விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உள்ளே உருகி நைவேனை*  உளளோ இலளோ என்னாத* 
    கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்*  கோவர்த்தனனைக் கண்டக்கால்* 
    கொள்ளும் பயன் ஒன்று இல்லாத*  கொங்கைதன்னைக் கிழங்கோடும்* 
    அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில்*  எறிந்து என் அழலைத் தீர்வேனே*.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குறும்பனை - (பெண்கள் திறத்திலே) பொல்லாங்கு செய்யுமவனான
கோவர்த்தனனை - கண்ணபிரானை
கண்டகால் - (ஒருகால்) நான் காணப்பெற்றேனாகில்
கொள்ளும் பயன் ஒன்று இல்லாத - (ஆட்டுக்கழுத்தல் முலைபோலே) உபயோகமற்றதான்
கொங்கை தன்னை - (என்னுடைய இந்த) முலையை

விளக்க உரை

உரை:1

உள்ளுக்குள்ளே உருகி நைந்துகொண்டிராநின்ற என்விஷயத்திலே சிறிது ஆராய்ச்சியுமில்லாதவனும், என்னை வெறுத்தரையாக்கினவனும், குறும்பு செய்யவதற்கென்றே பிறந்தவனுமான கோபாலக்ருஷ்ணனை ஒருகால் நான்காணப்பெற்றேனாகில், ஆட்டின் கழுத்தில் முலைபோலே என் மார்பில் வ்யர்த்தமாக முளைத்துக்கிடக்கிற இப்பாழும் முலைகளை வேர்பறியாகப் பறித்து அவனுடைய மார்விலே விட்டெறிந்து என்துக்கம் தீரப்பெறுவேனென்கிறாள். உள்ளோ இலளோ என்னாத - இங்கேற வந்து முகங்காட்டாவிட்டாலும் “அவள் பிழைத்திருக்கிறாளா ஒழிந்தாளா?“ என்று ஸாமாந்யமாகப் பிறரை விசாரிக்கலாமே, என்னைப்பற்றி அவனுக்கு எள்ளவாவது கவலையிருந்தாலன்றோ விசாரிக்கப்போகிறான், தன்பெருமையும் தன்போகமுமே தனக்குப் பெருஞ்செல்வமாயிருப்பதால் நானொரு சரக்கு இருப்பதாகவும் அவனுக்கு எண்ணமில்லை என்றவாறு. கொள்ளை கொள்ளி - கொள்ளை கொள்பவன், ஸர்வ ஸ்வாபஹாரம் செய்பவன். இ-பெயர்விகுதி. “கோவர்த்தன்னை“ என்றவிடத்து “பெண்களை வெறுந்தரையாக்கும், பசுக்களை ஒன்று நூறாயிரமாக்கும்” என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தியின் அழகு காண்க. “***“ (கா-வர்த்தயதீதி கோவர்த்கந) என்ற வ்யுத் பத்தியில் நோக்கு. “கண்டக்கால்“ என்றசொல்லாற்றலால், அவன் பசுக்களின்பின்னே போமவனாகையாலே அவனைக்காண்பது அருமை என்பது விளங்கும், வருந்தி ஒரகால் காணப்பெற்றேனாகில் என்க.

உரை:2

'தோழியர்களே. உள்ளத்தின் உள்ளே உருகி நைந்து போகிறேன். நான் உயிருடன் இருக்கிறேனா இல்லையா என்று கூட கேட்காத, என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கொள்ளைக் கொள்ளும் குறும்பனை மாடுகள் மேய்க்கும் இடையனைக் காணும் போது, இருப்பதால் ஒரு பயனும் இல்லாத என் கொங்கைகளை கிழங்கோடு அள்ளிப் பறித்து அவன் மார்பில் எறிந்து என் உடலிலும் மனத்திலும் எரியும் நெருப்பைத் தீர்ப்பேன்'

English Translation

The Lord of Govardhana my lover is a terrible highway-bandit. While I pine away, he does not care to inquire if I am living or dead. If ever I see that rogue, I shall tear these worthless breasts of mine by their roots, and fling them on his beautiful chest, then settle my score with him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்