- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
எம்பெருமானுடைய திருநாமங்களை இப்பெண்பிள்ளை செவிப்படச் சொல்லுவதே; இந்நோய்க்குப் பரிஹாரமென்கிறாள். யுக்தாயுக்த நிரூபணம் பண்ணாமல் கண்டபடியே சொல்லுகிறவளுக்கு அலவையென்று பெயர்; இங்கே கட்டுவிச்சியைக் குறிக்கின்ற சொல் இது. பரிஹாரமுறைமை சொல்லவந்து தோன்றினபடியே பிதற்றாநின்ற இக்கட்டுவிச்சியின் சொல்லைநம்பி நீங்கள் க்ஷுத்ரதெய்வங்கள் வந்து ஸந்நிதிபண்ணுமிடமான நாற்சந்தி முதலானவற்றிலே செஞ்சோறு கருஞ்சோறுகளை யிடுவதனால் என்ன பயனுண்டு? பின்னை என்செய்யவேணுமென்னில்: ஆச்ரிதர் அநாச்ரிதர் என்கிற வாசிபாராமல் ஸகலலோகங்களையும் பிரளயம் விழுங்காதபடி தான் விழுங்கி ரக்ஷித்துஇ ப்ரளயம் கழிந்தவாறே வெளிப்படுத்தின பரதேவதையின் திருநாமம் சொல்லவல்லீர்களாகில்; இவள் உய்யப் பெறலாம்: வேறுவகையான காரியங்கள் செய்வது இவளை இழப்பதற்கே உறுப்பாமென்றவாறு
English Translation
Listening to some wierd hag's worlds, you throw black and red cooked-rice balls on the after, what use? Recite the names of the Lord who in a trice swallowed and made the worlds. You will surely get your daughter back
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்