பிரபந்த தனியன்கள்
சீராரும் மாடத் திருக்கோவ லூரதனுள்
காரார் கருமுகிலைக் காணப்புக்கு, - μராத்
திருக்கண்டேன் என்றுரைத்த சீரான் கழலே,
உரைக்கண்டாய் நெஞ்சே. உகந்து.
பாசுரங்கள்
சிலம்பும் செறிகழலும் சென்றுஇசைப்ப,* விண்ஆறு
அலம்பிய சேவடிபோய்,* அண்டம் - புலம்பியதோள்*
எண்திசையும் சூழ* இடம்போதாது என்கொலோ,*
வண்துழாய் மால்அளந்த மண்?
மண்உண்டும்* பேய்ச்சி முலைஉண்டும் ஆற்றாதாய்,*
வெண்ணெய் விழுங்க வெகுண்டு,* ஆய்ச்சி - கண்ணிக்
கயிற்றினால் கட்ட* தான் கட்டுண்டு இருந்தான்,*
வயிற்றினோடு ஆற்றா மகன்.
மகன்ஒருவர்க்கு அல்லாத* மாமேனி மாயன்,*
மகன்ஆம் அவன்மகன் தன்* காதல் மகனைச்*
சிறைசெய்த வாணன்தோள்* செற்றான் கழலே*
நிறைசெய்து என் நெஞ்சே! நினை.
நினைத்துஉலகில் ஆர்தெளிவார்* நீண்ட திருமால்,*
அனைத்துஉலகும் உள்ஒடுக்கி ஆல்மேல்,* - கனைத்துஉலவு
வெள்ளத்துஓர் பிள்ளையாய்* மெள்ளத் துயின்றானை,*
உள்ளத்தே வைநெஞ்சமே! உய்த்து.
உய்த்துஉணர்வு என்னும்* ஒளிகொள் விளக்குஏற்றி,*
வைத்துஅவனை நாடி வலைப்படுத்தேன்,* - மெத்தெனவே
நின்றான் இருந்தான்* கிடந்தான் என் நெஞ்சத்து,*
பொன்றாமை மாயன் புகுந்து.
புகுந்துஇலங்கும்* அந்திப் பொழுதத்து,* அரியாய்
இகழ்ந்த* இரணியனது ஆகம்,* - சுகிர்ந்துஎங்கும்
சிந்தப் பிளந்த* திருமால் திருவடியே*
வந்தித்து என்நெஞ்சமே! வாழ்த்து.
வாழ்த்திய வாயராய்* வானோர் மணிமகுடம்*
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே,* - கேழ்த்த
அடித்தாமரை* மலர்மேல் மங்கை மணாளன்,*
அடித்தாமரைஆம் அலர்.
அலர்எடுத்த உந்தியான்* ஆங்குஎழிலஆய,*
மலர்எடுத்த மாமேனி மாயன்,* - அலர்எடுத்த
வண்ணத்தான் மாமலரான்* வார்சடையான்* என்றுஇவர்கட்கு
எண்ணத்தான்ஆமோ இமை?
இமம்சூழ் மலையும்* இருவிசும்பும் காற்றும்,*
அமம்சூழ்ந்துஅற விளங்கித் தோன்றும்,* - நமன்சூழ்
நரகத்து* நம்மை நணுகாமல் காப்பான்,*
துரகத்தை வாய்பிளந்தான் தொட்டு.
தொட்ட படைஎட்டும்* தோலாத வென்றியான்,*
அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று,* - குட்டத்துக்
கோள்முதலை துஞ்ச* குறித்துஎறிந்த சக்கரத்தான்*
தாள்முதலே நங்கட்குச் சார்வு (2)
சார்வு நமக்குஎன்றும் சக்கரத்தான்,* தண்துழாய்த்
தார்வாழ்* வரைமார்பன் தான்முயங்கும்,* - கார்ஆர்ந்த
வான்அமரும் மின்இமைக்கும்* வண்தாமரைநெடுங்கண்,*
தேன்அமரும் பூமேல் திரு. (2)