விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காமன் தனக்கு முறையல்லேன்*  கடல் வண்ணனார்,*
    மாமணவாளர்*  எனக்குத் தானும் மகன்சொல்லில்,*
    யாமங்கள் தோறும் எரி வீசும்*  என்னிளங் கொங்கைகள்,*
    மாமணி வண்ணர்*  திறத்த வாய் வளர்கின்றவே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தான் – அந்த மன்மதன் தான்
எனக்கு மகன் – எனக்கு மகனாகப் பெற்றான் (அப்படியிருந்தும்)
யாமங்கள் தோறு – எப்போதும்
எரி வீசும் – நெருப்பைத் தூவுகின்றாள்
என் இள கொங்கைகள் – எனது இளமுலைகளோ வென்னில்

விளக்க உரை

நான் கடல்வண்ணனான எம்பெருமானை எப்போதும் மணவாளனாகக் கொண்டேனோ அப்போதே மன்மதன் எனக்கு மகனாய்விட்டான்; (மன்மதனுக்குத் தந்தையன்றோ பகவான்). முகனானவன் பெற்றதாயை இங்ஙனே கொலை செய்வது வழக்கோ? ஐகயைப் பிடித்த கணவனார் என்ன நலிவுசெய்தாலும் பொறுக்கலாம்; வயிற்றிற் பிறந்த மகன் நலிவு செய்ய என்ன முறைமையுண்டு? என்கிறாள் முன்னடிகளில். மன்மதன் செய்கிற ஹிம்ஸை ஏதென்ன, யாமங்கடோறு எரிவீசும் என்கிறாள். ஸர்வகாலத்திலும் தபிக்கிறா னென்றபடி. மன்மதன் இப்படு நெருப்பை வீசச்செய்தேயும் எனது இளமுலைகள் தாம் கொண்ட கொள்கையை விடுகின்றில்; அப்பெருமானுக்கே அற்றுத்தீர்ந்தனவாய் விம்மி வளர்கின்றனவென்கிறாள்.

English Translation

This Madana, god of love, is no relative of mine. The ocean-hued Lord alone being my bridegroom, through him, he is my son, But alas, the way he scorches me with lust-fire every hour of the day! My tender breasts have learnt to live with the pain from the Lord of gem hue.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்