பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
உருப்பிணிநங்கை தன்னைமீட்பான்* தொடர்ந்துஓடிச்சென்ற*
உருப்பனைஓட்டிக் கொண்டிட்டு* உறைத்திட்டஉறைப்பன்மலை*
பொருப்பிடைக்கொன்றைநின்று* முறிஆழியும்காசும்கொண்டு*
விருப்பொடுபொன்வழங்கும்* வியன்மாலிருஞ்சோலையதே. (2)
கஞ்சனும்காளியனும்* களிறும்மருதும்எருதும்*
வஞ்சனையில்மடிய* வளர்ந்தமணிவண்ணன்மலை*
நஞ்சுஉமிழ்நாகம்எழுந்துஅணவி* நளிர்மாமதியைச்*
செஞ்சுடர்நாவளைக்கும்* திருமாலிருஞ்சோலையதே.
மன்னுநரகன்தன்னைச்* சூழ்போகிவளைத்துஎறிந்து*
கன்னிமகளிர்தம்மைக்* கவர்ந்தகடல்வண்ணன்மலை*
புன்னைசெருந்தியொடு* புனவேங்கையும்கோங்கும்நின்று*
பொன்அரிமாலைகள்சூழ்* பொழில்மாலிருஞ்சோலையதே.
மாவலிதன்னுடைய* மகன்வாணன்மகள்இருந்த*
காவலைக்கட்டழித்த* தனிக் காளை கருதும் மலை*
கோவலர்கோவிந்தனைக்* குற மாதர்கள் பண் குறிஞ்சிப்*
பாஒலிபாடிநடம்பயில்* மாலிருஞ் சோலையதே.
பலபலநாழம்சொல்லிப்* பழித்தசிசுபாலன்தன்னை*
அலைவலைமை தவிர்த்த* அழகன்அலங்காரன்மலை*
குலமலைகோலமலை* குளிர்மாமலைகொற்றமலை*
நிலமலைநீண்டமலை* திருமாலிருஞ்சோலையதே.
பாண்டவர்தம்முடைய* பாஞ்சாலிமறுக்கம்எல்லாம்*
ஆண்டுஅங்கு நூற்றுவர்தம்* பெண்டிர்மேல்வைத்த அப்பன்மலை*
பாண்தகு வண்டினங்கள்* பண்கள்பாடிமதுப்பருக*
தோண்டல்உடையமலை* தொல்லைமாலிருஞ்சோலையதே.
கனங்குழையாள்பொருட்டாக் கணைபாரித்து* அரக்கர்தங்கள்-
இனம்கழுஏற்றுவித்த* ஏழிற்தோள்எம்இராமன்மலை*
கனம்கொழிதெள்அருவி* வந்துசூழ்ந்துஅகல்ஞாலம்எல்லாம்*
இனம்குழுஆடும்மலை* எழில்மாலிருஞ்சோலையதே.
எரிசிதறும்சரத்தால்* இலங்கையினைத்* தன்னுடைய-
வரிசிலைவாயிற்பெய்து* வாய்க்கோட்டம்தவிர்த்துஉகந்த*
அரையன்அமரும்மலை* அமரரொடுகோனும்சென்று*
திரிசுடர்சூழும்மலை* திருமாலிருஞ்சோலையதே.
கோட்டுமண்கொண்டுஇடந்து* குடங்கையில்மண்கொண்டுஅளந்து*
மீட்டும்அதுஉண்டுஉமிழ்ந்து* விளையாடும்விமலன்மலை*
ஈட்டியபல்பொருள்கள்* எம்பிரானுக்குஅடியுறைஎன்று*
ஓட்டரும்தண்சிலம்பாறுஉடை* மாலிருஞ்சோலையதே.
ஆயிரம்தோள்பரப்பி* முடிஆயிரம்மின்இலக*
ஆயிரம்பைந்தலைய* அனந்தசயனன்ஆளும்மலை*
ஆயிரம்ஆறுகளும்* சுனைகள்பலஆயிரமும்*
ஆயிரம்பூம்பொழிலும்உடை* மாலிருஞ்சோலையதே (2)
மாலிருஞ்சோலைஎன்னும்* மலையைஉடையமலையை*
நாலிருமூர்த்திதன்னை* நால்வேதக்-கடல்அமுதை*
மேல்இருங்கற்பகத்தை* வேதாந்தவிழுப்பொருளின்*
மேல்இருந்தவிளக்கை* விட்டுசித்தன்விரித்தனனே (2)
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும்* பேர் அருளாளன் எம் பிரானை*
வார் அணி முலையாள் மலர்மகளோடு* மண்மகளும் உடன் நிற்ப*
சீர் அணி மாட நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
கார் அணி மேகம் நின்றது ஒப்பானை* கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.
பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன் தன்னை* பேதியா இன்ப வெள்ளத்தை*
இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை* ஏழ் இசையின் சுவைதன்னை*
சிறப்பு உடை மறையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
மறைப் பெரும் பொருளை வானவர்கோனை* கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே.
திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும்* செழு நிலத்து உயிர்களும் மற்றும்*
படர் பொருள்களும் ஆய் நின்றவன் தன்னை* பங்கயத்து அயன் அவன் அனைய*
திட மொழி மறையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன்* கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.
வசை அறு குறள் ஆய் மாவலி வேள்வி* மண் அளவிட்டவன் தன்னை*
அசைவு அறும் அமரர் அடி இணை வணங்க* அலை கடல் துயின்ற அம்மானை*
திசைமுகன் அனையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
உயர் மணி மகுடம் சூடி நின்றானை* கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.
'தீமனத்து அரக்கர் திறலழித்தவனே!' என்று சென்று அடைந்தவர் தமக்குத்*
தாய்மனத்து இரங்கி அருளினைக் கொடுக்கும்* தயரதன் மதலையை சயமே*
தேமலர்ப் பொழில் சூழ் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன்* கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.
மல்லை மா முந்நீர் அதர்பட* மலையால் அணைசெய்து மகிழ்ந்தவன் தன்னை*
கல்லின்மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க* ஓர் வாளி தொட்டானை*
செல்வ நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
அல்லி மா மலராள் தன்னொடும் அடியேன்* கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே.
வெம் சினக் களிறும் வில்லொடு மல்லும்* வெகுண்டு இறுத்து அடர்த்தவன் தன்னை*
கஞ்சனைக் காய்ந்த காளை அம்மானை* கரு முகில் திரு நிறத்தவனை*
செஞ்சொல் நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானை* கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே.
அன்றிய வாணன் ஆயிரம்* தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை*
மின் திகழ் குடுமி வேங்கட மலைமேல்* மேவிய வேத நல் விளக்கை*
தென் திசைத் திலதம் அனையவர் நாங்கைச்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
மன்றுஅது பொலிய மகிழ்ந்து நின்றானை* வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே.
'களங்கனி வண்ணா! கண்ணனே! என்தன்* கார் முகிலே! என நினைந்திட்டு*
உளம் கனிந்திருக்கும் அடியவர் தங்கள்* உள்ளத்துள் ஊறிய தேனை*
தெளிந்த நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
வளம் கொள் பேர் இன்பம் மன்னி நின்றானை* வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே.
தேன் அமர் சோலை நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
வானவர் கோனைக் கண்டமை சொல்லும்* மங்கையார் வாள் கலிகன்றி*
ஊனம் இல் பாடல் ஒன்பதோடு ஒன்றும்* ஒழிவு இன்றிக் கற்றுவல்லார்கள்*
மான வெண் குடைக்கீழ் வையகம் ஆண்டு* வானவர் ஆகுவர் மகிழ்ந்தே.
கோவை வாயாள் பொருட்டு* ஏற்றின் எருத்தம் இறுத்தாய்,* மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்!* குல நல் யானை மருப்பு ஒசித்தாய்,*
பூவை வீயா நீர் தூவிப்* போதால் வணங்கேனேலும்,* நின்
பூவை வீயாம் மேனிக்குப்* பூசும் சாந்து என் நெஞ்சமே.
பூசும் சாந்து என் நெஞ்சமே* புனையும் கண்ணி எனதுடைய,*
வாசகம் செய் மாலையே* வான் பட்டு ஆடையும் அஃதே,*
தேசம் ஆன அணிகலனும்* என் கைகூப்புச் செய்கையே,*
ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த* எந்தை ஏக மூர்த்திக்கே.
ஏக மூர்த்தி இரு மூர்த்தி* மூன்று மூர்த்தி பல மூர்த்தி-
ஆகி,* ஐந்து பூதம் ஆய் இரண்டு சுடர் ஆய் அருவு ஆகி,*
நாகம் ஏறி நடுக் கடலுள் துயின்ற* நாராயணனே உன்-
ஆகம் முற்றும் அகத்து அடக்கி* ஆவி அல்லல் மாய்த்ததே.
மாய்த்தல் எண்ணி வாய் முலை தந்த* மாயப் பேய் உயிர்-
மாய்த்த,* ஆய மாயனே! வாமனனே மாதவா,*
பூத்தண் மாலை கொண்டு* உன்னைப் போதால் வணங்கேனேலும்,* நின்
பூத்தண் மாலை நெடுமுடிக்குப்* புனையும் கண்ணி எனது உயிரே.
கண்ணி எனது உயிர் காதல் கனகச் சோதி முடிமுதலா,*
எண் இல் பல்கலன்களும்* ஏலும் ஆடையும் அஃதே,*
நண்ணி மூவுலகும்* நவிற்றும் கீர்த்தியும் அஃதே,*
கண்ணன் எம் பிரான் எம்மான்* கால சக்கரத்தானுக்கே.
கால சக்கரத்தொடு* வெண் சங்கம் கை ஏந்தினாய்,*
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த* நாராயணனே என்று என்று,*
ஓலம் இட்டு நான் அழைத்தால்* ஒன்றும் வாராயாகிலும்,*
கோலம் ஆம் என் சென்னிக்கு* உன் கமலம் அன்ன குரைகழலே.
குரைகழல்கள் நீட்டி* மண் கொண்ட கோல வாமனா,*
குரை கழல் கைகூப்புவார்கள்* கூட நின்ற மாயனே,*
விரை கொள் பூவும் நீரும்கொண்டு* ஏத்தமாட்டேனேலும்,* உன்
உரை கொள் சோதித் திரு உருவம்* என்னது ஆவி மேலதே.
என்னது ஆவி மேலையாய்* ஏர் கொள் ஏழ் உலகமும்,*
துன்னி முற்றும் ஆகி நின்ற* சோதி ஞான மூர்த்தியாய்,*
உன்னது என்னது ஆவியும்,* என்னது உன்னது ஆவியும்*
இன்ன வண்ணமே நின்றாய்* என்று உரைக்க வல்லேனே?
உரைக்க வல்லேன் அல்லேன்* உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்*
கரைக்கண் என்று செல்வன் நான்?* காதல் மையல் ஏறினேன்,*
புரைப்பு இலாத பரம்பரனே!* பொய் இலாத பரஞ்சுடரே,*
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த* யானும் ஏத்தினேன்.
யானும் ஏத்தி* ஏழ் உலகும் முற்றும் ஏத்தி,* பின்னையும்
தானும் ஏத்திலும்* தன்னை ஏத்த ஏத்த எங்கு எய்தும்,*
தேனும் பாலும் கன்னலும்* அமுதும் ஆகித் தித்திப்ப,*
யானும் எம் பிரானையே ஏத்தினேன்* யான் உய்வானே
உய்வு உபாயம் மற்று இன்மை தேறி* கண்ணன் ஒண் கழல்கள் மேல்*
செய்ய தாமரைப் பழனத்* தென்னன் குருகூர்ச் சடகோபன்,*
பொய் இல் பாடல் ஆயிரத்துள்* இவையும் பத்தும் வல்லார்கள்,*
வையம் மன்னி வீற்றிருந்து* விண்ணும் ஆள்வர் மண்ணூடே. (2)