விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கஞ்சன் வலைவைத்த அன்று*  காரிருள் எல்லிற் பிழைத்து* 
    நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய்*  நின்ற இக் கன்னியரோமை* 
     
    அஞ்ச உரப்பாள் அசோதை*  ஆணாட விட்டிட்டு இருக்கும்* 
    வஞ்சகப் பேய்ச்சிபால் உண்ட*  மசிமையிலீ! கூறை தாராய்*.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கஞ்சன் - கம்ஸனானவன்
வலை வைத்த அன்று - உன்னை அழிப்பதாக நினைத்தகாலத்தில்
கார் இருள் - மிக்க இருளையுடையத்தான
எல்லில் - இரவில்
இக்கன்னிய ரோமை - இளம் பெண்களான எங்களுக்கு

விளக்க உரை

வஸுதேவதேவியான தேவகியின் எட்டாவது கருவில் திருமால் கண்ணனாய் அவதரிக்க, அப்போதே வஸுதேவ தேவகிகளின் கால் விலங்கு இற்று முறிந்துவிழ, அக்குழந்தையைக் கம்ஸன் கொல்லக் கூடுமென்ற அச்சத்தினால், தாய் தந்தையர் அத்தெய்வக் குழவியின் அநுமதிபெற்று அந்தச் சிசுவை அது பிறந்த நடுராத்திரியிலேயே திருவாய்ப்பாடியிலுள்ள இடையர்க்கெல்லாம் தலைவரான நந்தகோபரது திருமாளிகையிலே ரஹஸ்யமாகக் கொண்டு சேர்த்து விட்டு’ அங்கு அப்பொழுது அவர் மனைவியான யசோதைக்கு மாயையின் அம்சமாகப் பிறந்திருந்ததொரு பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு வந்து விட, அது முதற் கம்ஸனைக் கொல்லுகிறவரையிற் கண்ணபிரான் அக் கோகுலத்திலேயே நந்தகோப குமாரனாய் யசோதை வளர்க்க வளர்ந்தருளின் னென்ற வரலாறு அறிக. பிரானே! நீ கஞ்சனுக்குத் தப்பிப்பிழைத்து எங்களை யெல்லாம் வாழ்விப்பதற்காக வென்று நினைத்திருந்தோம்’ இன்று நீ செய்யும் படிகளைப் பார்த்தால் எங்களைத் துக்கப்படுத்துவதற்காகவே நீ தப்பிப் பிழைத்தாய் என்று நினைக்கலாய்த் தென்கிறார்கள்.

English Translation

O Sire come to hurt the feelings of us stranded maidens! In the dead of the night you could escape from Kamsa’s trap. Yasoda does not scold; she lets you go as you wish. O Shameless one who sucked the ogress’s breasts, hand us our clothes.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்