- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
முதன்முதலாக உலகளந்த விஜயாபதாநத்தை அநுஸந்தித்து உகக்கிறார். உலகில், தலைவனான அரசனுக்கு ஒரு காரியம் ஆகவேண்டியிருந்தால் பரிகாரங்கள் முன்னின்று காரியஞ்செய்து தலைவனுக்கு வெற்றியை யுண்டாக்கப்பார்ப்பதென்கிற ஒரு முறை யுண்டே; அந்த ரீதியிலே, ஆயுதங்களில் தலைவனான திருவாழியாழ்வான் முந்துற முன்னம் வியாபரித்தபடியைப் பேசுகிறார் ஆழியெழவென்று. பெருமாள் காட்டுக் கெடுந்தருளப் புறப்படுவதற்கு முன்னே இளைய பெருமாள் தாம் முற்பட்டதுபோல, எம்பெருமானுடைய திருவடி உலகளக்க நிமிர்வதற்கு முன்னை திருவாழியாழ்வான் தான் முன்னே உயர்ந்து தோற்றினானாயிற்று. கருகுமிடம் பொருது – கைந்நின்ற சக்கரத்தன் என்கிறபடிழியு எம்பெருமான் நினைப்பிட்டவிடத்திலே சடக்கெனச் சென்று காரியம் தலைக்கட்டித் திரும்புமாற்றல் படைத்தவனான திருவாழியாழ்வான் ‘இந்த மாவலியின் செருக்கை யடக்க தேவரீர் வேணுமோ? அடியேனுக்கு நியமித்தருளினால் ஒரு நொடிப்பொழுதில் நிறைவேற வேண்டிய காரியமன்றோ இது’ என்று அவலீலையாகப் பேசுவான் போலே தான் முன்னே யெழுந்தானாயிற்று. எம்பெருமான் எந்த அவதார மெடுத்தாலும் திருவாழியாழ்வான் தான் முன்னிருந்து காரியஞ் செய்பவன். இதை ஸீபூத்யாம்” என்கிற ஸ்ரீஸீக்தியாலே நன்குணரலாம். ராமாவதாரம் வராஹாவதாரம் நரஸிம் ஹவதாரம் பரசுராமாவதாரம் முதலியவற்றில் திருவாழியாழ்வானுடைய ப்ரஸதாவம் இல்லேயானாலும், ராமாவதாரத்தில் அம்பிலே ஆவேசித்தும், வாராஹாவதாரத்தில் கோரப்பல்லிலே ஆவேசித்தும், நரஸின்ஹாவதாரத்தில் திருவுகிரிலே ஆவேசித்தும், பரசுராமாவதாரத்திலே மழுவிலே ஆவேசித்துன் இப்படி ஒரோரவதாரந்தன்னிலே ஒரொருவஸ்துவாக இருந்து காரியஞ் செய்தவன் திருவாழியாழ்வானேயென்கிறது மேற்குறித்த ஸுதர்சநசதக ச்லோகம். வாணீ பௌராணிகீயம் ப்ரதயதி மஹிதம் ப்ரேக்ஷ்ணம் கைடபாரே:” என்கிற அதற்கு முந்திய பாதமானது எம்பெருமானுடைய ஸ்ங்கல்பமேதான் திருவாழியாழ்வனென்கிறது. த்ரிவிக்ரமாவதாரத்திற்கு முந்தியதான வாமநாவதாரம் முதற்கொண்டே திருவாழியாழ்வான் காரியஞ் செய்து வருகிறானென்பதும் இங்கு அறியத்தக்கது. அது என்னென்னில்; வாமன் மூர்த்தியின் வடிகழகாலும் மழலைச்சொல்லாலும் மன மகிழ்ந்த மஹாபலி மூவடி மண்ணைக் கொடுக்க யத்தனித்தவளவிலே, அவனுடைய ஆசாலீயனான சுக்கிரன் எம்பெருமானது வடிவையும் வந்த வகையையும் பேச்சையும் ஊன்றிப்பார்த்து ‘இவன் ஸர்வேச்வரன், தேவகார்யம் செய்யும் பொருட்டு உன் செல்வத்தை யெல்லாம் பறித்துப் போக வந்தான்; ஆகையால் நீ இவனுக்கு ஒன்றும் தரத் தகாது’ என்று தானத்தைத் தடுக்க, அவன் அதை ஆதரியாமல் தாரைவார்த்து தத்தம் செய்யுப்புக, ஜல பாத்திரத்தின் (திருக்காவிரியின்) த்வாரத்திலே அந்த சுக்ரன் புகுந்துகொண்டு தீர்த்தம் விழவொட்டாமல் தடுக்க, ஸ்ரீ விஷ்ணு த்வாரம் சோதிப்பவன் போல, தன்னுடைய திருக்கையிலணிந்த தர்ப்ப பவித்ரத்தின் நுனியால அவனது கண்ணைக் குத்திக் கலக்க, அவனும் கண்கெட்டு அங்கு நின்றும் வெளிப்பட, பின்பு மாவலியினிடத்தில் நீரேற்றுப் பெற்றனனென்பது வரலாறு. இக்கதையை யருளிச்செய்யாநின்ற பெரியயாழ்வார் மிக்க பெரும் புகழ் மாவலிவேள்வியில் தக்கதிதன்றென்று தானம் விலக்கிய சுக்கிரன் கண்ணைத் துரும்பால்கிளறிய சக்கரக்கையன் என்றருளிச் செய்திருத்தலால் (அதாவது, துரும்பாற் கிளறிய சக்கரம் என்ற சொல்லாற்றலால்) கருதுமிடம் பொருது – கைந்நின்ற சக்கரத்தன் என்றபடியே திருமால் விரும்பிய இடங்களில் விரும்பின வடிவங்கொண்டு செல்லுந் தன்மையுடைய திருச்சக்கரமெ பவித்ரத்தின் வடிவத்துடன் நின்று சுக்கிரன் கண்ணைக் கலக்கியதாக ஆசிரியர் நிர்வஹிப்பதுண்டு. அஃது இங்கு அறியத்தக்கது.
English Translation
The discus grew, the conch and the bow also grew, the Earth resounded, "Hail!, the mace and the dagger grew. The world become a bubble, the Lord's foot touched the Asura's head. Oh! How my father grew and strode the Earth, heralding a new age!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்