திவ்யதேச பாசுரங்கள்
-
998.
Thinking wickedly, speaking in harsh tones, doing many acts against Dharma, Trailing in the dreary path of the dead ones, I did tremble sinfully myself O! O Lord who felled the wood-apple-demon, ever-in-the-heart of devotees! O Death to Asuras, I have come to your feet Naimisaraniyam-living Lord, O!
வாள் நிலா முறுவல் சிறு நுதல் பெருந் தோள்* மாதரார் வன முலைப் பயனே பேணினேன்*
அதனைப் பிழை எனக் கருதி* பேதையேன் பிறவி நோய் அறுப்பான்*
ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி* இளையவர் கலவியின் திறத்தை நாணினேன்*
வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
விளக்கம்
999.
சிலம்பு அடி உருவின் கரு நெடுங் கண்ணார்* திறத்தனாய் அறத்தையே மறந்து*
புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி* போக்கினேன் பொழுதினை வாளா*
அலம் புரி தடக்கை ஆயனே! மாயா!* வானவர்க்கு அரசனே!*
வானோர் நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
விளக்கம்
1000.
சூதினைப் பெருக்கி களவினைத் துணிந்து* சுரி குழல் மடந்தையர்திறத்துக்*
காதலே மிகுத்து கண்டவா* திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும்*
வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன்* வேலை வெண் திரை அலமரக் கடைந்த நாதனே*
வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
விளக்கம்
1001.
வம்பு உலாம் கூந்தல் மனைவியைத் துறந்து* பிறர் பொருள் தாரம் என்று இவற்றை*
நம்பினார் இறந்தால்* நமன் தமர் பற்றி எற்றி வைத்து*
எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையை* பாவீ ! தழுவு என மொழிவதற்கு அஞ்சி*
நம்பனே! வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
விளக்கம்
1002.
இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோ துற்று என்று* இரந்தவர்க்கு இல்லையே என்று*
நெடுஞ் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ!* நினைக்கிலேன் வினைப் பயன் தன்னை*
கடுஞ் சொலார் கடியார் காலனார் தமரால்* படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி*
நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
விளக்கம்
1004.
நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும்* நீதி அல்லாதன செய்தும்*
துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே* துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்*
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா* வானவா! தானவர்க்கு என்றும் நஞ்சனே!*
வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
விளக்கம்
1007.
ஏதம் வந்து அணுகாவண்ணம் நாம் எண்ணி* எழுமினோ தொழுதும் என்று*
இமையோர் நாதன் வந்து இறைஞ்சும்* நைமிசாரணியத்து* எந்தையைச் சிந்தையுள் வைத்து*
காதலே மிகுத்த கலியன் வாய் ஒலிசெய்* மாலைதான் கற்று வல்லார்கள்*
ஓத நீர் வையம் ஆண்டு வெண் குடைக் கீழ்* உம்பரும் ஆகுவர் தாமே. (2)