பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    ஓடும் புள் ஏறி,*  சூடும் தண் துழாய்,*

    நீடு நின்றவை,*  ஆடும் அம்மானே.


    அம்மானாய்ப் பின்னும்,*  எம்மாண்பும் ஆனான்,*

    வெம் மா வாய் கீண்ட,*  செம்மா கண்ணனே.


    கண் ஆவான் என்றும்,*  மண்ணோர் விண்ணோர்க்கு,*

    தண் ஆர் வேங்கட,*  விண்ணோர் வெற்பனே.


    வெற்பை ஒன்று எடுத்து,*  ஒற்கம் இன்றியே,*

    நிற்கும் அம்மான் சீர்,*  கற்பன் வைகலே.


    வைகலும் வெண்ணெய்,*  கைகலந்து உண்டான்,* 

    பொய் கலவாது,*  என்  மெய்கலந்தானே.


    கலந்து என் ஆவி,*  நலம்கொள்நாதன்,* 

    புலன் கொள் மாணாய்,*  நிலம்கொண்டானே.


    கொண்டான் ஏழ் விடை,*   உண்டான் ஏழ்வையம்,*

    தண் தாமம் செய்து,*  என் எண்தானானானே.


    ஆனான் ஆன் ஆயன்,*  மீனோடேனமும்;* 

    தான் ஆனான் என்னில்,*  தானாயசங்கே.


    சங்கு சக்கரம்,*  அங்கையில் கொண்டான்,*

    எங்கும் தானாய,*  நங்கள் நாதனே.


    நாதன்ஞாலம்கொள்*  பாதன், என்ம்மான்,*

    ஓதம்போல்கிளர்,*   வேதநீரனே.


    நீர்புரைவண்ணன்,*  சீர்சடகோபன்,*

    நேர்தல் ஆயிரத்து,*  ஓர்தல்இவையே.


    அணைவது அரவு அணைமேல்*  பூம்பாவை ஆகம் 
    புணர்வது,*  இருவர் அவர் முதலும் தானே,*

    இணைவன்*  ஆம் எப் பொருட்கும் வீடு முதல் ஆம்,* 
    புணைவன்*  பிறவிக்கடல் நீந்துவார்க்கே.


    நீந்தும் துயர்ப் பிறவி*  உட்பட மற்று எவ் எவையும்,* 
    நீந்தும் துயர் இல்லா*  வீடு முதல் ஆம்,*

    பூந் தண் புனல் பொய்கை*  யானை இடர் கடிந்த,* 
    பூந் தண் துழாய்*  என் தனி நாயகன் புணர்ப்பே.


    புணர்க்கும் அயன் ஆம்*  அழிக்கும் அரன் ஆம்,* 
    புணர்த்த தன் உந்தியொடு*  ஆகத்து மன்னி,* 

    புணர்த்த திருஆகித்*  தன் மார்வில் தான்சேர்,* 
    புணர்ப்பன் பெரும் புணர்ப்பு*  எங்கும் புலனே.


    புலன் ஐந்து மேயும்*  பொறி ஐந்தும் நீங்கி,* 
    நலம் அந்தம் இல்லது ஓர்*  நாடு புகுவீர்,*

    அலமந்து வீய*  அசுரரைச் செற்றான்,* 
    பலம் முந்து சீரில்*  படிமின் ஒவாதே. 


    ஓவாத் துயர்ப் பிறவி*  உட்பட மற்று எவ் எவையும்,* 
    மூவாத் தனி முதலாய்*  மூவுலகும் காவலோன்,*

    மா ஆகி ஆமை ஆய்*  மீன் ஆகி மானிடம் ஆம்,* 
    தேவாதி தேவ பெருமான்*  என் தீர்த்தனே.         


    தீர்த்தன் உலகு அளந்த*  சேவடிமேல் பூந்தாமம்,* 
    சேர்த்தி அவையே*  சிவன் முடிமேல் தான் கண்டு,*

    பார்த்தன் தெளிந்தொழிந்த*  பைந்துழாயான் பெருமை,* 
    பேர்த்தும் ஒருவரால்*  பேசக் கிடந்ததே?        


    கிடந்து இருந்து நின்று அளந்து*  கேழல் ஆய் கீழ்ப் புக்கு 
    இடந்திடும்,*  தன்னுள் கரக்கும் உமிழும்,*

    தடம் பெருந் தோள் ஆரத் தழுவும்*  பார் என்னும் 
    மடந்தையை,*  மால் செய்கின்ற,*  மால் ஆர் காண்பாரே?    


    காண்பார் ஆர்? எம் ஈசன்*  கண்ணனை என்காணுமாறு,?* 
    ஊண் பேசில் எல்லா*  உலகும் ஓர் துற்று ஆற்றா,*

    சேணபாலவீடோ*  உயிரோ மற்று எப் பொருட்கும்,* 
    ஏண் பாலும் சோரான்*  பரந்து உளன் ஆம் எங்குமே.


    எங்கும் உளன் கண்ணன் என்ற*  மகனைக் காய்ந்து,* 
    இங்கு இல்லையால் என்று*  இரணியன் தூண் புடைப்ப,*

    அங்கு அப்பொழுதே*  அவன் வீயத் தோன்றிய,*  என் 
    சிங்கப் பிரான் பெருமை*  ஆராயும் சீர்மைத்தே? 


    சீர்மை கொள் வீடு*  சுவர்க்கம் நரகு ஈறா,* 
    ஈர்மை கொள் தேவர்*  நடுவா மற்று எப் பொருட்கும்,*

    வேர் முதல் ஆய் வித்து ஆய்*  பரந்து தனி நின்ற,* 
    கார் முகில் போல் வண்ணன்*  என் கண்ணனை நான் கண்டேனே.        


    கண் தலங்கள் செய்ய*  கரு மேனி அம்மானை,* 
    வண்டு அலம்பும் சோலை*  வழுதி வள நாடன்,*

    பண் தலையில் சொன்ன தமிழ்*  ஆயிரத்து இப் பத்தும் வலார்,* 
    விண் தலையில் வீற்றிருந்து ஆள்வர்*  எம் மா வீடே.     


    முடியானே! மூவுலகும் தொழுது ஏத்தும்*  சீர் 
    அடியானே,*  ஆழ் கடலைக் கடைந்தாய்!*  புள் ஊர் 

    கொடியானே,*  கொண்டல் வண்ணா!*  அண்டத்து உம்பரில் 
    நெடியானே!,*  என்று கிடக்கும் என் நெஞ்சமே. (2)


    நெஞ்சமே! நீள் நகர் ஆக*  இருந்த என் 
    தஞ்சனே,*  தண் இலங்கைக்கு இறையைச் செற்ற 

    நஞ்சனே,*  ஞாலம் கொள்வான்*  குறள் ஆகிய 
    வஞ்சனே,*  என்னும் எப்போதும்,*  என் வாசகமே


    வாசகமே ஏத்த அருள் செய்யும்*  வானவர் தம்- 
    நாயகனே,*  நாள் இளம் திங்களைக்*  கோள் விடுத்து,* 

    வேய் அகம் பால் வெண்ணெய்*  தொடு உண்ட ஆன் ஆயர்- 
    தாயவனே,*  என்று தடவும் என் கைகளே.


    கைகளால் ஆரத்*  தொழுது தொழுது உன்னை,* 
    வைகலும் மாத்திரைப்*  போதும் ஓர் வீடு இன்றி,*

    பை கொள் பாம்பு ஏறி*  உறை பரனே,*  உன்னை 
    மெய்கொள்ளக் காண(  விரும்பும் என் கண்களே.


    கண்களால் காண*  வருங்கொல்?  என்று ஆசையால்,* 
    மண் கொண்ட வாமனன்*  ஏற மகிழ்ந்து செல்,* 

    பண் கொண்ட புள்ளின்*   சிறகு ஒலி பாவித்து,* 
    திண் கொள்ள ஓர்க்கும்*  கிடந்து என் செவிகளே.


    செவிகளால் ஆர*  நின் கீர்த்திக் கனி என்னும் 
    கவிகளே*  காலப் பண் தேன்*  உறைப்பத் துற்று,* 

    புவியின்மேல்*  பொன் நெடும் சக்கரத்து உன்னையே.* 
    அவிவு இன்றி ஆதரிக்கும்*  எனது ஆவியே.


    ஆவியே! ஆர் அமுதே!*  என்னை ஆளுடைத்,* 
    தூவி அம் புள் உடையாய்!*  சுடர் நேமியாய்,* 

    பாவியேன் நெஞ்சம்*  புலம்பப் பலகாலும்,* 
    கூவியும் காணப்பெறேன்*  உன கோலமே. 


    கோலமே! தாமரைக் கண்ணது ஓர்*  அஞ்சன 
    நீலமே,*  நின்று எனது ஆவியை* ஈர்கின்ற

    சீலமே,*  சென்று செல்லாதன*  முன் நிலாம் 
    காலமே,*  உன்னை எந் நாள் கண்டுகொள்வனே?


    கொள்வன் நான் மாவலி*  மூவடி தா என்ற 
    கள்வனே,*  கஞ்சனை வஞ்சித்து*  வாணனை

    உள் வன்மை தீர,*  ஓர் ஆயிரம் தோள் துணித்த* 
    புள் வல்லாய்,*  உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?


    பொருந்திய மா மருதின் இடை போய*  எம் 
    பெருந்தகாய்,*  உன் கழல்*  காணிய பேதுற்று,* 

    வருந்திநான்*  வாசகமாலை கொண்டு*  உன்னையே 
    இருந்து இருந்து*  எத்தனை காலம் புலம்புவனே? 


    புலம்பு சீர்ப்*  பூமி அளந்த பெருமானை,* 
    நலம்கொள்சீர்*  நன் குருகூர்ச் சடகோபன்,*  சொல் 

    வலம் கொண்ட ஆயிரத்துள்*  இவையும் ஓர் பத்து, 
    இலங்குவான்*  யாவரும் ஏறுவர் சொன்னாலே. (2)


    ஏறு ஆளும் இறையோனும்*  திசைமுகனும் திருமகளும்,* 
    கூறு ஆளும் தனி உடம்பன்*  குலம் குலமா அசுரர்களை,* 

    நீறு ஆகும்படியாக*  நிருமித்து படை தொட்ட,* 
    மாறாளன் கவராத*  மணி மாமை குறைவு இலமே. (2)


    மணி மாமை குறைவு இல்லா*  மலர்மாதர் உறை மார்பன்,* 
    அணி மானத் தட வரைத்தோள்*  அடல் ஆழித் தடக்கையன்,* 

    பணி மானம் பிழையாமே*  அடியேனைப் பணிகொண்ட,* 
    மணிமாயன் கவராத*  மட நெஞ்சால் குறைவு இலமே.       


    மட நெஞ்சால் குறைவு இல்லா*  மகள்தாய்செய்து ஒரு பேய்ச்சி,* 
    விட நஞ்ச முலை சுவைத்த*  மிகு ஞானச் சிறு குழவி,* 

    பட நாகத்து அணைக் கிடந்த*  பரு வரைத் தோள் பரம்புருடன்,* 
    நெடுமாயன் கவராத*  நிறையினால் குறைவு இலமே.


    நிறையினால் குறைவு இல்லா*  நெடும் பணைத் தோள் மடப் பின்னை,* 
    பொறையினால் முலை அணைவான்*  பொரு விடை ஏழ் அடர்த்து உகந்த,* 

    கறையினார் துவர் உடுக்கை*  கடை ஆவின் கழி கோல் கைச்,* 
    சறையினார் கவராத*  தளிர் நிறத்தால் குறைவு இலமே


    தளிர் நிறத்தால் குறைவு இல்லாத்*  தனிச் சிறையில் விளப்பு உற்ற,* 
    கிளிமொழியாள் காரணமாக்*  கிளர் அரக்கன் நகர் எரித்த,* 

    களி மலர்த் துழாய் அலங்கல்*  கமழ் முடியன் கடல் ஞாலத்து,* 
    அளிமிக்கான் கவராத,*  அறிவினால் குறைவு இலமே. 


    அறிவினால் குறைவு இல்லா*  அகல் ஞாலத்தவர் அறிய,* 
    நெறி எல்லாம் எடுத்து உரைத்த*  நிறை ஞானத்து ஒருமூர்த்தி,* 

    குறிய மாண் உரு ஆகி*  கொடுங் கோளால் நிலம் கொண்ட,* 
    கிறி அம்மான் கவராத*  கிளர் ஒளியால் குறைவு இலமே.  


    கிளர் ஒளியால் குறைவு இல்லா*  அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து,* 
    கிளர் ஒளிய இரணியனது*  அகல் மார்பம் கிழித்து உகந்த,* 

    வளர் ஒளிய கனல் ஆழி*  வலம்புரியன் மணி நீல,* 
    வளர் ஒளியான் கவராத*  வரி வளையால் குறைவு இலமே.


    வரி வளையால் குறைவு இல்லாப்*  பெரு முழக்கால் அடங்காரை,* 
    எரி அழலம் புக ஊதி*  இரு நிலம் முன் துயர் தவிர்த்த,* 

    தெரிவு அரிய சிவன் பிரமன்*  அமரர் கோன் பணிந்து ஏத்தும்,* 
    விரி புகழான் கவராத*  மேகலையால் குறைவு இலமே.


    மேகலையால் குறைவு இல்லா*  மெலிவு உற்ற அகல் அல்குல்,* 
    போகமகள் புகழ்த் தந்தை*  விறல் வாணன் புயம் துணித்து,* 

    நாகமிசைத் துயில்வான்போல்*  உலகு எல்லாம் நன்கு ஒடுங்க,* 
    யோகு அணைவான் கவராத*  உடம்பினால் குறைவு இலமே.


    உடம்பினால் குறைவு இல்லா*  உயிர் பிரிந்த மலைத்துண்டம்,* 
    கிடந்தனபோல் துணி பலவா*  அசுரர் குழாம் துணித்து உகந்த,* 

    தடம் புனல சடைமுடியன்*  தனி ஒருகூறு அமர்ந்து உறையும்,* 
    உடம்பு உடையான் கவராத*  உயிரினால் குறைவு இலமே. 


    உயிரினால் குறைவு இல்லா*  உலகு ஏழ் தன்னுள் ஒடுக்கி,* 
    தயிர் வெண்ணெய் உண்டானைத்,*  தடம் குருகூர்ச் சடகோபன்,* 

    செயிர் இல் சொல் இசைமாலை*  ஆயிரத்துள் இப்பத்தால்* 
    வயிரம்சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே. (2) 


    ஆரா அமுதே! அடியேன் உடலம்*  நின்பால் அன்பாயே* 
    நீராய் அலைந்து கரைய*  உருக்குகின்ற நெடுமாலே* 

    சீர் ஆர் செந்நெல் கவரி வீசும்*  செழு நீர்த் திருக்குடந்தை* 
    ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய்!*  கண்டேன் எம்மானே!* (2)  


    எம்மானே! என் வெள்ளை மூர்த்தி!*  என்னை ஆள்வானே* 
    எம் மா உருவும் வேண்டும் ஆற்றால்*  ஆவாய் எழில் ஏறே* 

    செம் மா கமலம் செழு நீர்மிசைக்கண் மலரும்*  திருக்குடந்தை* 
    அம் மா மலர்க்கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே!* (2)   


    என் நான் செய்கேன்! யாரே களைகண்? என்னை என் செய்கின்றாய்?*
    உன்னால் அல்லால் யாவராலும்*  ஒன்றும் குறை வேண்டேன்* 

    கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய்!*  அடியேன் அரு வாழ்நாள்* 
    செல் நாள் எந் நாள்? அந்நாள்*  உன தாள் பிடித்தே செலக்காணே*


    செலக் காண்கிற்பார் காணும் அளவும்*  செல்லும் கீர்த்தியாய்* 
    உலப்பு இலானே! எல்லா உலகும் உடைய*  ஒரு மூர்த்தி* 

    நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்!*  உன்னைக் காண்பான் நான்- 
    அலப்பு ஆய்*  ஆகாசத்தை நோக்கி*  அழுவன் தொழுவனே*.


    அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான்*  பாடி அலற்றுவன்* 
    தழு வல்வினையால் பக்கம் நோக்கி*  நாணிக் கவிழ்ந்திருப்பன்*

    செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய்!*  செந்தாமரைக் கண்ணா!* 
    தொழுவனேனை உன தாள் சேரும்*  வகையே சூழ்கண்டாய்*.    


    சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து*  உன் அடிசேரும்- 
    ஊழ் கண்டிருந்தே*  தூராக்குழி தூர்த்து*  எனை நாள் அகன்று இருப்பன்?*

    வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்!*  வானோர் கோமானே* 
    யாழின் இசையே! அமுதே!*  அறிவின் பயனே! அரிஏறே!*.


    அரிஏறே! என் அம் பொன் சுடரே!*  செங்கண் கருமுகிலே!* 
    எரி ஏய்! பவளக் குன்றே!*  நால் தோள் எந்தாய் உனது அருளே*

    பிரியா அடிமை என்னைக் கொண்டாய்*  குடந்தைத் திருமாலே* 
    தரியேன் இனி உன் சரணம் தந்து*  என் சன்மம் களையாயே*.


    களைவாய் துன்பம் களையாது ஒழிவாய்*  களைகண் மற்று இலேன்* 
    வளை வாய் நேமிப் படையாய்!*  குடந்தைக் கிடந்த மா மாயா* 

    தளரா உடலம் எனது ஆவி*  சரிந்து போம்போது* 
    இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப்*  போத இசை நீயே*.  


    இசைவித்து என்னை உன் தாள் இணைக்கீழ்*  இருத்தும் அம்மானே* 
    அசைவு இல் அமரர் தலைவர் தலைவா*  ஆதிப் பெரு மூர்த்தி* 

    திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும்*  திருக்குடந்தை* 
    அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய்!*  காண வாராயே*.


    வாரா அருவாய் வரும் என் மாயா!*  மாயா மூர்த்தியாய்* 
    ஆரா அமுதாய் அடியேன் ஆவி*  அகமே தித்திப்பாய்* 

    தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்!*  திருக்குடந்தை- 
    ஊராய்!*  உனக்கு ஆள் பட்டும்*  அடியேன் இன்னம் உழல்வேனோ?* (2)


    உழலை என்பில் பேய்ச்சி முலையூடு*  அவளை உயிர் உண்டான்* 
    கழல்கள் அவையே சரண் ஆகக் கொண்ட*  குருகூர்ச் சடகோபன்* 

    குழலின் மலியச் சொன்ன*  ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்* 
    மழலை தீர வல்லார்*  காமர் மான் ஏய் நோக்கியர்க்கே*. (2)


    பொன் உலகு ஆளீரோ?*  புவனி முழுது ஆளீரோ?,* 
    நல் நலப் புள்ளினங்காள்!*  வினையாட்டியேன் நான் இரந்தேன்,*

    முன் உலகங்கள் எல்லாம் படைத்த*  முகில்வண்ணன் கண்ணன்,* 
    என் நலம் கொண்ட பிரான் தனக்கு*  என் நிலைமை உரைத்தே?.


    மையமர் வாள் நெடும்கண்*  மங்கைமார் முன்பு என் கை இருந்து,* 
    நெய்யமர் இன் அடிசில்*  நிச்சல் பாலொடு மேவீரோ,* 

    கையமர் சக்கரத்து*  என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு* 
    மெய்யமர் காதல் சொல்லி*  கிளிகாள்! விரைந்து ஓடிவந்தே?


    ஓடிவந்து என் குழல்மேல்*  ஒளிமாமலர் ஊதீரோ,* 
    கூடிய வண்டினங்காள்!*  குருநாடு உடை ஐவர்கட்கு ஆய்* 

    ஆடிய மா நெடும் தேர்ப்படை*  நீறு எழச் செற்ற பிரான்,* 
    சூடிய தண் துளவம் உண்ட*  தூமது வாய்கள் கொண்டே?


    தூமதுவாய்கள் கொண்டுவந்து*  என் முல்லைகள்மேல் தும்பிகாள்,* 
    பூ மது உண்ணச் செல்லில்*  வினையேனைப் பொய்செய்து அகன்ற,*

    மாமதுவார் தண்துழாய்முடி*  வானவர் கோனைக் கண்டு,* 
    யாம் இதுவோ தக்கவாறு என்னவேண்டும்*  கண்டீர் நுங்கட்கே.


    நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின்*  யான் வளர்த்த கிளிகாள்,* 
    வெம் கண் புள் ஊர்ந்து வந்து*  வினையேனை நெஞ்சம் கவர்ந்த* 

    செங்கண் கருமுகிலை*  செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை,* 
    எங்குச் சென்றாகிலும் கண்டு*  இதுவோ தக்கவாறு என்மினே.   


    என் மின்னு நூல் மார்வன்*  என் கரும் பெருமான் என் கண்ணன்,* 
    தன் மன்னு நீள் கழல்மேல்*  தண் துழாய் நமக்கு அன்றி நல்கான்,* 

    கல்மின்கள் என்று உம்மையான்*  கற்பியாவைத்த மாற்றம்சொல்லி,* 
    செல்மின்கள் தீவினையேன்*  வளர்த்த சிறு பூவைகளே!          


    பூவைகள் போல் நிறத்தன்*  புண்டரீகங்கள் போலும் கண்ணன்,* 
    யாவையும் யாவரும் ஆய்*  நின்ற மாயன் என் ஆழிப் பிரான்,* 

    மாவை வல் வாய் பிளந்த*  மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி,* 
    பாவைகள்! தீர்க்கிற்றிரே*  வினையாட்டியேன் பாசறவே.  


    பாசறவு எய்தி இன்னே*  வினையேன் எனை ஊழி நைவேன்?* 
    ஆசு அறு தூவி வெள்ளைக் குருகே!*  அருள்செய்து ஒருநாள்,* 

    மாசு அறு நீலச்சுடர்முடி*  வானவர் கோனைக் கண்டு,* 
    ஏசு அறும் நும்மை அல்லால்*  மறுநோக்கு இலள் பேர்த்துமற்றே.            


    பேர்த்து மற்று ஓர் களைகண்*  வினையாட்டியேன் நான் ஒன்று இலேன்,* 
    நீர்த் திரைமேல் உலவி*  இரை தேரும் புதா இனங்காள்* 

    கார்த் திரள் மா முகில் போல் கண்ணன்*  விண்ணவர் கோனைக் கண்டு,* 
    வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர்*  வைகல் வந்திருந்தே.        


    வந்திருந்து உம்முடைய*  மணிச் சேவலும் நீரும் எல்லாம்,* 
    அந்தரம் ஒன்றும் இன்றி*  அலர்மேல் அசையும் அன்னங்காள்,* 

    என் திரு மார்வற்கு என்னை*  இன்னவாறு இவள் காண்மின் என்று,* 
    மந்திரத்து ஒன்று உணர்த்தி உரையீர்*  மறுமாற்றங்களே.


    மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு*  மதுசூத பிரான் அடிமேல்,* 
    நாற்றங்கொள் பூம்பொழில்சூழ்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,* 

    தோற்றங்கள் ஆயிரத்துள்*  இவையும் ஒருபத்தும் வல்லார்* 
    ஊற்றின்கண் நுண் மணல்போல்*  உருகாநிற்பர் நீராயே.     


    மாயா! வாமனனே!*  மதுசூதா நீ அருளாய்,* 
    தீயாய் நீர் ஆய் நிலன் ஆய்*  விசும்பு ஆய் கால் ஆய்,* 

    தாயாய்  தந்தையாய்*  மக்களாய்  மற்றுமாய் முற்றுமாய்,* 
    நீயாய்  நீ நின்றவாறு*  இவை என்ன நியாயங்களே! (2) 


    அங்கண்  மலர்த் தண் துழாய்முடி*  அச்சுதனே! அருளாய்,* 
    திங்களும் ஞாயிறும் ஆய்*  செழும் பல் சுடர் ஆய் இருள் ஆய்,* 

    பொங்கு பொழி மழை ஆய்*  புகழ் ஆய் பழி ஆய் பின்னும்நீ, 
    வெங்கண்வெங் கூற்றமும் ஆம்*  இவை என்ன விசித்திரமே!


    சித்திரத் தேர் வலவா!*  திருச் சக்கரத்தாய்! அருளாய்,* 
    எத்தனை ஓர் உகமும்*  அவை ஆய் அவற்றுள் இயலும்,* 

    ஒத்த ஓண் பல் பொருள்கள்*  உலப்பு இல்லன ஆய் வியவு ஆய்,* 
    வித்தகத்தாய் நிற்றி நீ*  இவை என்ன விடமங்களே! 


    கள் அவிழ் தாமரைக்கண்*  கண்ணனே! எனக்கு ஒன்று அருளாய்,* 
    உள்ளதும் இல்லதும் ஆய்*  உலப்பு இல்லன ஆய் வியவு ஆய்,*

    வெள்ளத் தடம் கடலுள்*  விட நாகு அணைமேல் மருவி,* 
    உள்ளப் பல் யோகு செய்தி*  இவை என்ன உபாயங்களே!     


    பாசங்கள் நீக்கி*  என்னை உனக்கே அறக் கொண்டிட்டு,*  நீ 
    வாச மலர்த் தண் துழாய்முடி*  மாயவனே! அருளாய்,*

    காயமும் சீவனும் ஆய்*  கழிவு ஆய் பிறப்பு ஆய் பின்னும்நீ,* 
    மாயங்கள் செய்துவைத்தி*  இவை என்ன மயக்குக்களே!       


    மயக்கா! வாமனனே!*  மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய்,* 
    அயர்ப்பு ஆய் தேற்றமும் ஆய்*  அழல் ஆய் குளிர் ஆய் வியவு ஆய்,* 

    வியப்பு ஆய் வென்றிகள் ஆய்*  வினை ஆய் பயன் ஆய் பின்னும்நீ,* 
    துயக்கு ஆய் நீ நின்றவாறு*  இவை என்ன துயரங்களே! 


    துயரங்கள் செய்யும் கண்ணா!*  சுடர் நீள் முடியாய் அருளாய்,*
    துயரம் செய் மானங்கள் ஆய்*  மதன் ஆகி உகவைகள் ஆய்,* 

    துயரம் செய் காமங்கள் ஆய்*  துலை ஆய் நிலை ஆய் நடை ஆய்,* 
    துயரங்கள் செய்துவைத்தி*  இவை என்ன சுண்டாயங்களே.


    என்ன சுண்டாயங்களால்*  நின்றிட்டாய் என்னை ஆளும் கண்ணா,* 
    இன்னது ஓர் தன்மையை என்று*  உன்னை யாவர்க்கும் தேற்றரியை,* 

    முன்னிய மூவுலகும்*  அவை ஆய் அவற்றைப் படைத்து,*
    பின்னும் உள்ளாய்! புறத்தாய்*!  இவை என்ன இயற்கைகளே!


    என்ன இயற்கைகளால்*  எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா?,*
    துன்னு கரசரணம் முதலாக*  எல்லா உறுப்பும்,* 

    உன்னு சுவை ஒளி*  ஊறு ஒலி நாற்றம் முற்றும்நீயே,* 
    உன்னை உணரவுறில்*  உலப்பு இல்லை நுணுக்கங்களே.


    இல்லை நுணுக்கங்களே*  இதனில் பிறிது என்னும் வண்ணம்* 
    தொல்லை நல் நூலில் சொன்ன*  உருவும் அருவும் நீயே:* 

    அல்லித் துழாய் அலங்கல்*  அணி மார்ப என் அச்சுதனே,* 
    வல்லது ஓர் வண்ணம் சொன்னால்*  அதுவே உனக்கு ஆம்வண்ணமே.        


    ஆம் வண்ணம் இன்னது ஒன்று*  என்று அறிவது அரிய அரியை,* 
    ஆம் வண்ணத்தால்*  குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த* 

    ஆம் வண்ண ஒண் தமிழ்கள்*  இவை ஆயிரத்துள் இப்பத்தும்,* 
    ஆம் வண்ணத்தால் உரைப்பார்*  அமைந்தார் தமக்கு என்றைக்குமே. (2)  


    கண்கள் சிவந்து பெரியவாய்*  வாயும் சிவந்து கனிந்து*  உள்ளே 
    வெண்பல் இலகு சுடர்இலகு*  விலகு மகர குண்டலத்தன்*

    கொண்டல் வண்ணன் சுடர்முடியன்*  நான்கு தோளன் குனிசார்ங்கன்* 
    ஒண் சங்கதை வாள்ஆழியான்*  ஒருவன் அடியேன் உள்ளானே.  (2)


    அடியேன்உள்ளான் உடல்உள்ளான்*  அண்டத்துஅகத்தான் புறத்துள்ளான்* 
    படியேஇது என்றுஉரைக்கலாம்  படியன்*  அல்லன் பரம்பரன்*

    கடிசேர் நாற்றத்துள்ஆலை*   இன்பத் துன்பக் கழிநேர்மை* 
    ஒடியா இன்பப் பெருமையோன்*  உணர்வில்உம்பர் ஒருவனே    


    உணர்வில்உம்பர் ஒருவனை*  அவனது அருளால் உறற்பொருட்டு*  என் 
    உணர்வின்உள்ளே இருத்தினேன்*  அதுவும் அவனது இன்அருளே*

    உணர்வும் உயிரும் உடம்பும்*  மற்று உலப்பிலனவும் பழுதேயாம்* 
    உணர்வைப் பெறஊர்ந்துறஏறி*  யானும் தானாய் ஒழிந்தானே.


    யானும் தானாய் ஒழிந்தானை*  யாதும் எவர்க்கும் முன்னோனை* 
    தானும் சிவனும் பிரமனும்ஆகிப்*  பணைத்த தனிமுதலை*

    தேனும் பாலும் கன்னலும்*  அமுதும்ஆகித் தித்தித்து*  என் 
    ஊனில் உயிரில் உணர்வினில்*  நின்ற ஒன்றை உணர்ந்தேனே 


    நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு*  அதனுள் நேர்மை அதுஇதுஎன்று* 
    ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது*   உணர்ந்தும் மேலும் காண்புஅரிது*

    சென்று சென்று பரம்பரமாய்*  யாதும்இன்றித் தேய்ந்துஅற்று* 
    நன்று தீதுஎன்று அறிவரிதாய்*  நன்றாய் ஞானம் கடந்ததே


    நன்றாய் ஞானம் கடந்துபோய்*  நல்இந்திரியம் எல்லாம் ஈர்த்து* 
    ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ்*  உலப்புஇல் அதனை உணர்ந்துஉணர்ந்து*

    சென்றுஆங்கு இன்பத் துன்பங்கள்*  செற்றுக் களைந்து பசைஅற்றால்* 
    அன்றே அப்போதேவீடு*  அதுவே வீடு வீடாமே.


    அதுவே வீடு வீடு பேற்று*  இன்பம்தானும் அதுதேறி* 
    எதுவே தானும் பற்றுஇன்றி*  யாதும் இலிகள்ஆகிற்கில்*

    அதுவே வீடு வீடு பேற்று*  இன்பம்தானும் அதுதேறாது* 
    'எதுவே வீடு ஏது இன்பம்?' என்று*  எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே. 


    எய்த்தார் எய்த்தார் எய்த்தார்என்று*  இல்லத்தாரும் புறத்தாரும்- 
    மொய்த்து*  ஆங்கு அறிமுயங்க*  தாம் போகும் போது*  உன்மத்தர்போல்

    பித்தேஏறி அநுராகம்  பொழியும்போது*  எம் பெம்மானோடு- 
    ஒத்தேசென்று*  அங்குஉள்ளம்கூடக்*  கூடிற்றாகில் நல்உறைப்பே.     


    கூடிற்றாகில் நல்உறைப்பு*   கூடாமையைக் கூடினால்* 
    ஆடல் பறவை உயர்கொடி*  எம்மாயன் ஆவதது அதுவே*

    வீடைப் பண்ணி ஒருபரிசே*  எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்* 
    ஓடித் திரியும் யோகிகளும்*  உளரும்இல்லை அல்லரே.


    உளரும்இல்லை அல்லராய்*  உளராய்இல்லை ஆகியே* 
    உளர்எம்ஒருவர் அவர்வந்து*  என்உள்ளத்துள்ளே உறைகின்றார்*

    வளரும் பிறையும் தேய்பிறையும்போல*  அசைவும் ஆக்கமும்* 
    வளரும் சுடரும் இருளும்போல்*  தெருளும் மருளும் மாய்த்தோமே.  


    தெருளும் மருளும் மாய்த்து*  தன்திருந்து செம்பொன் கழல்அடிக்கீழ்* 
    அருளிஇருத்தும் அம்மானாம்*  அயனாம் சிவனாம்*  திருமாலால்

    அருளப்பட்ட சடகோபன்*  ஓர்ஆயிரத்துள் இப்பத்தால்* 
    அருளி அடிக்கீழ் இருத்தும்*  நம்அண்ணல் கருமாணிக்கமே   (2)


    அறுக்கும் வினையாயின*  ஆகத்து அவனை* 
    நிறுத்தும் மனத்துஒன்றிய*  சிந்தையினார்க்கு*

    வெறித்தண்மலர்ச் சோலைகள்சூழ்*  திருநாவாய்* 
    குறுக்கும்வகை உண்டுகொலோ*  கொடியேற்கே?  (2)


    கொடிஏர்இடைக்*  கோகனகத்தவள் கேள்வன்* 
    வடிவேல் தடம்கண்*  மடப்பின்னை மணாளன்*

    நெடியான்உறை சோலைகள்சூழ்*  திருநாவாய்*  
    அடியேன் அணுகப்பெறும்நாள்*  எவைகொலோ!


    எவைகொல் அணுகப் பெறும்நாள்?'*  என்று எப்போதும்* 
    கவையில் மனம்இன்றி*  கண்ணீர்கள் கலுழ்வன்* 

    நவைஇல் திருநாரணன்சேர்*  திருநாவாய்*  
    அவையுள் புகலாவதுஓர்*  நாள் அறியேனே


    நாளேல் அறியேன்*  எனக்குஉள்ளன*  நானும் 
    மீளா அடிமைப்*  பணி செய்யப் புகுந்தேன்*

    நீள்ஆர்மலர்ச் சோலைகள்சூழ்*  திருநாவாய்* 
    வாள்ஏய் தடம்கண்*  மடப்பின்னை மணாளா!


    மணாளன் மலர்மங்கைக்கும்*  மண் மடந்தைக்கும்* 
    கண்ணாளன் உலகத்துஉயிர்*  தேவர்கட்குஎல்லாம்*

    விண்ணாளன் விரும்பிஉறையும்*  திருநாவாய்* 
    கண்ஆரக் களிக்கின்றது*  இங்குஎன்று கொல்கண்டே?  


    கண்டே களிக்கின்றது*  இங்குஎன்று கொல்கண்கள்* 
    தொண்டேஉனக்காய் ஒழிந்தேன்*  துரிசுஇன்றி*

    வண்டுஆர்மலர்ச் சோலைகள்சூழ்*  திருநாவாய்*  
    கொண்டே உறைகின்ற*  எம்கோவலர்கோவே!


    கோவாகிய*  மாவலியை நிலம்கொண்டாய்* 
    தேவாசுரம் செற்றவனே!*  திருமாலே*

    நாவாய்உறைகின்ற*  என்நாரணநம்பீ* 
    'ஆஆ அடியான்*  இவன் என்று அருளாயே. 


    அருளாது ஒழிவாய்*  அருள்செய்து*  அடியேனைப் 
    பொருளாக்கி*  உன்பொன்அடிக்கீழ்ப் புகவைப்பாய்*

    மருளேஇன்றி*  உன்னை என்நெஞ்சத்துஇருத்தும்* 
    தெருளேதரு*  தென்திருநாவாய் என்தேவே!  


    தேவர் முனிவர்க்குஎன்றும்*  காண்டற்குஅரியன்* 
    மூவர் முதல்வன்*  ஒருமூவுலகுஆளி*

    தேவன் விரும்பிஉறையும்*  திருநாவாய்* 
    யாவர் அணுகப்பெறுவார்*  இனிஅந்தோ!


    அந்தோ! அணுகப்பெறும்நாள்*  என்றுஎப்போதும்*  
    சிந்தை கலங்கித்*  திருமால் என்றுஅழைப்பன்*

    கொந்துஆர்மலர்ச் சோலைகள்சூழ்*  திருநாவாய்* 
    வந்தே உறைகின்ற*  எம்மா மணிவண்ணா!.


    வண்ணம் மணிமாட*  நல்நாவாய் உள்ளானைத்*  
    திண்ணம் மதிள்*  தென்குருகூர்ச் சடகோபன்* 

    பண்ணார் தமிழ்*  ஆயிரத்து இப்பத்தும்வல்லார்*  
    மண்ணாண்டு*  மணம்கமழ்வர் மல்லிகையே.   (2)


    திருமாலிருஞ்சோலை மலை*  என்றேன் என்ன* 
    திருமால்வந்து*  என்நெஞ்சு நிறையப் புகுந்தான்*

    குருமா மணிஉந்து புனல்*  பொன்னித் தென்பால்* 
    திருமால்சென்று சேர்விடம்*  தென் திருப்பேரே.   (2)


    பேரே உறைகின்ற பிரான்*  இன்று வந்து* 
    பேரேன்என்று*  என்நெஞ்சு நிறையப் புகுந்தான்*

    கார்ஏழ் கடல்ஏழ்*  மலைஏழ் உலகு உண்டும்* 
    ஆராவயிற்றானை*  அடங்கப் பிடித்தேனே.


    பிடித்தேன் பிறவி கெடுத்தேன்*  பிணிசாரேன்* 
    மடித்தேன் மனைவாழ்க்கையுள்*  நிற்பதுஓர் மாயையை*

    கொடிக் கோபுரமாடங்கள்சூழ்*  திருப்பேரான்* 
    அடிச்சேர்வது எனக்கு*  எளிதுஆயின வாறே.


    எளிதாயினவாறுஎன்று*  என்கண்கள் களிப்பக்* 
    களிதாகிய சிந்தையனாய்க்*  களிக்கின்றேன்*

    கிளிதாவிய சோலைகள்சூழ்*  திருப்பேரான்* 
    தெளிதாகிய*  சேண்விசும்பு தருவானே.


    வானே தருவான்*  எனக்காய் என்னோடுஒட்டி* 
    ஊன்ஏய் குரம்பை*  இதனுள் புகுந்து*  இன்று-

    தானே தடுமாற்ற*  வினைகள் தவிர்த்தான்* 
    தேனேய் பொழில்*  தென்திருப்பேர் நகரானே.


    திருப்பேர் நகரான்*  திருமாலிருஞ்சோலைப்* 
    பொருப்பே உறைகின்றபிரான்*  இன்றுவந்து*

    இருப்பேன் என்று*  என்நெஞ்சு நிறையப் புகுந்தான்* 
    விருப்பே பெற்று*  அமுதம்உண்டு களித்தேனே.  


    உண்டு களித்தேற்கு*  உம்பர்என் குறை*  மேலைத்- 
    தொண்டு உகளித்து*  அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்*

    வண்டு களிக்கும் பொழில்சூழ்*  திருப்பேரான்* 
    கண்டு களிப்ப*  கண்ணுள்நின்று அகலானே.


    கண்ணுள் நின்று அகலான்*  கருத்தின்கண் பெரியன்* 
    எண்ணில்நுண் பொருள்*  ஏழ்இசையின் சுவைதானே*

    வண்ணநல் மணிமாடங்கள்சூழ்*  திருப்பேரான்* 
    திண்ணம் என்மனத்துப்*  புகுந்தான் செறிந்துஇன்றே. 


    இன்று என்னைப் பொருளாக்கி*  தன்னை என்னுள் வைத்தான்* 
    அன்று என்னைப் புறம்போகப்*  புணர்த்தது என் செய்வான்?*

    குன்றுஎன்னத் திகழ்மாடங்கள்சூழ்*  திருப்பேரான்* 
    ஒன்று எனக்குஅருள்செய்ய*  உணர்த்தல்உற்றேனே. 


    உற்றேன் உகந்து பணிசெய்து*  உன்பாதம்- 
    பெற்றேன்*  ஈதே இன்னம்*  வேண்டுவது எந்தாய்*

    கற்றார் மறைவாணர்கள்சூழ்*  திருப்பேராற்கு* 
    அற்றார் அடியார் தமக்கு*  அல்லல் நில்லாவே.  (2)


    நில்லா அல்லல்*  நீள்வயல்சூழ் திருப்பேர்மேல்* 
    நல்லார் பலர்வாழ்*  குருகூர்ச் சடகோபன்*

    சொல்லார் தமிழ்*  ஆயிரத்துள் இவைபத்தும்- 
    வல்லார்*  தொண்டர்ஆள்வது*  சூழ்பொன் விசும்பே.  (2)