விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மருந்து ஆகும் என்று அங்கு ஓர்*  மாய வலவை சொல் கொண்டு,*  நீர் 
    கருஞ் சோறும் மற்றைச் செஞ்சோறும்*  களன் இழைத்து என் பயன்?* 
    ஒருங்காகவே உலகு ஏழும்*  விழுங்கி உமிழ்ந்திட்ட,* 
    பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில்*  இவளைப் பெறுதிரே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மருந்து ஆகும் என்று - நோய்க்குப் பரிஹாரமாகுமென்றெண்ணி
ஓர் மாயம் அலவை சொல் கொண்டு - வஞ்சகச் செய்கைகளையுடையளாயும் தோன்றினபடியே சொல்லுபவளாயமிருக்கின்ற ஒருத்தியின் பேச்சைக்கொண்டு
நீர் - நீங்கள்
கரு சோறும் - கருஞ்சோற்றையும்
மற்றை செம்சோறும் - மற்றுள்ள செஞ்சோற்றையும்

விளக்க உரை

எம்பெருமானுடைய திருநாமங்களை இப்பெண்பிள்ளை செவிப்படச் சொல்லுவதே; இந்நோய்க்குப் பரிஹாரமென்கிறாள். யுக்தாயுக்த நிரூபணம் பண்ணாமல் கண்டபடியே சொல்லுகிறவளுக்கு அலவையென்று பெயர்; இங்கே கட்டுவிச்சியைக் குறிக்கின்ற சொல் இது. பரிஹாரமுறைமை சொல்லவந்து தோன்றினபடியே பிதற்றாநின்ற இக்கட்டுவிச்சியின் சொல்லைநம்பி நீங்கள் க்ஷுத்ரதெய்வங்கள் வந்து ஸந்நிதிபண்ணுமிடமான நாற்சந்தி முதலானவற்றிலே செஞ்சோறு கருஞ்சோறுகளை யிடுவதனால் என்ன பயனுண்டு? பின்னை என்செய்யவேணுமென்னில்: ஆச்ரிதர் அநாச்ரிதர் என்கிற வாசிபாராமல் ஸகலலோகங்களையும் பிரளயம் விழுங்காதபடி தான் விழுங்கி ரக்ஷித்துஇ ப்ரளயம் கழிந்தவாறே வெளிப்படுத்தின பரதேவதையின் திருநாமம் சொல்லவல்லீர்களாகில்; இவள் உய்யப் பெறலாம்: வேறுவகையான காரியங்கள் செய்வது இவளை இழப்பதற்கே உறுப்பாமென்றவாறு

English Translation

Listening to some wierd hag's worlds, you throw black and red cooked-rice balls on the after, what use? Recite the names of the Lord who in a trice swallowed and made the worlds. You will surely get your daughter back

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்