பிரபந்த தனியன்கள்
முள்ளிச் செழுமலரொ தாரன் முளைமதியம்
கொல்லிக்கென்னுள்ளம் கொதியாமெ -- வள்ளல்
திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி
மருவாளன் தந்தான் மடல்
பாசுரங்கள்
ஊரார் உகப்பதே ஆயினேன்* -- மற்றுஎனக்கு இங்கு
ஆராய்வார் இல்லை அழல் வாய் மெழுகு போல்*
நீராய் உருகும் என்ஆவி*--நெடுங்கண்கள்
ஊரார் உறங்கிலும் தான் உறங்கா*--உத்தமன்தன்
பேர்ஆயினவே பிதற்றுவன்*--பின்னையும்
கார் ஆர் கடல் போலும் காமத்தர்ஆயினார்*
ஆரேபொல்லாமை அறிவார்? அதுநிற்க*
ஆரானும்ஆதானும் அல்லள்அவள் காணீர்*
வார்ஆர் வனமுலை வாசவதத்தை என்று*
ஆரானும் சொல்லப்படுவாள்*-- வளும்தன்
ஆரானுமாதானும் அல்லலவள் காணீர்*
வாரார் வனமுலை வாசமததை வென்று*
ஆரானும் சொல்லப்படுவாள்* – அவளும்தன்
பேர்ஆயம்எல்லாம் ஒழிய பெருந்தெருவே*
தாரார் தடந்தோள் தளைக்காலன் பின்போனாள்*
ஊரார் இகழ்ந்திடப் பட்டாளே?*--மற்றுஎனக்கு இங்கு
ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நான்அவனைக்
காரார் திருமேனி காணும் அளவும்போய்
சீரார் திருவேங்கடமே திருக்கோவ
லூரே*(2)--மதிள்கச்சி ஊரகமே பேரகமே
பேரா மருதுஇறுத்தான் வௌ¢ளறையே வெஃகாவே
பேர்ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம்*--கணமங்கை (2)
காரார் மணிநிறக் கண்ணனூர் விண்ணகரம்*
சீரார் கணபுரம் சேறை திருவழுந்தூர்*
காரார் குடந்தை கடிகை கடல்மல்லை*
ஏரார் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை*
சீராரும் மாலிருஞ்சோலை திருமோகூர்*
பாரோர் புகழும் வதரி வடமதுரை*
ஊராயஎல்லாம் ஒழியாமே நான் அவனை*
ஓரானை கொம்புஒசித்து ஓர்ஆனை கோள்விடுத்த-
சீரானை செங்கண் நெடியானை தேன்துழாய்த்-
தாரானை தாமரைபோல் கண்ணானை* எண்அருஞ்சீர்
எண்அருஞ்சீர் பேர்ஆயிரமும் பிதற்றி*--பெருந்தெருவே
ஊரார் இகழிலும் ஊராதுஒழியேன் நான்*
வாரார் பூம் பெண்ணை மடல்