பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி 
மல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள், 
ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை 
வேயர் பயந்த விளக்கு.
 
கட்டளைக் கலித்துறை
கோலச் சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும் 
சீலத் தனள்,தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல் 
மாலத் தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடைய 
சோலைக் கிளி,அவள் தூயநற் பாதம் துணைநமக்கே.

   பாசுரங்கள்


    நாமம் ஆயிரம் ஏத்த நின்ற*  நாராயணா நரனே*  உன்னை- 
    மாமி தன் மகன் ஆகப் பெற்றால்*  எமக்கு வாதை தவிருமே* 

    காமன் போதரு காலம் என்று*  பங்குனி நாள் கடை பாரித்தோம்* 
    தீமை செய்யும் சிரீதரா!*  எங்கள் சிற்றில் வந்து சிதையேலே* (2)


    இன்று முற்றும் முதுகு நோவ*  இருந்திழைத்த இச்சிற்றிலை* 
    நன்றும் கண்ணுற நோக்கி*  நாங்கொளும் ஆர்வந்தன்னைத் தணிகிடாய்* 

    அன்று பாலகனாகி*  ஆலிலை மேல் துயின்ற எம்மாதியாய்!* 
    என்றும் உந்தனுக்கு எங்கள் மேல்*  இரக்கம் எழாதது எம் பாவமே*.


    குண்டு நீருறை கோளரீ!* மத யானை கோள் விடுத்தாய்!*
    உன்னைக் கண்டு மாலுறு வோங்களை*  கடைக்கண்களா இட்டு வாதியேல்* 

    வண்டல் நுண்மணல் தெள்ளி* யாம்வளைக் கைகளால் சிரமப்பட்டோம்* 
    தெண் திரைக்கடல் பள்ளியாய்!*  எங்கள் சிற்றில் வந்து சிதையேலே*


    பெய்யுமா முகில் போல் வண்ணா!*  உன்  த‌ன் பேச்சும் செய்கையும்* 
    எங்களை மையலேற்றி மயக்க உன்முகம் மாயமந்திரந்தான் கொலோ* 

    நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு*  உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம்* 
    செய்யதாமரைக் கண்ணினாய்*  எங்கள் சிற்றில்வந்து சிதையேலே*


    வெள்ளை நுண்மணல் கொண்டு*  சிற்றில் விசித்திரப்பட*  வீதிவாய்த்- 
    தெள்ளிநாங்கள் இழைத்த கோலமழித்தியாகிலும், உன் த‌ன் மேல்* 

    உள்ள்ம் ஓடி உருகலல்லால்*  உரோடம் ஓன்று மிலோம் கண்டாய்* 
    கள்ளமாதவா! கேசவா!* உன் முகத்தன கண்கள் அல்லவே*


    முற்றிலாத பிள்ளைகளோம்*  முலை போந்திலா தோமை*  
    நாள்தோறூம் சிற்றில் மேலிட்டுக்கொண்டு*  நீசிறிதுண்டு திண்ணென நாமது கற்றிலோம்*

    அடலையடைத்து அரக்கர் குளங்களை*  முற்றவும் செற்று*  
    இலங்கையைப் பூசலாக்கிய சேவகா!*  எம்மை வாதியேல்* 


    பேத நன்கறிவார் களோடு இவை*  பேசினால் பெரிது இன்சுவை* 
    யாதும் ஓன்றறியாத பிள்ளைகளோமை*  நீ நலிந்து என் பயன்? 

    ஓதமா கடல் வண்ணா!*  உன் மணவாட்டி மாரொடு சூழறும்* 
    சேது பந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே* 


    வட்டவாய்ச்சிறு தூதையோடு*  சிறுசுளகும் மணலுங்கொண்டு* 
    இட்டமா விளையாடு வோங்களைச்*  சிற்றிலீடழித் என் பயன்?* 

    தொட்டு தைத்து நலியேல் கண்டாய்*  சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்* 
    கட்டியும் கைத்தால் இன்னாமை*  அறிதியே கடல் வண்ணனே!*
     


    முற்றத்தூடு புகுந்து*  நின்முகங் காட்டிப் புன்முறுவல் செய்து* 
    சிற்றிலோடு எங்கள் சிந்தையும்*  சிதைக்கக் கடவையோ? கோவிந்தா* 

    முற்ற மண்ணிடம் தாவி*  விண்ணுற நீண்டளந்து கொண்டாய்* 
    எம்மைப்பற்றி மெய்ப் பிணக்கிட்டக்கால் இந்தப்பக்கம் நின்றவர்  என் சொல்லார்?*


    சீதைவாய் அமுதம் உண்டாய்!*  எங்கள் சிற்றில் நீ சிதையேலென்று* 
    வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச்சொல்லை* 

    வேதவாய்த் தொழிலார்கள் வாழ்*  வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன் தன்* 
    கோதை வாய்த் தமிழ் வல்லவர்*  குறைவின்றி வைகுந்தம் சேர்வரே* (2)