விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன்*  அம்சிறைப்புள் தனிப்பாகன் அவுணர்க்கு என்றும்,* 
    சலம் புரிந்துஅங்கு அருள்இல்லாத் தன்மை யாளன்*  தான்உகந்த ஊர்எல்லாம் தன்தாள் பாடி,*
    நிலம்பரந்து வரும் கலுழிப் பெண்ணை ஈர்த்த*  நெடுவேய்கள் படுமுத்தம் உந்த உந்தி,* 
    புலம்பரந்து பொன்விளைக்கும் பொய்கை வேலிப்*  பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அம் சிறை புள் தனி பாகன் – அழகிய சிறகையுடைய பெரிய திருவடிக்குத் தனிப்பாகனாய்
அவுணர்க்கு – ஆஸுரப்க்ருதிகளுக்கு
என்றும் – எக்காலத்தும்
சலம் புரிந்து – சீற்றங்கொண்டிருந்து
அங்கு – அவர்கள் விஷயத்திலே

விளக்க உரை

அமரர்வேந்தன் = கீழ் ‘அமரர் வேந்தன்‘ என்று நித்யஸூரிகளை இங்கு அமரர் என்கிறது. நித்யஸூரிகளை அடிமைகொள்வதாக முடிகவித்திருப்பவன் என்றவாறு. (அஞ்சிறைப்புள்தனிப்பாகன்) கீழ் ‘அமரர் வேந்தன்‘ என்று நித்யஸூரிகளை அடிமை கொள்பவனென்று பொதுவாகச் சொல்லிற்று; அவர்களை அடிமை கொள்ளும் படிக்கு திருஷ்டாந்தமாக ஒருவ்யக்தியைச் சிறப்பாக எடுத்துப்பேசுகிறார். அழகிய சிறகையுடையனான பெரியதிருவடிக்கு அத்விதீயனான பாகன், கருடவாஹன்ன் என்றபடி. எம்பெருமான் தன்மீதேசறி உலாவும்போது உண்டாகும் ஆயாஸத்திற்குத் திருவாலவட்டம் பணிமாறினாப் போலே இரண்டு சிறகாலும் ஆச்வாஸம் செய்கிறபடியைத் திருவுள்ளம் பற்றி ‘அஞ்சிறை‘ என்று புள்ளுக்கு அடைமொழி கொடுக்கப்பட்டது. அடியார்கள் இருக்குமிடங்களிலே எம்பெருமானைக் கொண்டு சேர்ப்பதற்குச் சிறகுகளே கருவியாதலால் அவற்றைக் சிறப்பித்துக் கூறுகிறபடியுமாம். (அவுணர்க்கென்றும் சலம்புரிந்து அங்கருளில்லாத் தன்மையாளன்) ஸ்ரீராம க்ருஷ்ணாதிரூபேண திருவவதரித்து விரோதிகளைக் களைந்தமை சொல்லுகிறது. ‘அவுணர்‘ என்றது அசுர்ர் என்றபடி. இது அஸுரஜாதியைச் சொல்லுகிறதன்று. அஹங்காரம்மகாரங்களோடு கூடினவர்களாய் பகவத்பக்தியிலே பகையுள்ளவர்கள் ஆஸுரப்க்ருதிகளென்று சொல்லப்படுவார்களாதலால் அவர்களையே இங்கு அவுணரென்கிறது. ப்ரஹ்லாதாழ்வான் அஸுரயோனியிற் பிறந்தவனாயிருக்கச் செய்தேயும் “உபமாநமசேஷாணாம் ஸாதூநாம்யஸ் ஸதாபவத்“ எனும்படி ஸாதுக்களுக்கு உபமாநமா யிருந்தான். விபீஷணாழ்வான் ராக்ஷஸ அஸுரயோநியிற் பிறந்திருக்கச் செய்தேயும் “விபணஷஸ் து தர்மாத்மா“ என்னும்படியாயிருந்தான். ஜயந்தன் (காகாஸுரன்) தேவயோநியாயிருக்கச் செய்தேயும் ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு இலக்கானான். ஆன இப்படிகளை ஆராயுமிடத்து அஸுரத்வமும் தேவத்வமும் ஜாதிபரமன்று, ஸ்வபாவபரம். அதாவது. “விஷ்ணுபக்திபரோ தேவோ விபரீதஸ் த்தாஸுர“ என்று ஸ்ரீவிஷ்ணுதர்மத்திலே சொல்லிற்று. “த்வௌ பூதஸர்க்கௌ லோகேஸ்மிந் தைவ ஆஸுர ஏவ ச-தைவீ ஸம்பத் விமோக்ஷாய நிபந்தாயாஸுரீ மதா.“ என்று பகவத்கீதை யிலே சொல்லிற்று. எம்பெருமானுடைய ஸ்வரூப குணவிபூதிகளில் அன்புள்ளவர்கள் தேவரெனப்படுவர்கள், அவற்றில் பொறாமையுள்ளவர்கள் அசுரனெப்படுவர்கள். “நண்ணவசுர்ர் நலிவெய்த நல்லவமர்ர் பொலிவெய்த“ (10-7-5) என்பன போன்றவிடங்களிலும் இவ்வகைப் பொருள் அநுஸந்திக்கப்பட்டமை காண்க. ஆக இப்படிப்பட்ட ஆஸுர ப்ரக்ருதிகள் விஷயத்தில் ஒருநாளும் அநுக்ரஹ மின்றி நிக்ரஹமே செய்து போருமியல்வின்ன் என்றதாயிற்று.

English Translation

The Lord who is king of the celestials has mighty arms of exceeding benevolence. He rides the beautiful Garuda bird. Always angry and merciless towards Asuras. He is raised in all the towns where he resides. O Heart! Came let us worship him in Tirukkovalur surrounded by fertile wet-lands where the river Pannai throws up grains of gold and pearls collected from the Bamboo thickness where it flows.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்