விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கதிர் ஒளித் தீபம்*  கலசம் உடன் ஏந்திச்* 
    சதிர் இள மங்கையர்*  தாம் வந்து எதிர்கொள்ள* 
    மதுரையார் மன்னன்*  அடிநிலை தொட்டு* 
    எங்கும் அதிரப் புகுதக்*  கனாக் கண்டேன் தோழீ! நான்*       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சதிர் இளமங்கையர் தாம் - அழகிய இளம் பெண்கள்
கதிர் ஒளி தீபம் - ஸூர்யனுடைய ஒளி போன்ற ஒளியையுடைய மங்கள தீபத்தையும்
கலசம் - பொற்கலசங்களையும்
உடன் ஏந்தி - கையில் ஏந்திக் கொண்டு
வந்து எதிர்கொள்ள - எதிர்கொண்டுவர,

விளக்க உரை

உரை:1

பருவத்தாலும் வடிவழகாலும் தங்களையே எல்லாரும் நோக்கிக்கொண்டிருக்கும்படி மிக்க அழகுவாய்ந்தமாதர்கள் மங்களஸம்ருத்திக்காகத்தீபங்களையுமு பூர்ண கும்பங்களையும் ஏந்திக்கொண்டு எதிர்கொண்டுவர, கண்ணபிரான் பாதுகைசாத்திக்கொண்டு பூமி அதிரும்படி ஸந்தோஷமாக நடநதுவரும்படியைக் கனவில் கண்டேனென்கிறாள். கதிர் என்று கிரணத்திற்குப் பேராயினும் இங்கு இலக்கணையால் ஸூர்யனுக்குப்பேராகிறது. இடையில் விளக்கு அணைந்தால்மங்களத்துக்கு குறையாமென்று ஸூர்யப்ரபைபோலே மிக்கவொளியையுடைய விளக்குக்களைக் கொண்டுவருவர்களென்க. தீபம், கலசம் - வசொற்கள். மதுரையார் மன்னர் - மற்றதிருநாமங்களிற்காட்டில் இத்திருநாமத்தில் கண்ணபிரானுக்கு உகப்பு விஞ்சியிருக்குமென்பதற்கு ஒருஐதிஹ்யமிருளிச் செய்வர் பெரியவாச்சான்பிள்ளை - ஒரு பக்தன் ஒருக்ருஸ்ணவிக்ரஹத்தை ஏறியருளப்பண்ணி ‘இவர்க்கு என்ன திருநாமம்சரத்துவோம்‘ என்று சிந்தியாநிற்க, பெருமாள் அவனுடையகனவிலே வந்துதோன்றி ‘அப்பா! எனக்கு கன்னாபின்னாவென்று சிலநாமங்களை இடாமல் மதுரைமன்னன் என்றுபெயரிடு‘ என்று நியமித்தாராம்.

உரை:2

ஆடல் பாடல்களில் சிறந்த மங்கையர் கதிரவனைப் போல் ஒளிவீசும் தீபங்களையும் கலசங்களையும் ஏந்தி எதிர்கொண்டு அழைக்க வடமதுரையில் வாழ்பவர்களின் மன்னன் மணப்பந்தலின் நிலைப் படியினைத் தொட்டு எங்கும் மங்கல வாத்தியங்கள் அதிர உள்ளே புகுந்துவரக் கனாக் கண்டேன் தோழி நான்

English Translation

I had a dream O sister! Bright young ladies with lamps and sacred urns came to greet our king of Mathura. The Earth trembled as he strode with sandaled feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்