விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வண்டுகளோ! வம்மின்*  நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ*
    உண்டு களித்து உழல்வீர்க்கு ஒன்று உரைக்கியம்,*  ஏனம் ஒன்றாய்-
    மண் துகள் ஆடி வைகுந்தம் அன்னாள் குழல்வாய் விரை போல்* 
    விண்டு கள் வாரும்,*  மலர் உளவோ நும் வியலிடத்தே? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வண்டுகளோ - வண்டுகளே!
வம்மின் - வாருங்கள்;
நீர் பூ - நீரிலுண்டாகிற பூவும்
நிலம் பூ - நிலத்திலுண்டாகிற பூவும்
மரத்தின் ஒண்பூ - மரத்திலுண்டாகிற சிறந்த பூவும் என்கிற இவை யெல்லாவற்றிலும்

விளக்க உரை

இப்பாட்டுக்குத் துறை நலம்பாராட்டு என்பதாம். நாயகனானவன் நாயகியினித்தில் தான் வைத்துள்ள காதலை ஒருவாறு வெளியிட வேண்டி அவளது சிறப்பை அந்நாயபதேசமாகப் புகழ்ந்துரைத்தல் இது. ஒரு பூந்தோட்டத்தில் ஒருபுறமாய் நாயகி நிற்கையில் அவளை அணுகிச் செல்லுதற்குக் கூசாநின்ற நாயகன் ‘இவள் திறத்தில் நமக்குள்ள காதலை ஒருவாறு இவளுக்கு நாம் உணர்த்துவோம்; பிறகு என்னாகிறதோ பார்ப்போம்!’ என்றெண்ணி அங்குப் பலவகைப் பூக்ககளிலும் வாய் வைத்துக் களித்துத் திரிகின்ற வண்டுகளை விளித்து ‘நீங்கள் எவவிடத்துஞ்சென்று நீர்ப்பூ நிலப்பூ கோட்டுப்பூ என்றிப்படி, வெவ்வேறு வகைப்பட்ட பூக்களைக் கண்டறிவீர்களன்றோ? அவற்றில் எவையேனும் இளது கூந்தலின் இயற்கை நறுமணத்தை யொத்த மணமுடையவை உண்டோ? சொல்லுங்கள்’ என்று தனது “மருங்குழலுங் களி வண்டினங்கா ளுரையீர் மடந்தை, கருங்குழல் நாறுமென்போதுடைத்தோ நுங் கடிபொழிலே” என்றும், “மருங்குழல்வாய் நீயறி திவண்டே சொல்லெனக்கு மங்கை, கருங்குழல் போலுளவோ விரைநாறு கடிமலே” னஎறுமுள்ள பிறருடைய செய்யுட்களும் இப்பாசுரத்தை அடியொற்றியுள்ளன.

English Translation

O Bumble bees! You have tasted the nectar of water-borne flowers, Earth-borne flowers and sky-borne flowers of trees. We have something to ask you. The lord came as a boar and bathed in the dust of the Earth. Sweet as his Vaikunta is this dame, whose coiffure bears flowers that spill fragrant nectar. Have you seen such excellence anywhere else?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்