- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
இத் திருவாய்மொழி கற்பார்க்கு பகவத் கைங்கர்யத்திலே அவகாஹனம் பலிக்குமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். எம்பெருமானுக்கு ஸ்வத: நாமம் ரூபம் ஒன்றுமில்லையாயினும் ஆச்ரிதர்க்காக அவற்றைப் பரிக்ர ஹிப்பதுண்டே; அங்ஙனம் பரிக்ரஹிப்பதுதான் ஒவ்வொரு யுகத்திலே ஒவ்வொரு வகையாயிருக்கும். யுகந்தோறும் ஆச்ரித ரக்ஷ்ணத்துக் கீடான ரூபநாம சேஷ்டைகளை வெவ்வேறெயுடையனாய்க் கொண்டு ஜகத்தை ரக்ஷிக்குமவனான ஆழி நீர்வண்ணனை யச்சுதனைப் பற்றி ஆழ்வார் ரருளிச்செய்த ஒப்பிலாத ஆயிரத்தினுள் இவை பத்தையுங் கொண்டு ஸர்வச்வரனைத் துதிக்க வல்லவர்கள் நித்ய கைங்கர்ய ஸாம்ராஜ்யத்தில் அபிஷிக்ராவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டிற்றாயிற்று. வியாக்கியானங்க ளெல்லாவற்றையும் ஊன்றி நோக்குமிடத்து மூன்றாமடியில் ‘மேயபத்தால்” என்கிற பாடம் சிறக்குமென்று தோன்றுகிறது. “அடிமைத் திறத்து ஆழியாரே” என்பதற்கு இரண்டு வகையான பொருள் கூறுவர்; ஆழியார்-ஆழ்ந்தவர்கள். (அல்லது) திருவாழியாழ்வானைப் போன்றவர்கள். கருதுமிடம் பொருது—கைவந்த சக்கரத்தன். என்கிறபடியே திருவாழியாழ்வான் எம்பெருமான் திருவுள்ளம் பற்றுமிடமெங்குஞ் சென்று பணிசெய்து வருமா போலே விடுத்ததிசக் கருமந் திருத்துமவர்கள் என்றபடி.
English Translation
This decad of the thousand songs by kurugur Satakopan, on the Lord of Tiruppereyil who takes many forms and names through countless ages every time to protect the world, -those who master it will secure the golden feet of the discus Lord
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்