- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
(பெய்யும் பூங்குழல்.) தாயென்று நினைத்து முலையுண்டு முடிபட்டு மென்கிற எண்ணத்தோடே யசோதைப்பிராட்டிபோலே தலையிலே மலரணிந்துகொண்டு முலைகொடுக்க நன்ளிருளிலே வந்த பூதனையை முடித்தபடியும் அஸுர வேகங்கொண்ட சகடத்தை முலையுண்கைக்கு அழுகிற பாவனையாலே தூக்கின திருவடிகளைக் கொண்டு பொடிபடுத்தினபடியும். இந்த நெய்யை யெல்லாம் யார் குடித்தது? என்று ப்ரஸ்தாபம் செய்துகொண்டே தாயானவன் கையிலே கோலைக் கொள்ள அது தன்மேல்தான் விழப்போகிறதென்று கண்ணீர் பெருக ஒடுங்கி நின்றபடியும் அந்தோ! என்று நெஞ்சை உருக்குகின்றனவே யென்கிறார். பிள்ளைத் தேற்றம் = பசுங்குழந்தையாயிருக்கச் செய்தேயும் தாய்முலை யென்றும் வேறு முலையென்றும் அறியுந் தெளிவு. சிறுச் சேவகம் = இளம்பிராயத்திலே காட்டின விக்கிரமம்.
English Translation
Your radiance as an infant sucking Putana's poisoned breasts, your valour as a child destroying the cart with you lotus-feet, then your standing in fear with tears in your eyes, -when your mother took the stick on hearing that you stole butter,-these melt my heart.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்