- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
தோழீ! நீ உகக்கும் பெருமான் எல்லார்க்கும் மேம்பட்டவனாகவன்றோ இருக்கவேண்டும்? அவன் அப்படி யிருந்தானாகில் பிறர்க்கு இழிதொழில்செய்து திஜீவனோ பஞ்சபாண்டவர்களுக்கு அரசுரிமை பெறுவித்தற்பொருட்டுப் ‘பரண்டவதூதன்’ என்று பெயர்சுமந்து துரியோதனாதிகளிடத்தில் தூது நடந்தான்; அங்ஙனே நடந்தவிடத்திலே அந்தத் துரியோதனனால் இழிவான வார்த்தைகளைச் சொல்லப்பெற்றான்; இவனையோ நீ பரமபுருஷனென்று கொண்டாடுவது? என்ன் அதற்கு மறுமொழி கூறுகின்றாள் மற்றொருத்தி; - பாண்டவாக்ட்குத் தூது நடந்ததும் மன்னவனால் சொல்லுண்டதும் மெய்யே; இவற்றையேயோ நீ பார்ப்பது; கடல்சூழ்ந்த வுலகங்களையெல்லாம் முன்பு பிரளயங் கொள்ளாதபடி திருவயிற்றினுள் வைத்துப் பிறகு வெளிப்படுத்தினவன் இவனே என்கிற பெருமையை அறிந்திலைபோலுமென்கிறாள். கோதை=அரசர்க்கு லக்ஷணமான பூமாலையைச் சொன்னபடி; அரசுரிமையை இழந்திருந்த பாண்டவர்கட்கு அப்பேவாது பூமாலையில்லையாகிலும் அதனை அணிவதற்குரிய ஸ்வரூப யோக்யதையைக் கொண்டு இங்கு இவ்விசேஷணமிட்டபடி.
English Translation
"Aho, Sister! For the sake the five Pandava princes he went as a messenger seeking a stretch of land, and ate words of abuse from the king Duryodhana, See!". "But though he ate, words of abuse from the king, he also swallowed the ocean-girdled world and brought if out during the deluge, so tally!".
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்