2 எண்ணிக்கை பாடல் பாட
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்* நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்*
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்* கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்*
ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்* கார் மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்*
நாராயணனே நமக்கே பறை தருவான்* பாரோர் புகழப் படிந்து-ஏலோர் எம்பாவாய் (2)
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி* நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்*
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து* ஒங்கு பெருஞ் செந்நெலூடு கயல் உகளப்*
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்* தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி-
வாங்கக்* குடம் நிறைக்கும் வள்ளற் பெரும் பசுக்கள்* நீங்காத செல்வம் நிறைந்து- ஏலோர் எம்பாவாய் (2)
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய* கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண-
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்* ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை-
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்* தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்*
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா!* நீ- நேய நிலைக் கதவம் நீக்கு-ஏலோர் எம்பாவாய். (2)