- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
![](images/comingsoon.png)
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
சிலமயில்கள் கூட்டங்கூட்டமாக இருந்துகொண்டு கூத்தாடுவதைக்கண்டு தரிக்கமாட்டாதாளாய் ‘இக்கூட்டத்தாடுதலை நிறுத்துங்கள், உங்கள்காலிலே விழுகிறேன்‘ என்கிறாள். “நின்றாடுகணமயில்போல் நிறமுடையநெடுமால்“ (பெரியாழ்வார் திருமொழி) என்னப்பட்ட எம்பெருமானுக்கு இவை ஸ்மாரகங்களாய்க்கொண்டு நலிகிறபடியால் “கண்ணபிரான் திருக்கோலம்போன்று“ என்கிறாள். அடிவீழ்கின்றேன் - இக்கூத்து ஒழியவேணுமென்று ப்ரபத்திபண்ணுகிறேனென்றபடி. இப்படி இவள்சொன்னவாறே, அந்தோ! பெரியாழ்வார் திருமகளாகப் பெற்ற பெருமைவாய்ந்த நீ இப்படிச் சொல்லத்தகுமோ? உன்காலிலேயன்றோ நாங்கள் விழக்கடவோம்“ என்று அம்மயில்கள் சொல்வனவாகக்கொண்டு, கூறுகின்றாள். (பணமாடரவணையித்பாதி) “சென்றால்குடையாம் இருந்தால் சிங்காசன்மாம்“ என்றபடி - திருவனந்தாழ்வானை ஸர்வப்ரகாரங்களாலும் அடிமைகொண்டு சிறப்பிக்குமவர் என்னை உங்கள் காலிலே விழும்படிசெய்த பின்பு நான் செய்யலாவதுண்டோ? என்கிறாள். “பணவாளரவணை“ என்றும்பாடமுண்டு, அப்பாடத்தில், படங்களையும் ஒளியையுமுடைய அரவு என்க. வாள் - ஒளி.
English Translation
O Flocks of Peacocks sporting my Lord Krishna’s hues! Yes, you are artful dancers; but I fall at your feet, pray stop. The bridegroom sleeps eternally on a hooded serpent. See the plight he has brought on me!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்