திவ்யதேச பாசுரங்கள்
-
1258.
திருநாங்கூரில் சிறுமிகள் நர்த்தமனமாடுவார் சிலரும் பந்தடிப்பார் சிலருமாயிருக்கையாலே அன்னவர்களது காற்சிலம்புகளின் ஒலியும் கைவளைகளின் ஒலியுமே ஓங்கி மற்ற நகர கோஷங்களைக் கீழ்ப்படுத்தி நிற்குமென்று நகர்ச்சிறப்பு சொல்லிற்றாயிற்று, பின்னடிகளில்
பாக்குச் சோலைகளின் நடுவே தென்னைமரங்கள் ஓங்கி வளர்ந்திருக்கின்றன; அவற்றினின்று பெருத்த காய்கள் இற்றுக் குளங்களிலே விழுகின்றன; அவற்றின் கடுமையான ஓசையைக் கேட்டவாறே மீன்கள் ‘தங்களை இரையாகக் கொள்வதற்கு ஏதோவொன்று வந்து குதித்துவிட்டது’ என்று பிரமித்து வேறிடந்தேடித் துள்ளித் தாவுகின்றனவாம். எம்பெருமானிடத்தில் அஸ்தாநே பயசங்கை பண்ணிக் கலங்கும் பரிலர்களின்படிக்குப் போலியென்னலாம்.
கம்பமா கடலடைத்து இலங்கைக்குமன்* கதிர்முடிஅவைபத்தும் அம்பினால் அறுத்து*
அரசு அவன் தம்பிக்கு* அளித்தவன் உறைகோயில்*
செம்பலாநிரை செண்பகம்மாதவி* சூதகம் வாழைகள்சூழ்*
வம்புஉலாம் கமுகுஓங்கிய நாங்கூர* வண்புருடோத்தமமே.
விளக்கம் 

1259.
பல்லவம் திகழ் பூங் கடம்பு ஏறி* அக்காளியன் பண அரங்கில்*
ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம்செய்த* உம்பர்கோன் உறைகோயில்*
நல்ல வெம் தழல் மூன்று நால் வேதம்* ஐவேள்வியோடு ஆறுஅங்கம்*
வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர்* வண்புருடோத்தமமே.
விளக்கம் 

1260.
அண்டர் ஆனவர் வானவர்கோனுக்கு என்று* அமைத்த சோறு அது எல்லாம் உண்டு*
கோநிரை மேய்த்து அவை காத்தவன்* உகந்து இனிது உறை கோயில்*
கொண்டல் ஆர் முழவின் குளிர் வார் பொழில்* குல மயில் நடம் ஆட*
வண்டு தான் இசை பாடிடும் நாங்கூர்* வண்புருடோத்தமமே.
விளக்கம் 

1261.
பருங் கை யானையின் கொம்பினைப் பறித்து* அதன் பாகனைச் சாடிப் புக்கு*
ஒருங்க மல்லரைக் கொன்று* பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில்*
கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு* கழனியில் மலி வாவி*
மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர்* வண்புருடோத்தமமே.
விளக்கம் 

1262.
சாடு போய் விழத் தாள் நிமிர்ந்து* ஈசன் தன் படையொடும் கிளையோடும் ஓட*
வாணனை ஆயிரம் தோள்களும்* துணித்தவன் உறை கோயில்*
ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவிப் போய்ப்* பகலவன் ஒளி மறைக்கும்*
மாட மாளிகை சூழ்தரு நாங்கூர்* வண்புருடோத்தமமே.
விளக்கம் 

1263.
அங் கையால் அடி மூன்று நீர் ஏற்று* அயன் அலர் கொடு தொழுது ஏத்த*
கங்கை போதரக் கால் நிமிர்த்தருளிய* கண்ணன் வந்து உறை கோயில்*
கொங்கை கோங்குஅவை காட்ட* வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள்*
மங்கைமார் முகம் காட்டிடும் நாங்கூர்* வண்புருடோத்தமமே.
விளக்கம் 

1264.
உளைய ஒண் திறல் பொன்பெயரோன்* தனது உரம் பிளந்து உதிரத்தை அளையும்*
வெம் சினத்து அரி பரி கீறிய* அப்பன் வந்து உறை கோயில்*
இளைய மங்கையர் இணைஅடிச் சிலம்பினோடு* எழில் கொள் பந்து அடிப்போர்*
கை வளையின் நின்று ஒலி மல்கிய நாங்கூர்* வண்புருடோத்தமமே.
விளக்கம் 

1265.
வாளை ஆர் தடங் கண் உமைபங்கன்* வன்சாபம் மற்றுஅதுநீங்க*
மூளைஆர்சிரத்து ஐயம் முன்அளித்த* எம்முகில் வண்ணன் உறைகோயில்*
பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின்* வண்பழம் விழ வெருவிப் போய்*
வாளை பாய் தடம் சூழ்தரு நாங்கூர்* வண்புருடோத்தமமே.
விளக்கம் 

1266.
இந்து வார் சடை ஈசனைப் பயந்த* நான் முகனைத் தன் எழில் ஆரும்*
உந்தி மா மலர்மீமிசைப் படைத்தவன்* உகந்து இனிது உறை கோயில்*
குந்தி வாழையின் கொழுங் கனி நுகர்ந்து* தன் குருளையைத் தழுவிப் போய்*
மந்தி மாம்பணைமேல் வைகும் நாங்கூர்* வண்புருடோத்தமமே.
விளக்கம் 

1267.
மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர்* வண்புருடோத்தமத்துள்*
அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன்* ஆலி மன் அருள் மாரி*
பண்ணுள் ஆர்தரப் பாடிய பாடல்* இப்பத்தும் வல்லார் உலகில்*
எண் இலாத பேர் இன்பம் உற்று* இமையவரோடும் கூடுவரே. (2)
விளக்கம் 
