- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
நாயகன் இரவிலே வந்து கலந்தமையை நாயகி தன் தோழிக்குக் கூறுதல் ஆற்றாமைக்குக் கலங்கியுரைத்த தோழியைக் குறித்து தலைவி இரவிடத்துத் தலைமையைத் தென்றல் மேல் வைத்து உரைத்த பாசுரம்’ என்ற அழகிய மணவாளசீயருரை வாக்கியங்காண்க. தென்றல் மேல் வைத்துக் கூறுதலாவது- நாயகன் அன்போடு வந்து கலந்த்தை வெளிப்படையாகக் கூறுதற்கு வெட்கப்பட்டுத் தென்றல் மேல்வைத்துக் கூறுதலாம். எனது விரஹவ்யஸநத்தை அநுஸந்தித்து வருந்தா தோழீ! நாயகனது அருளால் யான் உஜ்ஜிவிக்க ஓர் அவகாசம் பெற்று உஜ்ஜீவித்தேன், இனி வாடை முதலியவற்றிற்கு அஞ்ச வேண்டுவதில்லை, ஏனென்னில், - ஒரு குளிர்ந்த தென்றற்காற்று அயலறியாமல் ஏகாந்தமாக நாயகனது திருத்துழாயின் தேனைத் துளித்துக்கொண்டு எனது அவயவங்களிலும் அபரணங்களிலும் பட்டு ஆற்றாமை தீர்த்ததுகாண் என்றாள். பிரிந்த காலத்தில் வெவ்விதாய் வருந்திய தென்றல் குளிர்ந்த்தாம்படி தலைமகன் வந்து தன் திருத்துழாய் மாலையின் தேன் என் அவயவங்களிலும் ஆபரணங்களிலும் படும்படி தழுவியணைத்தன்ன் என்றவாறு.
English Translation
Sister! Have no fear. By the grace of the lord who swallowed the Earth, we have found a refuge and redemption. A cool breeze with the heavenly touch of clouds and laden with the nectar of Tulasi caressed my limbs and my sense, Nobody else knew about this.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்