பிரபந்த தனியன்கள்

கருவிருத் தக்குழி நீத்தபின் காமக் கடுங்குழிவீழ்ந்து,
ஒருவிருத் தம்புக் குழலுறு வீர்.உயி ரின்பொருள்கட்கு,
ஒருவிருத் தம்புகு தாமல் குருகையர் கோனுரைத்த,
திருவிருத் தத்தோ ரடிகற் றிரீர்திரு நாட்டகத்தே.

   பாசுரங்கள்


    முலையோ முழு முற்றும் போந்தில,*  மொய் பூங் குழல் குறிய- 
    கலையோ அரை இல்லை நாவோ குழறும்,*  கடல் மண் எல்லாம்-

    விலையோ என மிளிரும் கண் இவள் பரமே!*  பெருமான்-
    மலையோ*  திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே? (2)


    வாசகம் செய்வது நம்பரமே?*  தொல்லை வானவர் தம்-
    நாயகன்*  நாயகர் எல்லாம் தொழும் அவன்,*  ஞாலம் முற்றும்- 

    வேய் அகம் ஆயினும் சோராவகை*  இரண்டே அடியால்-
    தாயவன்,*  ஆய்க் குலமாய் வந்து தோன்றிற்று நம் இறையே.


    இறையோ இரக்கினும்*  ஈங்கு ஓர் பெண்பால்,*  எனவும் இரங்காது,- 
    அறையோ! என*  நின்று அதிரும் கருங்கடல்,*  ஈங்கு இவள் தன்-

    நிறையோ இனி உன் திரு அருளால் அன்றி*  காப்பு அரிதால்- 
    முறையோ,*  அரவு அணைமேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே!


    வண்ணம் சிவந்துள*  வான் நாடு அமரும் குளிர் விழிய,* 
    தண் மென் கமலத் தடம் போல் பொலிந்தன,*  தாம் இவையோ- 

    கண்ணன் திருமால் திருமுகம் தன்னொடும் காதல் செய்தேற்கு*
    எண்ணம் புகுந்து,*  அடியேனொடு இக் காலம் இருக்கின்றவே.


    இருக்கு ஆர் மொழியால்*  நெறி இழுக்காமை,* உலகு அளந்த-
    திருத் தாள் இணை நிலத்தேவர் வணங்குவர்,*  யாமும் அவா-

    ஒருக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனி இன்மையின்* 
    கருக்காய் கடிப்பவர் போல்,*  திருநாமச் சொல் கற்றனமே. 


    கற்றுப்பிணை மலர் கண்ணின் குலம் வென்று,*  ஒரோ கருமம்-
    உற்றுப் பயின்று செவியொடு உசாவி,*  உலகம் எல்லாம்-

    முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திருவடிக்கீழ்*
    உற்றும் உறாதும்,*  மிளிர்ந்த கண் ஆய் எம்மை உண்கின்றவே!


    உண்ணாது உறங்காது*  உணர்வுறும் எத்தனை யோகியர்க்கும்*
    எண் ஆய் மிளிரும் இயல்வின ஆம்,*  எரி நீர் வளி வான்-

    மண் ஆகிய எம் பெருமான் தனது வைகுந்தம் அன்னாள்*
    கண் ஆய் அருவினையேன்,*  உயிர் ஆயின காவிகளே. 


    காவியும் நீலமும்*  வேலும் கயலும் பலபல வென்று,*
    ஆவியின் தன்மை அளவு அல்ல பாரிப்பு,*  அசுரைச் செற்ற-

    மாவியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்*
    தூவி அம் பேடை அன்னாள்,*  கண்கள் ஆய துணைமலரே. 


    கார் ஏற்று இருள் செகில் ஏற்றின் சுடருக்கு உளைந்து,*  வெல்வான்-
    ஏற்று எதிர்ந்தது புன் தலை மாலை,*  புவனி எல்லாம்-

    ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே?*
    வார் ஏற்று இளமுலையாய்,*  வருந்தேல் உன் வளைத்திறமே. 


    வாய்த் திருச் சக்கரத்து*  எங்கள் வானவனார் முடிமேல்,*
    வாய் நறுங் கண்ணித்*  தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை,*

    வான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க*  எம்மை-
    உளைவான் புகுந்து,*  இது ஓர் கங்குல் ஆயிரம் ஊழிகளே.


    ஊழிகள் ஆய்*  உலகு ஏழும் உண்டான் என்றிலம்,*  பழம் கண்டு-
    ஆழி களாம் பழம் வண்ணம் என்றேற்கு,*  அஃதே கொண்டு அன்னை-

    நாழ் இவளோ என்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்*
    தோழிகளோ! உரையீர்,*  எம்மை அம்மனை சூழ்கின்றவே. 


    சூழ்கின்ற கங்குல்*  சுருங்கா இருளின் கருந் திணிம்பைப்,*
    போழ்கின்ற திங்கள் அம் பிள்ளையும் போழ்க,*  துழாய் மலர்க்கே-

    தாழ்கின்ற நெஞ்சத்து ஒரு தமியாட்டியேன் மாமைக்கு இன்று*
    வாழ்கின்ற ஆறு இதுவோ,*  வந்து தோன்றிற்று வாலியதே.


    வால் வெண் நிலவு*  உலகு ஆரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும்,*
    விண் சுரவி சுர முதிர் மாலை,*  பரிதி வட்டம்-

    போலும் சுடர் அடல் ஆழிப் பிரான் பொழில் ஏழ் அளிக்கும்* 
    சால்பின் தகைமைகொலாம்,*  தமியாட்டி தளர்ந்ததுவே? 


    தளர்ந்தும் முறிந்தும்*  வரு திரைப் பாயல்,*  திரு நெடுங் கண்-
    வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும்,*  மால் வரையைக்-

    கிளர்ந்து மறிதர கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்*
    அளைந்து உண் சிறு பசுந் தென்றல்,*  அந்தோ வந்து உலாகின்றதே!


    உலாகின்ற கெண்டை ஒளி அம்பு*  எம் ஆவியை ஊடுருவக்-
    குலாகின்ற*  வெஞ்சிலை வாள் முகத்தீர்,*  குனி சங்கு இடறிப்-

    புலாகின்ற வேலைப் புணரி அம் பள்ளி அம்மான்*  அடியார்-
    நிலாகின்ற வைகுந்தமோ,*  வையமோ நும் நிலையிடமே?


    இடம் போய் விரிந்து இவ் வுலகு அளந்தான்*  எழில் ஆர் தண் துழாய்,*
    வடம் போது இனையும் மட நெஞ்சமே,*  நங்கள் வெள் வளைக்கே-

    விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்*
    தடம் போது ஒடுங்க,*  மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே. 


    திங்கள் அம் பிள்ளை புலம்ப*  தன் செங்கோல் அரசு பட்ட*
    செங் களம் பற்றி நின்று எள்கு புன் மாலை,*  தென்பால் இலங்கை-

    வெங் களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா*
    நங்களை மாமை கொள்வான்,*  வந்து தோன்றி நலிகின்றதே. 


    நலியும் நரகனை வீட்டிற்றும்,*  வாணன் திண் தோல் துணித்த*
    வலியும் பெருமையும் யாம் சொல்லும் நீர்த்து அல்ல,*  மை வரை போல்-

    பொலியும் உருவின் பிரானார் புனை பூந் துழாய் மலர்க்கே*
    மெலியும் மட நெஞ்சினார்,*  தந்து போயின வேதனையே! 


    வேதனை வெண் புரி நூலனை,*  விண்ணோர் பரவ நின்ற-
    நாதனை*  ஞாலம் விழுங்கும் அநாதனை,*  ஞாலம் தத்தும்-

    பாதனை பாற்கடல் பாம்பு அணைமேல் பள்ளிகொண்டருளும்*
    சீதனையே தொழுவார்,*  விண்ணுளாரிலும் சீரியரே. 


    சீர் அரசு ஆண்டு*  தன் செங்கோல் சில நாள்*  செலீஇக் கழிந்த,- 
    பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு,*  பார் அளந்த- 

    பேர் அரசே! எம் விசும்பு அரசே! எம்மை நீத்து வஞ்சித்த* 
    ஓர் அரசே! அருளாய்,*  இருளாய் வந்து உறுகின்றதே.


    உறுகின்ற கன்மங்கள்*  மேலன ஓர்ப்பிலராய்,*  இவளைப்-
    பெறுகின்ற தாயர்*  மெய்ந் நொந்து பெறார்கொல்*  துழாய் குழல்வாய்த்-

    துறுகின்றிலர் தொல்லை வேங்கடம் ஆட்டவும்*  சூழ்கின்றிலர்* 
    இறுகின்றதால் இவள் ஆகம்,*  மெல் ஆவி எரி கொள்ளவே.


    எரி கொள் செந் நாயிறு*  இரண்டு உடனே உதய மலைவாய்,* 
    விரிகின்ற வண்ணத்த எம் பெருமான் கண்கள்,*  மீண்டு அவற்றுள்-

    எரி கொள் செந் தீ வீழ் அசுரரைப் போல எம் போலியர்க்கும்*
    விரிவ சொல்லீர் இதுவோ,*  வையம் முற்றும் விளரியதே? 


    விளரிக் குரல் அன்றில்*  மென் பெடை மேகின்ற முன்றில் பெண்ணை,*
    முளரிக் குரம்பை இதுஇதுவாக,*  முகில் வண்ணன் பேர்-

    கிளரிக் கிளரிப் பிதற்றும் மெல் ஆவியும் நைவும் எல்லாம்* 
    தளரின் கொலோ அறியேன்,*  உய்யல் ஆவது இத் தையலுக்கே!


    தையல் நல்லார்கள் குழாங்கள்*  குழிய குழுவினுள்ளும்,* 
    ஐய நல்லார்கள் குழிய விழவினும்,*  அங்கு அங்கு எல்லாம்-

    கைய பொன் ஆழி வெண் சங்கொடும் காண்பான் அவாவுவன் நான்* 
    மைய வண்ணா! மணியே,*  முத்தமே! என் தன் மாணிக்கமே! 


    மாணிக்கம் கொண்டு*  குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி,* 
    ஆணிப்பொன் அன்ன சுடர் படும் மாலை,*  உலகு அளந்த-

    மாணிக்கமே! என் மரகதமே! மற்று ஒப்பாரை இல்லா*
    ஆணிப்பொன்னே,*  அடியேன் அடி ஆவி அடைக்கலமே!


    அடைக் கலத்து ஓங்கு*  கமலத்து அலர் அயன் சென்னி என்னும்,*
    முடைக் கலத்து ஊண்*  முன் அரனுக்கு நீக்கியை,*  ஆழி சங்கம்-

    படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்*
    புடைக்கலந்தானை, எம்மானை*  என் சொல்லிப் புலம்புவனே? 


    புலம்பும் கன குரல்*  போழ் வாய அன்றிலும், பூங் கழி பாய்ந்து*
    அலம்பும் கன குரல் சூழ் திரை ஆழியும்,*  ஆங்கு அவை நின்-

    வலம் புள்ளது நலம் பாடும் இது குற்றமாக*  வையம்-
    சிலம்பும்படி செய்வதே,*  திருமால் இத் திருவினையே?


    திருமால் உரு ஒக்கும் மேரு,*  அம் மேருவில் செஞ்சுடரோன்*
    திருமால் திருக்கைத் திருச் சக்கரம் ஒக்கும்,*  அன்ன கண்டும்- 

    திருமால் உருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்*
    திருமால் தலைக்கொண்ட நங்கட்கு,*  எங்கே வரும் தீவினையே?


    தீவினைக்கு ஆரு நஞ்சை*  நல் வினைக்கு இன் அமுதத்தினை,* 
    பூவினை மேவிய தேவி மணாளனைm,*  புன்மை எள்காது-

    ஆவினை மேய்க்கும் வல் ஆயனை*  அன்று உலகு ஈர் அடியால்-
    தாவின ஏற்றை எம்மானை*  எஞ்ஞான்று தலைப்பெய்வனே?


    தலைப்பெய்து யான் உன்*  திருவடி சூடும் தகைமையினால் ,*
    நிலைப்பு எய்த ஆக்கைக்கு நோற்ற இம் மாயமும்,*  மாயம் செவ்வே-

    நிலைப்பு எய்திலாத நிலைமையும் காண்தோறு அசுரர் குழாம்*
    தொலைப் பெய்த நேமி எந்தாய்,*  தொல்லை ஊழி சுருங்கலதே. 


    சுருங்கு உறி வெண்ணெய்*  தொடு உண்ட கள்வனை,*  வையம் முற்றும்
    ஒருங்குற உண்ட*  பெரு வயிற்றாளனை,*  மாவலிமாட்டு-

    இருங் குறள் ஆகி இசைய ஓர் மூவடி வேண்டிச் சென்ற*
    பெருங் கிறியானை அல்லால்,*  அடியேன் நெஞ்சம் பேணலதே.


    பேண் நலம் இல்லா அரக்கர்*  முந்நீர பெரும் பதிவாய்,*
    நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் என்று,*  நின்னை விண்ணோர்- 

    தாள் நிலம் தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஒன்று*
    காணலும் ஆம்கொல் என்றே,*  வைகல் மாலையும் காலையுமே.


    காலை வெய்யோற்கு முன் ஓட்டுக்கொடுத்த*  கங்குல் குறும்பர்*
    மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர்,*  அன்ன கண்டும்- 
     

    காலை நல் ஞானத் துறை படிந்து ஆடி கண் போது செய்து* 
    மாலை நல் நாவில் கொள்ளார்,*  நினையார் அவன் மைப் படியே.


    மைப் படி மேனியும்*  செந்தாமரைக் கண்ணும் வைதிகரே,*
    மெய்ப்படியால் உன் திருவடி சூடும் தகைமையினார்,* 

    எப்படி ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆ மிலைக்கும் என்னும்*
    அப்படி யானும் சொன்னேன்*  அடியேன் மற்று யாது என்பனே.? 


    யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு,*  அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்* 
    மூது ஆவியில் தடுமாறும்*  உயிர் முன்னமே,*  அதனால்- 

    யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடுசெய்யும்*
    மாதாவினை பிதுவை,*  திருமாலை வணங்குவனே. (2)


    வணங்கும் துறைகள்*  பல பல ஆக்கி,*  மதி விகற்பால்-
    பிணங்கும் சமயம் பல பல ஆக்கி,*  அவை அவைதோறு-

    அணங்கும் பல பல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்* 
    இணங்கும் நின்னோரை இல்லாய்,*  நின்கண் வேட்கை எழுவிப்பனே


    எழுவதும் மீண்டே*  படுவதும் பட்டு,*  எனை ஊழிகள் போய்க்-
    கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால்,*  இமையோர்கள் குழாம்-

    தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு* 
    கழிவது ஓர் காதல் உற்றார்க்கும்,*  உண்டோ கண்கள் துஞ்சுதலே? 


    துஞ்சா முனிவரும்*  அல்லாதவரும் தொடர நின்ற,*
    எஞ்சாப் பிறவி இடர் கடிவான்,*  இமையோர் தமக்கும்- 

    தன் சார்வு இலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே*
    நெஞ்சால் நினைப்பு அரிதால்,*  வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே.


    ஈனச் சொல் ஆயினும் ஆக,*  எறி திரை வையம் முற்றும்*
    ஏனத்து உருவாய் இடந்த பிரான்,*  இருங் கற்பகம் சேர்-

    வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா எவர்க்கும*
    ஞானப் பிரானை அல்லால் இல்லை*  நான் கண்ட நல்லதுவே (2) 


    நல்லார் நவில் குருகூர் நகரான்,*  திருமால் திருப் பேர்-
    வல்லார்*  அடிக் கண்ணி சூடிய*  மாறன் விண்ணப்பம் செய்த-

    சொல் ஆர் தொடையல் இந் நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பு ஆம்*
    பொல்லா அருவினை*  மாய வன் சேற்று அள்ளல் பொய்ந் நிலத்தே. (2)