பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
தவள இளம்பிறை துள்ளும்முந்நீர்* தண்மலர்த் தென்றலோடு அன்றில்ஒன்றி-
துவள,* என் நெஞ்சகம் சோர ஈரும்* சூழ்பனி நாள் துயிலாது இருப்பேன்,*
இவளும் ஓர் பெண்கொடி என்று இரங்கார்* என்நலம் ஐந்தும்முன் கொண்டுபோன*
குவளை மலர்நிற வண்ணர்மன்னு* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (2)
தாதுஅவிழ் மல்லிகை புல்லிவந்த* தண்மதியின் இளவாடை இன்னே,*
ஊதை திரிதந்து உழறிஉண்ண* ஓர்இரவும் உறங்கேன், உறங்கும்*
பேதையர் பேதைமையால் இருந்து* பேசிலும் பேசுக பெய்வளையார்,*
கோதை நறுமலர் மங்கைமார்வன்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்
காலையும் மாலை ஒத்துண்டு* கங்குல் நாழிகை ஊழியில் நீண்டுஉலாவும்,*
போல்வதுஓர் தன்மை புகுந்துநிற்கும்* பொங்குஅழலே ஒக்கும் வாடை சொல்லில்*
மாலவன் மாமணி வண்ணன் மாயம்* மற்றும் உள அவை வந்திடாமுன்,*
கோலமயில் பயிலும் புறவின்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.
கருமணி பூண்டு வெண்நாகுஅணைந்து* கார்இமில் ஏற்றுஅணர் தாழ்ந்துஉலாவும்,*
ஒருமணி ஓசை என் உள்ளம் தள்ள* ஓர் இரவும் உறங்காது இருப்பேன்,*
பெருமணி வானவர் உச்சிவைத்த* பேர்அருளாளன் பெருமைபேசி,*
குருமணி நீர்கொழிக்கும் புறவின்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.
திண்திமில் ஏற்றின் மணியும்* ஆயன் தீம்குழல் ஒசையும் தென்றலோடு,*
கொண்டதுஓர் மாலையும் அந்தி ஈன்ற* கோல இளம்பிறையோடு கூடி,*
பண்டைய அல்ல இவை நமக்கு* பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்,*
கொண்டல் மணிநிற வண்ணர் மன்னு* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.
எல்லியும் நன்பகலும் இருந்தே* ஏசிலும் ஏசுக ஏந்திழையார்,*
நல்லர் அவர் திறம் நாம்அறியோம்,* நாண்மடம் அச்சம் நமக்குஇங்குஇல்லை*
வல்லன சொல்லி மகிழ்வரேலும்* மாமணி வண்ணரை நாம்மறவோம்,*
கொல்லை வளர் இளமுல்லை புல்கு* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.
செங்கண் நெடிய கரியமேனித்* தேவர் ஒருவர் இங்கே புகுந்து,* என்-
அங்கம் மெலிய வளைகழல* ஆதுகொலோ? என்று சொன்னபின்னை,*
ஐங்கணை வில்லிதன் ஆண்மை என்னோடு* ஆடும் அதனை அறியமாட்டேன்,*
கொங்குஅலர் தண்பணை சூழ்புறவின்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.
கேவலம் அன்று கடலின் ஓசை* கேள்மின்கள் ஆயன்கை ஆம்பல்வந்து,* என்-
ஆவி அளவும் அணைந்து நிற்கும்* அன்றியும் ஐந்து கணை தெரிந்திட்டு,*
ஏவலம் காட்டி இவன்ஒருவன்* இப்படியே புகுந்து எய்திடாமுன்,*
கோவலர் கூத்தன் குறிப்புஅறிந்து* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.
சோத்துஎன நின்று தொழ இரங்கான்* தொல்நலம் கொண்டுஎனக்கு இன்றுதாறும்*
போர்ப்பதுஓர் பொன்படம் தந்துபோனான்* போயின ஊர்அறியேன்,* என்கொங்கை-
மூத்திடுகின்றன* மற்றுஅவன் தன் மொய்அகலம் அணை யாதுவாளா,*
கூத்தன் இமையவர்கோன் விரும்பும்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். (2)
செற்றவன் தென்இலங்கை மலங்க* தேவர்பிரான் திருமாமகளைப்,*
பெற்றும் என் நெஞ்சகம் கோயில்கொண்ட* பேர்அருளாளன் பெருமைபேசக்-
கற்றவன்* காமரு சீர்க் கலியன்* கண்அகத்தும் மனத்தும் அகலாக்--
கொற்றவன்,* முற்று உலகுஆளி நின்ற* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். (2)
இன்னுயிர்சேவலும் நீரும் கூவிக்கொண்டு* இங்கு எத்தனை*
என்னுயிர் நோவ மிழற்றேல்மின்* குயில் பேடைகாள்*
என்னுயிர்க் கண்ணபிரானை* நீர் வரக்கூவுகிலீர்*
என்னுயிர் கூவிக்கொடுப்பார்க்கும்* இத்தனை வேண்டுமோ? (2)
இத்தனை வேண்டுவதுஅன்றுஅந்தோ!* அன்றில் பேடைகாள்*
எத்தனை நீரும் நும்சேவலும்* கரைந்துஏங்குதிர்*
வித்தகன் கோவிந்தன்* மெய்யன்அல்லன் ஒருவர்க்கும்*
அத்தனைஆம் இனி* என்உயிர் அவன்கையதே.
அவன்கையதே எனதுஆர்உயிர்* அன்றில் பேடைகாள்*
எவன்சொல்லி நீர்குடைந்துஆடுதிர்* புடைசூழவே*
தவம்செய்தில்லா* வினையாட்டியேன் உயிர் இங்குஉண்டோ*
எவன்சொல்லி நிற்றும்* நும்ஏங்கு கூக்குரல் கேட்டுமே.
கூக்குரல்கேட்டும்* நம்கண்ணன் மாயன் வெளிப்படான்*
மேல்கிளை கொள்ளேல்மின்* நீரும் சேவலும் கோழிகாள்*
வாக்கும்மனமும்* கருமமும் நமக்குஆங்கதே*
ஆக்கையும் ஆவியும்* அந்தரம் நின்றுஉழலுமே
அந்தரம் நின்றுஉழல்கின்ற* யானுடைப் பூவைகாள்*
நும்திறத்துஏதும் இடைஇல்லை* குழறேல்மினோ*
இந்திரஞாலங்கள் காட்டி* இவ்ஏழ்உலகும் கொண்ட*
நம் திருமார்பன்* நம்ஆவி உண்ண நன்குஎண்ணினான்.
நன்குஎண்ணி நான்வளர்த்த* சிறுகிளிப்பைதலே*
இன்குரல் நீ மிழற்றேல்* என்ஆர்உயிர்க் காகுத்தன்*
நின்செய்ய வாய்ஒக்கும் வாயன்* கண்ணன்கை காலினன்*
நின்பசும்சாம நிறத்தன்* கூட்டுண்டு நீங்கினான்.
கூட்டுண்டு நீங்கிய* கோலத்தாமரைக் கண்செவ்வாய்*
வாட்டம்இல்என் கருமாணிக்கம்* கண்ணன் மாயன்போல்*
கோட்டிய வில்லொடு* மின்னும் மேகக்குழாங்கள்காள்*
காட்டேல்மின் நும்உரு* என்உயிர்க்கு அதுகாலனே.
உயிர்க்குஅது காலன்என்று* உம்மை யான்இரந்தேற்குநீர்*
குயில் பைதல்காள்* கண்ணன் நாமமே குழறிக்கொன்றீர்*
தயிர்ப்பழஞ்சோற்றொடு* பால்அடிசிலும் தந்து* சொல்
பயிற்றிய நல்வளம்ஊட்டினீர்* பண்புஉடையீரே!
பண்புடை வண்டொடு தும்பிகாள்* பண்மிழற்றேல்மின்*
புண்புரை வேல்கொடு* குத்தால்ஒக்கும் நும்இன்குரல்
தண்பெருநீர்த் தடம்தாமரை* மலர்ந்தால்ஒக்கும்
கண்பெரும்கண்ணன்* நம்ஆவிஉண்டுஎழ நண்ணினான்
எழநண்ணி நாமும்* நம்வானநாடனோடு ஒன்றினோம்*
பழன நல்நாரைக் குழாங்கள்காள்* பயின்றுஎன்இனி*
இழைநல்லஆக்கையும்* பையவே புயக்குஅற்றது*
தழைநல்ல இன்பம் தலைப்பெய்து* எங்கும் தழைக்கவே.
இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த* பல்ஊழிக்குத்*
தன்புகழ்ஏத்தத்* தனக்குஅருள் செய்தமாயனைத்*
தென்குருகூர்ச் சடகோபன்* சொல்ஆயிரத்துள் இவை*
ஒன்பதோடு ஒன்றுக்கும்* மூவுலகும் உருகுமே (2)