பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
கதிர் ஆயிரம் இரவி* கலந்து எறித்தால் ஒத்த நீள்முடியன்*
எதிர் இல் பெருமை இராமனை* இருக்கும் இடம் நாடுதிரேல்*
அதிரும் கழற் பொரு தோள்* இரணியன் ஆகம் பிளந்து* அரியாய்-
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை* உள்ளவா கண்டார் உளர் (2)
நாந்தகம்சங்குதண்டு* நாணொலிச்சார்ங்கம் திருச்சக்கரம்*
ஏந்துபெருமை இராமனை* இருக்குமிடம் நாடுதிரேல்*
காந்தள் முகிழ்விரல் சீதைக்காகிக்* கடுஞ்சிலை சென்றிறுக்க*
வேந்தர்தலைவன் சனகராசன்தன்* வேள்வியில் கண்டாருளர்.
கொலையானைக் கொம்பு பறித்துக்* கூடலர் சேனை பொருது அழியச்*
சிலையால் மராமரம் எய்த தேவனைச்* சிக்கென நாடுதிரேல்*
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று* தடவரை கொண்டு அடைப்ப*
அலை ஆர் கடற்கரை வீற்றிருந்தானை* அங்குத்தைக் கண்டார் உளர்
தோயம்பரந்த நடுவுசூழலில்* தொல்லை வடிவுகொண்ட*
மாயக்குழவியதனை நாடுறில்* வம்மின்சுவடுஉரைக்கேன்*
ஆயர்மடமகள் பின்னைக்காகி* அடல்விடைஏழினையும்*
வீயப்பொருது வியர்த்துநின்றானை* மெய்ம்மையேகண்டார்உளர்.
நீரேறுசெஞ்சடை நீலகண்டனும்* நான்முகனும் முறையால்*
சீரேறுவாசகஞ்செய்யநின்ற* திருமாலைநாடுதிரேல்*
வாரேறுகொங்கை உருப்பிணியை* வலியப்பிடித்துக்கொண்டு-
தேரேற்றிச் சேனைநடுவு போர்செய்யச்* சிக்கெனக்கண்டார்உளர்.
பொல்லாவடிவுடைப் பேய்ச்சிதுஞ்சப்* புணர்முலைவாய்மடுக்க-
வல்லானை* மாமணிவண்ணனை* மருவும்இடம்நாடுதிரேல்
பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு* பௌவம்எறிதுவரை*
எல்லாரும் சூழச்சிங்காசனத்தே* இருந்தானைக்கண்டாருளர்.
வெள்ளைவிளிசங்குவெஞ்சுடர்த்திருச்சக்கரம்* ஏந்துகையன்*
உள்ளவிடம்வினவில்* உமக்குஇறைவம்மின்சுவடுரைக்கேன்*
வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடித்* தேர்மிசைமுன்புநின்று*
கள்ளப்படைத்துணையாகிப்* பாரதம்கைசெய்யக்கண்டார்உளர்.
நாழிகைகூறிட்டுக்காத்துநின்ற* அரசர்கள்தம்முகப்பே*
நாழிகைபோகப்படைபொருதவன்* தேவகிதன்சிறுவன்*
ஆழிகொண்டு அன்றுஇரவிமறைப்பச்* சயத்திரதனதலையை*
பாழிலுருளப்படைபொருதவன்* பக்கமேகண்டார்உளர்.
மண்ணும்மலையும்மறிகடல்களும்* மற்றும்யாவும்எல்லாம்*
திண்ணம்விழுங்கிஉமிழ்ந்ததேவனைச்* சிக்கெனநாடுதிரேல்*
எண்ணற்கரியதோரேனமாகி* இருநிலம்புக்கிடந்து*
வண்ணக்கருங்குழல்மாதரோடு* மணந்தானைக்கண்டாருளர்
கரியமுகில்புரைமேனிமாயனைக்* கண்டசுவடுஉரைத்துப்*
புரவிமுகம்செய்துசெந்நெல்ஓங்கி* விளைகழனிப்புதுவைத்*
திருவிற்பொலிமறைவாணன்* பட்டர்பிரான் சொன்னமாலைபத்தும்*
பரவும்மனமுடைப்பத்தருள்ளார்* பரமனடிசேர்வர்களே (2)
போது அலர்ந்த பொழில் சோலைப்* புறம் எங்கும் பொரு திரைகள்*
தாது உதிர வந்து அலைக்கும்* தட மண்ணித் தென் கரைமேல்*
மாதவன் தான் உறையும் இடம்* வயல் நாங்கை* வரி வண்டு
தேதென என்று இசை பாடும்* திருத்தேவனார்தொகையே.
யாவரும் ஆய் யாவையும் ஆய்* எழில் வேதப் பொருள்களும் ஆய்*
மூவரும் ஆய் முதல் ஆய* மூர்த்தி அமர்ந்து உறையும் இடம்*
மாவரும்திண் படைமன்னை* வென்றிகொள்வார் மன்னுநாங்கை*
தேவரும் சென்றுஇறைஞ்சுபொழில்* திருத்தேவனார்தொகையே.
வான்நாடும் மண்நாடும்* மற்றுஉள்ள பல்உயிரும்*
தான்ஆய எம்பெருமான்* தலைவன் அமர்ந்து உறையும்இடம்*
ஆனாத பெருஞ்செல்வத்து* அருமறையோர் நாங்கைதன்னுள்*
தேன்ஆரும் மலர்ப்பொழில்சூழ்* திருத்தேவனார்தொகையே.
இந்திரனும் இமையவரும்* முனிவர்களும் எழில் அமைந்த*
சந்த மலர்ச் சதுமுகனும்* கதிரவனும் சந்திரனும்*
எந்தை! எமக்கு அருள் என நின்ரு* அருளூமிடம் எழில்நாங்கை*
சுந்தரநல் பொழில்புடைசூழ்* திருத்தேவனார்தொகையே.
அண்டமும் இவ் அலை கடலும்* அவனிகளும் குல வரையும்*
உண்ட பிரான் உறையும் இடம்* ஒளி மணி சந்து அகில் கனகம்*
தெண் திரைகள் வரத் திரட்டும்* திகழ் மண்ணித் தென் கரைமேல்*
திண் திறலார் பயில்நாங்கைத்* திருத்தேவனார்தொகையே.
ஞாலம் எல்லாம் அமுது செய்து* நான்மறையும் தொடராத*
பாலகன் ஆய் ஆல் இலையில்* பள்ளிகொள்ளும் பரமன் இடம்*
சாலி வளம் பெருகி வரும்* தட மண்ணித் தென் கரைமேல்*
சேல் உகளும் வயல்நாங்கைத்* திருத்தேவனார்தொகையே.
ஓடாத ஆளரியின்* உரு ஆகி இரணியனை*
வாடாத வள் உகிரால்* பிளந்து அளைந்த மாலது இடம்*
ஏடு ஏறு பெருஞ் செல்வத்து* எழில் மறையோர் நாங்கைதன்னுள்*
சேடு ஏறு பொழில் தழுவு* திருத்தேவனார்தொகையே.
வார் ஆரும் இளங் கொங்கை* மைதிலியை மணம் புணர்வான்*
கார் ஆர் திண் சிலை இறுத்த* தனிக் காளை கருதும் இடம்*
ஏர் ஆரும் பெருஞ் செல்வத்து* எழில் மறையோர் நாங்கைதன்னுள்*
சீர் ஆரும் மலர்ப் பொழில் சூழ்* திருத்தேவனார்தொகையே.
கும்பம் மிகு மத யானை* பாகனொடும் குலைந்து வீழ*
கொம்பு-அதனைப் பறித்து எறிந்த* கூத்தன் அமர்ந்து உறையும் இடம்*
வம்பு அவிழும் செண்பகத்து* மணம் கமழும் நாங்கைதன்னுள்*
செம் பொன் மதிள் பொழில் புடைசூழ்* திருத்தேவனார்தொகையே.
கார் ஆர்ந்த திருமேனிக்* கண்ணன் அமர்ந்து உறையும் இடம்*
சீர் ஆர்ந்த பொழில் நாங்கைத்* திருத்தேவனார்தொகைமேல்*
கூர் ஆர்ந்த வேல் கலியன்* கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்*
ஏர் ஆர்ந்த வைகுந்தத்து* இமையவரோடு இருப்பாரே.
ஒரு நாயகமாய்* ஓட உலகு உடன் ஆண்டவர்,*
கரு நாய் கவர்ந்த காலர்* சிதைகிய பானையர்,*
பெரு நாடு காண* இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்,*
திருநாரணன் தாள்* காலம்பெறச் சிந்தித்து உய்ம்மினோ.
உய்ம்மின் திறைகொணர்ந்து* என்று உலகு ஆண்டவர்,* இம்மையே
தம் இன்சுவை மடவாரைப்* பிறர் கொள்ளத் தாம் விட்டு*
வெம் மின் ஒளிவெயில்* கானகம் போய்க் குமைதின்பர்கள்,*
செம்மின் முடித் திருமாலை* விரைந்து அடி சேர்மினோ.
அடி சேர் முடியினர் ஆகி* அரசர்கள் தாம் தொழ,*
இடி சேர் முரசங்கள்* முற்றத்து இயம்ப இருந்தவர்,*
பொடி சேர் துகளாய்ப் போவர்கள்* ஆதலில் நொக்கெனக்,*
கடி சேர் துழாய்முடிக்* கண்ணன் கழல்கள் நினைமினோ.
நினைப்பான் புகில் கடல் எக்கலின்* நுண்மணலில் பலர்,*
எனைத்தோர் உகங்களும்* இவ் உலகு ஆண்டு கழிந்தவர்,*
மனைப்பால் மருங்கு* அற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்,*
பனைத் தாள் மத களிறு அட்டவன்* பாதம் பணிமினோ.
பணிமின் திருவருள் என்னும்* அம் சீதப் பைம் பூம் பள்ளி,*
அணி மென் குழலார்* இன்பக் கலவி அமுது உண்டார்,*
துணி முன்பு நால* பல் ஏழையர் தாம் இழிப்ப செல்வர்,*
மணி மின்னு மேனி* நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.
வாழ்ந்தார்கள் வாழ்ந்தது* மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து,*
ஆழ்ந்தார் என்று அல்லால்* அன்று முதல் இன்று அறுதியா,*
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர்* என்பது இல்லை நிற்குறில்,*
ஆழ்ந்து ஆர் கடற்பள்ளி* அண்ணல் அடியவர் ஆமினோ.
ஆம் இன் சுவை அவை* ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்தபின்,*
தூ மென் மொழி மடவார்* இரக்கப் பின்னும் துற்றுவார்,*
ஈமின் எமக்கு ஒரு துற்று என்று* இடறுவர் ஆதலின்,*
கோமின் துழாய் முடி* ஆதி அம் சோதி குணங்களே.
குணம் கொள் நிறை புகழ் மன்னர்* கொடைக்கடன் பூண்டிருந்து,*
இணங்கி உலகு உடன் ஆக்கிலும்* ஆங்கு அவனை இல்லார்,*
மணம் கொண்ட போகத்து மன்னியும்* மீள்வர்கள் மீள்வு இல்லை,*
பணம் கொள் அரவு அணையான்* திருநாமம் படிமினோ.
படி மன்னு பல் கலன் பற்றோடு அறுத்து* ஐம்புலன் வென்று,*
செடி மன்னு காயம் செற்றார்களும்* ஆங்கு அவனை இல்லார்,*
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும்* மீள்வர்கள் மீள்வு இல்லை,*
கொடி மன்னு புள் உடை* அண்ணல் கழல்கள் குறுகுமினோ.
குறுக மிக உணர்வத்தொடு நோக்கி* எல்லாம்விட்ட,*
இறுகல் இறப்பு என்னும்* ஞானிக்கும் அப் பயன் இல்லையேல்,*
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்* பின்னும் வீடு இல்லை,*
மறுகல் இல் ஈசனைப் பற்றி* விடாவிடில் வீடு அஃதே.
அஃதே உய்யப் புகும் ஆறு என்று* கண்ணன் கழல்கள் மேல்,*
கொய் பூம் பொழில்சூழ்* குருகூர்ச் சடகோபன் குற்றேவல்,*
செய் கோலத்து ஆயிரம்* சீர்த்தொடைப் பாடல் இவைபத்தும்,*
அஃகாமல் கற்பவர்* ஆழ் துயர் போய் உய்யற்பாலரே.