பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
அக்கும் புலியின்* அதளும் உடையார்* அவர்ஒருவர்
பக்கம் நிற்க நின்ற* பண்பர்ஊர் போலும்*
தக்க மரத்தின் தாழ்சினைஏறி,* தாய்வாயில்-
கொக்கின் பிள்ளை* வெள்இறவு உண்ணும் குறுங்குடியே. (2)
துங்கஆர் அரவத் திரைவந்து உலவ* தொடுகடலுள்,-
பொங்குஆர் அரவில் துயிலும்* புனிதர்ஊர் போலும்,*
செங்கால் அன்னம்* திகழ்தண் பணையில் பெடையோடும்,*
கொங்குஆர் கமலத்து* அலரில் சேரும் குறுங்குடியே.
வாழக் கண்டோம்* வந்து காண்மின் தொண்டீர்காள்,*
கேழல் செங்கண்* மாமுகில் வண்ணர் மருவும் ஊர்,*
ஏழைச் செங்கால்* இன்துணை நாரைக்கு இரை தேடி,*
கூழைப் பார்வைக்* கார்வயல் மேயும் குறுங்குடியே.
சிரம்முன் ஐந்தும் ஐந்தும்* சிந்தச் சென்று,* அரக்கன்-
உரமும் கரமும் துணித்த* உரவோன்ஊர் போலும்,*
இரவும் பகலும்* ஈன்தேன் முரல,* மன்றுஎல்லாம்-
குரவின் பூவே தான்* மணம் நாறும் குறுங்குடியே.
கவ்வைக் களிற்று மன்னர் மாள* கலிமாத்தேர்-
ஐவர்க்குஆய்,* அன்றுஅமரில் உய்த்தான் ஊர்போலும்,*
மைவைத்து இலங்கு* கண்ணார் தங்கள் மொழிஒப்பான்,*
கொவ்வைக் கனிவாய்க்* கிள்ளை பேசும் குறுங்குடியே.
தீநீர் வண்ண* மாமலர் கொண்டு விரை ஏந்தி,*
தூநீர் பரவித்* தொழுமின் எழுமின் தொண்டீர்காள்!,*
மாநீர் வண்ணர்* மருவி உறையும்இடம்,* வானில்-
கூன்நீர் மதியை* மாடம் தீண்டும் குறுங்குடியே..
வல்லிச்சிறு நுண்இடையாரிடை* நீர்வைக்கின்ற,*
அல்லல் சிந்தை தவிர* அடைமின் அடியீர்காள்!,*
சொல்லில் திருவே அனையார் கனிவாய் எயிறுஒப்பான்,*
கொல்லை முல்லை* மெல்அரும்பு ஈனும் குறுங்குடியே.
நார்ஆர்இண்டை* நாள்மலர் கொண்டு நம்தமர்காள்,*
ஆரா அன்போடு* எம்பெருமான் ஊர்அடைமின்கள்,*
தாரா ஆரும்* வார்புனல் மேய்ந்து வயல்வாழும்*
கூர்வாய் நாரை* பேடையொடு ஆடும் குறுங்குடியே.
நின்ற வினையும் துயரும் கெட* மாமலர்ஏந்தி,*
சென்று பணிமின் எழுமின்* தொழுமின் தொண்டீர்காள்,*
என்றும் இரவும் பகலும்* வரிவண்டு இசைபாட,*
குன்றின் முல்லை* மன்றிடை நாறும் குறுங்குடியே..
சிலையால் இலங்கை செற்றான்* மற்றுஓர் சினவேழம்,*
கொலைஆர் கொம்பு கொண்டான் மேய* குறுங்குடிமேல்,*
கலைஆர் பனுவல் வல்லான்* கலியன் ஒலிமாலை*
நிலைஆர் பாடல் பாடப்* பாவம் நில்லாவே (2)
உருகுமால் நெஞ்சம்* உயிரின் பரமன்றி*
பெருகுமால் வேட்கையும்* என்செய்கேன் தொண்டனேன்*
தெருவுஎல்லாம் காவிகமழ்* திருக்காட்கரை*
மருவிய மாயன்தன்* மாயம் நினைதொறே. (2)
நினைதொறும் சொல்லும்தொறும்* நெஞ்சு இடிந்துஉகும்*
வினைகொள்சீர் பாடிலும்* வேம்எனதுஆர்உயிர்*
சுனைகொள் பூஞ்சோலைத்* தென்காட்கரைஎன்அப்பா*
நினைகிலேன் நான்உனக்கு* ஆட்செய்யும் நீர்மையே.
நீர்மையால் நெஞ்சம்* வஞ்சித்துப் புகுந்து* என்னை
ஈர்மைசெய்து* என்உயிர்ஆய் என்உயிர் உண்டான்*
சீர்மல்குசோலைத்* தென்காட்கரைஎன்அப்பன்*
கார்முகில் வண்ணன்தன்* கள்வம் அறிகிலேன்.
அறிகிலேன் தன்னுள்* அனைத்துஉலகும் நிற்க*
நெறிமையால் தானும்* அவற்றுள் நிற்கும் பிரான்*
வெறிகமழ்சோலைத்* தென்காட்கரை என்அப்பன்*
சிறியவென்னாயிருண்ட திருஅருளே.
திருவருள் செய்பவன்போல* என்னுள்புகுந்து*
உருவமும் ஆருயிரும்* உடனே உண்டான்*
திருவளர்சோலைத்* தென்காட்கரைஎன்அப்பன்*
கருவளர்மேனி* என்கண்ணன் கள்வங்களே.
என்கண்ணன் கள்வம்* எனக்குச் செம்மாய்நிற்கும்*
அம்கண்ணன் உண்ட* என்ஆர்உயிர்க்கோதுஇது*
புன்கண்மை எய்தி* புலம்பி இராப்பகல்*
என்கண்ணன் என்று* அவன்காட்கரைஏத்துமே
காட்கரைஏத்தும்* அதனுள் கண்ணாஎன்னும்*
வேட்கை நோய்கூர* நினைந்து கரைந்துகும்*
ஆட்கொள் வான்ஒத்து* என்னுயிருண்ட மாயனால்*
கோள்குறைபட்டது* என்னாருயிர் கோள்உண்டே.
கோள்உண்டான் அன்றிவந்து* என்உயிர் தான்உண்டான்*
நாளும்நாள்வந்து* என்னை முற்றவும் தான்உண்டான்*
காளநீர்மேகத்* தென்காட்கரை என்அப்பற்கு*
ஆள்அன்றேபட்டது* என்ஆர்உயிர் பட்டதே.
ஆருயிர் பட்டது* எனதுஉயிர் பட்டது*
பேர்இதழ்த் தாமரைக்கண்* கனிவாயதுஓர்*
கார்எழில் மேகத்* தென்காட்கரை கோயில்கொள்,
சீர்எழில் நால்தடம்தோள்* தெய்வ வாரிக்கே.
வாரிக்கொண்டு* உன்னைவிழுங்குவன் காணில்' என்று*
ஆர்வுஉற்ற என்னை ஒழிய* என்னில் முன்னம்
பாரித்துத்* தான்என்னை* முற்றப் பருகினான்*
கார்ஒக்கும்* காட்கரைஅப்பன் கடியனே.
கடியனாய்க் கஞ்சனைக்* கொன்றபிரான் தன்னை*
கொடிமதிள் தென்குருகூர்ச்* சடகோபன்சொல்*
வடிவுஅமைஆயிரத்து* இப்பத்தினால் சன்மம்-
முடிவுஎய்தி* நாசம்கண்டீர்கள் எம்கானலே (2)