- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
நானே நாநாவித நரகம்புகும் பாவஞ்செய்தேன் = சேதநவர்க்கங்களுக்குத் தொகையில்லாதாப் போலவே ஏற்கனவே படைக்கப்பட்டுள்ள நரகங்களுக்கும் தொகையில்லை; சிலசில சேதநர்கள் சிலசில நரகங்களிலே சென்று வேதனைப்படுவர்கள் என்றிருந்தாலும், உள்ள நரகங்களெல்லாம் என்னொருவனுக்கே போராதென்னும்படி எல்லையற்ற பாவங்களைச் செய்தேனென்று நைச்சியமாகச் சொல்லிக் கொள்ளுகிறார். நாநாவித நரகம் = வடமொழித் தொடர். என்ஆனாய் = ‘ஆனை’ என்பது விளியுருபு ஏற்றால் ‘ஆனாய்’ என்றாகும்; ஆனை போன்றவனே! என்றபடி. “தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபால மதயானாய்” என்று திருநெடுந்தாண்டகத்திலு மருளிச் செய்வர்.
English Translation
O Lord of Tiruvenkatam hills, surrounded by bee-humming flower groves! My Elephant! Caught in the lure of fawn-eyed dames, I stooped to commii all kinds of hell-going sins. Today I have come to you. Pray take me into your service!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்