- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
(திறம்பாமல்.) கெடுதலொன்றும் வாராதபடி நிலவுலகத்தைக் காப்பவன் எம்பெருமானே; இந்திரன் பண்டு பசிக்கோபத்தினால் ஏழுநாள் இடைவிடாது மழை பெய்வித்தபோது “கொடியேறு செந்தாமரைக் கைவிரல்கள் கோலமுமழிந்தில வாடிற்றில், வடிவேலு திருவுகிர் நொந்துமில” என்னும்படியே அநாயாமையாகக் கோவர்த்தனமலையைக் கொற்றக்குடையாகத் தாங்கி நின்றவனும் எம்பெருமானே. தேவசுரயுத்தம் நடைபெறும்போதெல்லாம் அசுரர்களை மாய்ப்பவனும் எம்பெருமானே; **• = க்ருஷ்ணாச்ரயா: க்ருஷ்ணபவா: க்ருஷ்ணநாதாச் ச பாண்டவா:* என்னும்படி பஞ்சபாண்டவர்களை ரக்ஷித்தருளினவனும் எம்பெருமானே; *மந்தரம் நாட்டி அன்று மதுரக் கொழுஞ் சாறுகொண்ட சுந்தரத் தோளுடையானும் எம்பெருமானே; உண்மை இங்ஙனமிருக்க, அக்காரியங்களெல்லாம் நானே செய்தேனென்கிறாள் இப்பராங்குச நாயகி; இங்ஙனேசொல்லுவது கடல் வண்ணன் வந்து இவளிடத்து ஆவேசித்ததனாலே போலும். ‘கேட்டல்லது கால்வாங்கோம்’ என்றிருக்கிற உங்களுக்கு நான் எத்தைச் சொல்லுவது? “ஆழங்காலிலே யிழிந்தார்படியைக் கரையிலே நின்றாராலே சொல்லப்போமோ?” என்பது நம்பிள்ளையீடு.
English Translation
My daughter says, "Unfailingly I rule over the Earth! Then showing my might, unfailingly, I lifted the mountain, killed the Asuras, and protected the five! The ocean too was churned by me!". Has the ocean-hued Lord taken her? O Severe people of the world, what can I say.?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்