- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
செங்குறிஞ்சித்தாரார் என்ற வாக்கியத்தில், “நறுமாலைச் சாத்தற்கு“ என்ற பாடமோதவேண்டியதை விட்டு “நறுமாலை சாத்தற்கு“ என்று தப்பான பாடம் ஓதிவந்தனராகையால் இவ்வாக்கியத்தின் பொருளை உள்ளபடி அறியாதொழிந்தனர் பலர், ‘சாஸ்தா‘ என்கிற வடசொல் சாத்தான் எனத்திரிந்து கிடக்கிறதென்பதையறியாமல் “செங்குறிஞ்சித்தார்ர் நறுமாலை சாத்திக் கொள்கிறவனுக்கு“ எற கற்றறிந்த பல பெரியார்களும் பொருள் சொல்லக்கேட்டிருக்கிறோம். அங்ஙனன்று, செங்குறிஞ்சித்தாரார் நறுமாலையையுடைய, (சாத்தற்கு) சாஸ்தா என்று ப்ரஸித்தமாக தேவதாந்தரத்திற்கு என்று உண்மைப் பொருள் உணர்க. சாத்தான் –கு-சாத்தற்கு. இவ்வகைப் பொருளில் “மாலைச் சாத்தற்கு“ என்றே பாடமோத வேண்டும். அமரகோசத்தில் ஸர்வஜ்ஞஸ் ஸுகதோ புத்த) என்று தொடங்கி, புத்த தேவதைக்குப் பெயர்கள் படிக்கப்பட்டுள்ளமை காண்க. (தான் பின்னும் நேராதன ஒன்று நேர்ந்தாள்) “மறந்தும் புறந்தொழா மாந்தர்“ என்னுங் குடிப்பிறப்பின் உறைப்பு உள்ளமையால் தேவதாந்தரத்தைத் தொழுதாளென்று சொல்வதற்கும் இத்தலைமகள் அருவருத்து இங்ஙனே மறைத்துச் சொல்லுகிறாள். இதுவரையில் செய்யாத ஒரு காரியத்தைச் செய்தாளென்கிறாள். “வகுத்த விஷயத்திலே ஓர் அஞ்ஜலி பண்ணினான் அது ஸாதநத்தில் அந்வயிக்கில் செய்வதேன்? என்றிருக்கக் கடவதான், திருத்துழாய் பரிமாறாதவொரு தேவதைக்கு ஓர் அஞ்சலியுமகப்படப்பண்ணினாள் போலே காணும்“ என்ற பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்தி இங்கே அநுஸந்திக்கத் தகும். (மூதறியுமம்மனைமார் சொல்லுவார்) இவ்விடத்திற்குப் பெரிய வாச்சான் பிள்ளை கேட்க, தொண்ணூற்றெட்டு இந்த்ராதிகளை ஸேவித்தேன், இந்த்ரன்படி கேட்கிறாய், வேணுமாகில் சொல்லுகிறேன்‘ என்றாளிறே, அப்படியே பழையராய், நோய்களும்மறிந்து நோய்க்கு நீதாநமுமறிந்து பரிஹாரமும் பண்ணுவித்துப் போரும் மூதறிவாட்டிகள் சொல்லுகிறார்கள்“ – என்று
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்