திவ்யதேச பாசுரங்கள்
-
1248.
இத்திருப்பதியின் திருநாமம் “மாதவப்பெருமாள் ஸந்நிதி” என்றும் ப்ரஸித்தமாக வழங்கிவருதலால் “மாதவன் தானுறையமிடம்” என்றார். தேதென - இசைக்குறிப்பு.
யாவர் என்ற சொல் உயர்திணைவிகுதி யேற்றதாதலால் ஸகல சேதநப்பொருள்களையுஞ் சொல்லுகிறது. யாவை என்ற சொல் அஃறிணை விகுதியேற்றதாதலால் ஸகல அசேதநப் பொருள்களையுஞ் சொல்லுகிறது. ‘ஆய்’ என்ற இவற்றோடு எம்பெருமானுக்கு ஐக்கியஞ்சொன்னது – சரீரசரீரிபாவத்தா லென்க. மூவருமாய் - பிரமன் என்கிற வேஷம்பூண்டு படைத்தல் தொழிலைச் செய்தும், தானான தன்மையில் காத்தல் தொழிலைச்செய்தும், ருத்ரனான தன்மையில் ஸம்ஹாரத்தொழிலைச் செய்தும் போருகிறவன் என்க. மூர்த்தி - ஸ்வாமி.
“பல்லுயிருந்தானாய வெம்பெருமான்” என்றவிடத்துக்குப் பெரியவாச்சான்பிள்ளை எடுத்துக்காட்டுகிற விசேஷோக்தி வருமாறு :- “தானும் குடும்பமுமாய்க் கலநெல் ஜீவிப்பானொருவனை ‘உனக்கென்ன வேணும்?’ என்றால், ‘எனக்குக் கலநெல்வேணும்’ என்னுமிறே தன்னபிமானத்துக்குள்ளே யடங்குகையாலே. அப்படியே, தானே இதுக்கெல்லாம் அபிமாநியாயிருக்கிற ஸர்வேச்வரன் - ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களும் தனக்கு ப்ரகாரமாய்ப் புறம்பு ஒருவரின்றிக்கே உபயவிபூதியும் தன்நிழலிலே யொதுங்கும்படியிருக்கையாலே தலைவனானவன் வந்து நித்யவாஸம் பண்ணுகிற தேசம்.” ஆனாத – ஆன்--பகுதி
The Lord, whom even the Vedas fail to comprehend, swallowed the Universe and slept as a child on a fig leaf. He resides at Nangur on the Southern banks of the river Manni amid fertile fields where Sel-fish dance, in Tiruttevanar Togai.
ஏடேறு பெருஞ்செல்வத்து – எம்பெருமானுடைய பெருமையளை ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ பாரதம் முதலிய இதிஹாஸங்களாக ஏடுபடுத்தி வைத்திருப்பது போலப் புத்தகங்களாக எழுதி வைக்கத்தகுந்த பெருஞ்செல்வமுடையார் திருநாங்கூர்வைதிகர்கள் என்கை. ஏடு என்று குற்றத்திற்கும் வாசகமாகையாலே குற்றமற்ற பெருஞ்செல்வத்தினர் என்று முரைப்பர். ஏறுகை – மாண்டுபோகை.
“வாராளு மிளங்கொங்கை” என்றும் பாடமுண்டு. கச்சு அணிந்து ஆளவேண்டும் படியான இளமுலைகளையுடையாள் என்கை.
வம்பு -புதுமை ; வம்பவிழும் – புதுமையாக மலர்ந்த; அப்போதலர்ந்த என்கை.
விளக்கம் 

1249.
விளக்கம் 

1250.
விளக்கம் 

1251.
விளக்கம் 

1252.
விளக்கம் 

1253.
விளக்கம் 

1254.
விளக்கம் 

1255.
விளக்கம் 

1256.
விளக்கம் 

1257.
விளக்கம் 
