- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
கழல்ஒன்று எடுத்து* ஒருகை சுற்றிஓர் கைமேல்,*
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச,* - அழலும்-
செருஆழி ஏந்தினான்* சேவடிக்கே செல்ல,*
மருவுஆழி நெஞ்சே! மகிழ்.
காணொளி
பதவுரை
ஒரு கழல் - ஒரு திருவடியை
எடுத்து - மேலுலகங்களிலே செல்ல நீட்டி
ஒரு கை - ஒரு திருக்கையாலே
சுற்றி - [பிரதிகூலரான நமுசி முதலானவர்களைச்] சுழற்றியெறிந்து
ஓர் கை மேல் - மற்றொரு திருக்கையிலே.
விளக்க உரை
உலகளந்த பெருமானுடைய திருவடிகளைப் பணிந்து மகிழ்ந்திரு என்று திருவுள்ளத்தைத் தேற்றுகின்றார்.
English Translation
With one foot, he scooped up Namushi; with one hand, swirled him in the air; then with the other hand he spun his discus that gods and Asuras around feared. O Good Heart of mine! Desire to attain his feet and rejoice.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்