விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செற்றவன் தென்இலங்கை மலங்க*  தேவர்பிரான் திருமாமகளைப்,*
    பெற்றும் என் நெஞ்சகம் கோயில்கொண்ட*  பேர்அருளாளன் பெருமைபேசக்-
    கற்றவன்*  காமரு சீர்க் கலியன்*  கண்அகத்தும் மனத்தும் அகலாக்--
    கொற்றவன்,*  முற்று உலகுஆளி நின்ற*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மனத்தும் - நெஞ்சினுள்ளும்
அகலா - விட்டுநீங்காத
கொற்றவன் - ஸர்வேச்வரனாய்
முற்றுலகு ஆளி - ஸகலலோகநாதனான பெருமான்
நின்ற - நித்யவாஸம்பண்ணப்பெற்ற குறுங்குடிக்கே, என்னை உய்த்திடுமின்

விளக்க உரை

மற்ற திருமொழிகளின் கடைப்பாசுரத்தில் பயனுரைத்துக் தலைக் கட்டுமாபோலே இப்பாசுரத்தில் இல்லை, ஆயினும் இதுகற்றார்க்குத் திருக்குறுங்குடி சேருவதே பயனாகும் என்று உணர்த்துகின்றமை உய்த்துணரத்தக்கது.

English Translation

The Lord of gods who burnt the city of Lanka, the benevolent Lord who is forever with the lotus-dame Lakshmi and yet graces my heart, the Lord who never leaves the heart and sight of the praise-singer kaliyan, the Lord who rules the universe, resides in kurungudi, so carry me there

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்