திவ்யதேச பாசுரங்கள்
-
1348.
அறிவதரியான் = அறிய முடியாதவன் என்றால், ‘ஒருவராலும் அறிய முடியாதவன்’ என்று பொருளா? அன்றி, ‘சிலரால் அறிய முடியாதவன்? என்று பொருளா?’ என்று கேள்வி பிறக்கும்; ஒருவராலும் அறிய முடியாதவன் என்றால் முயற்கொம்பு, மலடிமகன், ஆகாசத்தாமரை முதலிய பொருள்கள் போல எம்பெருமானும் அடியோடு இல்லாதவன் என்றதாரும் : ஆகையாலே அது பொருளன்று; ‘பகவத் ஸ்வரூபத்தை நாமே முயன்று அறிந்திடுவோம் என்று முயல்பவர்களால் அறியக் கூடாதவன் என்று பொருள் கொள்க. அவன் தானே தன் இன்னருளாலே தன் ஸ்வரூபஸ்வபாவங்களைக் காட்டிக்கொடுக்க அப்போது அறியலாகுமேயன்றி வேறுவிதமாக அறியலாகாதென்கை. “திவ்யம் ததாமி தே சக்ஷ{: பச்யமேயோகமைச்வரம்” என்று அர்ஜுநனுக்குக் காட்டிக் கொடுத்தாற் போலக் காட்டிக் கொடுக்கில் காணவழியுண்டு.
இத்தலத்தின் வயல்வளங் கூறுவன பின்னடிகள். முற்காலத்தில் ஆலவாயுடையான் என்பானொரு தமிழன் பட்டரிடம் வந்து இப்பாட்டில் ஒருகேள்வி கேட்டான்;- ‘பள்ளச் செறுவில் கயலுகள” என்றபோதே அவ்விடத்து வயல்களில் மீன்கள் அளவற்றுக் கிடக்கின்றமை வெறிவந்து விட்டது; அப்படியிருக்க, ஈற்றடியில் “புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும்” என்று எங்ஙனே சொல்லலாம்? மீன் அருமைப்பட்டிருந்தாலன்றோ இரை தேடவேண்டும்; கொள்வார் தேட்டமாம்படி குறையற்றுக் கிடக்கும்போது தேடிப்பிடிப்பதாகச் சொல்லுவது பொருந்தாதன்றோ? என்று கேட்டான்; இதற்குப் பட்டர் அருளிச் செய்ததாவது – பிள்ளாய்! நீ கற்றவனாயினும் சொற்போக்கு அறிந்திலை; “பிள்ளைக்கு இரை தேடும்” என்றுள்ளது காண்; அங்குள்ள மீன்கள் நிலமிதியாலே தூணும் துலாமும்போலே தடித்திருக்கும்; அவை பறவைக் குட்டிகளின் வாய்க்குப் பிடிக்கமாட்டாவாகையால் உரிய சிறிய மீன்கள் தேடிப்பிடிக்க வேண்டு மத்தனை யன்றோ? என்றாராம்.
அவ்விடத்து வயல்களில் நிகழும் அதிசயத்தைக் கூறுவன பின்னடிகள். செறிந்த சோலைகளில் தேங்காய்கள் இற்று முறிந்து வீழ்கின்றன; அதனைக்கண்ட மீன்கள் ‘நம்மைக் கொள்ளை கொள்வதற்கு ஏதோவொரு வலிய பறவை நீரிற் குதித்தது போலும்’ என் றெண்ணித் துள்ளிச் சிதறுகின்றன; அதனைக்கண்ட குருகுகள் ‘இக்கயல்கள் நம்மையும் கபளீகரிக்க வருகின்றன கொல்’ எனமருண்டு சிதறியோடுகின்றனவாம். தமக்கு இரையாகத்தக்க கயல்களினின்று குருகுகள் அஞ்சுகின்றனவாகச் சொன்னவிதனால் அக்கயல்களின் வலிமை கூறப்பட்டதாம். தேங்காய்கள் விழுந்ததைக் கண்டே குருகுகளும் இரிந்தனவாகக் கொள்ளுதலுமாம்.
முதலடியின் வியக்கியானத்திலே “கருமாரி பாய்ந்தும் அணைய வேண்டுமாய்த்து (நப்பின்னைப் பிராட்டியின்) வடிவழகு” என்று பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்தியுள்ளது: கருமாரி பாய்தலென்பது, கச்சிமாநகரில் காமாட்சியம்மன் ஆலயத்தில் குளத்திலே நாட்டப்பட்டிருந்த மிகக் கூர்மையான இரண்டு சூலங்களினிடையே குதித்தலாம். பண்டைக்காலத்தில் ஏதேனும் இஷ்டஸித்திபெற வேண்டுவார் இவ்வருந்தொழில் செய்வது வழக்கமாம்: குடல் கிழிந்து சாகவேண்டும்படியான இவ்வருந்தொழிலை வெகு சாதுரியமாகச் செய்து அயாபமொன்றுமின்றியே உயிர் தப்பி இஷ்டஸித்தி பெறுமவர்கள் மிகச்சிலரேயாவர். மிகக்கடினமான இக்காரியத்திற்குத் துணிந்தார்கள் என்றால் இதனால் அவர்கள் பெற விரும்பிய வஸ்து மிகச் சிறந்ததென்பது விளங்குமன்றோ. அப்படியே, நப்பின்னை திருமேனியின் சிறப்பை விளக்கவந்தது இவ்வாக்கியமென்க. கருமாறி யென்றும் சொல்லுவர்; கர்ப்பத்தைக் கிழிப்பதென்றபடி.
“மறையால் முத்தீயவை வளர்க்கும்” என்று சேர்த்து அந்லயித்து, வேதங்களைக் கொண்டு அனலோம்புகிறவர்கள் என்றுரைத்தலுமாம்.
வேயின்முத்தும் = மூங்கில்களினின்றும் முத்து உதிர்வதாகச் சொல்லுவர்கள். “மின்னு சோதி நவமணியும்” என்று சொல்லிவைத்து நவமணிகளுட்சேர்ந்த முத்தையும் பொன்னையும் தனிப்படவுஞ் சொல்லியிருப்பதால் இவையிரண்டும் திருக்காவிரியில் அதிகமாகக் கொணரப்படும் என்றுணர்க. பின்னடிகட்குப் பொருத்தமாக “சஞசச்சாமர சந்த்ர சந்தந மஹா மாணிக்ய முக்தோத்கராந் காவேரி லஹாரீகரைர்விதததீ பர்யேதி ஸா ஸேவ்யதாம்” என்ற ஸ்ரீ ரங்கராஜஸ்வத்லோகம் அநுஸந்திக்கத்தகும்.
விளக்கம்
1349.
விளக்கம்
1350.
விளக்கம்
1351.
விளக்கம்
1352.
விளக்கம்
1353.
விளக்கம்
1354.
விளக்கம்
1355.
விளக்கம்
1356.
விளக்கம்
1357.