பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    பரிவது இல் ஈசனைப் பாடி* விரிவது மேவல் உறுவீர்!*

    பிரிவகை இன்றி நல் நீர் தூய்* புரிவதுவும் புகை பூவே. (2)


    மதுவார் தண் அம் துழாயான்*  முது வேத முதலவனுக்கு*

    எதுவே? என்பணி? என்னாது*  அதுவே ஆள் செய்யும் ஈடே


    ஈடும் எடுப்பும் இல் ஈசன்* மாடு விடாது என் மனனே*

    பாடும் என் நா அவன் பாடல்*  ஆடும் என் அங்கம் அணங்கே.


    அணங்கு என ஆடும் என் அங்கம்*  வணங்கி வழிபடும் ஈசன்*

    பிணங்கி அமரர் பிதற்றும்*  குணங்கெழு கொள்கையினானே*


    கொள்கை கொளாமை இலாதான்*  எள்கல் இராகம் இலாதான்*

    விள்கை விள்ளாமை விரும்பி*   உள் கலந்தார்க்கு ஓர் அமுதே.


    அமுதம் அமரர்கட்கு ஈந்த*  நிமிர் சுடர் ஆழி நெடுமால்*

    அமுதிலும் ஆற்ற இனியன்*  நிமிர் திரை நீள் கடலானே.


    நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்*  தோள்கள் தலை துணிசெய்தான்*

    தாள்கள் தலையில் வணங்கி*  நாள்கள் தலைக்கழிமின்னே.


    கழிமின் தொண்டீர்கள் கழித்துத்*  தொழுமின் அவனை தொழுதால்*

    வழி நின்ற வல்வினை மாள்வித்து*  அழிவின்றி ஆக்கம் தருமே.


    தரும அரும் பயன் ஆய*  திருமகளார் தனிக் கேள்வன்*

    பெருமை உடைய பிரானார்*  இருமை வினை கடிவாரே. 


    கடிவார் தீய வினைகள்*  நொடியாரும் அளவைக்கண்*

    கொடியா அடு புள் உயர்த்த*  வடிவு ஆர் மாதவனாரே.


    மாதவன்பால் சடகோபன்*   தீது அவம் இன்றி உரைத்த*

    ஏதம் இல் ஆயிரத்து இப் பத்து*  ஓத வல்லார் பிறவாரே.  


    வைகுந்தா மணிவண்ணனே*  என் பொல்லாத் திருக்குறளா என்னுள் மன்னி,* 
    வைகும் வைகல் தோறும்*  அமுது ஆய வான் ஏறே,

    செய் குந்தா அரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து*  அசுரர்க்குத் தீமைகள்- 
    செய் குந்தா*  உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே..     


    சிக்கெனச் சிறிது ஓர் இடமும்*  புறப்படாத் தன்னுள்ளே,*  உலகுகள் 
    ஒக்கவே விழுங்கிப்*  புகுந்தான் புகுந்ததற்பின்,*

    மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்குஆய்*  துளக்கு அற்று அமுதம் ஆய்,*  எங்கும் 
    பக்கம் நோக்கு அறியான்*  என் பைந்தாமரைக் கண்ணனே.         


    தாமரைக் கண்ணனை*  விண்ணோர் பரவும் தலைமகனை,*  துழாய் விரைப் 
    பூ மருவு கண்ணி*  எம் பிரானை பொன்மலையை,* 

    நாம் மருவி நன்கு ஏத்தி*  உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட,*  நாவு அலர் 
    பா மருவி நிற்கத் தந்த*  பான்மையே வள்ளலே.


    வள்ளலே மதுசூதனா*  என் மரகத மலையே,*  உனை நினைந்து, 
    எள்கல் தந்த எந்தாய்*  உன்னை எங்ஙனம் விடுகேன்,?* 

    வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப்பாடி*  களித்து உகந்து உகந்து* 
    உள்ள நோய்கள் எல்லாம் துரந்து*  உய்ந்து போந்திருந்தே.


    உய்ந்து போந்து என் உலப்பு இலாத*  வெம் தீவினைகளை நாசம் செய்து*  உனது 
    அந்தம் இல் அடிமை*  அடைந்தேன் விடுவேனோ,?*

    ஐந்து பைந்தலை ஆடு அரவு அணை மேவிப்*  பாற்கடல் யோக நித்திரை,* 
    சிந்தை செய்த எந்தாய்*  உன்னைச் சிந்தை செய்து செய்தே. 


    உன்னைச் சிந்தை செய்து செய்து,*  உன் நெடு மா மொழி இசைபாடி ஆடி*  என் 
    முன்னைத் தீவினைகள்*  முழு வேர் அரிந்தனன் யான்,*

    உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த*  இரணியன் அகல் மார்வம் கீண்ட*  என் 
    முன்னைக் கோளரியே*  முடியாதது என் எனக்கே. 


    முடியாதது என் எனக்கேல் இனி?*  முழு ஏழ் உலகும் உண்டான்*  உகந்து வந்து 
    அடியேன் உட்புகுந்தான்*  அகல்வானும் அல்லன் இனி,*

    செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து*  எமர் கீழ் மேல் எழு பிறப்பும்,* 
    விடியா வெம் நரகத்து என்றும்*  சேர்தல் மாறினரே.


    மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து*  அடியை அடைந்து உள்ளம் தேறி* 
    ஈறு இல் இன்பத்து இரு வெள்ளம்*  யான் மூழ்கினன்,*

    பாறிப் பாறி அசுரர் தம்*  பல் குழாங்கள் நீறு எழ,*  பாய் பறவை ஒன்று 
    ஏறி வீற்றிருந்தாய்*  உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய்.   


    எந்தாய்! தண் திருவேங்கடத்துள் நின்றாய்*  இலங்கை செற்றாய்,*  மராமரம்
    பைந்தாள் ஏழ் உருவ*  ஒரு வாளி கோத்த வில்லா,*

    கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே*  உன்னை என்னுள்ளே குழைத்த எம் 
    மைந்தா,*  வான் ஏறே*  இனி எங்குப் போகின்றதே?


    போகின்ற காலங்கள் போய காலங்கள்*  போகு காலங்கள்*  தாய் தந்தை உயிர்- 
    ஆகின்றாய்*  உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ?

    பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும்*  நாதனே! பரமா,*  தண் வேங்கடம் 
    மேகின்றாய்*  தண் துழாய் விரை நாறு கண்ணியனே.          


    கண்ணித் தண் அம் துழாய் முடிக்*  கமலத் தடம் பெருங் கண்ணனைப்,*  புகழ் 
    நண்ணி தென் குருகூர்ச்*  சடகோபன் மாறன் சொன்ன,* 

    எண்ணில் சோர்வு இல் அந்தாதி*  ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும்,* 
    பண்ணில் பாட வல்லார்*  அவர் கேசவன் தமரே. 


    செய்ய தாமரைக் கண்ணன் ஆய்*  உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர்,* 
    வையம் வானம் மனிசர் தெய்வம்*  மற்றும் மற்றும் மற்றும் முற்றும் ஆய்,*

    செய்யசூழ் சுடர் ஞானம் ஆய்*  வெளிப் பட்டு இவை படைத்தான்*  பின்னும் 
    மொய்கொள் சோதியோடு ஆயினான்*  ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே. (2)


    மூவர் ஆகிய மூர்த்தியை*  முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை,* 
    சாவம் உள்ளன நீக்குவானை*  தடங் கடல் கிடந்தான் தன்னை,* 

    தேவ தேவனை தென் இலங்கை*  எரி எழச் செற்ற வில்லியை,* 
    பாவ நாசனை பங்கயத்தடங் கண்ணனைப்*  பரவுமினோ.


    பரவி வானவர் ஏத்த நின்ற*  பரமனை பரஞ்சோதியை,* 
    குரவை கோத்த குழகனை*  மணி வண்ணனை குடக் கூத்தனை,* 

    அரவம் ஏறி அலை கடல் அமரும்*  துயில்கொண்ட அண்ணலை,* 
    இரவும் நன் பகலும் விடாது*  என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ. 


    வைம்மின் நும் மனத்து என்று*  யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை* 
    எம்மனோர்கள் உரைப்பது என்? அது நிற்க நாள்தொறும்,*  வானவர் 

    தம்மை ஆளும் அவனும்*  நான்முகனும் சடைமுடி அண்ணலும்,* 
    செம்மையால் அவன் பாத பங்கயம்*  சிந்தித்து ஏத்தித் திரிவரே.


    திரியும் காற்றோடு அகல் விசும்பு*  திணிந்த மண் கிடந்த கடல்,* 
    எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம்,*  மற்றும் மற்றும் முற்றும் ஆய்,*

    கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன்*  கண்ணன் விண்ணோர் இறை,* 
    சுரியும் பல் கருங் குஞ்சி*  எங்கள் சுடர் முடி அண்ணல் தோற்றமே. 


    தோற்றம் கேடு அவை இல்லவன் உடையான்*  அவன் ஒரு மூர்த்தியாய்,* 
    சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ்ப்*  புகநின்ற செங்கண்மால்,* 

    நாற்றம் தோற்றம் சுவை ஒலி*  உறல் ஆகி நின்ற,*  எம் வானவர் 
    ஏற்றையே அன்றி*  மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.    


    எழுமைக்கும் எனது ஆவிக்கு*  இன்அமுதத்தினை எனது ஆர் உயிர்,*
    கெழுமிய கதிர்ச் சோதியை*  மணிவண்ணனை குடக் கூத்தனை,* 

    விழுமிய அமரர் முனிவர் விழுங்கும்*  கன்னல் கனியினை,* 
    தொழுமின் தூய மனத்தர் ஆய்*  இறையும் நில்லா துயரங்களே.


    துயரமே தரு துன்ப இன்ப வினைகள் ஆய்*  அவை அல்லன் ஆய்,* 
    உயர நின்றது ஓர் சோதி ஆய்*  உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தன்னை,*

    அயர வாங்கும் நமன் தமர்க்கு*  அரு நஞ்சினை அச்சுதன் தன்னை,* 
    தயரதற்கு மகன் தன்னை அன்றி*  மற்று இலேன் தஞ்சமாகவே.


    தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு*  தானும் ஆய் அவை அல்லன் ஆய்,* 
    எஞ்சல் இல் அமரர் குலமுதல்*  மூவர் தம்முள்ளும் ஆதியை,* 

    அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள்!*  அவன் இவன் என்று கூழேன்மின்,* 
    நெஞ்சினால் நினைப்பான் எவன்*  அவன் ஆகும் நீள் கடல் வண்ணனே.  


    கடல்வண்ணன் கண்ணன்*  விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர் உயிர்* 
    படஅரவின் அணைக்கிடந்த*  பரஞ்சுடர் பண்டு நூற்றுவர்,* 

    அடவரும் படை மங்க*  ஐவர்கட்கு ஆகி வெம்சமத்து,*  அன்றுதேர் 
    கடவிய பெருமான்*  கனைகழல் காண்பது என்றுகொல் கண்களே?


    கண்கள் காண்டற்கு அரியன் ஆய்*  கருத்துக்கு நன்றும் எளியன் ஆய்,* 
    மண்கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள் செய்யும்*  வானவர் ஈசனை,* 

    பண்கொள் சோலை வழுதி நாடன்*  குருகைக்கோன் சடகோபன் சொல்,* 
    பண்கொள் ஆயிரத்து இப்பத்தால்*  பத்தர் ஆகக் கூடும் பயிலுமினே. (2)    


    தீர்ப்பாரை யாம் இனி*  எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்,*
    ஓர்ப்பால் இவ் ஒள் நுதல்*  உற்ற நல் நோய் இது தேறினோம்,* 

    போர்ப்பாகு தான் செய்து*  அன்று ஐவரை வெல்வித்த,*  மாயப்போர்த் 
    தேர்ப்பாகனார்க்கு*  இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே?


    திசைக்கின்றதே இவள் நோய்*  இது மிக்க பெருந் தெய்வம்,* 
    இசைப்பு இன்றி*  நீர் அணங்கு ஆடும் இளந் தெய்வம் அன்று இது,*

    திசைப்பு இன்றியே*  சங்கு சக்கரம் என்று இவள் கேட்க,*  நீர் 
    இசைக்கிற்றிராகில்*  நன்றே இல் பெறும் இது காண்மினே.  


    இது காண்மின் அன்னைமீர்!*  இக் கட்டுவிச்சி சொல் கொண்டு,*  நீர் 
    எதுவானும் செய்து*  அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்,* 

    மது வார் துழாய்முடி*  மாயப் பிரான் கழல் வாழ்த்தினால்,* 
    அதுவே இவள் உற்ற நோய்க்கும்*  அரு மருந்து ஆகுமே.


    மருந்து ஆகும் என்று அங்கு ஓர்*  மாய வலவை சொல் கொண்டு,*  நீர் 
    கருஞ் சோறும் மற்றைச் செஞ்சோறும்*  களன் இழைத்து என் பயன்?* 

    ஒருங்காகவே உலகு ஏழும்*  விழுங்கி உமிழ்ந்திட்ட,* 
    பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில்*  இவளைப் பெறுதிரே. 


    இவளைப் பெறும்பரிசு*  இவ் அணங்கு ஆடுதல் அன்று அந்தோ,* 
    குவளைத் தடங் கண்ணும்*  கோவைச் செவ்வாயும் பயந்தனள்,* 

    கவளக் கடாக் களிறு அட்ட பிரான்*  திருநாமத்தால்,* 
    தவளப் பொடிக்கொண்டு*  நீர்இட்டிடுமின் தணியுமே.     


    தணியும் பொழுது இல்லை*  நீர் அணங்கு ஆடுதிர் அன்னைமீர்,* 
    பிணியும் ஒழிகின்றது இல்லை*  பெருகும் இது அல்லால்,* 

    மணியின் அணிநிற மாயன்*  தமர் அடி நீறுகொண்டு* 
    அணிய முயலின்*  மற்று இல்லை கண்டீர் இவ் அணங்குக்கே.


    அணங்குக்கு அரு மருந்து என்று*  அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய்* 
    துணங்கை எறிந்து*  நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்,*

    உணங்கல் கெடக்*  கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்? 
    வணங்கீர்கள் மாயப் பிரான்*  தமர் வேதம் வல்லாரையே.


    வேதம் வல்லார்களைக் கொண்டு*  விண்ணோர் பெருமான் திருப்- 
    பாதம் பணிந்து,*  இவள் நோய்*  இது தீர்த்துக் கொள்ளாது போய்*

    ஏதம் பறைந்து அல்ல செய்து*  கள் ஊடு கலாய்த் தூய்,* 
    கீதம் முழவு இட்டு*  நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.  


    கீழ்மையினால் அங்கு ஓர்*  கீழ்மகன் இட்ட முழவின் கீழ்,* 
    நாழ்மை பல சொல்லி*  நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்,*

    ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம்*  இந் நோய்க்கும் ஈதே மருந்து,* 
    ஊழ்மையில் கண்ணபிரான்*  கழல் வாழ்த்துமின் உன்னித்தே.


    உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாஅள்*  அவனை அல்லால்,* 
    நும் இச்சை சொல்லி*  நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்,* 

    மன்னப்படும் மறைவாணனை*  வண் துவராபதி- 
    மன்னனை,*  ஏத்துமின் ஏத்துதலும்*  தொழுது ஆடுமே.   


    தொழுது ஆடி தூ மணி வண்ணனுக்கு*  ஆட்செய்து நோய் தீர்ந்த* 
    வழுவாத தொல்புகழ்  வண் குருகூர்ச் சடகோபன்,*  சொல்

    வழுவாத ஆயிரத்துள்*  இவை பத்து வெறிகளும்,* 
    தொழுது ஆடிப் பாடவல்லார்*  துக்க சீலம் இலர்களே.    


    கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்*  கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்* 
    கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்*  கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்*

    கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்*  கடல் ஞாலம் ஈசன் வந்து ஏறக்கொலோ?*
    கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்*  கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே?*


    கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும்*  கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்* 
    கற்கும் கல்விச் செய்வேனும் யானே என்னும்*  கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்* 

    கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்*  கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?*
    கற்கும் கல்வியீர்க்கு இவை என் சொல்லுகேன்*  கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே?*


    காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும்*  காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும்* 
    காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும்*  காண்கின்ற இக் காற்று எல்லாம் யானே என்னும்* 

    காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும்*  காண்கின்ற கடல்வண்ணன் ஏறக்கொலோ?*
    காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்,*  காண்கின்ற என் காரிகை செய்கின்றவே?* 


    செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்*  செய்வான் நின்றனகளும் யானே என்னும்* 
    செய்து முன் இறந்தவும் யானே என்னும்*  செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்*

    செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்*  செய்ய கமலக்கண்ணன் ஏறக்கொலோ?*
    செய்ய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்*  செய்ய கனி வாய் இள மான் திறத்தே?*


    திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்*  திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்* 
    திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்*  திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேனே என்னும்*

    திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்*  திறம்பாத கடல்வண்ணன் ஏறக்கொலோ?* 
    திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்*  திறம்பாது என் திருமகள் எய்தினவே?*


    இன வேய்மலை ஏந்தினேன் யானே என்னும்*  இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்* 
    இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும்*  இன ஆ நிரை காத்தேனும் யானே என்னும்*

    இன ஆயர் தலைவனும் யானே என்னும்*  இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?* 
    இன வேல் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்*  இன வேல் கண்ணி என் மகள் உற்றனவே?*  


    உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்*  உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்* 
    உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்*  உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்* 

    உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்*  உற்றார் இலி மாயன் வந்து ஏறக்கொலோ?* 
    உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்?*  உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே?* 


    உரைக்கின்ற முக்கண் பிரான் யானே என்னும்*  உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்* 
    உரைக்கின்ற அமரரும் யானே என்னும்*  உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்*

    உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்*  உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக்கொலோ?,
    உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?  உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே*.


    கொடிய வினை யாதும் இலனே என்னும்*  கொடிய வினை ஆவேனும் யானே என்னும்* 
    கொடிய வினை செய்வேனும் யானே என்னும்*  கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்*

    கொடியான் இலங்கை செற்றேனே என்னும்*  கொடிய புள் உடையவன் ஏறக்கொலோ?* 
    கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்*  கொடியேன் கொடி என் மகள் கோலங்களே?*   


    கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும்*  கோலம் இல் நரகமும் யானே என்னும்* 
    கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்*  கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்* 

    கோலம் கொள் தனிமுதல் யானே என்னும்*  கோலம் கொள் முகில்வண்ணன் ஏறக்கொலோ?
    கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்  கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே!*


    கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்*  குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை* 
    வாய்ந்த வழுதி வள நாடன்*  மன்னு- குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து* 

    ஆய்ந்த தமிழ் மாலை*  ஆயிரத்துள்- இவையும் ஓர் பத்தும் வல்லார்*  உலகில்- 
    ஏந்து பெரும் செல்வத்தராய்த்*  திருமால்- அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே*. (2)


    மாலுக்கு*  வையம் அளந்த மணாளற்கு,* 
    நீலக் கருநிற*  மேக நியாயற்கு,* 

    கோலச் செந்தாமரைக்*  கண்ணற்கு,*
    என் கொங்குஅலர்ஏலக் குழலி*  இழந்தது சங்கே.


    சங்கு வில் வாள் தண்டு*  சக்கரக் கையற்கு,* 
    செங்கனிவாய்ச்*  செய்ய தாமரைக் கண்ணற்கு,* 

    கொங்கு அலர் தண் அம் துழாய்*  முடியானுக்கு,*  என் 
    மங்கை இழந்தது*  மாமை நிறமே. 


    நிறம் கரியானுக்கு*  நீடு உலகு உண்ட,* 
    திறம் கிளர் வாய்ச்*  சிறுக் கள்வன் அவற்கு,* 

    கறங்கிய சக்கரக்*  கையவனுக்கு,*  என் 
    பிறங்கு இரும் கூந்தல்*  இழந்தது பீடே.


    பீடு உடை நான்முகனைப்*  படைத்தானுக்கு,* 
    மாடு உடை வையம் அளந்த*  மணாளற்கு,* 

    நாடு உடை மன்னர்க்குத்*  தூதுசெல் நம்பிக்கு,*  என் 
    பாடு உடை அல்குல்*  இழந்தது பண்பே.


    பண்பு உடை வேதம்*  பயந்த பரனுக்கு,* 
    மண் புரை வையம் இடந்த*  வராகற்கு,* 

    தெண் புனல் பள்ளி*  எம் தேவ பிரானுக்கு,*  என் 
    கண்புனை கோதை*  இழந்தது கற்பே.    


    கற்பகக் கா அன*  நல் பல தோளற்கு,* 
    பொன் சுடர்க் குன்று அன்ன*  பூந்தண் முடியற்கு,* 

    நல் பல தாமரை*  நாள் மலர்க் கையற்கு,*  என் 
    வில் புருவக்கொடி*  தோற்றது மெய்யே.  


    மெய் அமர் பல்கலன்*  நன்கு அணிந்தானுக்கு,* 
    பை அரவின் அணைப்*  பள்ளியினானுக்கு,* 

    கையொடு கால்செய்ய*  கண்ண பிரானுக்கு,*  என் 
    தையல் இழந்தது*  தன்னுடைச் சாயே.


    சாயக் குருந்தம் ஒசித்த*  தமியற்கு,* 
    மாயச் சகடம் உதைத்த*  மணாளற்கு,* 

    பேயைப் பிணம்படப்*  பால் உண் பிரானுக்கு,*  என் 
    வாசக் குழலி*  இழந்தது மாண்பே . 


    மாண்பு அமை கோலத்து*  எம் மாயக் குறளற்கு,* 
    சேண் சுடர்க் குன்று அன்ன*  செஞ்சுடர் மூர்த்திக்கு,* 

    காண் பெரும் தோற்றத்து*  எம் காகுத்த நம்பிக்கு,*  என் 
    பூண் புனை மென்முலை*  தோற்றது பொற்பே.       


    பொற்பு அமை நீள் முடிப்*  பூந்தண் துழாயற்கு,* 
    மல் பொரு தோள் உடை*  மாயப் பிரானுக்கு,* 

    நிற்பன பல் உருவாய்*  நிற்கும் மாயற்கு,*  என் 
    கற்பு உடையாட்டி*  இழந்தது கட்டே. 


    கட்டு எழில் சோலை*  நல் வேங்கடவாணனைக்,* 
    கட்டு எழில் தென் குருகூர்ச்*  சடகோபன் சொல்,* 

    கட்டு எழில் ஆயிரத்து*  இப்பத்தும் வல்லவர்,* 
    கட்டு எழில் வானவர்*  போகம் உண்பாரே.  


    பாமரு மூவுலகும் படைத்த*  பற்ப நாபாவோ,* 
    பாமரு மூவுலகும் அளந்த*  பற்ப பாதாவோ,*

    தாமரைக் கண்ணாவோ!*  தனியேன் தனிஆளாவோ,* 
    தாமரைக் கையாவோ!*  உன்னை என்றுகொல் சேர்வதுவே?  (2)


    என்றுகொல் சேர்வது அந்தோ*  அரன் நான்முகன் ஏத்தும்,*  செய்ய 
    நின் திருப்பாதத்தை*  யான்நிலம் நீர்எரி கால்,*  விண்உயிர்

    என்றுஇவை தாம்முதலா*  முற்றுமாய் நின்ற எந்தாய்யோ,*
    குன்றுஎடுத்து ஆநிரை மேய்த்து*  அவை காத்த எம்கூத்தாவோ!


    காத்த எம்கூத்தாவோ!*  மலைஏந்திக் கல்மாரி தன்னை,* 
    பூத்தண் துழாய்முடியாய்!*  புனை கொன்றையஞ் செஞ்சடையாய்,*

    வாய்த்த என் நான்முகனே!*  வந்துஎன் ஆர்உயிர் நீஆனால்,* 
    ஏத்துஅரும் கீர்த்தியினாய்!*  உன்னை எங்குத் தலைப்பெய்வனே?


    எங்குத் தலைப்பெய்வன் நான்?*  எழில் மூவுலகும் நீயே,* 
    அங்கு உயர் முக்கண்பிரான்*  பிரம பெருமான் அவன்நீ,*

    வெங்கதிர் வச்சிரக் கை*  இந்திரன் முதலாத் தெய்வம்நீ,*
    கொங்குஅலர் தண்அம் துழாய்முடி*  என்னுடைக் கோவலனே?   


    என்னுடைக் கோவலனே!*  என் பொல்லாக் கருமாணிக்கமே,* 
    உன்னுடை உந்தி மலர்*  உலகம் அவைமூன்றும் பரந்து,*

    உன்னுடைச் சோதிவெள்ளத்து அகம்பால்*  உன்னைக் கண்டுகொண்டிட்டு,* 
    என்னுடை ஆர்உயிரார்*  எங்ஙனேகொல் வந்து எய்துவரே? 


    வந்துஎய்து மாறுஅறியேன்*  மல்கு நீலச் சுடர்தழைப்ப,* 
    செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து*  ஒரு மாணிக்கம் சேர்வதுபோல்,*

    அந்தரமேல் செம்பட்டோடு*  அடி உந்திகை மார்புகண்வாய்,* 
    செஞ்சுடர்ச் சோதி விடஉறை*  என்திரு மார்பனையே. 


    என்திரு மார்பன் தன்னை*  என் மலைமகள் கூறன்தன்னை,* 
    என்றும் என்நாமகளை*  அகம்பால்கொண்ட நான்முகனை,*

    நின்ற சசிபதியை*  நிலம்கீண்டு எயில் மூன்றுஎரித்த,* 
    வென்று புலன்துரந்த*  விசும்புஆளியை காணேனோ!


    ஆளியைக் காண்பரியாய்*  அரிகாண் நரியாய்,*  அரக்கர் 
    ஊளைஇட்டு அன்று இலங்கைகடந்து*  பிலம்புக்குஒளிப்ப,*

    மீளியம் புள்ளைக்கடாய்*  விறல் மாலியைக் கொன்று,*  பின்னும் 
    ஆள்உயர் குன்றங்கள் செய்து*  அடர்த்தானையும் காண்டும்கொலோ?


    காண்டும்கொலோ நெஞ்சமே!*  கடிய வினையே முயலும்,* 
    ஆண்திறல் மீளிமொய்ம்பின்*  அரக்கன் குலத்தைத் தடிந்து,*

    மீண்டும் அவன் தம்பிக்கே*  விரி நீர்இலங்கைஅருளி,* 
    ஆண்டு தன் சோதிபுக்க*  அமரர் அரியேற்றினையே?  


    ஏற்றுஅரும் வைகுந்தத்தை*  அருளும் நமக்கு,*  ஆயர்குலத்து 
    ஈற்றுஇளம் பிள்ளைஒன்றாய்ப்புக்கு*  மாயங்களே இயற்றி,*

    கூற்றுஇயல் கஞ்சனைக் கொன்று*  ஐவர்க்காய் ஆக்கொடும்சேனைதடிந்து,* 
    ஆற்றல் மிக்கான் பெரிய*  பரஞ்சோதி புக்க அரியே


    புக்க அரிஉருஆய்*  அவுணன்உடல் கீண்டுஉகந்த,* 
    சக்கரச் செல்வன்தன்னைக்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன,*

    மிக்க ஓர்ஆயிரத்துள்*  இவைபத்தும் வல்லார் அவரைத்,* 
    தொக்கு பல்லாண்டுஇசைத்து*  கவரி செய்வர் ஏழையரே  (2)


    எல்லியும் காலையும்*  தன்னை நினைந்துஎழ* 
    நல்ல அருள்கள்*  நமக்கேதந்து அருள்செய்வான்*

    அல்லிஅம் தண்ணம்துழாய்*  முடிஅப்பன்ஊர்* 
    செல்வர்கள் வாழும்*  திருக்கடித் தானமே   (2)


    திருக்கடித் தானமும்*  என்னுடையச் சிந்தையும்* 
    ஒருக்கடுத்துஉள்ளே*  உறையும்பிரான் கண்டீர்*

    செருக்கடுத்துஅன்று*  திகைத்த அரக்கரை* 
    உருக்கெடவாளி*  பொழிந்த ஒருவனே. 


    ஒருவர் இருவர் ஓர்*  மூவர்என நின்று* 
    உருவுகரந்து*  உள்ளும்தோறும் தித்திப்பான்*

    திருஅமர் மார்வன்*  திருக்கடித்தானத்தை* 
    மருவிஉறைகின்ற*  மாயப்பிரானே.    


    மாயப்பிரான்*  எனவல்வினை மாய்ந்துஅற* 
    நேசத்தினால் நெஞ்சம்*  நாடு குடிகொண்டான்*

    தேசத்துஅமரர்*  திருக்கடித்தானத்தை* 
    வாசப்பொழில்மன்னு*  கோயில்கொண்டானே.       


    கோயில் கொண்டான்தன்*  திருக்கடித் தானத்தை* 
    கோயில்கொண்டான்*  அதனோடும் என்நெஞ்சகம்*;

    கோயில்கொள்*  தெய்வம்எல்லாம் தொழ*  வைகுந்தம் 
    கோயில்கொண்ட*  குடக்கூத்த அம்மானே. 


    கூத்தஅம்மான்*  கொடியேன்இடர் முற்றவும்* 
    மாய்த்தஅம்மான்*  மதுசூத அம்மான்உறை*

    பூத்தபொழில்தண்*  திருக்கடித் தானத்தை* 
    ஏத்தநில்லா*  குறிக்கொள்மின் இடரே.   


    கொண்டமின் இடர்கெட*  உள்ளத்து கோவிந்தன்* 
    மண்விண் முழுதும்*  அளந்தஒண்தாமரை*

    மண்ணவர் தாம்தொழ*  வானவர் தாம்வந்து* 
    நண்ணு திருக்கடித்தான நகரே


    தான நகர்கள்*  தலைச்சிறந்து எங்கெங்கும்* 
    வான்இந் நிலம்கடல்*  முற்றும் எம்மாயற்கே*

    ஆனவிடத்தும் என் நெஞ்சும்*  திருக்கடித் 
    தான நகரும்*  தனதாயப் பதியே.


    தாயப்பதிகள்*  தலைச்சிறந்து எங்கெங்கும்* 
    மாயத்தினால் மன்னி*  வீற்றிருந்தான்உறை*

    தேசத்துஅமரர்*  திருக்கடித்தானத்துள்* 
    ஆயர்க்குஅதிபதி*  அற்புதன்தானே. 


    அற்புதன் நாராயணன்*  அரி வாமனன்* 
    நிற்பது மேவி*  இருப்பது என்நெஞ்சகம்*

    நல்புகழ் வேதியர்*  நான்மறை நின்றுஅதிர்* 
    கற்பகச் சோலைத்*  திருக்கடித் தானமே.  (2)


    சோலைத் திருக்கடித்தானத்து*  உறைதிரு 
    மாலை*  மதிள்குருகூர்ச் சடகோபன் சொல்*

    பாலோடு அமுதுஅன்ன*  ஆயிரத்து இப்பத்தும்* 
    மேலை வைகுந்தத்து*  இருத்தும் வியந்தே.  (2)


    உருகுமால் நெஞ்சம்*  உயிரின் பரமன்றி* 
    பெருகுமால் வேட்கையும்*  என்செய்கேன் தொண்டனேன்*

    தெருவுஎல்லாம் காவிகமழ்*  திருக்காட்கரை*  
    மருவிய மாயன்தன்*  மாயம் நினைதொறே.   (2)


    நினைதொறும் சொல்லும்தொறும்*  நெஞ்சு இடிந்துஉகும்* 
    வினைகொள்சீர் பாடிலும்*  வேம்எனதுஆர்உயிர்*

    சுனைகொள் பூஞ்சோலைத்*  தென்காட்கரைஎன்அப்பா* 
    நினைகிலேன் நான்உனக்கு*  ஆட்செய்யும் நீர்மையே.   


    நீர்மையால் நெஞ்சம்*  வஞ்சித்துப் புகுந்து*  என்னை 
    ஈர்மைசெய்து*  என்உயிர்ஆய் என்உயிர் உண்டான்* 

    சீர்மல்குசோலைத்*  தென்காட்கரைஎன்அப்பன்* 
    கார்முகில் வண்ணன்தன்*  கள்வம் அறிகிலேன்.


    அறிகிலேன் தன்னுள்*  அனைத்துஉலகும் நிற்க* 
    நெறிமையால் தானும்*  அவற்றுள் நிற்கும் பிரான்*

    வெறிகமழ்சோலைத்*  தென்காட்கரை என்அப்பன்* 
    சிறியவென்னாயிருண்ட திருஅருளே.


    திருவருள் செய்பவன்போல*  என்னுள்புகுந்து* 
    உருவமும் ஆருயிரும்*  உடனே உண்டான்*

    திருவளர்சோலைத்*  தென்காட்கரைஎன்அப்பன்* 
    கருவளர்மேனி*  என்கண்ணன் கள்வங்களே.


    என்கண்ணன் கள்வம்*  எனக்குச் செம்மாய்நிற்கும்* 
    அம்கண்ணன் உண்ட*  என்ஆர்உயிர்க்கோதுஇது*

    புன்கண்மை எய்தி*  புலம்பி இராப்பகல்* 
    என்கண்ணன் என்று*  அவன்காட்கரைஏத்துமே 


    காட்கரைஏத்தும்*  அதனுள் கண்ணாஎன்னும்* 
    வேட்கை நோய்கூர*  நினைந்து கரைந்துகும்*

    ஆட்கொள் வான்ஒத்து*  என்னுயிருண்ட மாயனால்* 
    கோள்குறைபட்டது*  என்னாருயிர் கோள்உண்டே.


    கோள்உண்டான் அன்றிவந்து*  என்உயிர் தான்உண்டான்* 
    நாளும்நாள்வந்து*  என்னை முற்றவும் தான்உண்டான்*

    காளநீர்மேகத்*  தென்காட்கரை என்அப்பற்கு* 
    ஆள்அன்றேபட்டது*  என்ஆர்உயிர் பட்டதே. 


    ஆருயிர் பட்டது*  எனதுஉயிர் பட்டது* 
    பேர்இதழ்த் தாமரைக்கண்*  கனிவாயதுஓர்*

    கார்எழில் மேகத்*  தென்காட்கரை கோயில்கொள், 
    சீர்எழில் நால்தடம்தோள்*  தெய்வ வாரிக்கே.


    வாரிக்கொண்டு*  உன்னைவிழுங்குவன் காணில்' என்று* 
    ஆர்வுஉற்ற என்னை ஒழிய*  என்னில் முன்னம்

    பாரித்துத்*  தான்என்னை*  முற்றப் பருகினான்* 
    கார்ஒக்கும்*  காட்கரைஅப்பன் கடியனே.  


    கடியனாய்க் கஞ்சனைக்*  கொன்றபிரான் தன்னை* 
    கொடிமதிள் தென்குருகூர்ச்*  சடகோபன்சொல்*

    வடிவுஅமைஆயிரத்து*  இப்பத்தினால் சன்மம்- 
    முடிவுஎய்தி*  நாசம்கண்டீர்கள் எம்கானலே   (2)


    அருள்பெறுவார் அடியார் தம்*  அடியனேற்கு*  ஆழியான்- 
    அருள்தருவான் அமைகின்றான்*  அதுநமது விதிவகையே*

    இருள்தருமா ஞாலத்துள்*  இனிப்பிறவி யான்வேண்டேன்* 
    மருள்ஒழி நீமடநெஞ்சே!*  வாட்டாற்றான் அடிவணங்கே.   (2)


    வாட்டாற்றான் அடிவணங்கி*  மாஞாலப் பிறப்புஅறுப்பான்* 
    கேட்டாயே மடநெஞ்சே!*  கேசவன் எம் பெருமானைப்*

    பாட்டுஆய பலபாடி*  பழவினைகள் பற்றுஅறுத்து* 
    நாட்டாரோடு இயல்வுஒழிந்து*  நாரணனை நண்ணினமே.


    நண்ணினம் நாராயணனை*  நாமங்கள் பலசொல்லி* 
    மண்உலகில் வளம்மிக்க*  வாட்டாற்றான் வந்துஇன்று*

    விண்உலகம் தருவானாய்*  விரைகின்றான் விதிவகையே* 
    எண்ணின வாறுகா*  இக்கருமங்கள் என்நெஞ்சே!


    என்நெஞ்சத்து உள்இருந்து இங்கு*  இரும்தமிழ்நூல்இவைமொழிந்து* 
    வல்நெஞ்சத்து இரணியனை*  மார்வு இடந்த வாட்டாற்றான்*

    மன்னஞ்ச பாரதத்துப்*  பாண்டவர்க்காப் படை தொட்டான்* 
    நல்நெஞ்சே! நம்பெருமான்*  நமக்கு அருள்தான் செய்வானே.


    வான்ஏற வழிதந்த*  வாட்டாற்றான் பணிவகையே* 
    நான்ஏறப் பெறுகின்றேன்*  நரகத்தை நகுநெஞ்சே*

    தேன்ஏறு மலர்த்துளவம்*  திகழ்பாதன்*  செழும்பறவை- 
    தான்ஏறித் திரிவான*  தாள்இணை என்தலைமேலே 


    தலைமேல தாள்இணைகள்*  தாமரைக்கண் என்அம்மான்* 
    நிலைபேரான் எனநெஞ்சத்து*  எப்பொழுதும் எம்பெருமான்*

    மலைமாடத்து அரவுஅணைமேல்*  வாட்டாற்றான் மதம்மிக்க* 
    கொலையானை மருப்புஒசித்தான்*  குரைகழல்கள் குறுகினமே. 


    குரைகழல்கள் குறுகினம்*  நம் கோவிந்தன் குடிகொண்டான்* 
    திரைகுழுவு கடல்புடைசூழ்*  தென்நாட்டுத் திலதமன்ன*

    வரைகுழுவு மணிமாட*  வாட்டாற்றான் மலர்அடிமேல்* 
    விரைகுழுவு நறும்துளவம்*  மெய்ந்நின்று கமழுமே.


    மெய்ந்நின்று கமழ்துளவ*  விரைஏறு திருமுடியன்* 
    கைந்நின்ற சக்கரத்தன்*  கருதும்இடம் பொருதுபுனல்*

    மைந்நின்ற வரைபோலும்*  திருஉருவ வாட்டாற்றாற்கு* 
    எந்நன்றி செய்தேனா*  என்நெஞ்சில் திகழ்வதுவே? 


    திகழ்கின்ற திருமார்பில்*  திருமங்கை தன்னோடும்* 
    திகழ்கின்ற திருமாலார்*  சேர்விடம்தண் வாட்டாறு*

    புகழ்நின்ற புள்ஊர்தி*  போர்அரக்கர் குலம்கெடுத்தான்* 
    இகழ்வுஇன்றி என்நெஞ்சத்து*  எப்பொழுதும் பிரியானே. 


    பிரியாதுஆட் செய்என்று*  பிறப்புஅறுத்து ஆள் அறக்கொண்டான்* 
    அரியாகி இரணியனை*  ஆகம்கீண்டான் அன்று*

    பெரியார்க்கு ஆட்பட்டக்கால்*  பெறாதபயன் பெறுமாறு* 
    வரிவாள் வாய்அரவுஅணைமேல்*  வாட்டாற்றான் காட்டினனே.


    காட்டித்தன் கனைகழல்கள்*  கடுநரகம் புகல்ஒழித்த* 
    வாட்டாற்று எம்பெருமானை*  வளங்குருகூர்ச் சடகோபன்*

    பாட்டாய தமிழ்மாலை*  ஆயிரத்துள் இப்பத்தும்- 
    கேட்டு ஆரார் வானவர்கள்*  செவிக்குஇனிய செஞ்சொல்லே.   (2)