விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அரன் நாரணன் நாமம்*  ஆன்விடை புள்ஊர்தி,* 
    உரைநூல் மறைஉறையும் கோயில்,* - வரைநீர்-
    கருமம் அழிப்புஅளிப்பு*  கையதுவேல் நேமி,* 
    உருவம்எரி கார்மேனி ஒன்று   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அளிப்பு - (இன்னருளுக்குரிய) ரக்ஷணத் தொழிலாம்;
கையது - ஒருவனுடைய கையிலுள்ள அயுதம்.
வேல் - (கொலைத்தொழிலுக்கு ஏற்ற) சூலாயுதம்;
கார் - (கண்டபோதே தாபங்களெல்லாம் தீரும்படியான) காளமேகவுருவாம்;
ஒன்று - சிவனாகிய ஒருவன்

விளக்க உரை

இருவருடைய பெயரையும் நோக்குமிடத்து சிவன்பெயர் அரனென்றும் விஷ்ணுவின் பெயர் நாராயணனென்றும் ப்ரசித்தமாகவுள்ளன; அரனென்றால் ஹரிப்பவன் எல்லாவற்றையும் ஒழிப்பவன் என்று பொருள்படும்; நாராயணனென்றால், நாரங்களாகிய நித்யவஸ்துக்களெல்லாவற்றிலும் உறைந்திருந்து அவற்றை நோக்குமவன் என்று பொருள்படும்; ஆகவே, ஸர்வரக்ஷகன் பரதேவதையாயிருக்கத் தகுமோ அன்றி ஸர்வபக்ஷகன் பரதேவதையாயிருக்கத் தகுமோ என்பதை நீங்களே ஆராயலாம் என்றாராயிற்று. இப்படியே இருவருடைய வாஹனங்களையும் நோக்குங்கால், ‘அடா மாடே!’ என்று மூர்க்கரை நிந்திப்பதற்கு த்ருஷ்டாந்தமாகக் கொள்ளப்படுகிற எருதை வாஹனமாகவுடையவன் அரன்; 1. “ஸுபர்ணேஸி கருத்மாந்” என்ற வேத வாக்கியத்தாலும் 2. “வேதாத்மா விஹகேச்வர:” என்ற ஆளவந்தார் ஸ்ரீஸூக்தியாலும், 3. “சிரஞ்சேதனன் விழிதேகம் சிறையின் சினைபதம் கந் தரம் தோள்களூரு வடிவம் பெயரெசுர்சாமமுமாம்..... அரங்கர்தமூர்திச் சுவணனுக்கே” என்ற ஐயங்கார் பாசுரத்தாலும் வேதஸ்வரூபியாகப் பிரதிபாதிக்கப்பட்ட பெரிய திருவடி யென்னும் கருடாழ்வானை வாஹனமாகவுடையவன் ஸ்ரீமந்நாராயணன். இனி இருவரையும் பற்றிச் சொல்லுகிற பிரமாணங்களை ஆராய்ந்தால், வேதவிருத்தமான பொருள்களைச் சொல்லுமதாயும் ராஜஸதாமஸ புருஷர்களால் செய்யப்பட்டதாயுமுள்ள சைவாகமம் அரனைப்பற்றிச் சொல்லுவது; ஒருவராலும் செய்யப்படாமல் அநாதியாய் எவ்வகையான தோஷமுமற்று உண்மைப் பொருளையே உரைக்கின்ற வேதம் ஸ்ரீமந்நாராயணனைப் பிரதிபாதிக்கும் பிரமாணம். இனி இருவருடைய இருப்பிடங்களையும் நோக்குங்கால், தனது நெஞ்சின் கடினத் தன்மைக்கு ஏற்றவாறு கடினமான கைலாசமலை அரனுக்கு உறைவிடம், தனது திருவுள்ள நீர்மைக்குத் தக்கபடி நீர்மையே வடிவான திருப்பாற்கடல் ஸ்ரீம்ந்நாராயணனுக்கு உறைவிடம். இதற்குத் தக்கபடி அழித்தல் தொழில் அரனது; காத்தல் தொழில் நாராயணனது. அதற்குத் தக்கபடி கொலைத் தொழிலுக்கு ஏற்ற முத்தலைச் சூலம் அரனது, *அருளார் திருச்சக்கர மென்றே புகழ்பெற்று உலகங்களை யெல்லாம் பாதுகாக்குமாறுள்ள சக்கரப்படை நாராயணனது.

English Translation

His names are Hara and Narayana; his mounts the bull and the bird; his texts, the Agamas and Vedas; his abodes the mount kaliasa and the Ocean of Milk, his works dissolution and protection; his weapons the spear and the discuss; his hue, the fire and the cloud; and yet he is one to all.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்