2 எண்ணிக்கை பாடல் பாட
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்* பெருந் துயர் இடும்பையில் பிறந்து*
கூடினேன் கூடி இளையவர்தம்மோடு* அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்* உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)
ஆவியே! அமுதே! என நினைந்து உருகி* அவர் அவர் பணை முலை துணையாப்*
பாவியேன் உணராது எத்தனை பகலும்* பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்*
தூவி சேர் அன்னம் துணையொடு புணரும்* சூழ் புனல் குடந்தையே தொழுது*
என் நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்* எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்*
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி* அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்*
வம்பு உலாம் சோலை மா மதிள்* தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி*
நம்பிகாள்! உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)
குலம் தரும் செல்வம் தந்திடும்* அடியார் படு துயர் ஆயின எல்லாம்*
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்* அருளொடு பெரு நிலம் அளிக்கும்*
வலம் தரும் மற்றும் தந்திடும்* பெற்ற தாயினும் ஆயின செய்யும்*
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)
மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர்* மங்கையார் வாள் கலிகன்றி*
செஞ்சொலால் எடுத்த தெய்வ நல் மாலை* இவை கொண்டு சிக்கென தொண்டீர்!*
துஞ்சும்போது அழைமின் துயர் வரில் நினைமின்* துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம்*
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு* நாராயணா என்னும் நாமம் (2)
வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட* வரி சிலை வளைவித்து*
அன்று ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற* இருந்த நல் இமயத்துள்*
ஆலி மா முகில் அதிர்தர அரு வரை* அகடு உற முகடு ஏறி*
பீலி மா மயில் நடம் செயும் தடஞ் சுனைப்* பிரிதி சென்று அடை நெஞ்சே. (2)
கரிய மா முகில் படலங்கள் கிடந்து* அவை முழங்கிட*
களிறு என்று பெரிய மாசுணம் வரை எனப் பெயர்தரு* பிரிதி எம் பெருமானை*
வரி கொள் வண்டு அறை பைம் பொழில் மங்கையர்* கலியனது ஒலி மாலை*
அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு* அரு வினை அடையாவே* (2)
முற்ற மூத்து கோல் துணையா* முன் அடி நோக்கி வளைந்து*
இற்ற கால் போல் தள்ளி மெள்ள* இருந்து அங்கு இளையாமுன்*
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான்* வதரி வணங்குதுமே.
வண்டு தண் தேன் உண்டு வாழும்* வதரி நெடு மாலைக்*
கண்டல் வேலி மங்கை வேந்தன்* கலியன் ஒலி மாலை*
கொண்டு தொண்டர் பாடி ஆடக்* கூடிடில் நீள் விசும்பில்*
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு* ஓர் ஆட்சி அறியோமே.
ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து* அன்று இணை அடி இமையவர் வணங்க*
தானவன் ஆகம் தரணியில் புரளத்* தடஞ் சிலை குனித்த என் தலைவன்*
தேன் அமர் சோலைக் கற்பகம் பயந்த* தெய்வ நல் நறு மலர் கொணர்ந்து*
வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே. (2)
வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானை*
கருங் கடல் முந்நீர் வண்ணனை எண்ணி* கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்*
வரம்செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள்* வானவர் உலகு உடன் மருவி*
இருங் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ்* இமையவர் ஆகுவர் தாமே. (2)
ஏதம் வந்து அணுகாவண்ணம் நாம் எண்ணி* எழுமினோ தொழுதும் என்று*
இமையோர் நாதன் வந்து இறைஞ்சும்* நைமிசாரணியத்து* எந்தையைச் சிந்தையுள் வைத்து*
காதலே மிகுத்த கலியன் வாய் ஒலிசெய்* மாலைதான் கற்று வல்லார்கள்*
ஓத நீர் வையம் ஆண்டு வெண் குடைக் கீழ்* உம்பரும் ஆகுவர் தாமே. (2)
அம் கண் ஞாலம் அஞ்ச* அங்கு ஓர் ஆள் அரி ஆய்*
அவுணன் பொங்க ஆகம் வள் உகிரால்* போழ்ந்த புனிதன் இடம்*
பைங் கண் ஆனைக் கொம்பு கொண்டு* பத்திமையால்*
அடிக்கீழ் செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும்* சிங்கவேழ்குன்றமே. (2)
செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும்* சிஙக்வேழ்குன்று உடைய*
எங்கள் ஈசன் எம் பிரானை* இருந் தமிழ் நூல்புலவன்*
மங்கை ஆளன் மன்னு தொல் சீர்* வண்டு அரை தார்க் கலியன்*
செங்கையாளன் செஞ்சொல் மாலை* வல்லவர் தீது இலரே. (2)
கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த* கோவலன் எம் பிரான்
சங்கு தங்கு தடங் கடல்* துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்*
பொங்கு புள்ளினை வாய் பிளந்த* புராணர் தம் இடம்*
பொங்கு நீர் செங் கயல் திளைக்கும் சுனைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே!
பள்ளி ஆவது பாற்கடல் அரங்கம்* இரங்க வன் பேய் முலை*
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை* பிரான் அவன் பெருகும் இடம்*
வெள்ளியான் கரியான்* மணி நிற வண்ணன் என்று எண்ணி*
நாள்தொறும் தெள்ளியார் வணங்கும் மலைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே! (2)
பேசும் இன் திருநாமம் எட்டு எழுத்தும்* சொலி நின்று பின்னரும்*
பேசுவார்தமை உய்ய வாங்கி* பிறப்பு அறுக்கும் பிரான் இடம்*
வாச மா மலர் நாறு வார் பொழில்* சூழ் தரும் உலகுக்கு எலாம்*
தேசமாய்த் திகழும் மலைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே! (2)
செங் கயல் திளைக்கும் சுனைத்* திருவேங்கடத்து உறை செல்வனை*
மங்கையர் தலைவன் கலிகன்றி* வண் தமிழ்ச் செஞ்சொல் மாலைகள்*
சங்கை இன்றித் தரித்து உரைக்கவல்லார்கள்* தஞ்சமதாகவே*
வங்க மா கடல் வையம் காவலர் ஆகி* வான்உலகு ஆள்வரே!
தாயே தந்தை என்றும்* தாரமே கிளை மக்கள் என்றும்*
நோயே பட்டொழிந்தேன்* நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்*
வேய் ஏய் பூம் பொழில் சூழ்* விரை ஆர் திருவேங்கடவா!*
நாயேன் வந்து அடைந்தேன்* நல்கி ஆள் என்னைக் கொண்டருளே.
கண் ஆய் ஏழ் உலகுக்கு உயிர் ஆய* எம் கார் வண்ணனை*
விண்ணோர் தாம் பரவும்* பொழில் வேங்கட வேதியனை*
திண் ஆர் மாடங்கள் சூழ்* திரு மங்கையர்கோன் கலியன்*
பண் ஆர் பாடல் பத்தும்* பயில்வார்க்கு இல்லை பாவங்களே. (2)
கண் ஆர் கடல் சூழ்* இலங்கைக்கு இறைவன்தன்*
திண் ஆகம் பிளக்கச்* சரம் செல உய்த்தாய்!*
விண்ணோர் தொழும்* வேங்கட மா மலை மேய*
அண்ணா அடியேன்* இடரைக் களையாயே.
காசை ஆடை மூடி ஓடிக்* காதல் செய் தானவன் ஊர்*
நாசம் ஆக நம்ப வல்ல* நம்பி நம் பெருமான்*
வேயின் அன்ன தோள் மடவார்* வெண்ணெய் உண்டான் இவன் என்று*
ஏச நின்ற எம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே* (2)
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த* எவ்வுள் கிடந்தானை*
வண்டு பாடும் பைம் புறவின்* மங்கையர் கோன் கலியன்,
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை* ஈர் ஐந்தும் வல்லார்*
அண்டம் ஆள்வது ஆணை* அன்றேல் ஆள்வர் அமர் உலகே* (2)
வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும்* வேழமும் பாகனும் வீழச்*
செற்றவன் தன்னை புரம் எரி செய்த* சிவன் உறு துயர் களை தேவை*
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு* பார்த்தன்-தன் தேர்முன் நின்றானை*
சிற்றவை பணியால் முடி துறந்தானை* திருவல்லிக்கேணிக் கண்டேனே* (2)
வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை* விழுமிய முனிவரர் விழுங்கும்*
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை* குவலயத்தோர் தொழுதுஏத்தும்*
ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை* ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும்*
மாட மா மயிலைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே.(2)
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்* வாயில் ஓர் ஆயிரம் நாமம்*
ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு* ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி*
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப* பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்*
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை* திருவல்லிக்கேணிக் கண்டேனே. (2)
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும்* மாட மாளிகையும் மண்டபமும்*
தென்னன் தொண்டையர்கோன் செய்த நல் மயிலைத்* திருவல்லிக்கேணி நின்றானை*
கன்னி நல் மாட மங்கையர் தலைவன்* காமரு சீர்க் கலிகன்றி*
சொன்ன சொல்மாலை பத்து உடன் வல்லார்* சுகம் இனிது ஆள்வர் வான்உலகே. (2)
அன்று ஆயர் குலக் கொடியோடு* அணி மாமலர் மங்கையொடு அன்பு அளவி*
அவுணர்க்கு என்றானும் இரக்கம் இலாதவனுக்கு* உறையும் இடம் ஆவது*
இரும் பொழில் சூழ் நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை* தடம் திகழ் கோவல்நகர்*
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம்* மா மலை ஆவது நீர்மலையே.
நெடுமால் அவன் மேவிய நீர்மலைமேல்* நிலவும் புகழ் மங்கையர் கோன்*
அமரில் கட மா களி யானை வல்லான்* கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்க்கு*
உடனே விடும் மால் வினை* வேண்டிடில் மேல் உலகும் எளிது ஆயிடும் அன்றி இலங்கு ஒலி சேர்*
கொடு மா கடல் வையகம் ஆண்டு* மதிக் குடை மன்னவர் ஆய் அடி கூடுவரே. (2)
பார்ஆயது உண்டு உமிழ்ந்த பவளத் தூணை* படு கடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட சீரானை*
எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே* முளைத்து எழுந்த தீம் கரும்பினை*
போர் ஆனைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினை* புணர் மருதம் இற நடந்த பொன் குன்றினை*
கார் ஆனை இடர் கடிந்த கற்பகத்தைக்* கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே. (2)
பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு* பொய்ந் நூலை மெய்ந் நூல் என்று என்றும் ஓதி மாண்டு*
அவத்தம் போகாதே வம்மின்* எந்தை என் வணங்கப்படுவானை*
கணங்கள் ஏத்தும் நீண்ட வத்தை கரு முகிலை எம்மான் தன்னை* நின்றவூர் நித்திலத்தை தொத்துஆர்சோலைக்*
காண்டவத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக்* கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே. (2)
படநாகத்து அணைக்கிடந்து அன்று அவுணர்கோனைப்* படவெகுண்டு மருதுஇடைபோய் பழனவேலித்*
தடம்ஆர்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத்* தாமரைக்கண் துயில்அமர்ந்த தலைவன் தன்னைக்*
கடம் ஆரும் கருங் களிறு வல்லான்* வெல்போர்க் கலிகன்றி ஒலிசெய்த இன்பப்பாடல்*
திடம்ஆக இவைஐந்தும்ஐந்தும் வல்லார்* தீவினையை முதல்அரிய வல்லார்தாமே.
நண்ணாத வாள் அவுணர் இடைப் புக்கு*
வானவரை பெண் ஆகி* அமுது ஊட்டும் பெருமானார்*
மருவினிய தண் ஆர்ந்த கடல்மல்லைத்* தலசயனத்து உறைவாரை,*
எண்ணாதே இருப்பாரை* இறைப் பொழுதும் எண்ணோமே. (2)
ஏனத்தின்உருவுஆகி* நிலமங்கை எழில் கொண்டான்*
வானத்தில்அவர் முறையால்* மகிழ்ந்துஏத்தி வலம்கொள்ள*
கானத்தின் கடல்மல்லைத்* தலசயனத்து உறைகின்ற*
ஞானத்தின் ஒளிஉருவை* நினைவார் என் நாயகரே. (2)
கடி கமழும் நெடு மறுகின்* கடல்மல்லைத் தலசயனத்து*
அடிகள் அடியே நினையும்* அடியவர்கள் தம் அடியான்*
வடி கொள் நெடு வேல் வலவன்* கலிகன்றி ஒலி வல்லார்*
முடி கொள் நெடு மன்னவர்தம்* முதல்வர் ஆவாரே. (2)
திவளும்வெண் மதிபோல் திருமுகத்து அரிவை* செழுங்கடல் அமுதினில் பிறந்த அவளும்*
நின்ஆகத்து இருப்பதும் அறிந்தும்* ஆகிலும் ஆசைவிடாளால்*
குவளைஅம் கண்ணி கொல்லிஅம் பாவை சொல்லு* நின்தாள் நயந்திருந்த இவளை*
உன் மனத்தால் என்நினைந்துஇருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே! (2)
'அலம்கெழு தடக்கை ஆயன்வாய்ஆம்பற்கு* அழியுமால் என்உள்ளம்!' என்னும்*
புலம்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும்* 'போதுமோ நீர்மலைக்கு என்னும்*
குலம்கெழு கொல்லிக் கோமளவல்லி* கொடிஇடை நெடுமழைக் கண்ணி*
இலங்குஎழில் தோளிக்கு என்நினைந்துஇருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே! (2)
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய* எம்மாயனே! அருளாய்'*
என்னும் இன்தொண்டர்க்கு இன்அருள் புரியும்* இடவெந்தை எந்தை பிரானை*
மன்னுமா மாட மங்கையர் தலைவன்* மானவேல் கலியன் வாய்ஒலிகள்*
பன்னிய பனுவல் பாடுவார்* நாளும் பழவினை பற்றுஅறுப்பாரே. (2)
திரிபுரம் மூன்று எரித்தானும்* மற்றை மலர்மிசை மேல் அயனும்வியப்ப*
முரிதிரை மாகடல் போல்முழங்கி* மூவுலகும் முறையால் வணங்க*
எரிஅன கேசர வாள்எயிற்றோடு* இரணியன்ஆகம் இரண்டு கூறா*
அரிஉருஆம் இவர் ஆர்கொல்? என்ன* அட்ட புயகரத்தேன்என்றாரே. (2)
சொல்லுவன் சொல்பொருள் தான்அவைஆய்* சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமும்ஆய்*
நல்அரன் நாரணன் நான்முகனுக்கு இடம்தான்* தடம் சூழ்ந்து அழகுஆயகச்சி*
பல்லவன் வில்லவன் என்று உலகில்* பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல் பல்லவன்*
மல்லையர் கோன் பணிந்த* பரமேச்சுரவிண்ணகரம் அதுவே. (2)
பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்கோன் பணிந்த* பரமேச்சுரவிண்ணகர்மேல்*
கார் மன்னு நீள் வயல் மங்கையர் தம்தலைவன்* கலிகன்றி குன்றாது உரைத்த*
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார்* திரு மா மகள் தன் அருளால்*
உலகில் தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ்* செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே. (2)
மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும்* வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்*
எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின்மேல் ஓர்* இளந் தளிரில் கண்வளர்ந்த ஈசன் தன்னை*
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால்* தூய நான்மறையாளர் சோமுச் செய்ய*
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும்* திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே. (2)
வாரணம் கொள் இடர் கடிந்த மாலை* நீல மரகதத்தை மழை முகிலே போல்வான் தன்னைச்*
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த* செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன், என்று*
வார் அணங்கு முலை மடவார் மங்கை வேந்தன்* வாட் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்த* கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே. (2)
இருந்தண் மாநிலம் ஏனம்அது ஆய்* வளைமருப்பினில் அகத்துஒடுக்கி*
கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம்* கமலநல்மலர்த்தேறல் அருந்தி*
இன் இசை முரன்று எழும் அளி குலம் பொதுளி* அம் பொழிலூடே*
செருந்தி நாள் மலர் சென்று அணைந்து உழிதரு* திருவயிந்திரபுரமே. (2)
மூவர் ஆகிய ஒருவனை* மூவுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை*
தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்ச* தண் திருவயிந்திரபுரத்து*
மேவு சோதியை வேல் வலவன்* கலிகன்றி விரித்து உரைத்த*
பாவு தண் தமிழ்ப் பத்து இவை பாடிடப்* பாவங்கள் பயிலாவே (2)
ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு* உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து*
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா* தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்*
கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே* கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்த்*
தேன் ஆட மாடக் கொடி ஆடு* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே. (2)
சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய* தில்லைத் திருச்சித்ரகூடத்து உறை செங் கண் மாலுக்கு*
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப* அலை நீர் உலகுக்கு அருளே புரியும்*
கார் ஆர் புயல் கைக் கலிகன்றி* குன்றா ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்*
பார் ஆர் உலகம் அளந்தான் அடிக்கீழ்ப்* பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே. (2)
வாட மருது இடை போகி* மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு*
ஆடல் நல் மா உடைத்து* ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்*
கூடிய மா மழை காத்த* கூத்தன் என வருகின்றான்*
சேடு உயர் பூம் பொழில் தில்லைச்* சித்திரகூடத்து உள்ளானே. (2)
எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க* வரு மழை காப்பான்*
உய்யப் பரு வரை தாங்கி* ஆநிரை காத்தான் என்று ஏத்தி*
வையத்து எவரும் வணங்க* அணங்கு எழு மா மலை போல*
தெய்வப் புள் ஏறி வருவான்* சித்திரகூடத்து உள்ளானே .(2)
ஆவர் இவை செய்து அறிவார்?* அஞ்சன மா மலை போல*
மேவு சினத்து அடல் வேழம்* வீழ முனிந்து*
அழகு ஆய காவி மலர் நெடுங் கண்ணார்* கை தொழ வீதி வருவான்*
தேவர் வணங்கு தண் தில்லைச்* சித்திரகூடத்து உள்ளானே.
ஒரு குறள் ஆய் இரு நிலம் மூவடி மண் வேண்டி* உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி*
ஒன்றும் தருக எனா மாவலியைச் சிறையில் வைத்த* தாடாளன் தாள் அணைவீர்*
தக்க கீர்த்தி அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும்* அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும்*
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச்* சீராமவிண்ணகரே சேர்மின் நீரே. (2)
செங்கமலத்து அயன்அனைய மறையோர்* காழிச் சீராமவிண்ணகர் என்செஙகண்மாலை*
அம்கமலத் தடவயல்சூழ் ஆலிநாடன்* அருள்மாரி அரட்டுஅமுக்கி அடையார்சீயம்*
கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கைவேந்தன்* கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன*
சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார்* தடங்கடல்சூழ் உலகுக்குத் தலைவர் தாமே. (2)
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்* புகுந்ததன்பின் வணங்கும் என்*
சிந்தனைக்கு இனியாய்!* திருவே என் ஆர் உயிரே*
அம் தளிர் அணி ஆர் அசோகின்* இளந்தளிர்கள் கலந்து*
அவை எங்கும் செந் தழல் புரையும்* திருவாலி அம்மானே! (2)
புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ்* தென் ஆலி இருந்த மாயனை*
கல்லின் மன்னு திண் தோள்* கலியன் ஒலிசெய்த*
நல்ல இன் இசை மாலை* நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று*
தாம் உடன் வல்லர் ஆய் உரைப்பார்க்கு* இடம் ஆகும் வான்உலகே. (2)
தூவிரிய மலர் உழக்கி* துணையோடும் பிரியாதே*
பூவிரிய மது நுகரும்* பொறி வரிய சிறு வண்டே!*
தீவிரிய மறை வளர்க்கும்* புகழ் ஆளர் திருவாலி*
ஏவரி வெம் சிலையானுக்கு* என் நிலைமை உரையாயே. (2)
மை இலங்கு கருங் குவளை* மருங்கு அலரும் வயல் ஆலி*
நெய் இலங்கு சுடர் ஆழிப் படையானை* நெடுமாலை*
கை இலங்கு வேல் கலியன்* கண்டு உரைத்த தமிழ் மாலை*
ஐஇரண்டும் இவை வல்லார்க்கு* அரு வினைகள் அடையாவே. (2)
கள்வன்கொல் யான் அறியேன்* கரியான் ஒரு காளை வந்து*
வள்ளி மருங்குல்* என்தன் மடமானினைப் போத என்று*
வெள்ளி வளைக் கைப் பற்ற* பெற்ற தாயரை விட்டு அகன்று*
அள்ளல் அம் பூங் கழனி* அணி ஆலி புகுவர்கொலோ! (2)
என் துணை என்று எடுத்தேற்கு* இறையேனும் இரங்கிற்றிலள்*
தன் துணை ஆய என்தன்* தனிமைக்கும் இரங்கிற்றிலள்*
வன் துணை வானவர்க்கு ஆய்* வரம் செற்று அரங்கத்து உறையும்*
இன் துணைவனொடும் போய்* எழில் ஆலி புகுவர்கொலோ! (2)
தாய் மனம் நின்று இரங்க* தனியே நெடுமால் துணையா*
போயின பூங் கொடியாள்* புனல் ஆலி புகுவர் என்று*
காய் சின வேல் கலியன்* ஒலிசெய் தமிழ்மாலை பத்தும்*
மேவிய நெஞ்சு உடையார்* தஞ்சம் ஆவது விண் உலகே. (2)
நந்தா விளக்கே! அளத்தற்கு அரியாய்!* நர நாரணனே! கருமாமுகில்போல் எந்தாய்*
எமக்கே அருளாய் எனநின்று* இமையோர் பரவும்இடம்*
எத்திசையும் கந்தாரம் அம் தேன் இசைபாடமாடே* களிவண்டுமிழற்ற நிழல்துதைந்து*
மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே! (2)
வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர்* மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு*
என்றும் தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்கோன்* கலியன் ஒலிசெய் தமிழ்மாலைவல்லார்*
கண்டார் வணங்கக் களி யானை மீதே* கடல்சூழ் உலகுக்கு ஒரு காவலர்ஆய்*
விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ்* விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே. (2)
சலம் கொண்ட இரணியனது, அகல் மார்வம் கீண்டு* தடங் கடலைக் கடைந்து, அமுதம் கொண்டு உகந்த காளை*
நலம் கொண்ட கரு முகில்போல் திருமேனி அம்மான்* நாள்தோறும் மகிழ்ந்து இனிது, மருவி உறை கோயில்*
சலம் கொண்டு மலர் சொரியும், மல்லிகை ஒண் செருந்தி* செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே
வலம் கொண்டு கயல் ஓடி விளையாடும் நாங்கூர்* வைகுந்தவிண்ணகரம், வணங்கு மட நெஞ்சே! (2)
சங்குமலி தண்டுமுதல், சக்கரம் முன்ஏந்தும்* தாமரைக்கண் நெடியபிரான், தான்அமரும் கோயில்*
வங்கம்மலி கடல்உலகில், மலிவுஎய்தும் நாங்கூர்* வைகுந்த விண்ணகர்மேல், வண்டுஅறையும் பொழில்சூழ்*
மங்கையர்தம் தலைவன் மருவலர்தம் உடல்துணிய* வாள்வீசும் பரகாலன், கலிகன்றி சொன்ன*
சங்கம்மலி தமிழ்மாலை, பத்துஇவை வல்லார்கள்* தரணியொடு விசும்புஆளும், தன்மை பெறுவாரே. (2)
திருமடந்தை மண்மடந்தை, இருபாலும் திகழத்* தீவினைகள் போய்அகல, அடியவர்கட்கு என்றும்அருள்நடந்து*
இவ்ஏழ்உலகத்தவர் பணிய* வானோர் அமர்ந்துஏத்த இருந்தஇடம்*
பெரும்புகழ் வேதியர் வாழ்தரும்இடங்கள் மலர்கள், மிகுகைதைகள் செங்கழுநீர்* தாமரைகள் தடங்கள் தொறும், இடங்கள் தொறும் திகழ*
அருஇடங்கள் பொழில்தழுவி, எழில்திகழும் நாங்கூர்* அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே! (2)
சென்று சினவிடைஏழும், படஅடர்ந்து* பின்னை செவ்வித்தோள் புணர்ந்து, உகந்த திருமால்தன் கோயில்*
அன்று அயனும் அரன்சேயும், அனையவர்கள் நாங்கூர்* அரிமேய விண்ணகரம், அமர்ந்த செழுங்குன்றை*
கன்றிநெடுவேல் வலவன், மங்கையர்தம் கோமான்* கலிகன்றி ஒலிமாலை, ஐந்தினொடு மூன்றும்*
ஒன்றினொடும் ஒன்றும், இவை கற்றுவல்லார்* உலகத்து உத்தமர்கட்கு உத்தமர்ஆய் உம்பரும் ஆவர்களே. (2)
போது அலர்ந்த பொழில் சோலைப்* புறம் எங்கும் பொரு திரைகள்*
தாது உதிர வந்து அலைக்கும்* தட மண்ணித் தென் கரைமேல்*
மாதவன் தான் உறையும் இடம்* வயல் நாங்கை* வரி வண்டு
தேதென என்று இசை பாடும்* திருத்தேவனார்தொகையே.
கார் ஆர்ந்த திருமேனிக்* கண்ணன் அமர்ந்து உறையும் இடம்*
சீர் ஆர்ந்த பொழில் நாங்கைத்* திருத்தேவனார்தொகைமேல்*
கூர் ஆர்ந்த வேல் கலியன்* கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்*
ஏர் ஆர்ந்த வைகுந்தத்து* இமையவரோடு இருப்பாரே.
மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர்* வண்புருடோத்தமத்துள்*
அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன்* ஆலி மன் அருள் மாரி*
பண்ணுள் ஆர்தரப் பாடிய பாடல்* இப்பத்தும் வல்லார் உலகில்*
எண் இலாத பேர் இன்பம் உற்று* இமையவரோடும் கூடுவரே. (2)
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும்* பேர் அருளாளன் எம் பிரானை*
வார் அணி முலையாள் மலர்மகளோடு* மண்மகளும் உடன் நிற்ப*
சீர் அணி மாட நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
கார் அணி மேகம் நின்றது ஒப்பானை* கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.
அன்றிய வாணன் ஆயிரம்* தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை*
மின் திகழ் குடுமி வேங்கட மலைமேல்* மேவிய வேத நல் விளக்கை*
தென் திசைத் திலதம் அனையவர் நாங்கைச்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
மன்றுஅது பொலிய மகிழ்ந்து நின்றானை* வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே.
தேன் அமர் சோலை நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
வானவர் கோனைக் கண்டமை சொல்லும்* மங்கையார் வாள் கலிகன்றி*
ஊனம் இல் பாடல் ஒன்பதோடு ஒன்றும்* ஒழிவு இன்றிக் கற்றுவல்லார்கள்*
மான வெண் குடைக்கீழ் வையகம் ஆண்டு* வானவர் ஆகுவர் மகிழ்ந்தே.
மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும்* மற்று அவர்தம் காதலிமார் குழையும்*
தந்தை கால் தளையும் உடன் கழல வந்து தோன்றி* கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர்*
நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து* இளங் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின்*
சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே. (2)
சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலை*
கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன்* கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி*
பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன* பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்*
சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி* சேண் விசும்பில் வானவர் ஆய்த் திகழ்வர் தாமே*
தூம்பு உடைப் பனைக் கை வேழம்* துயர் கெடுத்தருளி* மன்னும்
காம்பு உடைக் குன்றம் ஏந்திக்* கடு மழை காத்த எந்தை*
பூம் புனல் பொன்னி முற்றும்* புகுந்து பொன் வரன்ற* எங்கும்
தேம் பொழில் கமழும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
தாஅளந்து உலகம் முற்றும்* தட மலர்ப் பொய்கை புக்கு*
நாவளம் நவின்று அங்கு ஏத்த* நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்*
மாவளம் பெருகி மன்னும்* மறையவர் வாழும் நாங்கைக்*
காவளம் பாடிமேய* கண்ணனே! களைகண்நீயே.
மாவளம் பெருகி மன்னும்* மறையவர் வாழும்* நாங்கைக்
காவளம் பாடிமேய* கண்ணனைக் கலியன் சொன்ன*
பாவளம் பத்தும் வல்லார்* பார்மிசை அரசர் ஆகிக்*
கோ இள மன்னர் தாழக்* குடைநிழல் பொலிவர்தாமே.
கண்ணார் கடல்போல்* திருமேனி கரியாய்*
நண்ணார் முனை* வென்றி கொள்வார் மன்னும் நாங்கூர்த்*
திண்ணார் மதிள் சூழ்* திருவெள்ளக்குளத்துள்*
அண்ணா அடியேன் இடரைக் களையாயே.
நல்லன்பு உடை* வேதியர் மன்னிய நாங்கூர்ச்*
செல்வன்* திருவெள்ளக்குளத்து உறைவானை*
கல்லின் மலி தோள்* கலியன் சொன்ன மாலை*
வல்லர் என வல்லவர்* வானவர் தாமே. (2)
கவள யானைக் கொம்புஒசித்த* கண்ணன் என்றும் காமருசீர்*
குவளை மேகம் அன்ன மேனி* கொண்ட கோன் என் ஆனை என்றும்*
தவள மாடம் நீடு நாங்கைத்* தாமரையாள் கேள்வன் என்றும்*
பவள வாயாள் என் மடந்தை* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
பாருள் நல்ல மறையோர் நாங்கைப்* பார்த்தன்பள்ளிச் செங்கண்மாலை*
வார் கொள் நல்ல முலை மடவாள் பாடலைத்* தாய் மொழிந்த மாற்றம்*
கூர் கொள் நல்ல வேல் கலியன்* கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்*
ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள்* இன்பம் நாளும் எய்துவாரே.(2)
நும்மைத் தொழுதோம்* நும்தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம்*
இம்மைக்கு இன்பம் பெற்றோம்* எந்தாய் இந்தளூரீரே*
எம்மைக் கடிதாக் கருமம் அருளி* ஆவா! என்று இரங்கி*
நம்மை ஒருகால் காட்டி நடந்தால்* நாங்கள் உய்யோமே?
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே!* மருவினிய
மைந்தா* அம் தண் ஆலி மாலே!* சோலை மழ களிறே!*
நந்தா விளக்கின் சுடரே!* நறையூர் நின்ற நம்பீ* என்
எந்தாய்! இந்தளூராய்!* அடியேற்கு இறையும் இரங்காயே! நந்தா விளக்கின்
ஏர் ஆர் பொழில் சூழ்* இந்தளூரில் எந்தை பெருமானைக்*
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன்* கலியன் ஒலிசெய்த*
சீர் ஆர் இன் சொல் மாலை* கற்றுத் திரிவார் உலகத்தில்*
ஆர் ஆர் அவரே* அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே (2)
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால்* ஆல் இலை வளர்ந்த எம் பெருமான்*
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்து* பெரு நிலம் அளந்தவன் கோயில்*
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும்* எங்கும் ஆம் பொழில்களின் நடுவே*
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால்* திருவெள்ளியங்குடி அதுவே. (2)
பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால்* பார் இடந்து எயிற்றினில் கொண்டு*
தெண் திரை வருடப் பாற்கடல் துயின்ற* திருவெள்ளியங்குடியானை*
வண்டு அறை சோலை மங்கையர் தலைவன்* மான வேல் கலியன் வாய் ஒலிகள்*
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள்* ஆள்வர் இக்குரை கடல் உலகே. (2)
அறிவது அறியான் அனைத்து உலகும் உடையான்* என்னை ஆள் உடையான்*
குறிய மாணி உரு ஆய* கூத்தன் மன்னி அமரும் இடம்*
நறிய மலர்மேல் சுரும்பு ஆர்க்க* எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட*
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும்* புள்ளம்பூதங்குடி தானே.(2)
தாம்* தம் பெருமை அறியார்*
தூது வேந்தர்க்கு ஆய* வேந்தர் ஊர்போல்*
காந்தள் விரல்* மென் கலை நல் மடவார்*
கூந்தல் கமழும்* கூடலூரே.
காவிப் பெருநீர் வண்ணன்* கண்ணன்
மேவித் திகழும்* கூடலூர்மேல்*
கோவைத் தமிழால்* கலியன் சொன்ன*
பாவைப் பாட* பாவம் போமே.
வென்றி மா மழு ஏந்தி முன் மண்மிசை மன்னரை* மூவெழுகால்
கொன்ற தேவ* நின் குரை கழல் தொழுவது ஓர் வகை* எனக்கு அருள்புரியே*
மன்றில் மாம் பொழில் நுழைதந்து* மல்லிகை மௌவலின் போது அலர்த்தி*
தென்றல் மா மணம் கமழ்தர வரு* திருவெள்ளறை நின்றானே.
வசை இல் நான்மறை கெடுத்த அம்மலர் அயற்கு அருளி* முன்பரிமுகமாய்*
இசை கொள் வேதநூல் என்று இவை பயந்தவனே!* எனக்கு அருள்புரியே*
உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய* மாருதம் வீதியின்வாய*
திசை எலாம் கமழும் பொழில் சூழ்* திருவெள்ளறை நின்றானே.
மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ்* திருவெள்ளறை அதன்மேய*
அஞ்சனம் புரையும் திரு உருவனை* ஆதியை அமுதத்தை*
நஞ்சு உலாவிய வேல் வலவன்* கலிகன்றி சொல் ஐஇரண்டும்*
எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார்* இமையோர்க்கு அரசு ஆவர்களே.
உந்திமேல் நான்முகனைப் படைத்தான்* உலகு உண்டவன்
எந்தை பெம்மான்* இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்*
சந்தினோடு மணியும் கொழிக்கும்* புனல் காவிரி*
அந்திபோலும் நிறத்து ஆர் வயல் சூழ்* தென் அரங்கமே.
அல்லி மாதர் அமரும்* திரு மார்வன் அரங்கத்தைக்*
கல்லின் மன்னு மதிள்* மங்கையர்-கோன் கலிகன்றி சொல்*
நல்லிசை மாலைகள்* நால் இரண்டும் இரண்டும் உடன்*
வல்லவர் தாம் உலகு ஆண்டு* பின் வான் உலகு ஆள்வரே.
வெருவாதாள் வாய்வெருவி* வேங்கடமே! வேங்கடமே!' என்கின்றாளால்*
மருவாளால் என் குடங்கால்* வாள் நெடுங் கண் துயில் மறந்தாள்* வண்டு ஆர் கொண்டல்-
உருவாளன் வானவர்தம் உயிராளன்* ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட-
திருவாளன்* என் மகளைச் செய்தனகள்* எங்ஙனம் நான் சிந்திக்கேனே!
சேல் உகளும் வயல் புடை சூழ்* திருவரங்கத்து அம்மானைச் சிந்தைசெய்த*
நீல மலர்க் கண் மடவாள் நிறை அழிவைத்* தாய் மொழிந்த அதனை* நேரார்
காலவேல் பரகாலன்* கலிகன்றி ஒலி மாலை கற்று வல்லார்*
மாலை சேர் வெண் குடைக்கீழ் மன்னவர் ஆய்* பொன்உலகில் வாழ்வர்தாமே.
கைம்மான மழ களிற்றை* கடல் கிடந்த கருமணியை*
மைம்மான மரகதத்தை* மறை உரைத்த திருமாலை*
எம்மானை எனக்கு என்றும் இனியானை* பனி காத்த
அம்மானை* யான் கண்டது* அணி நீர்த் தென் அரங்கத்தே.
பேரானை* குறுங்குடி எம் பெருமானை* திருத்தண்கால்
ஊரானை* கரம்பனூர் உத்தமனை* முத்து இலங்கு
கார் ஆர் திண் கடல் ஏழும்* மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டு*
ஆராது என்று இருந்தானைக்* கண்டது தென் அரங்கத்தே.
சிந்தனையை தவநெறியை* திருமாலை* பிரியாது-
வந்து எனது மனத்து இருந்த* வடமலையை வரி வண்டு ஆர்-
கொந்து அணைந்த பொழில் கோவல்* உலகு அளப்பான் அடி நிமிர்த்த-
அந்தணனை* யான் கண்டது* அணி நீர்த் தென் அரங்கத்தே.
ஆ மருவி நிரை மேய்த்த* அணி அரங்கத்து அம்மானைக்*
காமரு சீர்க் கலிகன்றி* ஒலிசெய்த மலி புகழ் சேர்*
நா மருவு தமிழ்மாலை* நால் இரண்டோடு இரண்டினையும்*
தாம் மருவி வல்லார்மேல்* சாரா தீவினை தாமே.
பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும்* பதங்களின் பொருளும்*
பிண்டம் ஆய் விரிந்த பிறங்கு ஒளி அனலும்* பெருகிய புனலொடு நிலனும்*
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும்* ஏழு மா மலைகளும் விசும்பும்*
அண்டமும் தான் ஆய் நின்ற எம் பெருமான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து* பொரு திரை மா நதி புடை சூழ்ந்து*
அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த* அரங்க மா நகர் அமர்ந்தானை*
மன்னு மா மாட மங்கையர் தலைவன்* மான வேல் கலியன் வாய் ஒலிகள்*
பன்னிய பனுவல் பாடுவார்* நாளும் பழவினை பற்று அறுப்பாரே.
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாதுஇரங்கி* மற்று அவற்கு இன் அருள் சுரந்து*
மாழை மான் மட நோக்கி உன் தோழி* உம்பி எம்பி என்று ஒழிந்திலை* உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து* அடியேன் மனத்து இருந்திட*
ஆழி வண்ண! நின் அடிஇணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே
துளங்கு நீள் முடி அரசர்தம் குரிசில்* தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு*
உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து* அங்கு ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப*
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு* அடியேன் அறிந்து* உலகம்
அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.
மாட மாளிகை சூழ் திருமங்கைமன்னன்* ஒன்னலர்தங்களை வெல்லும்*
ஆடல்மா வலவன் கலிகன்றி* அணி பொழில் திருவரங்கத்து அம்மானை*
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை* எந்தையை நெடுமாலை நினைந்த*
பாடல் பத்துஇவை பாடுமின் தொண்டீர்! பாட* நும்மிடைப் பாவம் நில்லாவே.
கை இலங்கு ஆழி சங்கன்* கரு முகில் திரு நிறத்தன்*
பொய் இலன் மெய்யன்தன் தாள்* அடைவரேல் அடிமை ஆக்கும*
செய் அலர் கமலம் ஓங்கு* செறி பொழில் தென் திருப்பேர்*
பை அரவுஅணையான் நாமம்* பரவி நான் உய்ந்த ஆறே. (2)
வண்டு அறை பொழில் திருப்பேர்* வரி அரவுஅணையில் பள்ளி-
கொண்டு உறைகின்ற மாலைக்* கொடி மதிள் மாட மங்கைத்*
திண் திறல் தோள் கலியன்* செஞ்சொலால் மொழிந்த மாலை*
கொண்டு இவை பாடி ஆடக்* கூடுவர் நீள் விசும்பே. (2)
தீது அறு நிலத்தொடு எரி காலினொடு* நீர் கெழு விசும்பும் அவை ஆய்*
மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை* அவை ஆய பெருமான்*
தாய் செற உளைந்து தயிர் உண்டு குடம் ஆடு* தட மார்வர் தகைசேர்*
நாதன் உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே. (2)
வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு* பண்டை நம் வினை கெட என்று* அடிமேல்
தொண்டரும் அமரரும் பணிய நின்று* அங்கு அண்டமொடு அகல்இடம் அளந்தவனே*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
பூ மரு பொழில் அணி* விண்ணகர் மேல்*
காமரு சீர்க்* கலிகன்றி சொன்ன*
பா மரு தமிழ்* இவை பாட வல்லார்*
வாமனன் அடி* இணை மருவுவரே*
பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில்* பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன்* ஐம்புலன்கள் கடன் ஆயின* வாயில் ஒட்டி
அறுத்தேன்* ஆர்வச் செற்றம் அவைதம்மை* மனத்து அகற்றி
வெறுத்தேன்* நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே.
தேன் ஆர் பூம் புறவில்* திருவிண்ணகர் மேயவனை*
வான் ஆரும் மதிள் சூழ்* வயல் மங்கையர்கோன் மருவார்*
ஊன் ஆர் வேல் கலியன்* ஒலிசெய் தமிழ்மாலை வல்லார்*
கோன் ஆய் வானவர்தம்* கொடி மா நகர் கூடுவரே.
துறப்பேன் அல்லேன்* இன்பம் துறவாது* நின் உருவம்
மறப்பேன் அல்லேன்* என்றும் மறவாது* யான் உலகில்
பிறப்பேன் ஆக எண்ணேன்* பிறவாமை பெற்றது* நின்
திறத்தேன் ஆதன்மையால்* திருவிண்ணகரானே. (2)
தார் ஆர் மலர்க் கமலத்* தடம் சூழ்ந்த தண் புறவில்*
சீர் ஆர் நெடு மறுகின்* திருவிண்ணகரானைக்*
கார் ஆர் புயல் தடக் கைக்* கலியன் ஒலி மாலை*
ஆர் ஆர் இவை வல்லார்* அவர்க்கு அல்லல் நில்லாவே.
கண்ணும் சுழன்று பீளையோடு* ஈளை வந்து ஏங்கினால்*
பண் இன் மொழியார்* பைய நடமின் என்னாதமுன்*
விண்ணும் மலையும்* வேதமும் வேள்வியும் ஆயினான்*
நண்ணும் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே.
பிறை சேர் நுதலார்* பேணுதல் நம்மை இலாதமுன்*
நறை சேர் பொழில் சூழ்* நறையூர் தொழு நெஞ்சமே! என்ற*
கறை ஆர் நெடு வேல் மங்கையர்கோன்* கலிகன்றி சொல்*
மறவாது உரைப்பவர்* வானவர்க்கு இன் அரசு ஆவரே. (2)
கலங்க முந்நீர் கடைந்து* அமுதம் கொண்டு* இமையோர்
துளங்கல் தீர* நல்கு சோதிச் சுடர் ஆய*
வலங்கை ஆழி இடங்கைச் சங்கம்* உடையான் ஊர்*
நலம் கொள் வாய்மை* அந்தணர் வாழும் நறையூரே.
தாமத் துளப* நீள் முடி மாயன் தான் நின்ற*
நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த* நறையூர்மேல்*
காமக் கதிர் வேல் வல்லான்* கலியன் ஒலி மாலை*
சேமத் துணை ஆம்* செப்பும் அவர்க்கு திருமாலே.
அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும்* அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்*
கொம்பு அமரும் வட மரத்தின் இலைமேல்* பள்ளி கூடினான் திருவடியே கூடகிற்பீர்*
வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு* மணி வண்டு வகுளத்தின் மலர்மேல் வைகும்*
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில்* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
செம்மொழிவாய் நால்வேத வாணர்வாழும்* திருநறையூர்மணிமாடச் செங்கண்மாலைப்*
பொய்ம்மொழி ஒன்று இல்லாதமெய்ம்மையாளன்* புல மங்கைக் குல வேந்தன் புலமை ஆர்ந்த*
அம் மொழி வாய்க் கலிகன்றி இன்பப் பாடல்* பாடுவார் வியன் உலகில் நமனார் பாடி*
வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில்* விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெருந் தக்கோரே.
ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான்* விண்ட நிசாசரரைத்*
தோளும் தலையும் துணிவு எய்தச்* சுடு வெம் சிலைவாய்ச் சரம் துரந்தான்*
வேளும் சேயும் அனையாரும்* வேல்கணாரும் பயில் வீதி*
நாளும் விழவின் ஒலி ஓவா* நறையூர் நின்ற நம்பியே.
நன்மை உடைய மறையோர் வாழ்* நறையூர் நின்ற நம்பியைக்*
கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக்* கலியன் ஒலிசெய் தமிழ்மாலை*
பன்னி உலகில் பாடுவார்* பாடு சாரா பழ வினைகள்*
மன்னி உலகம் ஆண்டு போய்* வானோர் வணங்க வாழ்வாரே.
மான் கொண்ட தோல்* மார்வின் மாணி ஆய்* மாவலி மண்
தான் கொண்டு* தாளால் அளந்த பெருமானை*
தேன் கொண்ட சாரல்* திருவேங்கடத்தானை*
நான் சென்று நாடி* நறையூரில் கண்டேனே. (2)
பொங்கு ஏறு நீள் சோதிப்* பொன் ஆழி தன்னோடும்*
சங்கு ஏறு கோலத்* தடக் கைப் பெருமானை*
கொங்கு ஏறு சோலைக்* குடந்தைக் கிடந்தானை*
நம் கோனை நாடி* நறையூரில் கண்டேனே. (2)
மன்னும் மதுரை* வசுதேவர் வாழ் முதலை*
நல் நறையூர்* நின்ற நம்பியை* வம்பு அவிழ் தார்
கல் நவிலும் தோளான்* கலியன் ஒலி வல்லார்*
பொன்உலகில் வானவர்க்குப்* புத்தேளிர் ஆகுவரே. (2)
பெடை அடர்த்த மட அன்னம்* பிரியாது* மலர்க் கமல
மடல் எடுத்து மது நுகரும்* வயல் உடுத்த திருநறையூர்*
முடை அடர்த்த சிரம் ஏந்தி* மூவுலகும் பலி திரிவோன்*
இடர் கெடுத்த திருவாளன்* இணைஅடியே அடை நெஞ்சே!
குலை ஆர்ந்த பழுக் காயும்* பசுங் காயும் பாளை முத்தும்*
தலை ஆர்ந்த இளங் கமுகின்* தடஞ் சோலைத் திருநறையூர்*
மலை ஆர்ந்த கோலம் சேர்* மணி மாடம் மிக மன்னி*
நிலை ஆர நின்றான்* தன் நீள் கழலே அடை நெஞ்சே!
திண் களக மதிள் புடை சூழ்* திருநறையூர் நின்றானை*
வண் களகம் நிலவு எறிக்கும்* வயல் மங்கை நகராளன்*
பண்கள் அகம் பயின்ற சீர்ப்* பாடல்இவை பத்தும் வல்லார்*
விண்கள் அகத்து இமையவர் ஆய்* வீற்றிருந்து வாழ்வாரே.
கிடந்த நம்பி குடந்தை மேவி* கேழல் ஆய் உலகை
இடந்த நம்பி* எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்*
கடந்த நம்பி கடி ஆர் இலங்கை* உலகை ஈர் அடியால்*
நடந்த நம்பி நாமம் சொல்லில்* நமோ நாராயணமே.
கல் ஆர் மதிள் சூழ்* கச்சி நகருள் நச்சி* பாடகத்துள்
எல்லா உலகும் வணங்க* இருந்த அம்மான்* இலங்கைக்கோன்
வல் ஆள் ஆகம் வில்லால்* முனிந்த எந்தை* விபீடணற்கு
நல்லானுடைய நாமம் சொல்லில்* நமோ நாராயணமே.
வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று* நறையூர் நெடுமாலை*
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு* நம்பி நாமத்தை*
காவித் தடங் கண் மடவார் கேள்வன்* கலியன் ஒலி மாலை*
மேவிச் சொல்ல வல்லார் பாவம்* நில்லா வீயுமே.
கறவா மட நாகு* தன் கன்று உள்ளினால்போல்*
மறவாது அடியேன்* உன்னையே அழைக்கின்றேன்*
நறவு ஆர் பொழில் சூழ்* நறையூர் நின்ற நம்பி*
பிறவாமை எனைப் பணி* எந்தை பிரானே!*
வண்டு ஆர் பொழில் சூழ்* நறையூர் நம்பிக்கு* என்றும்-
தொண்டு ஆய்* கலியன் ஒலிசெய் தமிழ்மாலை*
தொண்டீர்! இவை பாடுமின்* பாடி நின்று ஆட*
உண்டே விசும்பு* உம்தமக்கு இல்லை துயரே* (2)
புள் ஆய் ஏனமும் ஆய் புகுந்து* என்னை உள்ளம் கொண்ட-
கள்வா! என்றலும்* என் கண்கள் நீர்கள் சோர்தருமால்*
உள்ளே நின்று உருகி* நெஞ்சம் உன்னை உள்ளியக்கால்*
நள்ளேன் உன்னை அல்லால்* நறையூர் நின்ற நம்பீயோ!*
நல் நீர் வயல் புடை சூழ்* நறையூர் நின்ற நம்பியைக்*
கல் நீர மால் வரைத் தோள்* கலிகன்றி மங்கையர்கோன்*
சொல் நீர சொல்மாலை* சொல்லுவார்கள் சூழ் விசும்பில்-
நல் நீர்மையால் மகிழ்ந்து* நெடுங் காலம் வாழ்வாரே. (2)
சின இல் செங் கண் அரக்கர் உயிர் மாளச்* செற்ற வில்லி என்று கற்றவர் தம்தம்
மனமுள் கொண்டு* என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மாமுனியை* மரம் ஏழ் எய்த மைந்தனை*
நனவில் சென்று ஆர்க்கும் நண்ணற்கு அரியானை* நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்*
கனவில் கண்டேன் இன்று கண்டமையால்* என்- கண்இணைகள் களிப்பக் களித்தேனே!*. (2)
தோடு விண்டு அலர் பூம் பொழில் மங்கையர்* தோன்றல் வாள் கலியன்* திரு ஆலி-
நாடன் நல் நறையூர் நின்ற நம்பி தன்* நல்ல மா மலர்ச் சேவடி சென்னியில்-
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும்* தொண்டர்கட்கு அவன் சொன்ன சொல்மாலைப்*
பாடல் பத்து இவை பாடுமின் தொண்டீர்! பாட* நும்மிடைப் பாவம் நில்லாவே*. (2)
கண் சோர வெம் குருதி வந்து இழிய* வெம் தழல்போல் கூந்தலாளை*
மண் சேர முலை உண்ட மா மதலாய்!* வானவர்தம் கோவே! என்று*
விண் சேரும் இளந் திங்கள் அகடு உரிஞ்சு* மணி மாடம் மல்கு* செல்வத்-
தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார்* காண்மின் என் தலைமேலாரே*
பூ மாண் சேர் கருங் குழலார்போல் நடந்து* வயல் நின்ற பெடையோடு* அன்னம்
தேமாவின் இன் நிழலில் கண் துயிலும்* தண் சேறை அம்மான் தன்னை*
வா மான் தேர்ப் பரகாலன்* கலிகன்றி ஒலி மாலை கொண்டு தொண்டீர்*
தூ மாண் சேர் பொன் அடிமேல் சூட்டுமின்* நும் துணைக் கையால் தொழுது நின்றே*.
தந்தை காலில் பெரு விலங்கு* தாள் அவிழ நள் இருட்கண்-
வந்த எந்தை பெருமானார்* மருவி நின்ற ஊர்போலும்*
முந்தி வானம் மழை பொழியும்* மூவா உருவின் மறையாளர்*
அந்தி மூன்றும் அனல் ஓம்பும்* அணி ஆர் வீதி அழுந்தூரே*.
நெல்லில் குவளை கண் காட்ட* நீரில் குமுதம் வாய் காட்ட *
அல்லிக் கமலம் முகம் காட்டும்* கழனி அழுந்தூர் நின்றானை*
வல்லிப் பொதும்பில் குயில் கூவும்* மங்கை வேந்தன் பரகாலன்*
சொல்லில் பொலிந்த தமிழ்மாலை* சொல்ல பாவம் நில்லாவே*. (2)
சிங்கம் அது ஆய் அவுணன்* திறல் ஆகம் முன் கீண்டு உகந்த*
சங்கம் இடத்தானை* தழல்ஆழி வலத்தானை*
செங்கமலத் தயனையார்* தென்ணழுந்தையில் மன்னிநின்ற*
அம் கமலக் கண்ணனை* அடியேன் கண்டு கொண்டேனே*.(2)
பேரானை* குடந்தைப் பெருமானை* இலங்கு ஒளிசேர்-
வாரார் வனமுலையாள்* மலர்மங்கை நாயகனை,*
ஆரா இன்னமுதை* தென்னழுந்தையில் மன்னிநின்ற*
காரார் கருமுகிலை* கண்டு கொண்டு களித்தேனே*. (2)
திறல் முருகனனையார்* தென்னழுந்தையில் மன்னிநின்ற*
அறமுதல் வனவனை* அணியாலியர் கோன் மருவார்*
கறைநெடு வேல்வலவன்* கலிகன்றி சொல் ஐயிரண்டும்*
முறைவழுவாமை வல்லார்* முழுது ஆள்வர் வானுலகே*.
திருவுக்கும் திருஆகிய செல்வா!* தெய்வத்துக்குஅரசே! செய்ய கண்ணா*
உருவச் செஞ்சுடர்ஆழி வல்லானே!* உலகுஉண்ட ஒருவா! திருமார்பா!*
ஒருவற்குஆற்றிஉய்யும் வகைஇன்றால்* உடன் நின்று ஐவர் என்னுள்புகுந்து* ஒழியாது-
அருவித் தின்றிட அஞ்சி நின்அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!* (2)
அன்னம் மன்னு பைம்பூம்பொழில் சூழ்ந்த* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானைக்*
கன்னி மன்னு திண்தோள் கலிகன்றி- ஆலி நாடன் மங்கைக் குலவேந்தன்*
சொன்னஇன் தமிழ் நல்மணிக்கோவை* தூய மாலை இவைபத்தும் வல்லார்*
மன்னி மன்னவராய் உலகுஆண்டு* மான வெண்குடைக்கீழ் மகிழ்வாரே* (2)
செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன்* திருவடியின்இணை வருட முனிவர்ஏத்த*
வங்கம்மலி தடங்கடலுள் அநந்தன்என்னும்* வரிஅரவின்அணைத் துயின்ற மாயோன் காண்மின்*
எங்கும்மலி நிறை புகழ்நால் வேதம்* ஐந்து- வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை*
அம்கமலத்து அயன்அனையார் பயிலும் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே* (2)
பன்றிஆய் மீன்ஆகி அரிஆய்* பாரைப்- படைத்து காத்துஉண்டு உமிழ்ந்த பரமன் தன்னை*
அன்று அமரர்க்குஅதிபதியும் அயனும் சேயும்- அடிபணிய அணிஅழுந்தூர் நின்ற கோவை*
கன்றி நெடுவேல் வலவன் ஆலிநாடன்* கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல்*
ஒன்றினொடு நான்கும் ஓர்ஐந்தும் வல்லார்* ஒலிகடல் சூழ்உலகுஆளும் உம்பர் தாமே* (2)
கள்ளம் மனம் விள்ளும் வகை* கருதிகழல் தொழுவீர்*
வெள்ளம் முதுபரவைத்* திரை விரிய கரை எங்கும்-
தெள்ளும் மணிதிகழும்* சிறு புலியூர்ச் சலசயனத்து-
உள்ளும்* எனது உள்ளத்துளும்* உறைவாரை உள்ளீரே* (2)
சேய்ஓங்கு* தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும்-
மாயா* எனக்குஉரையாய் இது* மறை நான்கின்உளாயோ?*
தீஓம் புகை மறையோர்* சிறுபுலியூர்ச் சலசயனத்-
தாயோ?* உனதுஅடியார் மனத்தாயோ?* அறியேனே* (2)
கருமாமுகில் உருவா!* கனல் உருவா! புனல் உருவா*
பெருமால் வரை உருவா!* பிறஉருவா! நினதுஉருவா!*
திருமாமகள் மருவும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
அருமா கடல்அமுதே!* உனது அடியே சரண்ஆமே* (2)
சீர்ஆர் நெடுமறுகின்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
ஏர்ஆர்முகில் வண்ணன்தனை* இமையோர் பெருமானை*
கார்ஆர் வயல் மங்கைக்குஇறை* கலியன்ஒலி மாலை*
பாரார் இவை பரவித்தொழப்* பாவம் பயிலாவே* (2)
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன் என்று* காதலால் கலி கன்றி உரைசெய்த*
வண்ண ஒண்தமிழ் ஒன்பதோடு ஒன்றுஇவை* வல்லர்ஆய் உரைப்பார் மதியம் தவழ்*
விண்ணில் விண்ணவர்ஆய் மகிழ்வு எய்துவர்* மெய்ம்மை சொல்லில் வெண்சங்கம் ஒன்றுஏந்திய -
கண்ண!* நின் தனக்கும் குறிப்புஆகில்- கற்கலாம்* கவியின் பொருள் தானே* (2)
சிலைஇலங்கு பொன்ஆழி* திண்படைதண்டு ஒண்சங்கம் என்கின்றாளால்,*
மலைஇலங்கு தோள் நான்கே* மற்றுஅவனுக்கு எற்றேகாண்! என்கின்றாளால்*
முலைஇலங்கு பூம்பயலை* முன்புஓட அன்புஓடி இருக்கின்றாளால்*
கலைஇலங்கு மொழியாளர்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ! (2)
செருவரை முன்ஆசுஅறுத்த* சிலைஅன்றோ? கைத்தலத்தது என்கின்றாளால்,*
பொருவரைமுன் போர்தொலைத்த* பொன்ஆழி மற்றுஒருகை என்கின்றாளால்*
ஒருவரையும் நின்ஒப்பார்* ஒப்புஇலா என்அப்பா! என்கின்றாளால்*
கருவரைபோல் நின்றானை* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ! (2)
மாவளரும் மென்நோக்கி* மாதராள் மாயவனைக் கண்டாள் என்று*
காவளரும் கடிபொழில்சூழ்* கண்ணபுரத்து அம்மானைக் கலியன் சொன்ன*
பாவளரும் தமிழ்மாலை* பன்னியநூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்*
பூவளரும் கற்பகம்சேர்* பொன்உலகில் மன்னவர்ஆய்ப் புகழ் தக்கோரே. (2)
தெள்ளியீர்! தேவர்க்கும்* தேவர் திருத்தக்கீர்!*
வெள்ளியீர் வெய்ய* விழுநிதி வண்ணர்* ஓ!
துள்ளுநீர்க்* கண்ணபுரம் தொழுதாள் இவள்-
கள்வியோ,* கைவளை கொள்வது தக்கதே? (2)
அருவிசோர் வேங்கடம்* நீர்மலை என்றுவாய்-
வெருவினாள்* மெய்யம் வினவி இருக்கின்றாள்,*
பெருகுசீர்க்* கண்ணபுரம் என்று பேசினாள்-
உருகினாள்* உள்மெலிந்தாள் இது என்கொலோ! (2)
கார்மலி* கண்ணபுரத்து எம் அடிகளைப்,*
பார்மலி மங்கையர் கோன்* பரகாலன் சொல்,*
சீர்மலி பாடல்* இவைபத்தும் வல்லவர்,*
நீர்மலி வையத்து* நீடு நிற்பார்களே (2)
கரைஎடுத்த சுரிசங்கும்* கனபவளத்து எழுகொடியும்,*
திரைஎடுத்து வருபுனல்சூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
விரைஎடுத்த துழாய்அலங்கல்* விறல்வரைத்தோள் புடைபெயர*
வரைஎடுத்த பெருமானுக்கு* இழந்தேன் என் வரிவளையே. (2)
தேமருவு பொழில்புடைசூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்-
வாமனனை,* மறிகடல்சூழ்* வயல்ஆலி வளநாடன்,*
காமருசீர்க் கலிகன்றி* கண்டுஉரைத்த தமிழ்மாலை,*
நாமருவி இவைபாட* வினைஆய நண்ணாவே. (2)
விண்ணவர் தங்கள் பெருமான்* திருமார்வன்,*
மண்ணவர் எல்லாம் வணங்கும்* மலிபுகழ்சேர்,*
கண்ணபுரத்து எம் பெருமான்* கதிர்முடிமேல்,*
வண்ண நறுந்துழாய் வந்து ஊதாய் கோல்தும்பீ.! (2)
வண்டு அமரும் சோலை* வயல்ஆலி நல்நாடன்,*
கண்டசீர் வென்றிக்* கலியன் ஒலிமாலை,*
கொண்டல் நிறவண்ணன்* கண்ண புரத்தானைத்,*
தொண்டரோம் பாட* நினைந்துஊதாய் கோல்தும்பீ! (2)
தந்தை காலில் விலங்குஅற* வந்து தோன்றிய தோன்றல்பின்,* தமியேன் தன்-
சிந்தை போயிற்று* திருவருள் அவனிடைப் பெறும்அளவு இருந்தேனை,*
அந்தி காவலன் அமுதுஉறு பசுங்கதிர்* அவைசுட அதனோடும்,*
மந்த மாருதம் வனமுலை தடவந்து* வலிசெய்வது ஒழியாதே! (2)
வார்கொள் மென்முலை மடந்தையர்* தடங்கடல் வண்ணனைத் தாள்நயந்து,*
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை* அறிந்துமுன் உரைசெய்த,*
கார்கொள் பைம்பொழில் மங்கையர் காவலன்* கலிகன்றி ஒலிவல்லார்,*
ஏர்கொள் வைகுந்த மாநகர் புக்கு* இமையவரொடும் கூடுவரே! (2)
தொண்டீர்! உய்யும் வகைகண்டேன்* துளங்கா அரக்கர் துளங்க,* முன்-
திண்தோள் நிமிர சிலைவளைய* சிறிதே முனிந்த திருமார்வன்,*
வண்டுஆர் கூந்தல் மலர்மங்கை* வடிக்கண் மடந்தை மாநோக்கம்-
கண்டான்,* கண்டு கொண்டுஉகந்த* கண்ணபுரம் நாம் தொழுதுமே. (2)
வல்லி இடையாள் பொருட்டாக* மதிள் நீர் இலங்கையார் கோவை*
அல்லல் செய்து வெம்சமத்துள்* ஆற்றல் மிகுத்த ஆற்றலான்*
வல்ஆள்அரக்கர் குலப்பாவை வாட* முனி தன் வேள்வியைக்*
கல்விச் சிலையால் காத்தான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே. (2)
வியம்உடை விடைஇனம்* உடைதர மடமகள்*
குயம்மிடை தடவரை* அகலம்அது உடையவர்*
நயம்உடை நடைஅனம்* இளையவர் நடைபயில்*
கயம்மிடை கணபுரம்* அடிகள்தம் இடமே. (2)
ஏதலர் நகைசெய* இளையவர் அளைவெணெய்*
போதுசெய்து அமரிய* புனிதர்நல் விரை* மலர்-
கோதிய மதுகரம்* குலவிய மலர்மகள்*
காதல்செய் கணபுரம்* அடிகள்தம் இடமே. (2)
மலிபுகழ் கணபுரம்உடைய* எம் அடிகளை*
வலிகெழு மதிள்அயல்* வயல்அணி மங்கையர்*
கலியன தமிழ்இவை* விழுமிய இசையினொடு*
ஒலிசொலும் அடியவர்* உறுதுயர் இலரே. (2)
வானோர் அளவும் முது முந்நீர்* வளர்ந்த காலம்,* வலிஉருவின்-
மீன்ஆய் வந்து வியந்து உய்யக்கொண்ட* தண்தாமரைக் கண்ணன்*
ஆனா உருவில் ஆன்ஆயன்* அவனை அம்மா விளைவயலுள்*
கான்ஆர் புறவின் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே. (2)
மீனோடு ஆமைகேழல் அரிகுறள்ஆய்* முன்னும் இராமன்ஆய்
தான்ஆய்* பின்னும் இராமன்ஆய் தாமோதரன்ஆய்* கற்கியும்
ஆனான் தன்னைக்* கண்ணபுரத்து அடியன்* கலியன் ஒலிசெய்த*
தேன்ஆர் இன்சொல் தமிழ்மாலை* செப்ப பாவம் நில்லாவே. (2)
கைம்மான மதயானை* இடர்தீர்த்த கருமுகிலை*
மைம்மான மணியை* அணிகொள் மரகதத்தை*
எம்மானை எம்பிரானை ஈசனை* என்மனத்துள்-
அம்மானை* அடியேன் அடைந்து உய்ந்து போனேனே. (2)
மிக்கானை* மறைஆய் விரிந்த விளக்கை,* என்னுள்-
புக்கானை* புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை*
தக்கானை கடிகைத்* தடங்குன்றின் மிசைஇருந்த*
அக்காரக் கனியை* அடைந்து உய்ந்து போனேனே. (2)
செருநீர வேல்வலவன்* கலிகன்றி மங்கையர்கோன்*
கருநீர் முகில்வண்ணன்* கண்ண புரத்தானை*
இருநீர்இன் தமிழ்* இன்இசை மாலைகள் கொண்டுதொண்டீர்*
வரும்நீர் வையம்உய்ய* இவைபாடி ஆடுமினே. (2)
வண்டுஆர்பூ மாமலர் மங்கை* மணநோக்கம்
உண்டானே* உன்னை உகந்துஉகந்து* உன்தனக்கே
தொண்டுஆனேற்கு* என்செய்கின்றாய் சொல்லு நால்வேதம்
கண்டானே* கண்ணபுரத்து உறை அம்மானே! (2)
மற்றும் ஓர்தெய்வம் உளதுஎன்று* இருப்பாரோடு-
உற்றிலேன்* உற்றதும்* உன்அடியார்க்கு அடிமை*
மற்றுஎல்லாம் பேசிலும்* நின்திரு எட்டுஎழுத்தும்-
கற்று நான் கண்ணபுரத்து உறை அம்மானே! (2)
கண்டசீர்க்* கண்ணபுரத்து உறை அம்மானை*
கொண்டசீர்த் தொண்டன்* கலியன் ஒலிமாலை*
பண்டமாய்ப் பாடும்* அடியவர்க்கு எஞ்ஞான்றும்*
அண்டம்போய் ஆட்சி* அவர்க்கு அது அறிந்தோமே. (2)
வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய* வாள்அரவின் அணை மேவி,*
சங்கம்ஆர் அம்கை தடமலர் உந்தி* சாமமா மேனி என் தலைவன்,*
அங்கம்ஆறு ஐந்துவேள்வி நால்வேதம்* அருங்கலை பயின்று,* எரி மூன்றும்-
செங்கையால் வளர்க்கும் துளக்கம்இல் மனத்தோர்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே. (2)
பொன்இவர் மேனி மரகதத்தின்* பொங்கு இளஞ் சோதி அகலத்து ஆரம்,*
மின்இவர் வாயில் நல் வேதம் ஓதும்* வேதியர் வானவர் ஆவர் தோழீ,*
என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி* ஏந்துஇளங் கொங்கையும் நோககுகின்றார்,*
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்* அச்சோ ஒருவர் அழகியவா! (2)
அன்னமும் கேழலும் மீனும்ஆய* ஆதியை நாகை அழகியாரை,*
கன்னிநல் மாமதிள் மங்கை வேந்தன்* காமரு சீர்க்கலி கன்றி,* குன்றா-
இன்இசையால் சொன்ன செஞ்சொல் மாலை* ஏழும் இரண்டும் ஓர்ஒன்றும் வல்லார்,*
மன்னவர்ஆய் உலகுஆண்டு* மீண்டும் வானவர்ஆய் மகிழ்வு எய்துவரே. (2)
தன்னை நைவிக்கிலேன்* வல்வினையேன் தொழுதும்எழு,*
பொன்னை நைவிக்கும்* அப்பூஞ் செருந்தி மணநீழல்வாய்,*
என்னை நைவித்து* எழில் கொண்டு அகன்ற பெருமான்இடம்,*
புன்னை முத்தம்பொழில் சூழ்ந்து* அழகுஆய புல்லாணியே. (2)
இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும்* எழில்தாமரைப்,*
புலங்கள் முற்றும் பொழில்சூழ்ந்த* அழகுஆய புல்லாணிமேல்*
கலங்கல் இல்லாப் புகழான்* கலியன் ஒலிமாலைகள்,*
வலம்கொள் தொண்டர்க்கு இடம்ஆவது* பாடுஇல் வைகுந்தமே (2)
காவார் மடல்பெண்ணை* அன்றில்அரி குரலும்,*
ஏவாயின் ஊடுஇயங்கும்* எஃகின் கொடிதாலோ,*
பூஆர் மணம்கமழும்* புல்லாணி கைதொழுதேன்,*
பாவாய்! இதுநமக்குஓர்* பான்மையே ஆகாதே. (2)
வில்லால் இலங்கை மலங்க* சரம்துரந்த,*
வல்லாளன் பின்போன* நெஞ்சம் வரும் அளவும்,*
எல்லாரும் என்தன்னை* ஏசிலும் பேசிடினும்,*
புல்லாணி எம்பெருமான்* பொய் கேட்டுஇருந்தேனே (2)
பொன்அலரும் புன்னைசூழ்* புல்லாணி அம்மானை*
மின்இடையார் வேட்கைநோய் கூர* இருந்ததனை,*
கல்நவிலும் திண்தோள்* கலியன் ஒலிவல்லார்,*
மன்னவர்ஆய் மண்ஆண்டு* வான்நாடும் முன்னுவரே (2)
தவள இளம்பிறை துள்ளும்முந்நீர்* தண்மலர்த் தென்றலோடு அன்றில்ஒன்றி-
துவள,* என் நெஞ்சகம் சோர ஈரும்* சூழ்பனி நாள் துயிலாது இருப்பேன்,*
இவளும் ஓர் பெண்கொடி என்று இரங்கார்* என்நலம் ஐந்தும்முன் கொண்டுபோன*
குவளை மலர்நிற வண்ணர்மன்னு* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (2)
சோத்துஎன நின்று தொழ இரங்கான்* தொல்நலம் கொண்டுஎனக்கு இன்றுதாறும்*
போர்ப்பதுஓர் பொன்படம் தந்துபோனான்* போயின ஊர்அறியேன்,* என்கொங்கை-
மூத்திடுகின்றன* மற்றுஅவன் தன் மொய்அகலம் அணை யாதுவாளா,*
கூத்தன் இமையவர்கோன் விரும்பும்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். (2)
செற்றவன் தென்இலங்கை மலங்க* தேவர்பிரான் திருமாமகளைப்,*
பெற்றும் என் நெஞ்சகம் கோயில்கொண்ட* பேர்அருளாளன் பெருமைபேசக்-
கற்றவன்* காமரு சீர்க் கலியன்* கண்அகத்தும் மனத்தும் அகலாக்--
கொற்றவன்,* முற்று உலகுஆளி நின்ற* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். (2)
அக்கும் புலியின்* அதளும் உடையார்* அவர்ஒருவர்
பக்கம் நிற்க நின்ற* பண்பர்ஊர் போலும்*
தக்க மரத்தின் தாழ்சினைஏறி,* தாய்வாயில்-
கொக்கின் பிள்ளை* வெள்இறவு உண்ணும் குறுங்குடியே. (2)
சிலையால் இலங்கை செற்றான்* மற்றுஓர் சினவேழம்,*
கொலைஆர் கொம்பு கொண்டான் மேய* குறுங்குடிமேல்,*
கலைஆர் பனுவல் வல்லான்* கலியன் ஒலிமாலை*
நிலைஆர் பாடல் பாடப்* பாவம் நில்லாவே (2)
தந்தை தாய் மக்களே* சுற்றம்என்று உற்றவர் பற்றி நின்ற,*
பந்தம்ஆர் வாழ்க்கையை* நொந்து நீ பழிஎனக் கருதினாயேல்,*
அந்தம்ஆய் ஆதிஆய்* ஆதிக்கும் ஆதிஆய் ஆயன்ஆய,*
மைந்தனார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!. (2)
முந்துற உரைக்கேன் விரைக்குழல் மடவார்* கலவியை விடுதடு மாறல்,*
அந்தரம் ஏழும் அலைகடல் ஏழும் ஆய* எம் அடிகள்தம் கோயில்,*
சந்தொடு மணியும் அணிமயில் தழையும்* தழுவி வந்து அருவிகள் நிரந்து,*
வந்துஇழி சாரல் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே! (2)
வண்டுஅமர் சாரல் மாலிருஞ் சோலை* மாமணி வண்ணரை வணங்கும்,*
தொண்டரைப் பரவும் சுடர்ஒளி நெடுவேல்* சூழ் வயல்ஆலி நல்நாடன்*
கண்டல் நல்வேலி மங்கையர் தலைவன்* கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்,*
கொண்டு இவைபாடும் தவம்உடையார்கள்* ஆள்வர் இக் குரைகடல்உலகே (2)
மூவரில் முன்முதல்வன்* முழங்குஆர் கடலுள்கிடந்து,*
பூவளர்உந்தி தன்னுள்* புவனம் படைத்து உண்டுஉமிழ்ந்த,*
தேவர்கள் நாயகனை* திருமாலிருஞ் சோலைநின்ற,*
கோவலர் கோவிந்தனை* கொடிஏர்இடை கூடும்கொலோ! (2)
புனைவளர் பூம்பொழில் ஆர்* பொன்னி சூழ் அரங்க நகருள்-
முனைவனை,* மூவுலகும் படைத்த முதல் மூர்த்திதன்னை,*
சினைவளர் பூம்பொழில் சூழ்* திருமாலிருஞ் சோலைநின்றான்*
கனைகழல் காணும்கொலோ?* கயல் கண்ணி எம்காரிகையே! (2)
நேசம்இலாதவர்க்கும்* நினையாதவர்க்கும் அரியான்,*
வாசமலர்ப் பொழில்சூழ்* வடமா மதுரைப் பிறந்தான்,*
தேசம்எல்லாம் வணங்கும்* திருமாலிருஞ் சோலைநின்ற,*
கேசவ நம்பி தன்னைக்* கெண்டை ஒண்கண்ணி காணும்கொலோ! (2)
வலம்புரி ஆழியனை* வரைஆர் திரள்தோளன் தன்னை,*
புலம்புரி நூலவனை* பொழில் வேங்கட வேதியனை,*
சிலம்புஇயல் ஆறுஉடைய* திருமாலிருஞ் சோலைநின்ற,*
நலம்திகழ் நாரணனை* நணுகும்கொல்? என்நல்நுதலே! (2)
தேடற்கு அரியவனை* திருமாலிருஞ் சோலை நின்ற,*
ஆடல் பறவையனை* அணிஆய்இழை காணும்என்று,*
மாடக் கொடிமதிள் சூழ்* மங்கையார் கலிகன்றிசொன்ன,*
பாடல் பனுவல் பத்தும்* பயில்வார்க்கு இல்லை பாவங்களே! (2)
ஆலும்மா வலவன் கலிகன்றி* மங்கையர் தலைவன்* அணிபொழில்-
சேல்கள் பாய்கழனித்* திருக்கோட்டியூரானை,*
நீல மாமுகில் வண்ணனை* நெடுமாலை இன்தமிழால் நினைந்த,* இந்-
நாலும் ஆறும் வல்லார்க்கு* இடம்ஆகும் வான்உலகே. (2)
ஒருநல் சுற்றம்* எனக்குஉயிர் ஒண்பொருள்*
வரும்நல் தொல்கதி* ஆகிய மைந்தனை*
நெருநல் கண்டது* நீர்மலை இன்றுபோய்*
கருநெல் சூழ்* கண்ண மங்கையுள் காண்டுமே (2)
பொன்னை மாமணியை* அணி ஆர்ந்ததுஓர்-
மின்னை* வேங்கடத்து உச்சியில் கண்டுபோய்*
என்னை ஆளுடை ஈசனை* எம்பிரான்-
தன்னை* யாம் சென்று காண்டும்* தண்காவிலே. (2)
பெற்றமாளிகைப்* பேரில் மணாளனை*
கற்ற நூல்* கலிகன்றி உரைசெய்த*
சொல்திறம்இவை* சொல்லிய தொண்டர்கட்கு*
அற்றம் இல்லை* அண்டம் அவர்க்கு ஆட்சியே (2)
இரக்கம்இன்றி எம்கோன் செய்த தீமை* இம்மையே எமக்கு எய்திற்றுக் காணீர்*
பரக்கயாம் இன்று உரைத்துஎன் இராவணன் பட்டனன்* இனி யாவர்க்கு உரைக்கோம்*
குரக்கு நாயகர்காள்! இளங்கோவே* கோல வல்வில் இராம பிரானே*
அரக்கர் ஆடுஅழைப்பார் இல்லை* நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ. (2)
அங்கு அவ்வானவர்க்கு ஆகுலம் தீர* அணி இலங்கை அழித்தவன் தன்னை*
பொங்கு மாவலவன் கலி கன்றி* புகன்ற பொங்கத்தம் கொண்டு,* இவ்உலகினில்-
எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர்!* இம்மையே இடர் இல்லை,* இறந்தால்-
தங்கும்ஊர் அண்டமே கண்டு கொள்மின்* சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ! (2)
ஏத்துகின்றோம் நாத்தழும்ப* இராமன் திருநாமம்*
சோத்தம் நம்பீ சுக்கிரீவா!* உம்மைத் தொழுகின்றோம்*
வார்த்தை பேசீர் எம்மை* உங்கள் வானரம் கொல்லாமே*
கூத்தர் போல ஆடுகின்றோம்* குழமணி தூரமே (2)
வென்ற தொல்சீர்த் தென்இலங்கை* வெம்சமத்து* அன்றுஅரக்கர்-
குன்றம் அன்னார் ஆடி உய்ந்த* குழமணி தூரத்தைக்*
கன்றி நெய்ந்நீர் நின்ற வேல்கைக்* கலியன் ஒலிமாலை*
ஒன்றும்ஒன்றும் ஐந்தும் மூன்றும்* பாடி நின்று ஆடுமினே (2)
சந்த மலர்க்குழல் தாழ* தான் உகந்துஓடி தனியே-
வந்து,* என் முலைத் தடம்தன்னை வாங்கி* நின் வாயில் மடுத்து,*
நந்தன் பெறப்பெற்ற நம்பீ!* நான் உகந்துஉண்ணும் அமுதே,*
எந்தை பெருமானே! உண்ணாய்* என் அம்மம் சேமம் உண்ணாயே (2)
இம்மை இடர்கெட வேண்டி* ஏந்துஎழில் தோள்கலி அன்றி*
செம்மைப் பனுவல்நூல் கொண்டு* செங்கண் நெடியவன் தன்னை*
அம்மம் உண்என்று உரைக்கின்ற* பாடல் இவை ஐந்தும் ஐந்தும்*
மெய்ம்மை மனத்து வைத்துஏத்த* விண்ணவர் ஆகலும்ஆமே (2)
பூங்கோதை ஆய்ச்சி* கடைவெண்ணெய் புக்குஉண்ண,*
ஆங்குஅவள் ஆர்த்துப்* புடைக்க புடையுண்டு*
ஏங்கி இருந்து* சிணுங்கி விளையாடும்*
ஓங்குஓத வண்ணனே! சப்பாணி*ஒளிமணி வண்ணனே! சப்பாணி (2)
கார்ஆர் புயல்கைக்* கலிகன்றி மங்கையர்கோன்,*
பேராளன் நெஞ்சில்* பிரியாது இடம்கொண்ட*
சீராளா செந்தாமரைக் கண்ணா!* தண்துழாய்த்*
தார்ஆளா, கொட்டாய் சப்பாணி!* தடமார்வா கொட்டாய் சப்பாணி. (2)
எங்கானும் ஈதுஒப்பதுஓர் மாயம்உண்டே?* நரநாரணன் ஆய் உலகத்து அறநூல்*
சிங்காமை விரித்தவன் எம்பெருமான்* அதுஅன்றியும் செஞ்சுடரும் நிலனும்,*
பொங்குஆர் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புக* பொன்மிடறு அத்தனைபோது,*
அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே. (2)
நின்றார் முகப்புச் சிறிதும் நினையான்* வயிற்றை நிறைப்பான் உறிப்பால் தயிர்நெய்,*
அன்றுஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி* உரலோடு ஆப்புண்டிருந்த பெருமான் அடிமேல்,*
நன்றுஆய தொல்சீர் வயல் மங்கையர்கோன்* கலியன் ஒலிசெய்த தமிழ்மாலை வல்லார்,*
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி* இமையோர்க்கும் அப்பால் செலஎய்துவாரே. (2)
மானம்உடைத்து உங்கள் ஆயர் குலம் அதனால்* பிறர் மக்கள் தம்மை*
ஊனம்உடையன செய்யப் பெறாய்என்று* இரப்பன் உரப்ப கில்லேன்*
நானும் உரைத்திலேன் நந்தன் பணித்திலன்* நங்கைகாள்! நான்என் செய்கேன்?
தானும்ஓர் கன்னியும் கீழை அகத்துத்* தயிர்கடை கின்றான் போலும்! (2)
அன்ன நடை மட ஆய்ச்சி வயிறுஅடித்து அஞ்ச* அருவரை போல்,*
மன்னு கருங்களிற்று ஆர்உயிர் வவ்விய* மைந்தனை மாகடல் சூழ்,*
கன்னிநல் மாமதிள் மங்கையர் காவலன்* காமரு சீர்க்கலிகன்றி*
இன்இசை மாலைகள் ஈர்ஏழும் வல்லவர்க்கு* ஏதும் இடர் இல்லையே. (2)
காதில் கடிப்புஇட்டு* கலிங்கம் உடுத்து,*
தாதுநல்ல* தண்அம் துழாய் கொடுஅணிந்து,*
போது மறுத்து* புறமே வந்து நின்றீர்,*
ஏதுக்கு இதுஎன்?* இதுஎன்? இதுஎன்னோ! (2)
அல்லிக் கமலக் கண்ணனை* அங்கு ஓர்ஆய்ச்சி*
எல்லிப் பொழுதுஊடிய* ஊடல் திறத்தைக்,*
கல்லின் மலிதோள்* கலியன் சொன்ன மாலை,*
சொல்லித் துதிப்பார் அவர்* துக்கம் இலரே. (2)
புள்உருஆகி நள்இருள் வந்த* பூதனை மாள,* இலங்கை-
ஒள்எரி மண்டி உண்ணப் பணித்த* ஊக்கம் அதனை நினைந்தோ,?*
கள்அவிழ் கோதை காதலும்* எங்கள் காரிகை மாதர் கருத்தும்,*
பிள்ளைதன் கையில் கிண்ணமே ஒக்கப்* பேசுவது எந்தை பிரானே! (2)
வேட்டத்தைக் கருதாது அடிஇணை வணங்கி* மெய்ம்மையே நின்று எம்பெருமானை,*
வாள்திறல் தானை மங்கையர் தலைவன்* மானவேல் கலியன்வாய் ஒலிகள்,*
தோட்டுஅலர் பைந்தார்ச் சுடர்முடியானைப்* பழமொழியால் பணிந்து உரைத்த,*
பாட்டுஇவை பாட பத்திமை பெருகிச்* சித்தமும் திருவொடு மிகுமே (2)
திருத்தாய் செம்போத்தே,!*
திருமாமகள் தன்கணவன்,*
மருத்தார் தொல்புகழ்* மாதவனை வர*
திருத்தாய் செம்போத்தே! (2)
சொல்லாய் பைங்கிளியே,*
சுடர்ஆழி வலன்உயர்த்த,*
மல்ஆர் தோள்* வட வேங்கடவனைவர,*
சொல்லாய் பைங்கிளியே! (2)
இன்னார் என்றுஅறியேன்,*
அன்னே! ஆழியொடும்,*
பொன்ஆர் சார்ங்கம் உடைய அடிகளை,*
இன்னார் என்றுஅறியேன். (2)
தொண்டீர் பாடுமினோ,*
சுரும்புஆர்பொழில் மங்கையர்கோன்,*
ஒண்தார் வேல்கலியன் ஒலி மாலைகள்,*
தொண்டீர்! பாடுமினோ (2)
குன்றம் ஒன்று எடுத்துஏந்தி,* மாமழை-
அன்று காத்த அம்மான்,* அரக்கரை-
வென்ற வில்லியார்* வீரமே கொலோ,?*
தென்றல் வந்து* தீ வீசும் என்செய்கேன்! (2)
குன்றம் எடுத்து மழைதடுத்து* இளையாரொடும்*
மன்றில் குரவை பிணைந்த மால்* என்னை மால்செய்தான்,*
முன்றில் தனிநின்ற பெண்ணை மேல்* கிடந்தீர்கின்ற*
அன்றிலின் கூட்டைப்* பிரிக்ககிற்பவர் ஆர்கொலோ! (2)
வென்றி விடையுடன்* ஏழடர்த்த அடிகளை,*
மன்றில் மலிபுகழ்* மங்கைமன் கலிகன்றிசொல்,*
ஒன்று நின்ற ஒன்பதும்* உரைப்பவர் தங்கள்மேல்*
என்றும் நில்லா வினை* ஒன்றும் சொல்லில் உலகிலே (2)
மன்னிலங்கு பாரதத்துத்* தேரூர்ந்து,* மாவலியைப்-
பொன்னிலங்கு திண்விலங்கில் வைத்துப்* பொருகடல்சூழ்*
தென்னிலங்கை ஈடழித்த* தேவர்க்கு இதுகாணீர்*
என்னிலங்கு சங்கோடு* எழில் தோற்றிருந்தேனே!. (2)
பெற்றாரார்* ஆயிரம் பேரானைப்,* பேர்பாடப்-
பெற்றான்* கலியன் ஒலிசெய் தமிழ்மாலை,*
கற்றார் ஓ! முற்றுலகு ஆள்வர்* இவைகேட்கல்-
உற்றார்க்கு,* உறுதுயர் இல்லை உலகத்தே (2)
நிலைஇடம் எங்கும் இன்றி நெடுவெள்ளம் உம்பர்* வளநாடு மூட இமையோர்*
தலைஇட மற்றுஎமக்குஓர் சரண்இல்லை என்ன* அரண்ஆவன் என்னும் அருளால்*
அலைகடல் நீர்குழம்ப அகடுஆட ஓடி* அகல் வான்உரிஞ்ச,* முதுகில்-
மலைகளை மீது கொண்டு வரும்மீனை மாலை* மறவாது இறைஞ்சு என் மனனே! (2)
கொலைகெழு செம்முகத்த களிறுஒன்று கொன்று* கொடியோன் இலங்கை பொடியா*
சிலைகெழு செஞ்சரங்கள் செலஉய்த்த நங்கள்* திருமாலை, வேலை புடைசூழ்*
கலிகெழு மாட வீதி வயல்மங்கை மன்னு* கலிகன்றி சொன்ன பனுவல்,*
ஒலிகெழு பாடல் பாடி உழல்கின்ற தொண்டர்* அவர்ஆள்வர் உம்பர் உலகே. (2)
மான்அமரும் மென்நோக்கி* வைதேவிஇன் துணையா,*
கான்அமரும் கல்அதர்போய்* காடுஉறைந்தான் காண்ஏடீ*
கான்அமரும் கல்அதர்போய்* காடுஉறைந்த பொன்அடிக்கள்,*
வானவர்-தம் சென்னி* மலர்கண்டாய் சாழலே (2)
தேவரையும் அசுரரையும்* திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்,*
யாவரையும் ஒழியாமே* எம்பெருமான் உண்டுஉமிழ்ந்தது அறிந்துசொன்ன,*
காவளரும் பொழில்மங்கைக்* கலிகன்றி ஒலிமாலை கற்று வல்லார்,*
பூவளரும் திருமகளால் அருள்பெற்றுப்* பொன்உலகில் பொலிவர் தாமே. (2)
நீள்நாகம் சுற்றி* நெடுவரைநட்டு,* ஆழ்கடலைப்-
பேணான் கடைந்து* அமுதம் கொண்டுஉகந்த பெம்மானை,*
பூண்ஆர மார்வனை* புள்ஊரும் பொன்மலையை,*
காணாதார் கண்என்றும்* கண்அல்ல கண்டாமே (2)
தேனொடு வண்டுஆலும்* திருமாலிருஞ்சோலை,*
தான்இடமாக் கொண்டான்* தடமலர்க் கண்ணிக்காய்,*
ஆன்விடை ஏழ்அன்று அடர்த்தாற்கு* ஆள்ஆனார் அல்லாதார்,*
மானிடவர் அல்லர் என்று* என்மனத்தே வைத்தேனே. (2)
மெய்ந்நின்ற* பாவம் அகல,* திருமாலைக்-
கைந்நின்ற ஆழியான்* சூழும் கழல்சூடிக்,*
கைந்நின்ற வேல்கைக்* கலியன் ஒலிமாலை,*
ஐயொன்றும் ஐந்தும்* இவைபாடி ஆடுமினே. (2)
மாற்றம்உள* ஆகிலும் சொல்லுவன்,* மக்கள்-
தோற்றக் குழி* தோற்றுவிப்பாய் கொல்என்று இன்னம்,*
ஆற்றங்கரை வாழ் மரம்போல்* அஞ்சுகின்றேன்,*
நாற்றம் சுவை* ஊறு ஒலிஆகிய நம்பீ! (2)
வேம்பின்புழு* வேம்புஅன்றி உண்ணாது,* அடியேன்-
நான்பின்னும்* உன்சேவடிஅன்றி நயவேன்,*
தேம்பல் இளந்திங்கள்* சிறைவிடுத்து,* ஐவாய்ப்-
பாம்பின் அணைப்* பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ! (2)
அணிஆர் பொழில்சூழ்* அரங்க நகர்அப்பா,*
துணியேன் இனி* நின் அருள்அல்லது எனக்கு,*
மணியே! மணிமாணிக்கமே!* மதுசூதா,*
பணியாய் எனக்கு உய்யும்வகை,* பரஞ்சோதீ! (2)
நந்தா நரகத்து அழுந்தா வகை,* நாளும்-
எந்தாய்! தொண்டர்ஆனவர்க்கு* இன்அருள் செய்வாய்,*
சந்தோகா! தலைவனே!* தாமரைக் கண்ணா,*
அந்தோ! அடியேற்கு* அருளாய் உன்அருளே (2)
குன்றம் எடுத்து* ஆநிரை காத்தவன் தன்னை,*
மன்றில் புகழ்* மங்கை மன் கலிகன்றி சொல்,*
ஒன்று நின்ற ஒன்பதும்* வல்லவர்-தம்மேல்,*
என்றும் வினைஆயின* சாரகில்லாவே, (2)
அமரர்கள் தொழுது எழ* அலை கடல் கடைந்தவன் தன்னை*
அமர் பொழில் வளங் குருகூர்ச்* சடகோபன் குற்றேவல்கள்*
அமர் சுவை ஆயிரத்து* அவற்றினுள் இவை பத்தும் வல்லார்*
அமரரோடு உயர்வில் சென்று* அறுவர் தம் பிறவி அம் சிறையே. (2)
அம்சிறைய மட நாராய்! அளியத்தாய்!* நீயும் நின்
அம்சிறைய சேவலுமாய்* ஆஆ என்று எனக்கு அருளி*
வெம்சிறைப் புள் உயர்த்தார்க்கு* என் விடு தூதாய்ச் சென்றக்கால்*
வன்சிறையில் அவன் வைக்கில்* வைப்புண்டால் என் செயுமோ? (2)
அளவு இயன்ற ஏழ் உலகத்தவர்* பெருமான் கண்ணனை*
வள வயல் சூழ் வண் குருகூர்ச்* சடகோபன் வாய்ந்து உரைத்த*
அளவு இயன்ற அந்தாதி* ஆயிரத்துள் இப் பத்தின்*
வள உரையால் பெறலாகும்* வான் ஓங்கு பெரு வளமே. (2)
இவையும் அவையும் உவையும்* இவரும் அவரும் உவரும்,*
எவையும் எவரும் தன்னுளே* ஆகியும் ஆக்கியும் காக்கும்,*
அவையுள் தனிமுதல் எம்மான்* கண்ண பிரான் என் அமுதம்,*
சுவையன் திருவின் மணாளன்* என்னுடைச் சூழல் உளானே.
சூழல் பலபல வல்லான்* தொல்லை அம் காலத்து உலகைக்*
கேழல் ஒன்று ஆகி இடந்த* கேசவன் என்னுடை அம்மான்,*
வேழ மருப்பை ஒசித்தான்* விண்ணவர்க்கு எண்ணல் அரியான்*
ஆழ நெடுங் கடல் சேர்ந்தான்* அவன் என் அருகவிலானே.
உச்சியுள்ளே நிற்கும் தேவதேவற்குக்* கண்ண பிரானுக்கு,*
இச்சையுள் செல்ல உணர்த்தி* வண் குருகூர்ச் சடகோபன்,*
இச் சொன்ன ஆயிரத்துள்ளே* இவையும் ஓர் பத்து எம்பிராற்கு,*
நிச்சலும் விண்ணப்பம் செய்ய* நீள் கழல் சென்னி பொருமே.

SUBSCRIBE TO OUR WHATSAPP BROADCAST TO RECEIVE
TAMIL VEDAM UPDATES. FILL IN THE DETAILS BELOW AND CLICK JOIN US