பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    வள ஏழ் உலகின் முதலாய* வானோர் இறையை*  அருவினையேன்- 
    களவேழ் வெண்ணெய் தொடு உண்ட*  கள்வா! என்பன்; பின்னையும்* 

    தளவு ஏழ் முறுவல் பின்னைக்கு ஆய்*  வல் ஆன் ஆயர் தலைவனாய்* 
    இள ஏறு ஏழும் தழுவிய*  எந்தாய்! என்பன் நினைந்து நைந்தே.


    நினைந்து நைந்து உள் கரைந்து உருகி*  இமையோர் பலரும் முனிவரும்* 
    புனைந்த கண்ணி நீர் சாந்தம்*  புகையோடு ஏந்தி வணங்கினால்*

    நினைந்த எல்லாப் பொருள்கட்கும்*  வித்துஆய் முதலில் சிதையாமே* 
    மனம் செய் ஞானத்து உன் பெருமை*  மாசூணாதோ? மாயோனே!


    மா யோனிகளாய் நடை கற்ற*  வானோர் பலரும் முனிவரும்* 
    நீ யோனிகளைப் படை என்று*  நிறை நான்முகனைப் படைத்தவன்*

    சேயோன் எல்லா அறிவுக்கும்;*  திசைகள் எல்லாம் திருவடியால் 
    தாயோன்*  எல்லா எவ் உயிர்க்கும் தாயோன்*  தான் ஓர் உருவனே.


    தான் ஓர் உருவே தனிவித்தாய்*  தன்னின் மூவர் முதலாய* 
    வானோர் பலரும் முனிவரும்*  மற்றும் மற்றும் முற்றும் ஆய்*

    தான் ஓர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி*  அதனுள் கண்வளரும்* 
    வானோர் பெருமான் மா மாயன்*  வைகுந்தன் எம் பெருமானே.


    மானேய் நோக்கி மடவாளை*  மார்பில் கொண்டாய்! மாதவா!* 
    கூனே சிதைய உண்டை வில்*  நிறத்தில் தெறித்தாய்! கோவிந்தா!*

    வான் ஆர் சோதி மணிவண்ணா!*  மதுசூதா! நீ அருளாய்*  உன்- 
    தேனே மலரும் திருப்பாதம்*  சேருமாறு வினையேனே.


    வினையேன் வினை தீர் மருந்து ஆனாய்!*  விண்ணோர் தலைவா! கேசவா!* 
    மனை சேர் ஆயர் குல முதலே!*  மா மாயனே! மாதவா!*

    சினை ஏய் தழைய மராமரங்கள்*  ஏழும் எய்தாய்! சிரீதரா!* 
    இனையாய் இனைய பெயரினாய்!*  என்று நைவன் அடியேனே.  


    அடியேன் சிறிய ஞானத்தன்;*  அறிதல் ஆர்க்கும் அரியானை* 
    கடி சேர் தண் அம் துழாய்க்*  கண்ணி புனைந்தான் தன்னை கண்ணனை*

    செடி ஆர் ஆக்கை அடியாரைச்*  சேர்தல் தீர்க்கும் திருமாலை* 
    அடியேன் காண்பான் அலற்றுவன்;*  இதனின் மிக்கு ஓர் அயர்வு உண்டே? 


    உண்டாய் உலகு ஏழ் முன்னமே;*  உமிழ்ந்து மாயையால் புக்கு* 
    உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர்*  உவலை ஆக்கை நிலை எய்தி*

    மண் தான் சோர்ந்தது உண்டேலும்*  மனிசர்க்கு ஆகும் பீர்*  சிறிதும்- 
    அண்டாவண்ணம் மண் கரைய*  நெய் ஊண் மருந்தோ? மாயோனே!  


    மாயோம் தீய அலவலைப்*  பெரு மா வஞ்சப் பேய் வீயத்* 
    தூய குழவியாய் விடப் பால் அமுதா*  அமுது செய்திட்ட-

    மாயன் வானோர் தனித் தலைவன்*  மலராள் மைந்தன் எவ் உயிர்க்கும்- 
    தாயோன் தம்மான் என் அம்மான்*  அம்மா மூர்த்தியைச் சார்ந்தே.


    சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து*  மாயப் பற்று அறுத்து* 
    தீர்ந்து தன்பால் மனம் வைக்கத்*  திருத்தி வீடு திருத்துவான்*

    ஆர்ந்த ஞானச் சுடர் ஆகி*  அகலம் கீழ் மேல் அளவு இறந்து* 
    நேர்ந்த உருவாய் அருவாகும்*  இவற்றின் உயிராம் நெடுமாலே!


    மாலே மாயப் பெருமானே!*  மா மாயவனே! என்று என்று* 
    மாலே ஏறி மால் அருளால்*  மன்னு குருகூர்ச் சடகோபன்*

    பால் ஏய் தமிழர் இசைகாரர்*  பத்தர் பரவும் ஆயிரத்தின்- 
    பாலே பட்ட இவை பத்தும்*  வல்லார்க்கு இல்லை பரிவதே.


    அம் தாமத்து அன்பு செய்து*  என் ஆவி சேர் அம்மானுக்கு,* 
    அம் தாமம் வாழ் முடி சங்கு*  ஆழி நூல் ஆரம் உள,*

    செந்தாமரைத்தடம் கண்*  செங்கனி வாய் செங்கமலம்,* 
    செந்தாமரை அடிகள்*  செம்பொன் திரு உடம்பே.


    திரு உடம்பு வான் சுடர்*  செந்தாமரை கண் கை கமலம்,* 
    திரு இடமே மார்வம்*  அயன் இடமே கொப்பூழ்,* 

    ஒருவு இடமும்*  எந்தை பெருமாற்கு அரனே ஓ,* 
    ஒருவு இடம் ஒன்று இன்றி*  என்னுள் கலந்தானுக்கே.


    என்னுள் கலந்தவன்*  செங்கனி வாய் செங்கமலம்,* 
    மின்னும் சுடர் மலைக்குக்*  கண் பாதம் கை கமலம்,*

    மன்னும் முழு ஏழ் உலகும்*  வயிற்றின் உள,* 
    தன்னுள் கலவாதது*  எப் பொருளும் தான் இலையே.


    எப் பொருளும் தான் ஆய்*  மரகதக் குன்றம் ஒக்கும்.* 
    அப்பொழுதைத் தாமரைப்பூக்*  கண் பாதம் கை கமலம்,*

    எப்பொழுதும் நாள் திங்கள்*  ஆண்டு ஊழி ஊழிதொறும்,* 
    அப்பொழுதைக்கு அப்பொழுது*  என் ஆரா அமுதமே.      


    ஆரா அமுதமாய்*  அல் ஆவியுள் கலந்த,* 
    கார் ஆர் கருமுகில் போல்*  என் அம்மான் கண்ணனுக்கு,*

    நேரா வாய் செம்பவளம்*  கண் பாதம் கை கமலம்,* 
    பேர் ஆரம் நீள் முடி நாண்,*  பின்னும் இழை பலவே.


    பலபலவே ஆபரணம்*  பேரும் பலபலவே,* 
    பலபலவே சோதி*  வடிவு பண்பு எண்ணில்,*

    பலபல கண்டு உண்டு*  கேட்டு உற்று மோந்து இன்பம்,* 
    பலபலவே ஞானமும்*  பாம்பு அணை மேலாற்கேயோ.        


    பாம்பு அணைமேல் பாற்கடலுள்*  பள்ளி அமர்ந்ததுவும்,* 
    காம்பு அணை தோள் பின்னைக்கு ஆய்*  ஏறு உடன் ஏழ் செற்றதுவும்,*

    தேம் பணைய சோலை*  மராமரம் ஏழ் எய்ததுவும்,* 
    பூம் பிணைய தண் துழாய்ப்*  பொன் முடி அம் போர் ஏறே.


    பொன் முடி அம் போர் ஏற்றை*  எம்மானை நால் தடம் தோள்,* 
    தன் முடிவு ஒன்று இல்லாத*  தண் துழாய் மாலையனை,* 

    என் முடிவு காணாதே*  என்னுள் கலந்தானை,* 
    சொல்முடிவு காணேன் நான்*  சொல்லுவது என் சொல்லீரே.   


    சொல்லீர் என் அம்மானை*  என் ஆவி ஆவிதனை,* 
    எல்லை இல் சீ* ர் என் கருமாணிக்கச் சுடரை,*

    நல்ல அமுதம்*  பெறற்கு அரிய வீடும் ஆய்,* 
    அல்லி மலர் விரை ஒத்து*  ஆண் அல்லன் பெண் அலனே.


    ஆண் அல்லன் பெண் அல்லன்*  அல்லா அலியும் அல்லன்,* 
    காணலும் ஆகான்*  உளன் அல்லன் இல்லை அல்லன்,*

    பேணுங்கால் பேணும்*  உரு ஆகும் அல்லனும் ஆம்,* 
    கோணை பெரிது உடைத்து*  எம் பெம்மானைக் கூறுதலே.  


    கூறுதல் ஒன்று ஆராக்*  குடக் கூத்த அம்மானைக்,* 
    கூறுதலே மேவிக்*  குருகூர்ச் சடகோபன்,*

    கூறின அந்தாதி*  ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்* 
    கூறுதல் வல்லார் உளரேல்*  கூடுவர் வைகுந்தமே.     


    மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை*  முதலைச் சிறைப்பட்டு நின்ற,* 
    கைம்மாவுக்கு அருள் செய்த*  கார்முகில் போல்வண்ணன் கண்ணன்,* 

    எம்மானைச் சொல்லிப் பாடி*  எழுந்தும் பறந்தும் துள்ளாதார்,* 
    தம்மாம் கருமம் என் சொல்லீர்*  தண்கடல் வட்டத்து உள்ளீரே! (2)


    தண்கடல் வட்டத்து உள்ளாரைத்*  தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்,* 
    திண்கழல்கால் அசுரர்க்குத்*  தீங்கு இழைக்கும் திருமாலைப்,* 

    பண்கள் தலைக்கொள்ளப் பாடி* பறந்தும் குனித்தும் உழலாதார்,* 
    மண்கொள் உலகில் பிறப்பார்*  வல்வினை மோத மலைந்தே.    


    மலையை எடுத்து கல்மாரி*  காத்து*  பசுநிரை தன்னைத்,* 
    தொலைவு தவிர்த்த பிரானைச்*  சொல்லிச்சொல்லி நின்று எப்போதும்,*

    தலையினோடு ஆதனம் தட்டத்*  தடுகுட்டமாய்ப் பறவாதார்,* 
    அலை கொள் நரகத்து அழுந்திக்*  கிடந்து உழைக்கின்ற வம்பரே.


    வம்பு அவிழ் கோதைபொருட்டா*  மால்விடை ஏழும் அடர்த்த,* 
    செம்பவளத் திரள் வாயன்*  சிரீதரன் தொல்புகழ் பாடி,* 

    கும்பிடு நட்டம் இட்டு ஆடி*  கோகு உகட்டுண்டு உழலாதார்,* 
    தம்பிறப்பால் பயன் என்னே*  சாது சனங்களிடையே? 


    சாது சனத்தை நலியும்*  கஞ்சனைச் சாதிப்பதற்கு,* 
    ஆதி அம் சோதி உருவை*  அங்கு வைத்து இங்குப் பிறந்த,,*

    வேத முதல்வனைப் பாடி*  வீதிகள் தோறும் துள்ளாதார்,* 
    ஓதி உணர்ந்தவர் முன்னா*  என் சவிப்பார் மனிசரே?       


    மனிசரும் மற்றும் முற்றும் ஆய்*  மாயப் பிறவி பிறந்த,* 
    தனியன் பிறப்பிலி தன்னை*  தடங்கடல் சேர்ந்த பிரானை,* 

    கனியை கரும்பின் இன் சாற்றை*  கட்டியை தேனை அமுதை,* 
    முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்*  முழுது உணர் நீர்மையினார.


    நீர்மை இல் நூற்றுவர் வீய*  ஐவர்க்கு அருள்செய்து நின்று,* 
    பார்மல்கு சேனை அவித்த*  பரஞ்சுடரை நினைந்து ஆடி* 

    நீர்மல்கு கண்ணினர் ஆகி*  நெஞ்சம் குழைந்து நையாதே,* 
    ஊன் மல்கி மோடு பருப்பார்*  உத்தமர்கட்கு என் செய்வாரே?  


    வார்புனல் அம் தண் அருவி*  வடதிருவேங்கடத்து எந்தை,* 
    பேர்பல சொல்லிப் பிதற்றி*  பித்தர் என்றே பிறர்கூற,* 

    ஊர்பல புக்கும் புகாதும்*  உலோகர் சிரிக்க நின்று ஆடி,* 
    ஆர்வம் பெருகிக் குனிப்பார்*  அமரர் தொழப்படுவாரே. 


    அமரர் தொழப்படுவானை*  அனைத்து உலகுக்கும் பிரானை,* 
    அமர மனத்தினுள் யோகு புணர்ந்து*  அவன் தன்னோடு ஒன்று ஆக,* 

    அமரத் துணிய வல்லார்கள் ஒழிய*  அல்லாதவர் எல்லாம்,* 
    அமர நினைந்து எழுந்து ஆடி*  அலற்றுவதே கருமமே.      


    கருமமும் கரும பலனும் ஆகிய*  காரணன் தன்னை,* 
    திருமணி வண்ணனை செங்கண் மாலினை*  தேவபிரானை,*

    ஒருமை மனத்தினுள் வைத்து*  உள்ளம் குழைந்து எழுந்து ஆடி,* 
    பெருமையும் நாணும் தவிர்ந்து*  பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.


    தீர்ந்த அடியவர் தம்மைத்*  திருத்திப் பணிகொள்ளவல்ல,* 
    ஆர்ந்த புகழ் அச்சுதனை*  அமரர் பிரானை எம்மானை,*

    வாய்ந்த வளவயல்சூழ்*  தண் வளங் குருகூர்ச்சடகோபன்,* 
    நேர்ந்த ஓர் ஆயிரத்து இப்பத்து*  அருவினை நீறு செய்யுமே. (2)


    வீற்றிருந்து ஏழ் உலகும்*  தனிக்கோல் செல்ல, வீவுஇல்சீர்,* 
    ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை*  வெம் மா பிளந்தான் தன்னை,* 

    போற்றி என்றே கைகள் ஆரத்*  தொழுது சொல் மாலைகள்,* 
    ஏற்ற நோற்றேற்கு*  இனி என்ன குறை எழுமையுமே?   (2)


    மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள்*  உறை மார்பினன்,* 
    செய்ய கோலத் தடங் கண்ணன்*  விண்ணோர் பெருமான் தன்னை,* 

    மொய்ய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி*  உள்ளப்பெற்றேன்,* 
    வெய்ய நோய்கள் முழுதும்*  வியன் ஞாலத்து வீயவே. 


    வீவு இல் இன்பம்மிக*  எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்,* 
    வீவு இல் சீரன் மலர்க் கண்ணன்*  விண்ணோர் பெருமான் தன்னை,*

    வீவு இல் காலம் இசைமாலைகள் ஏத்தி*  மேவப்பெற்றேன்,* 
    வீவு இல் இன்பம்மிக*  எல்லை நிகழ்ந்தனன் மேவியே.   


    மேவி நின்று தொழுவார்*  வினை போக மேவும் பிரான்,* 
    தூவி அம் புள் உடையான்*  அடல் ஆழி அம்மான் தன்னை,

    நா இயலால் இசைமாலைகள் ஏத்தி*  நண்ணப் பெற்றேன்,* 
    ஆவி என் ஆவியை*  யான் அறியேன் செய்த ஆற்றையே.


    ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை,*  அமரர்தம்- 
    ஏற்றை*  எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை,* 

    மாற்ற மாலைப் புனைந்து ஏத்தி*  நாளும் மகிழ்வு எய்தினேன்,* 
    காற்றின் முன்னம் கடுகி*  வினை நோய்கள் கரியவே.


    கரிய மேனிமிசை*  வெளிய நீறு சிறிதே இடும்,* 
    பெரிய கோலத் தடங்கண்ணன்*  விண்ணோர் பெருமான் தன்னை,* 

    உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி*  உள்ளப்பெற்றேற்கு,* 
    அரியது உண்டோ எனக்கு*  இன்று தொட்டும் இனி என்றுமே?    


    என்றும் ஒன்று ஆகி*  ஒத்தாரும் மிக்கார்களும்,*  தன் தனக்கு -
    இன்றி நின்றானை*  எல்லா உலகும் உடையான் தன்னை,* 

    குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானை*  சொல் மாலைகள்,* 
    நன்று சூட்டும் விதி எய்தினம்*  என்ன குறை நமக்கே?          


    நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும்*  இன்பனை,*  ஞாலத்தார்- 
    தமக்கும்*  வானத்தவர்க்கும் பெருமானை,*  தண் தாமரை- 

    சுமக்கும்*  பாதப் பெருமானை*  சொல்மாலைகள் சொல்லுமாறு- 
    அமைக்க வல்லேற்கு*  இனி யாவர் நிகர் அகல் வானத்தே?


    வானத்தும் வானத்துள் உம்பரும்*  மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த் 
    தானத்தும்,*  எண் திசையும் தவிராது*  நின்றான் தன்னை,*  

    கூனல் சங்கத் தடக்கையவனை*  குடம் ஆடியை 
    வானக் கோனை,*  கவி சொல்ல வல்லேற்கு*  இனி மாறுஉண்டே?   


    உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும்*  கிடந்தும் நின்றும்,* 
    கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும்*  மணம் கூடியும்,* 

    கண்ட ஆற்றால் தனதே*  உலகு என நின்றான் தன்னை,* 
    வண் தமிழ் நூற்க நோற்றேன்*  அடியார்க்கு இன்ப மாரியே.


    மாரி மாறாத தண் அம் மலை*  வேங்கடத்து அண்ணலை,* 
    வாரி மாறாத பைம் பூம் பொழில்சூழ்*  குருகூர் நகர்க்,* 

    காரி மாறன் சடகோபன்*  சொல் ஆயிரத்து இப் பத்தால்,* 
    வேரி மாறாத பூமேல் இருப்பாள்*  வினை தீர்க்குமே.


    எங்ஙனேயோ அன்னைமீர்காள்!*  என்னை முனிவது நீர்?* 
    நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்* 

    சங்கினோடும் நேமியோடும்*  தாமரைக் கண்களோடும்* 
    செங்கனி வாய் ஒன்றினோடும்*  செல்கின்றது என்நெஞ்சமே*. (2)     


    என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்*  என்னை முனியாதே 
    தென் நன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*

    மின்னு நூலும் குண்டலமும்*  மார்பில் திருமறுவும்* 
    மன்னு பூணும் நான்கு தோளும்*  வந்து எங்கும் நின்றிடுமே*.  


    நின்றிடும் திசைக்கும் நையும் என்று*  அன்னையரும் முனிதிர்* 
    குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*

    வென்றி வில்லும் தண்டும் வாளும்*  சக்கரமும் சங்கமும்* 
    நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா*  நெஞ்சுள்ளும் நீங்காவே*.


    நீங்கநில்லா கண்ண நீர்கள்என்று*  அன்னையரும் முனிதிர்* 
    தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*

    பூந்தண் மாலைத் தண் துழாயும்*  பொன் முடியும் வடிவும்* 
    பாங்கு தோன்றும் பட்டும் நாணும்*  பாவியேன் பக்கத்தவே*.      


    பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று*  அன்னையரும் முனிதிர்* 
    தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்* 

    தொக்க சோதித் தொண்டை வாயும்*  நீண்ட புருவங்களும்* 
    தக்க தாமரைக் கண்ணும்*  பாவியேன் ஆவியின் மேலனவே*.     


    மேலும் வன்பழி நம்குடிக்கு இவள் என்று*  அன்னை காணக்கொடாள்* 
    சோலைசூழ் தண்திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*

    கோலநீள் கொடி மூக்கும்*  தாமரைக் கண்ணும் கனிவாயும்* 
    நீலமேனியும் நான்கு தோளும்*  என் நெஞ்சம் நிறைந்தனவே*.  


    நிறைந்த வன்பழி நம்குடிக்கு இவள் என்று*  அன்னை காணக்கொடாள்* 
    சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*

    நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த*  நீண்ட பொன் மேனியொடும்* 
    நிறைந்து என் உள்ளே நின்றொழிந்தான்*  நேமி அங்கை உளதே*.      


    கையுள் நன்முகம் வைக்கும் நையும்என்று*  அன்னையரும் முனிதிர்* 
    மைகொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்* 

    செய்யதாமரைக் கண்ணும் அல்குலும்*  சிற்றிடையும் வடிவும்* 
    மொய்யநீள் குழல் தாழ்ந்த தோள்களும்*  பாவியேன் முன் நிற்குமே*.     


    முன் நின்றாய் என்று தோழிமார்களும்*  அன்னையரும் முனிதிர்* 
    மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*

    சென்னி நீள்முடி ஆதிஆய*  உலப்பு இல் அணிகலத்தன்* 
    கன்னல் பால் அமுதுஆகி வந்து*  என் நெஞ்சம் கழியானே*.     


    கழியமிக்கது ஓர் காதலள் இவள் என்று*  அன்னை காணக்கொடாள்* 
    வழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்* 

    குழுமித் தேவர் குழாங்கள்*  கை தொழச்சோதி வெள்ளத்தினுள்ளே* 
    எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும்*  ஆர்க்கும் அறிவு அரிதே*. 


    அறிவு அரிய பிரானை*  ஆழியங்கையனையே அலற்றி* 
    நறிய நன் மலர் நாடி*  நன்குருகூர்ச் சடகோபன் சொன்ன*

    குறிகொள் ஆயிரத்துள் இவை பத்தும்*  திருக்குறுங்குடி அதன்மேல்* 
    அறியக் கற்று வல்லார் வைட்டவர்*  ஆழ்கடல் ஞாலத்துள்ளே*. (2)     


    துவள் இல் மா மணி மாடம் ஓங்கு*  தொலைவில்லிமங்கலம் தொழும் 
    இவளை நீர் இனி அன்னைமீர்!*  உமக்கு ஆசை இல்லை விடுமினோ,* 

    தவள ஒண் சங்கு சக்கரம் என்றும்*  தாமரைத் தடம் கண் என்றும்,* 
    குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க*  நின்று நின்று குமுறுமே.      


    குமுறும் ஓசை விழவு ஒலித்*  தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,* 
    அமுத மென் மொழியாளை*  நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்,* 

    திமிர் கொண்டால் ஒத்து நிற்கும்*  மற்று இவள்தேவ தேவபிரான் என்றே,* 
    நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க*  நெக்கு ஒசிந்து கரையுமே.


    கரை கொள் பைம் பொழில் தண்பணைத்*  தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,* 
    உரை கொள் இன் மொழியாளை*  நீர் உமக்கு  ஆசை இன்றி அகற்றினீர்,*

    திரை கொள் பௌவத்துச் சேர்ந்ததும்*  திசை ஞாலம் தாவி அளந்ததும்,* 
    நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி*  நெடும் கண் நீர் மல்க நிற்குமே. 


    நிற்கும் நால்மறைவாணர் வாழ்*  தொலைவில்லிமங்கலம் கண்டபின்,* 
    அற்கம் ஒன்றும் அற உறாள்*  மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர்,* 

    கற்கும் கல்வி எல்லாம்*  கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே,* 
    ஒற்கம் ஒன்றும் இலள் உகந்து உகந்து*  உள் மகிழ்ந்து குழையுமே.            


    குழையும் வாள் முகத்து ஏழையைத்*  தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,* 
    இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண்பிரான்*  இருந்தமை காட்டினீர்,* 

    மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு*  அன்று தொட்டும் மையாந்து,*  இவள் 
    நுழையும் சிந்தையள் அன்னைமீர்!*  தொழும் அத் திசை உற்று நோக்கியே.


    நோக்கும் பக்கம் எல்லாம்*  கரும்பொடு  செந்நெல்ஓங்கு செந்தாமரை,* 
    வாய்க்கும் தண் பொருநல்*  வடகரை வண் தொலைவில்லிமங்கலம்,* 

    நோக்குமேல் அத்திசை அல்லால்*  மறு நோக்கு இலள் வைகல் நாள்தொறும்,* 
    வாய்க்கொள் வாசகமும்*  மணிவண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!        


    அன்னைமீர்! அணிமாமயில்*  சிறுமான் இவள் நம்மைக் கைவலிந்து* 
    என்ன வார்த்தையும் கேட்குறாள்*  தொலைவில்லிமங்கலம் என்று அல்லால்,* 

    முன்னம் நோற்ற விதிகொலோ*  முகில் வண்ணன் மாயம் கொலோ,* அவன் 
    சின்னமும் திருநாமமும்*  இவள் வாயனகள் திருந்தவே.   


    திருந்து வேதமும் வேள்வியும்*  திருமா மகளிரும் தாம்,*  மலிந்து 
    இருந்து வாழ் பொருநல்*  வடகரை வண் தொலைவில்லிமங்கலம்,* 

    கருந் தடம் கண்ணி கைதொழுத*  அந்நாள் தொடங்கி இந் நாள்தொறும்* 
    இருந்து இருந்து 'அரவிந்தலோசன!'*  என்று என்றே நைந்து இரங்குமே.      


    இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ*  இவள் கண்ண நீர்கள் அலமர,* 
    மரங்களும் இரங்கும் வகை*  'மணிவண்ணவோ!' என்று கூவுமால்,* 

    துரங்கம் வாய் பிளந்தான் உறை*  தொலைவில்லிமங்கலம் என்று,*  தன் 
    கரங்கள் கூப்பித் தொழும்*  அவ்ஊர்த் திருநாமம் கற்றதன் பின்னையே.     


    பின்னைகொல் நிலமாமகள்கொல்?*  திருமகள்கொல் பிறந்திட்டாள்,* 
    என்ன மாயம்கொலோ?*  இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்,* 

    முன்னி வந்து அவன் நின்று இருந்து உறையும்*  தொலைவில்லிமங்கலம்- 
    சென்னியால் வணங்கும்*  அவ் ஊர்த் திருநாமம்*  கேட்பது சிந்தையே.        


    சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்*  தேவ பிரானையே,* 
    தந்தை தாய் என்று அடைந்த*  வண் குருகூரவர் சடகோபன்,* 

    முந்தை ஆயிரத்துள் இவை*  தொலை வில்லிமங்கலத்தைச் சொன்ன,* 
    செந்தமிழ்ப் பத்தும் வல்லார்*  அடிமைசெய்வார் திருமாலுக்கே


    கற்பார் இராம பிரானை அல்லால்*  மற்றும் கற்பரோ?,* 
    புல்பா முதலா*  புல்எறும்புஆதி ஒன்றுஇன்றியே,*

    நல்பால் அயோத்தியில் வாழும்*  சராசரம் முற்றவும்,* 
    நல்பாலுக்கு உய்த்தனன்*  நான்முக னார்பெற்ற நாட்டுளே?  (2)


    நாட்டில் பிறந்தவர்*  நாரணற்கு ஆள்அன்றி ஆவரோ,* 
    நாட்டில் பிறந்து படாதன பட்டு*  மனிசர்க்காய்,* 

    நாட்டை நலியும் அரக்கரை*  நாடித் தடிந்திட்டு,*  
    நாட்டை அளித்துஉய்யச் செய்து*  நடந்தமை கேட்டுமே?


    கேட்பார்கள் கேசவன் கீர்த்திஅல்லால்*  மற்றும் கேட்பரோ,* 
    கேட்பார் செவிசுடு*  கீழ்மை வசைவுகளே வையும்,*

    சேண்பால் பழம்பகைவன்*  சிசு பாலன்,*  திருவடி 
    தாள்பால் அடைந்த*  தன்மை அறிவாரை அறிந்துமே?  


    தன்மை அறிபவர்*  தாம் அவற்கு ஆள்அன்றி ஆவரோ,* 
    பன்மைப் படர்பொருள்*  ஆதும்இல்பாழ் நெடும்காலத்து,*

    நன்மைப் புனல்பண்ணி*  நான்முகனைப்பண்ணி தன்னுள்ளே*  
    தொன்மை மயக்கிய தோற்றிய*  சூழல்கள் சிந்தித்தே?    


    சூழல்கள் சிந்திக்கில்*  மாயன் கழல்அன்றி சூழ்வரோ,* 
    ஆழப் பெரும்புனல்*  தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்,*

    தாழப் படாமல்*  தன் பால்ஒரு கோட்டிடைத் தான்கொண்ட,* 
    கேழல் திருஉருஆயிற்றுக்*  கேட்டும் உணர்ந்துமே?


    கேட்டும் உணர்ந்தவர்*  கேசவற்கு ஆள்அன்றி ஆவரோ,* 
    வாட்டம்இலா வண்கை*  மாவலி வாதிக்க வாதிப்புண்டு,*

    ஈட்டம்கொள் தேவர்கள்*  சென்றுஇரந்தார்க்கு இடர் நீக்கிய,* 
    கோட்டுஅங்கை வாமனன்ஆய்*  செய்த கூத்துக்கள் கண்டுமே? 


    கண்டும் தெளிந்தும் கற்றார்*  கண்ணற்கு ஆளன்றி ஆவரோ,* 
    வண்டுஉண் மலர்த்தொங்கல்*  மார்க்கண்டேயனுக்கு வாழும்நாள்*

    இண்டைச் சடைமுடி*  ஈசன்உடன்கொண்டு உசாச்செல்ல,* 
    கொண்டுஅங்கு தன்னொடும் கொண்டு*  உடன்சென்றது உணர்ந்துமே? 


    செல்ல உணர்ந்தவர்*  செல்வன்தன் சீர்அன்றி கற்பரோ,* 
    எல்லை இலாத பெரும்தவத்தால்*  பல செய்மிறை,*

    அல்லல் அமரரைச் செய்யும்*  இரணியன் ஆகத்தை,* 
    மல்லல் அரிஉருஆய்*  செய்த மாயம் அறிந்துமே?   


    மாயம் அறிபவர்*  மாயவற்கு ஆள்அன்றி ஆவரோ,* 
    தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க*  ஓர்ஐவர்க்குஆய்,*

    தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று*  சேனையை 
    நாசம் செய்திட்டு,*  நடந்த நல் வார்த்தை அறிந்துமே?


    வார்த்தை அறிபவர்*  மாயவற்கு ஆள்அன்றி ஆவரோ,* 
    போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு*  இறப்புஇவை

    பேர்த்து,*  பெரும்துன்பம் வேர்அற நீக்கி*  தன் தாளின்கீழ்ச் 
    சேர்த்து,*  அவன் செய்யும்*  சேமத்தைஎண்ணித் தெளிவுற்றே? 


    தெளிவுற்று வீவுஇன்றி*  நின்றவர்க்கு இன்பக்கதிசெய்யும்,* 
    தெளிவுற்ற கண்ணனைத்*  தென்குருகூர்ச் சடகோபன்சொல்,*

    தெளிவுற்ற ஆயிரத்துள்*  இவை பத்தும் வல்லார்,*  அவர் 
    தெளிவுற்ற சிந்தையர்*  பாமரு மூவுலகத்துள்ளே   (2)


    மாயக்கூத்தா!வாமனா!*  வினையேன்கண்ணா! கண்கைகால்* 
    தூயசெய்ய மலர்களா*  சோதிச்செவ்வாய் முகிழதா*

    சாயல்சாமத் திருமேனி*  தண்பாசடையா*  தாமரைநீள் 
    வாசத்தடம்போல் வருவானே!*  ஒருநாள் காண வாராயே.    


    'காணவாராய்' என்றுஎன்று*   கண்ணும்வாயும் துவர்ந்து*  அடியேன் 
    நாணி நல்நாட்டு அலமந்தால்*  இரங்கி ஒருநாள் நீஅந்தோ*

    காணவாராய்! கருநாயிறுஉதிக்கும்*  கருமாமாணிக்க* 
    நாள்நல்மலைபோல் சுடர்ச்சோதி*  முடிசேர் சென்னி அம்மானே!  


    'முடிசேர் சென்னி அம்மா!* நின்மொய்பூம்தாமத் தண்துழாய்க்* 
    கடிசேர் கண்ணிப் பெருமானே!'* என்றுஎன்று ஏங்கி அழுதக்கால்*

    படிசேர்மகரக் குழைகளும்*  பவளவாயும் நால்தோளும்* 
    துடிசேர் இடையும் அமைந்தது ஓர்*  தூநீர் முகில்போல் தோன்றாயே. 


    தூநீர் முகில்போல் தோன்றும்*  நின்சுடர்கொள் வடிவும் கனிவாயும்* 
    தேநீர்க்கமலக் கண்களும்*  வந்து என்சிந்தை நிறைந்தவா*

    மாநீர்வெள்ளிமலை தன்மேல்*  வண்கார் நீல முகில்போல* 
    தூநீர்க்கடலுள் துயில்வானே!*  எந்தாய்! சொல்லமாட்டேனே.    


    சொல்லமாட்டேன் அடியேன்*  உன்துளங்குசோதித் திருப்பாதம்* 
    எல்லைஇல் சீர்இள நாயிறு*  இரண்டுபோல் என்உள்ளவா!*

    அல்லல் என்னும் இருள்சேர்தற்கு*  உபாயம் என்னே? ஆழிசூழ்* 
    மல்லை ஞாலம் முழுதுஉண்ட*  மாநீர்க் கொண்டல் வண்ணனே! 


    'கொண்டல் வண்ணா! குடக்கூத்தா!*  வினையேன் கண்ணா! கண்ணா* என் 
    அண்டவாணா!' என்றுஎன்னை*   ஆளக் கூப்பிட்டுஅழைத்தக்கால்*

    விண்தன்மேல்தான் மண்மேல்தான்*  விரிநீர்க் கடல்தான் மற்றுத்தான்* 
    தொண்டனேன் உன்கழல்காண*  ஒருநாள்வந்து தோன்றாயே.


    வந்து தோன்றாய்அன்றேல்*  உன் வையம்தாய மலர்அடிக்கீழ்* 
    முந்தி வந்து யான்நிற்ப*   முகப்பே கூவிப் பணிக்கொள்ளாய்*

    செந்தண்கமலக் கண்கைகால்*  சிவந்தவாய்ஓர் கருநாயிறு* 
    அந்தம் இல்லாக் கதிர்பரப்பி*  அலர்ந்ததுஒக்கும் அம்மானே!   


    ஒக்கும் அம்மான் உருவம்என்று*  உள்ளம் குழைந்து நாள்நாளும்* 
    தொக்க மேகப் பல்குழாங்கள்*  காணும்தோறும் தொலைவன்நான்*

    தக்க ஐவர் தமக்காய்அன்று*  ஈர்ஐம்பதின்மர் தாள்சாயப்* 
    புக்கநல்தேர்த் தனிப்பாகா!*  வாராய் இதுவோ பொருத்தமே?


    'இதுவோ பொருத்தம்? மின்ஆழிப்  படையாய்!* ஏறும் இரும்சிறைப்புள்* 
    அதுவே கொடியா உயர்த்தானே!'*  என்றுஎன்று ஏங்கி அழுதக்கால்*

    எதுவேயாகக் கருதுங்கொல்*  இம்மாஞாலம் பொறைதீர்ப்பான்* 
    மதுவார் சோலை*  உத்தர  மதுரைப் பிறந்த மாயனே?  


    பிறந்தமாயா! பாரதம்பொருதமாயா!*  நீஇன்னே* 
    சிறந்தகால் தீநீர்வான்*  மண்பிறவும்ஆய பெருமானே*

    கறந்த பாலுள் நெய்யேபோல்*  இவற்றுள்எங்கும் கண்டுகொள்* 
    இறந்து நின்ற பெருமாயா!*  உன்னை எங்கே காண்கேனே?  


    'எங்கேகாண்கேன் ஈன்துழாய் அம்மான்தன்னை*  யான்?' என்றுஎன்று* 
    அங்கே தாழ்ந்த சொற்களால்*  அம்தண் குருகூர்ச் சடகோபன்*

    செங்கேழ் சொன்ன ஆயிரத்துள்*  இவையும் பத்தும் வல்லார்கள்* 
    இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர்*  எல்லியும் காலையே.  (2)


    இன்னுயிர்சேவலும் நீரும் கூவிக்கொண்டு*  இங்கு எத்தனை* 
    என்னுயிர் நோவ மிழற்றேல்மின்*  குயில் பேடைகாள்*

    என்னுயிர்க் கண்ணபிரானை*  நீர் வரக்கூவுகிலீர்* 
    என்னுயிர் கூவிக்கொடுப்பார்க்கும்*  இத்தனை வேண்டுமோ?   (2)


    இத்தனை வேண்டுவதுஅன்றுஅந்தோ!*  அன்றில் பேடைகாள்* 
    எத்தனை நீரும் நும்சேவலும்*  கரைந்துஏங்குதிர்*

    வித்தகன் கோவிந்தன்*  மெய்யன்அல்லன் ஒருவர்க்கும்* 
    அத்தனைஆம் இனி*  என்உயிர் அவன்கையதே.


    அவன்கையதே எனதுஆர்உயிர்*  அன்றில் பேடைகாள்* 
    எவன்சொல்லி நீர்குடைந்துஆடுதிர்*  புடைசூழவே*

    தவம்செய்தில்லா*  வினையாட்டியேன் உயிர் இங்குஉண்டோ* 
    எவன்சொல்லி நிற்றும்*  நும்ஏங்கு கூக்குரல் கேட்டுமே. 


    கூக்குரல்கேட்டும்*  நம்கண்ணன் மாயன் வெளிப்படான்* 
    மேல்கிளை கொள்ளேல்மின்*  நீரும் சேவலும் கோழிகாள்*

    வாக்கும்மனமும்*  கருமமும் நமக்குஆங்கதே* 
    ஆக்கையும் ஆவியும்*  அந்தரம் நின்றுஉழலுமே


    அந்தரம் நின்றுஉழல்கின்ற*  யானுடைப் பூவைகாள்* 
    நும்திறத்துஏதும் இடைஇல்லை*  குழறேல்மினோ*

    இந்திரஞாலங்கள் காட்டி*  இவ்ஏழ்உலகும் கொண்ட* 
    நம் திருமார்பன்*  நம்ஆவி உண்ண நன்குஎண்ணினான். 


    நன்குஎண்ணி நான்வளர்த்த*  சிறுகிளிப்பைதலே* 
    இன்குரல் நீ மிழற்றேல்*  என்ஆர்உயிர்க் காகுத்தன்*

    நின்செய்ய வாய்ஒக்கும் வாயன்*  கண்ணன்கை காலினன்* 
    நின்பசும்சாம நிறத்தன்*  கூட்டுண்டு நீங்கினான். 


    கூட்டுண்டு நீங்கிய*  கோலத்தாமரைக் கண்செவ்வாய்* 
    வாட்டம்இல்என் கருமாணிக்கம்*  கண்ணன் மாயன்போல்*

    கோட்டிய வில்லொடு*  மின்னும் மேகக்குழாங்கள்காள்* 
    காட்டேல்மின் நும்உரு*  என்உயிர்க்கு அதுகாலனே.


    உயிர்க்குஅது காலன்என்று*  உம்மை யான்இரந்தேற்குநீர்* 
    குயில் பைதல்காள்*  கண்ணன் நாமமே குழறிக்கொன்றீர்*

    தயிர்ப்பழஞ்சோற்றொடு*  பால்அடிசிலும் தந்து*  சொல் 
    பயிற்றிய நல்வளம்ஊட்டினீர்*  பண்புஉடையீரே!      


    பண்புடை வண்டொடு தும்பிகாள்*  பண்மிழற்றேல்மின்* 
    புண்புரை வேல்கொடு*  குத்தால்ஒக்கும் நும்இன்குரல்

    தண்பெருநீர்த் தடம்தாமரை*  மலர்ந்தால்ஒக்கும் 
    கண்பெரும்கண்ணன்*  நம்ஆவிஉண்டுஎழ நண்ணினான் 


    எழநண்ணி நாமும்*  நம்வானநாடனோடு ஒன்றினோம்* 
    பழன நல்நாரைக் குழாங்கள்காள்*  பயின்றுஎன்இனி*

    இழைநல்லஆக்கையும்*  பையவே புயக்குஅற்றது* 
    தழைநல்ல இன்பம் தலைப்பெய்து*  எங்கும் தழைக்கவே.   


    இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த*  பல்ஊழிக்குத்* 
    தன்புகழ்ஏத்தத்*  தனக்குஅருள் செய்தமாயனைத்*

    தென்குருகூர்ச் சடகோபன்*  சொல்ஆயிரத்துள் இவை* 
    ஒன்பதோடு ஒன்றுக்கும்*  மூவுலகும் உருகுமே   (2)   


    கண்ணன் கழல்இணை*  நண்ணும் மனம்உடையீர்*

    எண்ணும் திருநாமம்*  திண்ணம் நாரணமே.  (2)


    நாரணன் எம்மான்*  பாரணங்காளன்*

    வாரணம் தொலைத்த*  காரணன் தானே.  


    தானே உலகுஎல்லாம்*  தானே படைத்துஇடந்து*

    தானே உண்டுஉமிழ்ந்து*  தானே ஆள்வானே.


    ஆள்வான் ஆழிநீர்க்*  கோள்வாய் அரவுஅணையான்*

    தாள்வாய் மலர்இட்டு*  நாள்வாய் நாடீரே. 


    நாடீர் நாள்தோறும்*  வாடா மலர்கொண்டு*

    பாடீர் அவன்நாமம்*  வீடே பெறலாமே.   


    மேயான் வேங்கடம்*  காயாமலர் வண்ணன்*

    பேயார் முலைஉண்ட*  வாயான் மாதவனே.   (2)


    மாதவன் என்றுஎன்று*  ஓத வல்லீரேல்*

    தீதுஒன்றும் அடையா*  ஏதம் சாராவே.


    சாரா ஏதங்கள்*  நீரார் முகில்வண்ணன்*

    பேர் ஆர் ஓதுவார்*  ஆரார் அமரரே.


    அமரர்க்கு அரியானை*  தமர்கட்கு எளியானை*

    அமரத் தொழுவார்கட்கு*  அமரா வினைகளே.


    வினைவல் இருள்என்னும்*  முனைகள் வெருவிப்போம்*

    சுனை நல் மலர்இட்டு*  நினைமின் நெடியானே.


    நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்

    நொடி ஆயிரத்துஇப்பத்து  அடியார்க்கு அருள்பேறே  (2)