விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காட்டில் வேங்கடம்*  கண்ணபுர நகர்* 
    வாட்டம் இன்றி*  மகிழ்ந்து உறை வாமனன்* 
    ஓட்டரா வந்து*  என் கைப் பற்றித் தன்னொடும்* 
    கூட்டு மாகில்*  நீ கூடிடு கூடலே!* (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

காட்டில் வேங்கடம் - காட்டிலுள்ள திருவேங்கடமலையில
நகர் கண்ணபுரம் - நகரமாகிய திருக்கண்ண புரத்திலும்
வாட்டம் இன்றி - மனக்குறையில்லாமல்
மகிழ்ந்து  -  திருவுள்ளமுகந்து
உறை - நித்யவாஸம் செய்தருளுகிற

விளக்க உரை

உரை:1

எம்பெருமான் என்னோட ஸம்ச்லேஷிக்கவேணுமென்று திருவேங்கடமலை, திருக்கண்ணபுரம் முதலிய திருப்பதிகளிலே வந்துநிற்கிறான்’ எனக்கு இசைவு உண்டோ இல்லையாவென்று சங்கித்துத் தாமஸித்து நிற்கின்றான்போலும்’ அப்பெருமான் என்னுடைய ஆதுரதையை நன்கறிந்து சடக்கென ஓடிவந்து என்னைத்தன்னோட அணைத்துக் கொள்ளுமாறு விதி வாய்க்கவேணுமென்று மநோரதிக்கிறாள். காட்டில் வேங்கடம் :- ஸ்ரீதண்டகாரண்யத்தில் ரிஷிகளோடே கூடியிருந்து வநவாஸரஸம் அநுபவித்தபடிக்கு ஒப்பாகும்-திருமலையில் வாழ்ச்சி. கண்ணப்புரநகர்-பிரகு திருவயோத்தியிலே அனைவருடனுங் கூடியிருந்து நகாவாஸ்ரஸம் அநுபவித்தபடிக்கு ஒப்பாகும்- திருக்கண்ணபுரத்தில் வாழ்ச்சி. திருமலையை விருந்தாவனத்தோ டொத்தாகவும் திருக்கண்ண புரத்தைத் திருவாய்ப் பாடியோடொத்ததாகவும் நிர்வஹிக்கவுமாம். நகாவாஸத்தோடு வநவாஸ்த்தோடு வாசியற இரண்டையும் இனிதாகக் கொள்ளும் மனமாண்பு விபவாவதாரத்தில் இருந்தது போலவே அர்ச்சாவதாரத்திலும் உள்ளபடியை இத்தால காட்டிற்றாகிறது.

உரை:2

காடுகள் நிறைந்த திருவேங்கடத்திலும் திருக்கண்ணபுரத்திலும் எந்தக் குறையுமின்றி மகிழ்ந்து உறையும் வாமனன் வேகமாய் வந்து என் கைப்பற்றி தன்னொடு சேர்த்துக்கொள்வான் ஆகில் நீ கூடிடு கூடலே.

English Translation

Vamana, the handsome bachelor lives in pleasure, owning the forest of Venkatam and the city of Kannapuram. Will he come running and take me by my hand? If he will come, then join, O Lord-of-the-circle.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்