பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
எங்கள் எம்இறை எம்பிரான்* இமையோர்க்கு நாயகன்,* ஏத்து அடியவர்-
தங்கள் தம்மனத்துப்* பிரியாது அருள்புரிவான்,*
பொங்கு தண்அருவி புதம்செய்ய* பொன்களே சிதற இலங்குஒளி,*
செங்கமலம் மலரும்* திருக்கோட்டியூரானே. ,
எவ்வநோய் தவிர்ப்பான்* எமக்குஇறை இன்நகைத் துவர்வாய்,* நிலமகள்--
செவ்வி தோய வல்லான்* திருமா மகட்குஇனியான்,*
மௌவல் மாலை வண்டுஆடும்* மல்லிகை மாலையொடும் அணைந்த,* மாருதம்-
தெய்வம் நாறவரும்* திருக்கோட்டியூரானே.
வெள்ளியான் கரியான்* மணிநிற வண்ணன் விண்ணவர் தமக்குஇறை,* எமக்கு-
ஒள்ளியான் உயர்ந்தான்* உலகுஏழும் உண்டு உமிழ்ந்தான்,*
துள்ளுநீர் மொண்டு கொண்டு* சாமரைக் கற்றை சந்தனம் உந்தி வந்துஅசை,*
தெள்ளுநீர்ப் புறவில்* திருக்கோட்டியூரானே.
ஏறும் ஏறி இலங்கும்ஒண் மழுப்பற்றும்* ஈசற்கு இசைந்து,* உடம்பில் ஓர்-
கூறுதான் கொடுத்தான்* குலமாமகட்கு இனியான்,*
நாறு செண்பகம் மல்லிகை மலர்புல்கி* இன்இள வண்டு,* நல்நறும்-
தேறல்வாய் மடுக்கும்* திருக்கோட்டியூரானே.
வங்க மாகடல் வண்ணன்* மாமணி வண்ணன் விண்ணவர் கோன்* மதுமலர்த்
தொங்கல் நீள்முடியான்* நெடியான் படிகடந்தான்,*
மங்குல் தோய்மணி மாட வெண்கொடி* மாகம்மீது உயர்ந்துஏறி,* வான்உயர்-
திங்கள் தான்அணவும்* திருக்கோட்டியூரானே.
காவலன் இலங்கைக்கு இறைகலங்க* சரம் செல உய்த்து,* மற்றுஅவன்-
ஏவலம் தவிர்த்தான்* என்னை ஆளுடை எம்பிரான்,*
நாவலம் புவிமன்னர் வந்து வணங்க* மால் உறைகின்றது இங்குஎன,*
தேவர் வந்துஇறைஞ்சும்* திருக்கோட்டியூரானே.
கன்று கொண்டு விளங்கனி எறிந்து* ஆநிரைக்கு அழிவுஎன்று,* மாமழை-
நின்று காத்துஉகந்தான்* நிலமாமகட்கு இனியான்,*
குன்றின் முல்லையின் வாசமும்* குளிர்மல்லிகை மணமும் அளைந்து,* இளம்-
தென்றல் வந்துஉலவும்* திருக்கோட்டியூரானே.
பூங்குருந்து ஒசித்து ஆனைகாய்ந்து* அரிமாச் செகுத்து,* அடியேனை ஆள்உகந்து-
ஈங்கு என்னுள் புகுந்தான்* இமையோர்கள் தம் பெருமான்,*
தூங்கு தண்பலவின்கனி* தொகுவாழையின் கனியொடு மாங்கனி*
தேங்கு தண்புனல் சூழ்* திருக்கோட்டியூரானே.
கோவைஇன் தமிழ் பாடுவார்* குடம்ஆடுவார் தட மாமலர்மிசை,*
மேவும் நான்முகனில்* விளங்கு புரிநூலர்,*
மேவும் நான்மறை வாணர்* ஐவகை வேள்வி ஆறுஅங்கம் வல்லவர் தொழும்,*
தேவ தேவபிரான்* திருக்கோட்டியூரானே.
ஆலும்மா வலவன் கலிகன்றி* மங்கையர் தலைவன்* அணிபொழில்-
சேல்கள் பாய்கழனித்* திருக்கோட்டியூரானை,*
நீல மாமுகில் வண்ணனை* நெடுமாலை இன்தமிழால் நினைந்த,* இந்-
நாலும் ஆறும் வல்லார்க்கு* இடம்ஆகும் வான்உலகே. (2)
மாலைநண்ணித்* தொழுதுஎழுமினோ வினைகெட*
காலைமாலை* கமலமலர் இட்டு நீர்*
வேலைமோதும் மதிள்சூழ்* திருக்கண்ணபுரத்து*
ஆலின்மேல்ஆல் அமர்ந்தான்* அடிஇணைகளே. (2)
கள்அவிழும் மலர்இட்டு* நீர்இறைஞ்சுமின்*
நள்ளிசேரும் வயல்சூழ்* கிடங்கின்புடை*
வெள்ளிஏய்ந்த மதிள்சூழ்* திருக்கண்ணபுரம்
உள்ளி* நாளும்தொழுது எழுமினோ தொண்டரே!
தொண்டர் நும்தம்* துயர்போகநீர் கமாய்*
விண்டுவாடாமலர்இட்டு* நீர்இறைஞ்சுமின்*
வண்டுபாடும் பொழில்சூழ்* திருக்கண்ணபுரத்து
அண்டவாணன்* அமரர்பெருமானையே
மானைநோக்கி* மடப்பின்னைதன் கேள்வனை*
தேனைவாடாமலர்இட்டு* நீர்இறைஞ்சுமின்*
வானைஉந்தும் மதிள்சூழ்* திருக்கண்ணபுரம்*
தான்நயந்த பெருமான்* சரண்ஆகுமே.
சரணம்ஆகும்* தனதாள் அடைந்தார்க்குஎல்லாம்*
மரணம்ஆனால்* வைகுந்தம் கொடுக்கும்பிரான்*
அரண்அமைந்த மதிள்சூழ்* திருக்கண்ணபுரத்
தரணியாளன்* தனதுஅன்பர்க்கு அன்புஆகுமே.
அன்பன்ஆகும்* தனதாள் அடைந்தார்க்குஎல்லாம்*
செம்பொன்ஆகத்து* அவுணன்உடல் கீண்டவன்,
நன்பொன்ஏய்ந்த மதிள்சூழ்* திருக்கண்ணபுரத்து
அன்பன்* நாளும் தன* மெய்யர்க்கு மெய்யனே
மெய்யன்ஆகும்* விரும்பித் தொழுவார்க்குஎல்லாம்*
பொய்யன்ஆகும்* புறமே தொழுவார்க்குஎல்லாம்*
செய்யில்வாளைஉகளும்* திருக்கண்ணபுரத்து
ஐயன்* ஆகத்துஅணைப்பார்கட்கு அணியனே.
அணியன்ஆகும்* தனதாள் அடைந்தார்க்குஎல்லாம்*
பிணியும்சாரா* பிறவிகெடுத்துஆளும்*
மணிபொன் ஏய்ந்தமதிள்சூழ்* திருக்கண்ணரம்
பணிமின்* நாளும் பரமேட்டிதன் பாதமே
பாதம்நாளும்* பணிய தணியும்பிணி*
ஏதம்சாரா* எனக்கேல் இனிஎன்குறை?*
வேதநாவர் விரும்பும்* திருக்கண்ணபுரத்து
ஆதியானை* அடைந்தார்க்கு அல்லல் இல்லையே.
இல்லை அல்லல்* எனக்கேல்இனி என்குறை?
அல்லிமாதர் அமரும்* திருமார்பினன்*
கல்லில் ஏய்ந்த மதிள்சூழ்* திருக்கண்ணபுரம்
சொல்ல* நாளும் துயர் பாடுசாராவே.
பாடுசாரா* வினைபற்றுஅற வேண்டுவீர்*
மாடம்நீடு* குருகூர்ச்சடகோபன்* சொல்
பாடலானதமிழ்* ஆயிரத்துள் இப்பத்தும்-
பாடிஆடிப்* பணிமின் அவன் தாள்களே (2)