கலங்காப் பெருநகர் காட்டுவாய் செயசெய;
வலந்தாங்கு சக்கரத் தண்ணால் செயசெய;
கொண்டற் கைமணிவண்ணா செயசெய;
அண்டத் தமரர் பணியநின் றாய்செய;
நீரேற்று உலகெலாம் நின்றளந் தாய்செய; 990
ஈரிரு மால்வரைத் தோளாய் செயசெய;
பரமமூர்த் திசெய;பௌழியா செயசெய;
பரனே செயசெய;பற்பநா பாசெய;
புள்ளுவா செயசெய;புருடோத்த மாசெய;
கள்ளமா தவசெய;கடியமா யாசெய;
உலகில் திரியும் கருமகதி யாய்செய; 1000
உலகுக் கோருயிர் ஆனாய்செயசெய;
வெஞ்சுட ரேசெய;விஷ்ணுவே செயசெய;
தஞ்ச மாகிய தந்தை தாயொரு
தானு மாயவை யல்லனு மாஞ்செய;
மீனோ டாமை கேழலரி குறளாய்
முன்னும் இராம னாகித் தானாய்ப்
பின்னும் இராமனாய்த் தாமோ தரனாய்க்
கற்கியும் ஆவாய் செயசெய;வெற்பெடுத்து
ஒற்கமின்றி நின்றாய் செயசெய;
நாகநி காசெய;நாராய ணாசெய; 1008.
சம்பூர்ணம்.