பிரபந்த தனியன்கள்
சீராரும் மாடத் திருக்கோவ லூரதனுள்
காரார் கருமுகிலைக் காணப்புக்கு, - μராத்
திருக்கண்டேன் என்றுரைத்த சீரான் கழலே,
உரைக்கண்டாய் நெஞ்சே. உகந்து.
பாசுரங்கள்
புகுமதத்தால்* வாய்பூசி கீழ்தாழ்ந்து,* அருவி
உகுமதத்தால் கால்கழுவி கையால்,*- மிகுமதத்தேன்
விண்டமலர் கொண்டு* விறல் வேங்கடவனையே,*
கண்டு வணங்கும் களிறு.
களிறு முகில்குத்த* கைஎடுத்துஓடி,*
ஒளிறு மருப்புஒசிகை* யாளி பிளிறி-
விழ,* கொன்று நின்றுஅதிரும்* வேங்கடமே,* மேல்நாள்
குழக்கன்று* கொண்டுஎறிந்தான் குன்று.
குன்றுஒன்றின்ஆய* குறமகளிர் கோல்வளைக்கை,*
சென்று விளையாடும் தீம்கழைபோய்,* - வென்று
விளங்குமதி கோள்விடுக்கும்* வேங்கடமே,* மேலை
இளங்குமரர் கோமான் இடம்.
இடம்வலம் ஏழ்பூண்ட* இரவித் தேர்ஓட்டி,*
வடமுக வேங்கடத்து மன்னும்,* - குடம்நயந்த
கூத்தனாய் நின்றான்* குரைகழலே கூறுவதே,*
நாத்தன்னால் உள்ள நலம்.
நலமே வலிதுகொல்* நஞ்சுஊட்டு வன்பேய்,*
நிலமே புரண்டுபோய் வீழ,* - சலமேதான்
வெம்கொங்கை உண்டானை* மீட்டுஆய்ச்சி ஊட்டுவான்,*
தன்கொங்கை வாய்வைத்தாள் சார்ந்து.
சார்ந்துஅகடு தேய்ப்பத்* தடாவிய கோட்டுஉச்சிவாய்*
ஊர்ந்துஇயங்கும் வெண்மதியின்* ஒண்முயலைச்,* - சேர்ந்து
சினவேங்கை பார்க்கும்* திருமலையே,* ஆயன்
புனவேங்கை நாறும் பொருப்பு.
ஆய்ந்த அருமறையோன்* நான்முகத்தோன் நன்குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாள்அரக்கன்,* - ஏய்ந்த
முடிப்போது* மூன்றுஏழ்என்றுஎண்ணினான்,* ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண்.
அரண்ஆம் நமக்குஎன்றும்* ஆழி வலவன்
முரன்நாள் வலம்சுழிந்த மொய்ம்பன்,* - சரண்ஆமேல்
ஏதுகதி ஏதுநிலை* ஏதுபிறப்பு என்னாதே,*
ஓதுகதி மாயனையே ஓர்த்து.
ஓர்த்த மனத்தராய்* ஐந்துஅடக்கி ஆராய்ந்து,*
பேர்த்தால் பிறப்புஏழும் பேர்க்கலாம்,* - கார்த்த
விரைஆர் நறும்துழாய்* வீங்குஓத மேனி,*
நிரைஆர மார்வனையே நின்று.
நின்று எதிராய* நிரைமணித்தேர் வாணன்தோள்,*
ஒன்றிய ஈர்ஐஞ்ஞூறுஉடன் துணிய,* - வென்றுஇலங்கும்
ஆர்படுவான் நேமி* அரவுஅணையான் சேவடிக்கே,*
நேர்படுவான் தான்முயலும் நெஞ்சு.
நெஞ்சால்* நினைப்புஅரியனேலும்* நிலைப்பெற்று என்
நெஞ்சமே! பேசாய்* நினைக்குங்கால்,*- நெஞ்சத்துப்
பேராது நிற்கும்* பெருமானை என்கொலோ,*
ஓராது நிற்பது உணர்வு?
உணரில் உணர்வுஅரியன்* உள்ளம் புகுந்து*
புணரிலும் காண்புஅரியன் உண்மை,* - இணர்அணைய
கொங்குஅணைந்து வண்டுஅறையும்* தண்துழாய்க் கோமானை,*
எங்குஅணைந்து காண்டும் இனி?
இனிஅவன் மாயன் என உரைப்பரேலும்,*
இனிஅவன் காண்புஅரியனேலும்,* - இனியவன்
கள்ளத்தால் மண்கொண்டு* விண்கடந்த பைங்கழலான்,*
உள்ளத்தின் உள்ளே உளன்.
உளனாய* நான்மறையின் உட்பொருளை,* உள்ளத்து-
உளனாகத் தேர்ந்து உணர்வரேலும்,* - உளனாய
வண்தாமரை நெடுங்கண்* மாயவனை யாவரே,*
கண்டார் உகப்பர் கவி?
கவியினார் கைபுனைந்து* கண்ஆர் கழல்போய்,*
செவியின்ஆர் கேள்வியராய்ச் சேர்ந்தார்,* - புவியினார்
போற்றி உரைக்க* பொலியுமே,* பின்னைக்குஆய்
ஏற்றுஉயிரை அட்டான் எழில்?
எழில்கொண்ட* மின்னுக் கொடிஎடுத்து,* வேகத்-
தொழில்கொண்டு தான்முழங்கித் தோன்றும்,* - எழில் கொண்ட
நீர்மேகம் அன்ன* நெடுமால் நிறம்போல,*
கார்வானம் காட்டும் கலந்து.
கலந்து மணிஇமைக்கும் கண்ணா,* நின் மேனி
மலர்ந்து* மரகதமே காட்டும்,* - நலம்திகழும்
கொந்தின்வாய் வண்டுஅறையும்* தண்துழாய்க் கோமானை,*
அந்திவான் காட்டும் அது.
அது நன்று இது தீதுஎன்று* ஐயப்படாதே,*
மதுநின்ற தண்துழாய் மார்வன்,* - பொதுநின்ற*
பொன்அம் கழலே தொழுமின்,* முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து.
முடிந்த பொழுதில்* குறவாணர்,* ஏனம்
படிந்துஉழுசால்* பைந்தினைகள் வித்த,* - தடிந்துஎழுந்த
வேய்ங்கழைபோய்* விண்திறக்கும் வேங்கடமே,* மேல்ஒருநாள்
தீம்குழல்* வாய் வைத்தான் சிலம்பு.
சிலம்பும் செறிகழலும் சென்றுஇசைப்ப,* விண்ஆறு
அலம்பிய சேவடிபோய்,* அண்டம் - புலம்பியதோள்*
எண்திசையும் சூழ* இடம்போதாது என்கொலோ,*
வண்துழாய் மால்அளந்த மண்?
மண்உண்டும்* பேய்ச்சி முலைஉண்டும் ஆற்றாதாய்,*
வெண்ணெய் விழுங்க வெகுண்டு,* ஆய்ச்சி - கண்ணிக்
கயிற்றினால் கட்ட* தான் கட்டுண்டு இருந்தான்,*
வயிற்றினோடு ஆற்றா மகன்.
மகன்ஒருவர்க்கு அல்லாத* மாமேனி மாயன்,*
மகன்ஆம் அவன்மகன் தன்* காதல் மகனைச்*
சிறைசெய்த வாணன்தோள்* செற்றான் கழலே*
நிறைசெய்து என் நெஞ்சே! நினை.
நினைத்துஉலகில் ஆர்தெளிவார்* நீண்ட திருமால்,*
அனைத்துஉலகும் உள்ஒடுக்கி ஆல்மேல்,* - கனைத்துஉலவு
வெள்ளத்துஓர் பிள்ளையாய்* மெள்ளத் துயின்றானை,*
உள்ளத்தே வைநெஞ்சமே! உய்த்து.
உய்த்துஉணர்வு என்னும்* ஒளிகொள் விளக்குஏற்றி,*
வைத்துஅவனை நாடி வலைப்படுத்தேன்,* - மெத்தெனவே
நின்றான் இருந்தான்* கிடந்தான் என் நெஞ்சத்து,*
பொன்றாமை மாயன் புகுந்து.
புகுந்துஇலங்கும்* அந்திப் பொழுதத்து,* அரியாய்
இகழ்ந்த* இரணியனது ஆகம்,* - சுகிர்ந்துஎங்கும்
சிந்தப் பிளந்த* திருமால் திருவடியே*
வந்தித்து என்நெஞ்சமே! வாழ்த்து.
வாழ்த்திய வாயராய்* வானோர் மணிமகுடம்*
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே,* - கேழ்த்த
அடித்தாமரை* மலர்மேல் மங்கை மணாளன்,*
அடித்தாமரைஆம் அலர்.
அலர்எடுத்த உந்தியான்* ஆங்குஎழிலஆய,*
மலர்எடுத்த மாமேனி மாயன்,* - அலர்எடுத்த
வண்ணத்தான் மாமலரான்* வார்சடையான்* என்றுஇவர்கட்கு
எண்ணத்தான்ஆமோ இமை?
இமம்சூழ் மலையும்* இருவிசும்பும் காற்றும்,*
அமம்சூழ்ந்துஅற விளங்கித் தோன்றும்,* - நமன்சூழ்
நரகத்து* நம்மை நணுகாமல் காப்பான்,*
துரகத்தை வாய்பிளந்தான் தொட்டு.
தொட்ட படைஎட்டும்* தோலாத வென்றியான்,*
அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று,* - குட்டத்துக்
கோள்முதலை துஞ்ச* குறித்துஎறிந்த சக்கரத்தான்*
தாள்முதலே நங்கட்குச் சார்வு (2)
சார்வு நமக்குஎன்றும் சக்கரத்தான்,* தண்துழாய்த்
தார்வாழ்* வரைமார்பன் தான்முயங்கும்,* - கார்ஆர்ந்த
வான்அமரும் மின்இமைக்கும்* வண்தாமரைநெடுங்கண்,*
தேன்அமரும் பூமேல் திரு. (2)