விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பணிவினால் மனமதுஒன்றிப்*  பவளவாய் அரங்கனார்க்குத்,* 
    துணிவினால் வாழமாட்டாத்*  தொல்லை நெஞ்சே! நீ சொல்லாய்,*
    அணியினார் செம்பொன்னாய*  அருவரை அனைய கோயில்,* 
    மணியனார் கிடந்தவாற்றை*  மனத்தினால் நினைக்கலாமே? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பவளம் வாய் - பவளம் போன்ற அதரத்தை யுடைய;
அரங்கனார்க்கு - அழகிய மணவாளன் விஷயத்திலே;
 பணிவினால் - கைங்கர்யருசியால்;
மனம் அது ஒன்ற - கருத்தைப் பொருந்தவைத்து;
துணிவினால் - துணிவுடன்;

விளக்க உரை

“கரும்பினைக் கண்டுகொண்டு” என்றும், “அரவணைத் துயிலுமா கண்டு” என்றும் அழகிய மணவாளனை நீர் கண்ணால் கண்டாமையாலன்றோ “என்செய்கேன்! என் செய்கேன்!!” என்று தவிக்கிறீர்; அப்பெருமான் பள்ளி கொண்டருளும்படியைக் கண்ணால் காணவேண்டா; ஒரு மூளையிலே உட்கார்ந்து நெஞ்சினால் தியாநஞ் செய்துகொண்டிரும் என்று சிலர்சொல்ல அதற்கு உத்தரமாக தமது திருவுள்ளத்தை நோக்கிக் கூறுகின்றார் - அப்பெருமான் பள்ளி கொண்டருளுமாற்றை நெஞ்சினால் தான் நினைத்துத் தரிக்க முடியுமோ? என்கிறார்.

English Translation

Pray tell O Faithful heart of mine! Without a life of service, without a heart of devotion, is it possible to contemplate the coral-lipped Lord of Arangam? The beautiful gold-plated temple rises like a mountain, with a gem-hued form reclining in it.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்