விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முன்பொலா இராவணன்தன்*  முதுமதிள் இலங்கை வேவித்து,* 
    அன்பினால் அனுமன் வந்து*  ஆங்குஅடிஇணை பணிய நின்றார்க்கு,*
    என்புஎலாம் உருகிஉக்கிட்டு*  என்னுடை நெஞ்சம் என்னும்,* 
    அன்பினால் ஞான நீர்கொண்டு*  ஆட்டுவன் அடியனேனே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முன் - முன் பொருகால்
பொலா - பொல்லாதவனான
இராவணன் தன் - இராவணனுடைய
முது மதிள் இலங்கை - வலிய மதிள்களையுடைத்தான இலங்காபுரியை
வேவித்து - சுடுவித்து

விளக்க உரை

எம்பெருமான் பரம ஸந்தோஷமாக எழுந்தருளியிருந்த ஒரு ஸமய விசேஷத்தை யெடுத்துரைத்து அந்த நிலைமையிலேயே நீராட்டங் கொண்டருளச் செய்கிற னென்கிறார். பிராட்டியிருக்கும் இடத்தைத் தேடித் தெரிந்துவருமாறு ஸ்ரீராமபிரானால் நியமித்து விடுக்கப்பட்ட வாநர முதலிகளிலே தலைவரான சிறிய திருவடி இலங்கையிலே வந்து கண்டு அப்பிராட்டி கையிலே “இத்தகையாலடையாளமீதவன் கை மோதிரமே“ என்று ஸ்ரீராம நாமாங்கிதமான மோதிரத்தைக்கொடுத்து, சூடாமணியையும் பெற்று, ‘எதிரிகளி்ன் வலிமை எப்படிப்பட்டது? என்று பெருமாள் கேட்டால் அது தெரியாதென்று சொல்லவொண்ணாதாகையால் அதையும் தெரிந்து கொண்டு செல்வோமென்று கருதி அதற்காகச் சில சேஷ்டிதங் களைச் செய்து தன்வாலில் நெருப்பாலே இலங்கையைச் சுடுவித்து “கண்டேன் சீதையை“ என்று மீண்டுவந்து விண்ணப்பஞ்செய்த ஸமயத்திலே ஆனந்தக்கடலிலே ஆழ்ந்துகிடந்த பெருமாளுக்கு, அந்நிலையை நினைத்து ஈடுபட்டவனாகி, அப்படிப்பட்ட எம்பெருமான் விஷயமான ப்ரேமமே எனது நெஞ்சாக வடிவெடுத்திருப்பதனால் என்னுடைய நெஞ்ச மென்னு மன்பினால் ஞானமாகிற திருமஞ்சனத்தால் நீராட்டுவேன் என்கிறார். தீர்த்தத்திற்குப் பரிமள த்ரவ்யம் ஸம்ஸ்காரமாவதுபோல் இங்கு ஞான நீருக்கு அன்பு ஸம்ஸ்காரமாகக் கொள்ளப்பட்டது. இதனால் மாநஸிகமான திருமஞ்சனத்தைனச் சொன்னவாறு. “முன் = அதுவுமொரு காலமே! என்று வயிறு பிடிக்கிறார்“ என்ற வியாக்யமான ஸ்ரீஸூக்தி உணரத்தக்கது. பொலா – பொல்லா என்றபடி தொகுத்தல் * சுரிகுழற் கனிவாய்த் திருவினைப் பிரிந்த கொடுமையிற் கடுவிசை யாக்கனாகையாலே பொல்லாதவன் என்ற பொதுவிலே கொடுமையிற் கடுவிகை யாக்கனாகையாலே பொல்லாதவன் என்று பொதுவிலே கொல்லாமத்தனை யொழியப் பிரித்துப் பாசுரமிடப் போகாதென்க.

English Translation

In the yore, Hanuman went to the wealthy city of walled Lanka and burnt it to ashes, then returned to serve the Lord Rama's feet. I, this devotee-self, shall melt myself to the bones and bathe and anoint the Lord with the water of knowledge flowing from my love-laden heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்