பாசுரப்படி ராமாயணம்


 

 ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை பாசுரப்படி ராமாயணம்

பால காண்டம்

திருமடந்தைமண்மடந்தைஇருபாலும் திகழ 

நலம் அந்தம் இல்லதோர் நாட்டில் 

அந்தம்இல்பேரின்பத்துஅடியரோடு 

ஏழுலகம் தனிக்கோல் செல்ல விற்றுஇருக்கும் 

அயர்வறும்அமரர்கள் அதிபதி யான  
அணியார் பொழில்சூழ்அரங்கநகரப்பன் 

அலைநீர்க்கடலுள்அழுந்தும்நாவாய்போல்

ஆவார் ஆர்துணை என்று துளங்கும்

நல அமரர் துயர்தீர 

வல்லரக்கர் இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி 

மண்உய்ய மண்ணுலகில் மனிசர்உய்ய 

அயோத்தி என்னும் அணிநகரத்து 

வெங்கதிரோன்குலத்துக்குஓர்விளக்காய்க் 

கௌசலைதன்குலமதலையாய்த் 

தயரதன் தன் மகனாய்த்  தோன்றிக் 

குணம்திகழ்கொண்டலாய்

மந்திரம்கொள்மறைமுனிவன்வேள்விகாக்க நடந்து, 

வந்து எதிர்த்த தாடகைதன்உரத்தைக் கீறி 

வல்அரக்கர்உயிர்உண்டுகல்லைப்பெண்ணாக்கிக்

காரார்திண்சிலைஇறுத்து

மைதிலியை மணம் புணர்ந்து 

இருபத்தொருகால் அரசு களைகட்ட 

மழுவாளேந்திவெவ்வரிநற்சிலைவாங்கிவென்றிகொண்டு  

அவன் தவத்தை முற்றும் செற்று,

அம்பொன்நெடுமணிமாடஅயோத்திஎய்தி

அரியணை மேல்  மன்னன்  ஆவான் நிற்க;

அயோத்தியா காண்டம்

கொங்கைவன் கூனி சொற்கொண்டு
கொடிய கைகேயி வரம் வேண்ட 
கொடியவள் வாய்க்கடியசொற்கேட்டு
மலக்கியமாமனத்தினனாய்மன்னவனும்மறாது ஒழிய 
குலக்குமரா ! காடுறையப் போஎன்று விடை கொடுப்ப 
இருநிலத்தைவேண்டாது 
ஈன்று எடுத்த தாயரையும் இராச்சியமும்ஆங்கொழிந்து 

மைவாய களிறொழிந்து  மாஓழிந்துதேர்ஒழிந்து
கலன்அணியாதேகாமர்எழில்விழல் உடுத்து 
அங்கங்கள்அழகுமாறி 
மான்அமரும்மெல் நோக்கி  வைதேகி இன்துணையா 
இளங்கோவும்வாளும்  வில்லும்கொண்டுபின் செல்லக்
கலையும்கரியும்பரிமாவும் 
திரியும் கானம் நடந்து போய்ப்
பக்தியுடைக்குகன்கடத்தக்கங்கைதன்னைக் கடந்து  
வனம்போய்ப்புக்குகாய்யோடுநீடுகனிஉண்டு 

வியன்கானம் மரத்தின் நீழல் 

கல்லணைமேல்கண்துயின்று

சித்திரக்கூடத்துஇருப்ப, தயரதன் தான்

நின் மகன்மேல்பழிவிளைத்திட்டு  

என்னையும் நீள் வானில்போக்க 

என் பெற்றாய்கைகேசீ! 

நானும் வானகமேமிகவிரும்பிப்போகின்றேன் 

என்று வான்எறத் 

தேன் அமரும்பொழில்சாரல்சித்திரக்ககூடத்து 

ஆனை புரவி தேரோடுகாலாள் 

அணிகொண்ட சேனை சுமந்திரன்  

வசிட்டருடன்பரதநம்பிபணியத் 

தம்பிக்குமரவடியைவான்பணையம் வைத்துக் குவலயமும் 

துங்கக்கரியும்பரியும்இராச்சியமும்

எங்கும் பரதற்குஅருளிவிடைகொடுத்துத்

திருவுடைதிசைக்கருமம்திருந்தப் போய்த் 

தண்டகாரண்யம் புகுந்து 


ஆரண்ய காண்டம்   

தயங்குமறைமுனிவர்க்கு 
'அஞ்சேன்மின் !'என்று அருள் கொடுத்திட்டு
வெங்கண்விறல்விராதன்உகவில்குனித்து 
வண்தமிழ்மாமுனிகொடுத்தவரிவில்  வாங்கி
புலர்ந்து  எழுந்த காமத்தால் 
சுடுசினத்துச் சூர்ப்பணகா
பொன்னிறம் கொண்ட 
சீதைக்குநேராவன்என்றுவரக் 
கொடிமூக்கும் காது இரண்டும் 
கூரார்ந்தவாளால்ஈராவிடுத்துக் 
கரனொடு  தூடணன்தன்உயிரை வாங்க 
அவள்கதறித் தலையில் அங்கை வைத்து 
மலைஇலங்கைஓடிப்புக,
கொடுமையில்கடுவீசை அரக்கன் 
அலைமலிவேற்கண்ணாளைஅகல்விப்பான்
ஓர் உருவு ஆயமானை அமைத்து சிற்றெயிற்று
முற்றல் மூங்கில் மூன்று தண்டத்தனாய் வஞ்சித்து 
இலைக்குரம்பையில்  தனி இருப்பில் 
கனிவாய்த்திருவினைப் பிரித்து 
நீள்கடல்சூழ் இலங்கையில் 
அரக்கர் குடிக்குநஞ்சாகக்கொடுபோந்து  
வம்புலாமகடிகாவில்சிறையா  வைக்க   
அயோத்தியர்  கோன்  மாயமான்மாயச்செற்று 
அலைமலிவேற்  கண்ணாளை அகன்று  தளர்வைய்தி 
சடாயுவை  வைகுந்தத்து  எற்றிக் 
கங்குலும்பகலும்கண்துயில்  இன்றிக்
கானகப்படி உலாவி உலாவிக் 
கணை ஒன்றினால்கவந்தனை  மடித்துச் 
சவரி தந்த கனி உவந்து,
 

கிஷ்கிந்தா காண்டம்  

வனமருவுகவிஅரசன் தன்னோடு காதல் கொண்டு

மராமரங்கள்ஏழும் எய்து

உருத்து ஏழு வாலி மார்பில்

ஒரு கணை உருவ ஓட்டி

கருத்துடைத்தம்பிக்கு

இன்பக்கதிர்முடி அரசு அளித்து

வானரக்கோன்உடன்இருந்து வைதேகி தனைத்தேட

விடுத்ததிசைக்கருமம்திருத்திக்

திறல்விளங்குமாருதியும்

மாயோன் தூது உரைத்தல் செய்ய

சுந்தர காண்டம்

 

சீராரும் திறல் அனுமன் மாகடலைக்கடந்தேறி

மும்மதிள் நீள் இலங்கை புக்குக்கடிகாவில்,

வாராரும்  முலைமடவாள் வைதேகி தனைக்கண்டு

'நின் அடியேன் விண்ணப்பம் கேட்டருளாய்!

அயோத்தி தன்னில் ஓர்,

இடவகையில்  எல்லிஅம்போதுஇனிதுஇருக்க

மல்லிகைமாமாலை கொண்டு அங்கு ஆர்த்ததுவும்;

கலக்கியமாமனத்தினளாய் கைகேயி வரம் வேண்ட 

மலக்கியமாமனத்தினனாய்மன்னவனும் மறாதொழியக் 

'குலக்குமரா! காடு உறையப்போ  என்று விடைகொடுப்ப

இலக்குமணன் தன்னோடு அங்கு ஏகியதும்

கங்கை தன்னில்

கூர் அணிந்த  வேல்வலவன்குகனோடு

சீர்  அணிந்த தோழமை கொண்டதுவும்;

சித்திரகூடத்துஇருப்பப்பரதநம்பிபணிந்ததுவும்;

சிறுகாக்கைமுலைதீண்டஅனைத்துலகம்திரிந்துஓடி

'வித்தகனே !ராமவோ ! நின்அபயம் ! ' என்ன

அத்திரமேஅதன்கண்ணைஅறுத்ததுவும்;

பொன்ஒத்த  மான்ஒன்று புகுந்து இனிது விளையாட

நின் அன்பின்வழிநின்றுசிலைபிடித்து எம்பிரான் ஏகப்

பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்

'அயோத்தியர் கோன்உரைத்த அடையாளம்;  

'ஈது அவன்கைமோதிரமே'என்று

அடையாளம்  தெரிந்து உரைக்க,
மலர்க்குழளால்சீதையும்,
வில் இறுத்தான் மோதிரம் கண்டு 
அனுமான் அடையாளம் ஒக்கும் என்று 
உச்சிமேல் வைத்து உகக்க,
திறல் விளங்கு மாருதியும்  
இலங்கையர்கோன்மாக்கடிகாவை இறுத்துக்
காதல் மக்களுமசுற்றமும் கொன்று 
கடி இலங்கை மலங்க எரித்து 
அரக்கர் கோன் சினம் அழித்து, மீண்டு, அன்பினால்,
அயோத்தியர்கோன்தளிர்புரையும்அடிஇணை பணிய;

                                 யுத்த காண்டம்

காண எண்கும்குரங்கும்முசுவும் 

படையாக்  கொடியோன் இலங்கை புகலுற்று 

அலையார் கடற்கரை வீற்றிருந்து 
செல்வவீடணற்கு  நல்லவனாய் 
விரிநீர் இலங்கை அருளிச்
சரண்புககுரைகடலைஅடலம்பால் மறுக எய்து,

கொல்லை விலங்கு  பணிசெய்ய 

மலையதனால்அணைகட்டிமறுகரையை ஏறி

இலங்கை பொடிபொடியாகச்

சிலைமலி  நெஞ்சரங்கள்  செலஉய்த்துக்

கும்பனோடுநிகும்பனும் பட

இந்திரசித்தழியக்கும்பகர்ணன்பட

அரக்கர் ஆவி மாள, அரக்கர்

கூத்தர்போலக்குழமணிதூரம்ஆட,

இலங்கை மன்னன்முடிஒருபதும்

தோள்இருபதும் போய் உதிரச்

சிலை வளைத்துச்சரமழை பொழிந்து

வென்றிகொண்டசெருக்களத்துக்

கடிக்கமலநான்முகனும் கண் மூன்றத்தானும்

எண்மர் பதினொருவர்ஈரறுவர்ஓரிருவர்

மற்றுமுள்ளவானவர்மலர்மழை பொழிந்து

மணிமுடிபணிதரஅடியினைவணங்கக்

கோலத், திருமாமகளோடு

செல்வ வீடணன் வானரக் கோனுடன்
இலகுமணிநெடுந்தேர்ஏறிச் 
சீரணிந்தகுகன்னோடு கூடி 
அங்கண்நெடு  மதிள்புடை சூழ்  அயோத்தி எய்தி 
நன்னீராடிப் 
பொங்கிள ஆடை அரையில்சாத்தித் 
திருச்செய்ய  முடியும்  ஆரமும்குழையும் 
முதலா  மேதகுபல்கலன் அணிந்து 

சூட்டுநன்மாலைகள் அணிந்து

பரதனும் தம்பி சத்துருக்கனனும்

இலக்குமனனோடு  இரவும்  நண்பகலும் 
வடிவினைஇல்லாச்  சங்குதங்குமுன்கைநங்கை 
மலர்க்குழலாள் சீதையும்தானும் 
கோப்புடைய சீரிய சிங்காதனத்திருந்து  ஏழுலகம் 
தனிக்கோல் செல்ல வாழ்வித்தருளினார்."

                                                                                               --- ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே